“என்னடா மச்சான்! உண்மையாவா சொல்லுறாய்?!” ஆச்சரியமாகக் கேட்டான் வேந்தன்.
“பின்ன! பொய்யா சொல்லுறான்?” இடையிட்ட அடுத்தவன், “என்ன திடீரென்று? ஊரில பெண் பாத்து வச்சிருக்கீனமோ?” தன்பங்குக்கு கேள்வியொன்றை ஊதி விட்டான்.
“அம்மா, அப்பா யாருக்காவது உடம்பு சரியில்லையா அருள்?” கைபேசியில் எதையோ தட்டிக் கொண்டிருந்த மூன்றாமவன், ‘என் செவிகளும் உங்கட பேச்சில்!’ என்றுணர்த்தினான்.
“நேற்றிரவு அவன்ட அம்மா கதச்சார் என்டு நினைக்கிறன்; அப்ப இருந்து ஒருமாதிரித்தான் இருக்கிறான்; வாய் திறந்தாத் தானே!” மிகவும் சலித்துக்கொண்டான் நான்காமவன்.
தன்னைச் சுற்றிலும் எழுந்த நண்பர்களின் கேள்விகளுக்கு அருளின் பதிலோ, வழமையான மௌனம்!
ஆனால், வழமைக்கு மாறாக அவன் முகம் பாறையாகிக் கிடந்ததை அவதானித்தார்கள் நண்பர்கள்.
‘காலையில சாப்பிட்டானோ தெரியாது; மத்தியானமும் ஒழுங்காச் சாப்பிட இல்ல. ஒருநாளும் இல்லாத கணக்கில ஃபோனும் கையுமாத் திரிஞ்சான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குது! என்னவாக இருக்கும்!’ வேந்தனின் மனமோ, அறியும் ஆவலில் அலைந்தது.
“கொஞ்சம் வெளியில போய்ட்டு வாறன்.” அவர்களின் கேள்விகளை காதில் வாங்காதவன் போன்று, அச்சிறு வரவேற்பறையைக் கடக்க முயன்றவனை, எட்டிப் பிடித்து நிறுத்தினான் வேந்தன்.
“ஏன்டா மச்சான், ஒரு வருசம் இரண்டு வருசமா? கிட்டத்தட்ட ஐஞ்சு வருசங்கள் ஒன்றா இருக்கிறம்! உன்ர பிரச்சனைகள எங்களிட்ட சொன்னாக் குறஞ்சா போயிருவாய்?” அக்கறையும் அங்கலாய்ப்புமாகக் கேட்டவன், அருளின் மரத்த முகத்தைப் பார்த்து மிகுந்த எரிச்சல் கொண்டான்.
‘என்ன பிறப்போ!’ இரண்டாமவன் மனதில் கடுகடுத்தபடி, “பச்..விடுடா மச்சான்; எப்பிடிக் கேட்டாலும் அவன் வாய் திறக்கப் போறதில்ல; விடு விடு!” எழுந்து, குளியலறைக்குள் மறைந்தான்.
“அவனவன் நல்ல நண்பன் கிடைக்கமாட்டானா என்று ஏங்குவான்கள்; இங்க, இவனச் சுற்றி நான்கு தடியன்கள் இருக்கிறம்! எப்பிடித்தான் நெருங்க நினைச்சாலும் தனக்குத்தான் குடும்பமும் பொறுப்பும் சுமையும் இருக்கிறது போல படம் போட்டுக் கொள்ளுறதில இவனக் கேட்டுத்தான்!” சத்தமாகவே முணுமுணுத்தான் மூன்றாமவன்.
“அதுதானே மச்சான்; எங்களுக்கும் தான் தலைக்கு மேல பொறுப்பிருக்கு! அதுக்கென்று உன்னப் போலவா?!” நான்காமவன் குரலில் ஏகத்துக்கும் கேலி!
“டேய் விடுங்கடா; அவனுக்கு எதையும் நம்மட்ட சொல்ல விருப்பம் இல்ல. என்னதான் ஒன்றா இருந்தாலும் கோடு போட்டு நம்மைத் தள்ளி வச்சிருக்கிறான். அது விளங்காம நீங்களும்...பச்...உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” தொடர்ந்து சலித்துக்கொண்டவன், விருட்டென்று பக்கத்து அறையினுள் நுழைந்து மறைந்தான்.
