இனி வரும் பகுதிகள் எல்லாமே வலைத்தளம் களஞ்சியத்திலிருந்தும் மகுடேஸ்வரன் அண்ணாவின் வலைப்பதிவில் இருந்தும் நான் கற்பவை.
வலி மிகுதல் என்றால் என்ன ?
'வல்லின மெய்யெழுத்துகள்' இரண்டு சொற்களுக்கு இடையே கூடுதலாக மிகுதியாகி அமர்ந்துகொள்வது.
வல்லின மெய்யெழுத்துகள் எவை?
க்,ச்,ட்,த்,ப்,ற் - ஆகிய ஆறும் வல்லின மெய்யெழுத்துகள் எனப்படும்.
'ட' விலும் 'ற'விழும் சொற்கள் இல்லாமல் இருப்பதால் இந்த இரண்டு எழுத்துகளும் பட்டியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். மீதியுள்ள க்,ச்,த்,ப் மிகுவது - மிகாதிருப்பது பற்றித்தான் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.
ஆக, நமக்குத் தலைவலி தருபவை இந்த நான்கு எழுத்துகள் மட்டுமே!
அடுத்தகட்டமாக வலிமிகுதல் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பிக்க முதல் அறிந்துகொள்ள வேண்டிய மற்றுமொன்று உள்ளது. அதுதான் 'நிலைமொழி' மற்றும் 'வருமொழி' ஆகிய இரண்டும்.
ஏதாவது இரண்டு சொற்களை வைத்துக்கொண்டுதானே வலி மிகுமா மிகாதா என்று திணறுவோம். அப்படி நம்மைத் திணற வைக்கும் இரண்டு சொற்களில் முதலாவதாக வரும் சொல்லினை நிலைமொழி என்றும் இரண்டாவதாக வரும் சொல்லை வருமொழி என்றும் பயன்படுத்துவர்.
உதாரணம்: மல்லிகைப் பூ
இதிலே, மல்லிகை என்பது முதலாவதாக வருவதால் நிலைமொழி என்றும் பூ இரண்டாவதாக வருவதால் வருமொழி என்றும் சொல்லப்படும்.
இனி வலிமிகும் இடங்களைப் பார்க்கலாம்.
ஒன்று:
இரண்டு பெயர்ச்சொற்கள் வரும்போது, இரண்டாவதாக வரும் சொல் வல்லினமாக இருந்தால் வலி நிச்சயம் மிகும்.
இங்கே இரண்டு விடயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஒன்று: இரண்டும் பெயர்ச்சொற்களாக இருக்கவேண்டும்.
இரண்டாவது: இரண்டாவதாக வரும் சொல் வல்லினமாக அதாவது க்,ச்,த்,ப் வரிசையில் அமைந்திருக்க வேண்டும்.
அப்படி அமைந்திருப்பின் வலிமிகும்.
வலி மிகுதல் என்றால் என்ன ?
'வல்லின மெய்யெழுத்துகள்' இரண்டு சொற்களுக்கு இடையே கூடுதலாக மிகுதியாகி அமர்ந்துகொள்வது.
வல்லின மெய்யெழுத்துகள் எவை?
க்,ச்,ட்,த்,ப்,ற் - ஆகிய ஆறும் வல்லின மெய்யெழுத்துகள் எனப்படும்.
'ட' விலும் 'ற'விழும் சொற்கள் இல்லாமல் இருப்பதால் இந்த இரண்டு எழுத்துகளும் பட்டியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். மீதியுள்ள க்,ச்,த்,ப் மிகுவது - மிகாதிருப்பது பற்றித்தான் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.
ஆக, நமக்குத் தலைவலி தருபவை இந்த நான்கு எழுத்துகள் மட்டுமே!
அடுத்தகட்டமாக வலிமிகுதல் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பிக்க முதல் அறிந்துகொள்ள வேண்டிய மற்றுமொன்று உள்ளது. அதுதான் 'நிலைமொழி' மற்றும் 'வருமொழி' ஆகிய இரண்டும்.
ஏதாவது இரண்டு சொற்களை வைத்துக்கொண்டுதானே வலி மிகுமா மிகாதா என்று திணறுவோம். அப்படி நம்மைத் திணற வைக்கும் இரண்டு சொற்களில் முதலாவதாக வரும் சொல்லினை நிலைமொழி என்றும் இரண்டாவதாக வரும் சொல்லை வருமொழி என்றும் பயன்படுத்துவர்.
உதாரணம்: மல்லிகைப் பூ
இதிலே, மல்லிகை என்பது முதலாவதாக வருவதால் நிலைமொழி என்றும் பூ இரண்டாவதாக வருவதால் வருமொழி என்றும் சொல்லப்படும்.
இனி வலிமிகும் இடங்களைப் பார்க்கலாம்.
ஒன்று:
இரண்டு பெயர்ச்சொற்கள் வரும்போது, இரண்டாவதாக வரும் சொல் வல்லினமாக இருந்தால் வலி நிச்சயம் மிகும்.
இங்கே இரண்டு விடயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஒன்று: இரண்டும் பெயர்ச்சொற்களாக இருக்கவேண்டும்.
இரண்டாவது: இரண்டாவதாக வரும் சொல் வல்லினமாக அதாவது க்,ச்,த்,ப் வரிசையில் அமைந்திருக்க வேண்டும்.
அப்படி அமைந்திருப்பின் வலிமிகும்.