அத்தியாயம் 42
வவுனியா கந்தசுவாமி கோவிலில் வைத்து நிரல்யாவின் கழுத்தில் மங்கலநாணைப் பூட்டி மனைவியாக்கிக்கொண்டான் அனந்தன். அவனுடைய எத்தனையோ வருடத்துத் தவம்! மிகவும் ஆசுவாசமாகவும் நிறைவாகவும் உணர்ந்தவன் அவள் முகம் பார்த்து நிறைவாய்ப் புன்னகைத்தான்.
என்னதான் மனத்தைத் தயார் படுத்தி வைத்திருந்தபோதிலும் நிரல்யாவினால் அந்த நொடிகளை அத்தனை இலகுவாய்க் கடக்க முடியவில்லை. அலையடிக்கும் கடலாய் அவள் கட்டுப்பாட்டையும் மீறி ஏதேதோ எண்ணங்கள் சுழன்றடித்து அவளையும் சுழற்றியடிக்க முயன்றன. அதையெல்லாம் தனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு தானும் அவன் முகம் பார்த்து முறுவலிக்க முயன்றாள்.
மகள் கழுத்தில் தாளியேறிய அந்தக் கனத்தைக் கண்ணாரக் கண்டுவிட்ட அமிர்தவல்லி அம்மாவினால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை. பட்டுப்போயிற்றோ என்று பயந்துபோயிருந்த மகளின் வாழ்க்கை, வசந்தகாலத்து மரங்களாக மீண்டும் துளிர்க்க ஆரம்பித்துவிட்டதில் ஆரம்பித்துவிட்டதில் முற்றிலும் நெகிழ்ந்துபோயிருந்தார். சுந்தரலிங்கத்தின் நிலையும் அதேதான். இமைக்கவும் மறந்து அவர்களையே பார்த்திருந்தார்.
கணவன் மனைவியாக வந்து அனந்தனும் நிரல்யாவும் அவர்கள் பாதம் பணிந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டபோது சுந்தரலிங்கத்தினால் பேசவே முடியவில்லை. அனந்தனை எழுப்பி நிறுத்தி இறுக்கி அணைத்துக்கொண்டார். “சந்தோசமப்பு!” என்ற அந்த ஒற்றை வார்த்தையின் பின்னிருந்த அவர் மனத்தின் நிறைவை முழுமையாய் உணர்ந்தவன், “எனக்கும்தான் மாமா!” என்றான் விரிந்த சிரிப்புடன்.
அவன் தோள்கள் இரண்டையும் பற்றி, “திரும்பவும் சொல்லுறன் நந்தா, என்ர வாழ்க்கைல நான் செய்த ஒரேயொரு நல்ல காரியம் உன்னக் கையோட கூட்டிக்கொண்டு வந்ததுதான்.” என்றார் நெகிழ்ந்த குரலில்.
அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருப்பது புரிய, “என்ன மாமா இது? நான் இன்னும் சீதனம் கேக்கவே இல்ல. அதுக்கிடையில அவசரப்பட்டுப் பாராட்டாதீங்க.” என்றான் அவரை இலகுவாக்கும் பொருட்டு.
அவர் அசையவே இல்லை. “என்ன பெரிய சீதனம்? முழுச் சொத்தும் உனக்குத்தான். என்ர ஒரேயொரு சொத்து நீ மட்டும்தான். நீ இருந்தாப் போதும். இதைப் போலப் பத்து மடங்கு சேர்த்திடுவன்.” என்றவரின் பேச்சில் வாய்விட்டே சிரித்தான். உள்ளத்தில் அவர்பால் அன்பு இன்னும் பெருக, “நீங்களும் அப்பிடித்தான் மாமா எனக்கு!” என்றான் நெகிழ்ந்த குரலில்.
அமிர்தவல்லியும், “அவர் சொன்னது உண்மைதான் நந்தா. நீ இல்லாட்டி நாங்க என்னவாகி இருப்பம் எண்டு யோசிக்கவே ஏலாம இருக்கு. கடவுள் தந்த வரம் எங்களுக்கு நீ!” என்றார் விழிகளில் நீர் அரும்ப.
“அப்பிடியே நீங்க இல்லாட்டி நான் என்னாகி இருப்பன் எண்டும் யோசிங்க மாமி.” என்றான் அவன் மென்மையாகிப்போன குரலில்.
மறுப்பாய்த் தலையசைத்தார் அவர். “உன்ர மனதுக்கும் குணத்துக்கும் நீ எங்க இருந்திருந்தாலும் நல்லா இருந்திருப்பாய். ஆனா எங்களுக்கு…” என்றவரை மேலே பேசவிடாமல், “மாமி, அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல. என்ர அம்மா அப்பாக்கு நான் செய்ய மாட்டனா? எனக்கு நீங்க ரெண்டு பேரும் அப்பிடித்தான். அதால சும்மா மனதைப் போட்டுக் குழப்பாதீங்கோ.” என்று அவரைத் தடுத்து நிறுத்தினான் அவன்.