தன்னையே பார்த்திருந்த மிகுதி இருவரையும் அமைதியாக ஒருபார்வை பார்த்துவிட்டு சட்டென்று வெளியேறிய அருள், முன்வாயில் கதவு மூலையில் இருந்த காலணிகள் வைக்கும் சிறு இரக்கிலிருந்து தன் சப்பாத்துகளை எடுத்தான்.
அவன் ஸ்பரிசம் பட்டதும் மெல்ல விழித்துக் கொண்ட சப்பாத்துகள் இரண்டும், “நன்றாகத் தளர்ந்து போனோம்; எங்களை விட்டுவிடேன்!” கண்ணீரோடு முனக, அதைச் சிறிதும் உணராது கீழே போட்டவன், அவசரமாகக் கால்களை அவற்றுள் திணித்தான்.
“மச்சான் கொஞ்சம் நில்லுடா!” பின்தொடர்ந்து வந்தான் வேந்தன்.
இருவருக்குள்ளும் சில வருடங்கள் வயது வேறுபாடு இருந்தாலும், இங்கு வந்தபின் நண்பர்களாகப் பழகியதில் வயது வேறுபாட்டை மறந்திருந்தனர்.
“இண்டைக்கு சாந்தன் அண்ணான்ட மகனுக்கு பத்தாவது பிறந்தநாள் எல்லோ; மறந்து போனாயா? ஒரு ஆறு மணி போல எல்லாருமாப் போவம். அவர் எப்பவுமே ருசியான சாப்பாடு போடுவார்.” சொன்னவன் வாயில், உணவின் நினைவில் எச்சில் ஊறியது.
வெளிநாட்டில், அதுவும் பிரமச்சாரிகள் பெரும்பாலும் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கிக் கிடப்பார்கள் அல்லவா?
எப்போதாவதுதான், ஊர் ருசிக்கு ஏங்கும் நாவைத் திருப்தி செய்யும் வகையில் உணவுகளும் அமையும்.
அப்படி அமையும் சந்தர்ப்பங்களில் ஒன்று சாந்தன் வீட்டு விழா!
உணவுப் பிரியனான சாந்தன் அழைப்பவர்களுக்கு வஞ்சனையில்லாது சுடசுட உணவுகள், குடிவகைகள் என்று கடைபரப்பி அசத்திவிடுவான்.
அதை யாராவது தவற விடுவார்களா?
“நீயும் வருவாய்தானே அருள்?” பத்து வருட, பழைய கருப்பு குளிர்கோட்டை மாட்டிக்கொண்டு வெளியேறியவனை கேள்வியால் தயங்கச் செய்தான் வேந்தன்.
“பச்... நான் வர இல்ல; நீங்க போயிட்டு வாங்க; என் பங்குக்குப் பத்து யூரோ டிவிக்கு பக்கத்தில வச்சிருக்கிறன்; எடு!” சலித்தபடி சொன்னவன், நண்பனின் பதிலுக்குக் காத்திருக்கவில்லை.
விருட்டென்று வெளியேறும் நண்பனை, இப்போது, கோபமும் எரிச்சலுமாகப் பார்த்தான் வேந்தன்.
“என்ன ஜென்மமடா இவன்? வெளிநாடு வந்து பத்து வருசங்கள் இருக்கும்! ஏழுநாட்களும் மாடா உழைக்கிறான். கிளீனிங் வேலை என்றால் இளப்பமா? கைநிறைய வருமானம் வருகுதே! ஆனாலும், அநியாயத்துக்கு இப்படிக் கஞ்சத்தனம் காட்டக் கூடாது.
உழைக்க உழைக்க காசை ஊருக்கு அனுப்பி மாளிகை கட்டி இருக்கிறானாம். இவனா போயிருக்கப் போறான். சரி சரி... குடும்பத்துக்குச் செய்யத்தான் வேணும். அதுக்காக, இவன் பீத்தல் பறங்கி போலவா வாழ வேணும்? நல்லதா உடுத்தி, சாப்பிட்டு பச்... நாளைக்கு உனக்கு என்று எதையும் சேர்த்து வைக்க வேணாமா ?
இவனோடு வந்த ராசு அண்ணாவப் பார்; சொந்த வீடு வாங்கி கலியாணமும் செய்திட்டார். இவனப் போல நான் மட்டும் உழைத்தால் இப்பிடியா இருப்பன். ஐஞ்சுபேர் இருக்கும் முட்டுவீட்டில்... தகதிமிதோங் போட்டுக் கொண்டிருப்பேனா?!” தன் பாட்டில் மூச்சுவிடாது அங்கலாய்த்த வேந்தனை, நகைப்போடு ஏறிட்டார்கள் மற்றைய மூவரும்.
“டேய்! டேய்! அருளை உன் தங்கச்சிக்குச் செய்ய நினச்சாய்; நல்ல நம்பிக்கையாகக் கேட்டும் பார்த்தாய்; அவன் பிடி கொடுக்க இல்ல என்றதும் சந்தர்ப்பம் கிடைத்தால் இதுதான் சாட்டென்று மென்று துப்புறாய்!” முதுகில் அடித்தான் ஒருவன்.
“போடா; அப்படியில்லையடா! அருமையான பெடியன் என்று கேட்டன் தான். உனக்கொரு தங்கச்சி இருந்திருந்தால் நீ விட்டா இருப்பாய்?” முறைத்தான் வேந்தன்.
“அவனும், ‘இப்ப கலியாணம் செய்யும் எண்ணம் இல்ல; பெரியதங்கச்சியின் கலியாணம் முடிய வேணும். சின்னவளுக்கும் சரி வந்தால் முடிச்சிட்டுத்தான்’ என்றான்; நானும் விட்டுட்டன்.” தொடர்ந்து சமாளித்தான்.
‘என்ட தங்கச்சிக்கு மாப்பிள்ளை என்றதும் கண் முன்னால் இருந்த அவனைக் கேட்டுப் பார்க்கவில்லையா? அவனும் தன்ட தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கிறான் தானே? என்னை நிஷாவுக்கு செய்தால் என்ன என்று அவனுக்குத் தோன்ற இல்லையே!’ வேந்தனின் அடிமனதில் துளியாக விழுந்த ஏக்கம், சிறுக சிறுக வளர நினைக்குதே!
சின்னவயதிலிருந்து ஒரேதெருவில் கண்முன்னால் நடமாடிய நிஷா, இப்போதெல்லாம் இவன் கனவுகளிலும் தலைகாட்டுவதை இவன் மறந்தும் வெளியில் கசிய விடவில்லை.
“நீ பார்த்துக் கொண்டேயிரு மச்சான், இப்ப அவனுக்கு முப்பத்தி மூன்று; ஐம்பது வயசானாலும் இவன் கலியாணம் செய்யமாட்டான்.” மற்றவர்களைவிட, ஒரே தெருவில் வசிக்கும் வேந்தனும் அருளும் நெருக்கம் அதிகம். அருளின் குடும்பம் பற்றி மிகவும் நன்றாகத் தெரிந்திருந்ததால் ஆதங்கத்தில் முணுமுணுத்தான் வேந்தன்.
“டேய் ஏன்டா இப்படிப் புலம்புகிறாய்? ஹ்ம்ம்... அருமையான பெடியன் அருள்; முயன்று உன் தங்கச்சிக்கு செய்யப் பார். ஊரில் அவர்கள் வீட்டுக்குக் கிட்டத்தானே உங்க வீடும்; உன் அம்மா அப்பாவை போய்க் கதைக்கச் சொல்லன்.”
“பச்! அருள் நல்லவன் தான்; அவன்ட அப்பா பற்றி உனக்குத் தெரியாது மச்சான்; வம்பு பிடிச்ச ஆள். கூடவே வரட்டுக் கௌரவம். அது மட்டுமா? ஒரு இடக்கு முடக்கான ஆள். இவன் சம்மதிச்சா ஒருவேளை அவர்களும் சம்மதிப்பீனம் என்றுதான் கேட்டுப் பார்த்தன். என்ட அம்மா அப்பா கதைக்கப் போனால் அது இது என்று சொல்லி இன்னொரு வீடு கட்ட என்னட்ட இருந்து காசு பறிச்சிரும் அந்த மனிஷன்.” ஏளனமாகப் பழித்தான் வேந்தன்.
“என் தங்கச்சிக்கே என்றாலும் கொடுக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குதானே மச்சான்; நாளைக்கு என்ட வாழ்வையும் பார்க்க வேணுமே! அதனால தான் ஒண்டும் கதைக்காம விட்டுட்டன்.” என்று நகர்ந்தவனை பேச்சற்று நோக்கினார்கள் நண்பர்கள்.
“சும்மா சொல்லக் கூடாதடா வேந்தன்; நீயும் நல்ல காரியவாதிதான். பிழைச்சுக் கொள்வாய்!” அவர்களின் ஒருவன் முணுமுணுத்தான்.
“மாடாக் கஷ்டப்பட்டுத் தோட்ட வேலை செய்து உழைக்கிறன் மச்சான். என்னதான் பழகினாலும், குளிருக்குள்ள தோட்ட வேலை செய்யிறது எவ்வளவு கஷ்டமென்று நான் சொல்லியா உனக்குத் தெரிய வேணும்? ஆற்றில போட்டாலும் அளந்து போடவேணும் என்ற கொள்கைதான் எனக்குப் பிடிக்கும்.” அறையிலிருந்தே குரல் தந்தான் வேந்தன்.
“ம்ம்...ஏதோ நீ சொல்லுறதும் சரிதான்! ஒத்த சதம் என்றாலும் கஷ்டப்பட்டு உழைச்சுப் பார்த்தாத் தான் அருமை தெரியும். அப்பிடி உடம்பு நோக உழைச்சு வார காசின்ட அருமை தெரிஞ்ச யாராலும் அத்தியாவசியத்துக்குத் தவிர, அளவு கணக்கில்லாம, அநியாயமாப் போகுதென்று தெரிஞ்சு கொண்டே எல்லாம் அள்ளிக் குடுக்க முடியாதுதான். அது இரத்த உறவே என்றாலும். ஹ்ம்ம்...நோகாம வந்தால் அள்ளித் தரலாம்... ” ஆமோதித்தான், இவனைக் காரியவாதி என்ற நண்பன். “அதிலும் அருள் போன்ற ஆக்கள் விதிவிலக்கு! செக்கு மாடு போல உழைச்சு தனக்கென்று ஒரு சதம் செலவழிக்காம வீட்டாக்கள் பற்றியே சிந்திக்கிறது...சுத்த முட்டாள்தனம் ...” தொடர்ந்து. சொன்னான்.
“சரி விடு, அது அவன் விருப்பம். அருள் வர இல்ல என்றால் பழசை சாப்பிட்டிட்டு இருக்கட்டும்; ஆறு மணிவாக்கில பிறந்தநாள் வீட்டுக்குப் போயிட்டு வருவம்.” முடிவெடுத்தவர்கள், தத்தம் வேலைகளில் மூழ்கினர்.
ஒன்றாக இருக்கும் நண்பர்களின் மனத்தாங்களுக்குப் பாத்திரமான அருள், அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லவே இல்லை.
மனம் என்ற ஒன்று இருக்கின்றதா? அவனுக்கே சந்தேகம் தரும் வகையில் நெஞ்சாங்கூடு வெறுமையை உணர்ந்தது.
தொண்டைவரை முட்டிய கயர்ப்பு, அவன் வாழ்வை; இத்தனை வருட கடின உழைப்பை; உடன் பிறப்புகள் என்று துடிக்கும் அவனின் பாசம் கொண்ட மனதை எள்ளி நகையாடியது.
கோபமும் ஆத்திரமும் வெறுப்பும் கட்டிப்பிடித்து ஆக்ரோஷமான கைகலப்பில் ஈடுபட்டிருக்க, இயந்திரமாகச் செயல்பட்டு, திட்டமிட்டபடி வெளி அலுவல்களை முடித்தவன், சில பொருட்களையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப, நண்பர்கள் பிறந்தநாள் வீடு சென்றிருந்தார்கள்.
“பின்ன! பொய்யா சொல்லுறான்?” இடையிட்ட அடுத்தவன், “என்ன திடீரென்று? ஊரில பெண் பாத்து வச்சிருக்கீனமோ?” தன்பங்குக்கு கேள்வியொன்றை ஊதி விட்டான்.
“அம்மா, அப்பா யாருக்காவது உடம்பு சரியில்லையா அருள்?” கைபேசியில் எதையோ தட்டிக் கொண்டிருந்த மூன்றாமவன், ‘என் செவிகளும் உங்கட பேச்சில்!’ என்றுணர்த்தினான்.
“நேற்றிரவு அவன்ட அம்மா கதச்சார் என்டு நினைக்கிறன்; அப்ப இருந்து ஒருமாதிரித்தான் இருக்கிறான்; வாய் திறந்தாத் தானே!” மிகவும் சலித்துக்கொண்டான் நான்காமவன்.
தன்னைச் சுற்றிலும் எழுந்த நண்பர்களின் கேள்விகளுக்கு அருளின் பதிலோ, வழமையான மௌனம்!
ஆனால், வழமைக்கு மாறாக அவன் முகம் பாறையாகிக் கிடந்ததை அவதானித்தார்கள் நண்பர்கள்.
‘காலையில சாப்பிட்டானோ தெரியாது; மத்தியானமும் ஒழுங்காச் சாப்பிட இல்ல. ஒருநாளும் இல்லாத கணக்கில ஃபோனும் கையுமாத் திரிஞ்சான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குது! என்னவாக இருக்கும்!’ வேந்தனின் மனமோ, அறியும் ஆவலில் அலைந்தது.
“கொஞ்சம் வெளியில போய்ட்டு வாறன்.” அவர்களின் கேள்விகளை காதில் வாங்காதவன் போன்று, அச்சிறு வரவேற்பறையைக் கடக்க முயன்றவனை, எட்டிப் பிடித்து நிறுத்தினான் வேந்தன்.
“ஏன்டா மச்சான், ஒரு வருசம் இரண்டு வருசமா? கிட்டத்தட்ட ஐஞ்சு வருசங்கள் ஒன்றா இருக்கிறம்! உன்ர பிரச்சனைகள எங்களிட்ட சொன்னாக் குறஞ்சா போயிருவாய்?” அக்கறையும் அங்கலாய்ப்புமாகக் கேட்டவன், அருளின் மரத்த முகத்தைப் பார்த்து மிகுந்த எரிச்சல் கொண்டான்.
‘என்ன பிறப்போ!’ இரண்டாமவன் மனதில் கடுகடுத்தபடி, “பச்..விடுடா மச்சான்; எப்பிடிக் கேட்டாலும் அவன் வாய் திறக்கப் போறதில்ல; விடு விடு!” எழுந்து, குளியலறைக்குள் மறைந்தான்.
“அவனவன் நல்ல நண்பன் கிடைக்கமாட்டானா என்று ஏங்குவான்கள்; இங்க, இவனச் சுற்றி நான்கு தடியன்கள் இருக்கிறம்! எப்பிடித்தான் நெருங்க நினைச்சாலும் தனக்குத்தான் குடும்பமும் பொறுப்பும் சுமையும் இருக்கிறது போல படம் போட்டுக் கொள்ளுறதில இவனக் கேட்டுத்தான்!” சத்தமாகவே முணுமுணுத்தான் மூன்றாமவன்.
“அதுதானே மச்சான்; எங்களுக்கும் தான் தலைக்கு மேல பொறுப்பிருக்கு! அதுக்கென்று உன்னப் போலவா?!” நான்காமவன் குரலில் ஏகத்துக்கும் கேலி!
“டேய் விடுங்கடா; அவனுக்கு எதையும் நம்மட்ட சொல்ல விருப்பம் இல்ல. என்னதான் ஒன்றா இருந்தாலும் கோடு போட்டு நம்மைத் தள்ளி வச்சிருக்கிறான். அது விளங்காம நீங்களும்...பச்...உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” தொடர்ந்து சலித்துக்கொண்டவன், விருட்டென்று பக்கத்து அறையினுள் நுழைந்து மறைந்தான்.
தன்னையே பார்த்திருந்த மிகுதி இருவரையும் அமைதியாக ஒருபார்வை பார்த்துவிட்டு சட்டென்று வெளியேறிய அருள், முன்வாயில் கதவு மூலையில் இருந்த காலணிகள் வைக்கும் சிறு இரக்கிலிருந்து தன் சப்பாத்துகளை எடுத்தான்.
அவன் ஸ்பரிசம் பட்டதும் மெல்ல விழித்துக் கொண்ட சப்பாத்துகள் இரண்டும், “நன்றாகத் தளர்ந்து போனோம்; எங்களை விட்டுவிடேன்!” கண்ணீரோடு முனக, அதைச் சிறிதும் உணராது கீழே போட்டவன், அவசரமாகக் கால்களை அவற்றுள் திணித்தான்.
“மச்சான் கொஞ்சம் நில்லுடா!” பின்தொடர்ந்து வந்தான் வேந்தன்.
இருவருக்குள்ளும் சில வருடங்கள் வயது வேறுபாடு இருந்தாலும், இங்கு வந்தபின் நண்பர்களாகப் பழகியதில் வயது வேறுபாட்டை மறந்திருந்தனர்.
“இண்டைக்கு சாந்தன் அண்ணான்ட மகனுக்கு பத்தாவது பிறந்தநாள் எல்லோ; மறந்து போனாயா? ஒரு ஆறு மணி போல எல்லாருமாப் போவம். அவர் எப்பவுமே ருசியான சாப்பாடு போடுவார்.” சொன்னவன் வாயில், உணவின் நினைவில் எச்சில் ஊறியது.
வெளிநாட்டில், அதுவும் பிரமச்சாரிகள் பெரும்பாலும் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கிக் கிடப்பார்கள் அல்லவா?
எப்போதாவதுதான், ஊர் ருசிக்கு ஏங்கும் நாவைத் திருப்தி செய்யும் வகையில் உணவுகளும் அமையும்.
அப்படி அமையும் சந்தர்ப்பங்களில் ஒன்று சாந்தன் வீட்டு விழா!
உணவுப் பிரியனான சாந்தன் அழைப்பவர்களுக்கு வஞ்சனையில்லாது சுடசுட உணவுகள், குடிவகைகள் என்று கடைபரப்பி அசத்திவிடுவான்.
அதை யாராவது தவற விடுவார்களா?
“நீயும் வருவாய்தானே அருள்?” பத்து வருட, பழைய கருப்பு குளிர்கோட்டை மாட்டிக்கொண்டு வெளியேறியவனை கேள்வியால் தயங்கச் செய்தான் வேந்தன்.
“பச்... நான் வர இல்ல; நீங்க போயிட்டு வாங்க; என் பங்குக்குப் பத்து யூரோ டிவிக்கு பக்கத்தில வச்சிருக்கிறன்; எடு!” சலித்தபடி சொன்னவன், நண்பனின் பதிலுக்குக் காத்திருக்கவில்லை.
விருட்டென்று வெளியேறும் நண்பனை, இப்போது, கோபமும் எரிச்சலுமாகப் பார்த்தான் வேந்தன்.
“என்ன ஜென்மமடா இவன்? வெளிநாடு வந்து பத்து வருசங்கள் இருக்கும்! ஏழுநாட்களும் மாடா உழைக்கிறான். கிளீனிங் வேலை என்றால் இளப்பமா? கைநிறைய வருமானம் வருகுதே! ஆனாலும், அநியாயத்துக்கு இப்படிக் கஞ்சத்தனம் காட்டக் கூடாது.
உழைக்க உழைக்க காசை ஊருக்கு அனுப்பி மாளிகை கட்டி இருக்கிறானாம். இவனா போயிருக்கப் போறான். சரி சரி... குடும்பத்துக்குச் செய்யத்தான் வேணும். அதுக்காக, இவன் பீத்தல் பறங்கி போலவா வாழ வேணும்? நல்லதா உடுத்தி, சாப்பிட்டு பச்... நாளைக்கு உனக்கு என்று எதையும் சேர்த்து வைக்க வேணாமா ?
இவனோடு வந்த ராசு அண்ணாவப் பார்; சொந்த வீடு வாங்கி கலியாணமும் செய்திட்டார். இவனப் போல நான் மட்டும் உழைத்தால் இப்பிடியா இருப்பன். ஐஞ்சுபேர் இருக்கும் முட்டுவீட்டில்... தகதிமிதோங் போட்டுக் கொண்டிருப்பேனா?!” தன் பாட்டில் மூச்சுவிடாது அங்கலாய்த்த வேந்தனை, நகைப்போடு ஏறிட்டார்கள் மற்றைய மூவரும்.
“டேய்! டேய்! அருளை உன் தங்கச்சிக்குச் செய்ய நினச்சாய்; நல்ல நம்பிக்கையாகக் கேட்டும் பார்த்தாய்; அவன் பிடி கொடுக்க இல்ல என்றதும் சந்தர்ப்பம் கிடைத்தால் இதுதான் சாட்டென்று மென்று துப்புறாய்!” முதுகில் அடித்தான் ஒருவன்.
“போடா; அப்படியில்லையடா! அருமையான பெடியன் என்று கேட்டன் தான். உனக்கொரு தங்கச்சி இருந்திருந்தால் நீ விட்டா இருப்பாய்?” முறைத்தான் வேந்தன்.
“அவனும், ‘இப்ப கலியாணம் செய்யும் எண்ணம் இல்ல; பெரியதங்கச்சியின் கலியாணம் முடிய வேணும். சின்னவளுக்கும் சரி வந்தால் முடிச்சிட்டுத்தான்’ என்றான்; நானும் விட்டுட்டன்.” தொடர்ந்து சமாளித்தான்.
‘என்ட தங்கச்சிக்கு மாப்பிள்ளை என்றதும் கண் முன்னால் இருந்த அவனைக் கேட்டுப் பார்க்கவில்லையா? அவனும் தன்ட தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கிறான் தானே? என்னை நிஷாவுக்கு செய்தால் என்ன என்று அவனுக்குத் தோன்ற இல்லையே!’ வேந்தனின் அடிமனதில் துளியாக விழுந்த ஏக்கம், சிறுக சிறுக வளர நினைக்குதே!
சின்னவயதிலிருந்து ஒரேதெருவில் கண்முன்னால் நடமாடிய நிஷா, இப்போதெல்லாம் இவன் கனவுகளிலும் தலைகாட்டுவதை இவன் மறந்தும் வெளியில் கசிய விடவில்லை.
“நீ பார்த்துக் கொண்டேயிரு மச்சான், இப்ப அவனுக்கு முப்பத்தி மூன்று; ஐம்பது வயசானாலும் இவன் கலியாணம் செய்யமாட்டான்.” மற்றவர்களைவிட, ஒரே தெருவில் வசிக்கும் வேந்தனும் அருளும் நெருக்கம் அதிகம். அருளின் குடும்பம் பற்றி மிகவும் நன்றாகத் தெரிந்திருந்ததால் ஆதங்கத்தில் முணுமுணுத்தான் வேந்தன்.
“டேய் ஏன்டா இப்படிப் புலம்புகிறாய்? ஹ்ம்ம்... அருமையான பெடியன் அருள்; முயன்று உன் தங்கச்சிக்கு செய்யப் பார். ஊரில் அவர்கள் வீட்டுக்குக் கிட்டத்தானே உங்க வீடும்; உன் அம்மா அப்பாவை போய்க் கதைக்கச் சொல்லன்.”
“பச்! அருள் நல்லவன் தான்; அவன்ட அப்பா பற்றி உனக்குத் தெரியாது மச்சான்; வம்பு பிடிச்ச ஆள். கூடவே வரட்டுக் கௌரவம். அது மட்டுமா? ஒரு இடக்கு முடக்கான ஆள். இவன் சம்மதிச்சா ஒருவேளை அவர்களும் சம்மதிப்பீனம் என்றுதான் கேட்டுப் பார்த்தன். என்ட அம்மா அப்பா கதைக்கப் போனால் அது இது என்று சொல்லி இன்னொரு வீடு கட்ட என்னட்ட இருந்து காசு பறிச்சிரும் அந்த மனிஷன்.” ஏளனமாகப் பழித்தான் வேந்தன்.
“என் தங்கச்சிக்கே என்றாலும் கொடுக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குதானே மச்சான்; நாளைக்கு என்ட வாழ்வையும் பார்க்க வேணுமே! அதனால தான் ஒண்டும் கதைக்காம விட்டுட்டன்.” என்று நகர்ந்தவனை பேச்சற்று நோக்கினார்கள் நண்பர்கள்.
“சும்மா சொல்லக் கூடாதடா வேந்தன்; நீயும் நல்ல காரியவாதிதான். பிழைச்சுக் கொள்வாய்!” அவர்களின் ஒருவன் முணுமுணுத்தான்.
“மாடாக் கஷ்டப்பட்டுத் தோட்ட வேலை செய்து உழைக்கிறன் மச்சான். என்னதான் பழகினாலும், குளிருக்குள்ள தோட்ட வேலை செய்யிறது எவ்வளவு கஷ்டமென்று நான் சொல்லியா உனக்குத் தெரிய வேணும்? ஆற்றில போட்டாலும் அளந்து போடவேணும் என்ற கொள்கைதான் எனக்குப் பிடிக்கும்.” அறையிலிருந்தே குரல் தந்தான் வேந்தன்.
“ம்ம்...ஏதோ நீ சொல்லுறதும் சரிதான்! ஒத்த சதம் என்றாலும் கஷ்டப்பட்டு உழைச்சுப் பார்த்தாத் தான் அருமை தெரியும். அப்பிடி உடம்பு நோக உழைச்சு வார காசின்ட அருமை தெரிஞ்ச யாராலும் அத்தியாவசியத்துக்குத் தவிர, அளவு கணக்கில்லாம, அநியாயமாப் போகுதென்று தெரிஞ்சு கொண்டே எல்லாம் அள்ளிக் குடுக்க முடியாதுதான். அது இரத்த உறவே என்றாலும். ஹ்ம்ம்...நோகாம வந்தால் அள்ளித் தரலாம்... ” ஆமோதித்தான், இவனைக் காரியவாதி என்ற நண்பன். “அதிலும் அருள் போன்ற ஆக்கள் விதிவிலக்கு! செக்கு மாடு போல உழைச்சு தனக்கென்று ஒரு சதம் செலவழிக்காம வீட்டாக்கள் பற்றியே சிந்திக்கிறது...சுத்த முட்டாள்தனம் ...” தொடர்ந்து. சொன்னான்.
“சரி விடு, அது அவன் விருப்பம். அருள் வர இல்ல என்றால் பழசை சாப்பிட்டிட்டு இருக்கட்டும்; ஆறு மணிவாக்கில பிறந்தநாள் வீட்டுக்குப் போயிட்டு வருவம்.” முடிவெடுத்தவர்கள், தத்தம் வேலைகளில் மூழ்கினர்.
ஒன்றாக இருக்கும் நண்பர்களின் மனத்தாங்களுக்குப் பாத்திரமான அருள், அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லவே இல்லை.
மனம் என்ற ஒன்று இருக்கின்றதா? அவனுக்கே சந்தேகம் தரும் வகையில் நெஞ்சாங்கூடு வெறுமையை உணர்ந்தது.
தொண்டைவரை முட்டிய கயர்ப்பு, அவன் வாழ்வை; இத்தனை வருட கடின உழைப்பை; உடன் பிறப்புகள் என்று துடிக்கும் அவனின் பாசம் கொண்ட மனதை எள்ளி நகையாடியது.
கோபமும் ஆத்திரமும் வெறுப்பும் கட்டிப்பிடித்து ஆக்ரோஷமான கைகலப்பில் ஈடுபட்டிருக்க, இயந்திரமாகச் செயல்பட்டு, திட்டமிட்டபடி வெளி அலுவல்களை முடித்தவன், சில பொருட்களையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப, நண்பர்கள் பிறந்தநாள் வீடு சென்றிருந்தார்கள்.