இதையெல்லாம் பார்த்திருந்த நிரல்யா, குற்ற உணர்ச்சியில் குன்றிப்போனாள். அவளைக் குறித்து எந்தளவுக்குப் பயந்திருந்தால் இந்தளவுக்கு உடைந்து போயிருப்பார்கள்? மகளாகத் தான் செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறியதுமல்லாமல் அவள் அவர்களுக்குக் கொடுத்த கஸ்டங்கள் கொஞ்ச நஞ்சமா? இன்றைக்குத்தான் நிம்மதியாக மூச்சு விடுவார்கள் போலும். அதற்கு மேலும் முடியாமல், “சொறி அம்மா. உண்மையாவே சொறி!” என்றாள் தழுதழுத்து.
பெற்றவர்களின் உள்ளம் உருகிப் போயிற்று. நல்லது நடந்திருக்கும் இந்த நாளில் அவள் இனி நன்றாய் வாழ வேண்டும் என்று அவர்கள் உள்ளம் பிரார்த்திக்கும் இந்த நேரம் மகள் மீது அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.
அதில், “அப்பிடியெல்லாம் இல்லையாச்சி. உன்னில எங்களுக்கு எந்தக் கோபதாபமும் இல்ல. இனிப் பழசை எல்லாம் நினைக்காத. அதெல்லாம் நடந்து முடிஞ்சுது. இனி நீ எப்பவும் சந்தோசமா இருக்கோணும். சரியா?” என்றார் அமிர்தவல்லி அவள் கன்னம் வருடி.
சரி என்று தலையசைத்தாள் கேட்டுக்கொண்டாள் மகள்.
ஆண்கள் இருவரும் வந்திருந்தவர்கள் பக்கம் நகரவும், “அம்மாச்சி இங்கப் பார், இனியும் கண்டதையும் யோசிச்சு மனதைக் குழப்பக் கூடாது. இனி நீ நந்தன்ர மனுசி. அதை மனதில நல்லாப் பதிய வை! முக்கியமா நந்தனச் சந்தோசமா வச்சிரு. அவனுக்கு எண்டும் ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கும். விளங்குதாம்மா நான் சொல்லுறது? வளத்த பாசத்துக்காக எல்லாத்தையும் தாங்குகிறான் எண்டுறதுக்காகச் சுமையக் கூட்டிக்கொண்டே போகக் கூடாது. யோசிச்சுப் பார், அவன்ர வாழ்க்கைல அவன் என்ன சந்தோசத்தை அனுபவிச்சான் எண்டு? ஒண்டுமே இல்ல. அவனுக்கு முப்பத்திநாலு வயசாகப் போகுது. இதை எல்லாம் நினைவில வச்சு நடக்கோணும், சரியா?” பூடகமாய் அவர் சொன்னது அவளுக்கு விளங்காமல் இல்லை. மெல்லிய சங்கடம் தாக்க அவர் விழிகளைச் சந்திக்க முடியாமல் தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள் நிரல்யா.
சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிய நல்லபடியாக உணவையும் முடித்துக்கொண்டு, நிறைவாகத் திருமணத்தை நடத்தி முடித்த பாராட்டையும் வாழ்த்துகளையும் வந்திருந்தவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, சுகமான அயர்ச்சியுடன் நால்வரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
அன்று இரவும் அவள் அறையின் கதவைத் தட்டினான் அனந்தன். அவள் திரும்பிப் பார்க்க எப்போதும் அவளை அழைக்கிறவன் இப்போது திறந்த கதவினூடு உள்ளே வந்தான். அதுவும் கதவை உட்புறமாகத் தாளிட்டுவிட்டு வரவும் அவளுக்குத் தேகம் தூக்கிப் போட்டது. நெஞ்சில் பெரும் அதிர்வு. இமைக்கவும் மறந்து அவனையே பார்த்தாள். அன்று காலையில் அவன் அணிவித்துவிட்ட தாலி அவனுக்கான எல்லைகளைத் தகர்த்து எறிந்துவிட்டது என்று சொல்லாமல் சொல்கிறானா? உள்ளே ஒரு பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ள, கோயிலில் வைத்து அன்னை சொன்ன வார்த்தைகள் வேறு காதினுள் எதிரொலிக்க, அவன் வருகைக்கு எப்படி வினையாற்றுவது என்று தெரியாது தடுமாறினாள் நிரல்யா.
வந்து கட்டிலில் இலகுவாய் அமர்ந்து, “என்ன செய்றாய்?” என்றான் அவள் கையிலிருந்த திருமணச் சேலையைக் கவனித்தபடி.
“அது… சாறி…” என்று தடுமாறினாள் அவள்.
“இப்பவே மடிச்சு வைக்காத. அந்தக் கதிரைல விரிச்சுப் போடு. நாளைக்கு மடிச்சு வைக்கலாம்.”
ஒரு பொம்மையைப் போல் அவன் சொன்னதைச் செய்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. பயமும் படபடப்புமாய் அவன் முகம் பார்த்து நின்றாள்.
வவுனியா கந்தசுவாமி கோவிலில் வைத்து நிரல்யாவின் கழுத்தில் மங்கலநாணைப் பூட்டி மனைவியாக்கிக்கொண்டான் அனந்தன். அவனுடைய எத்தனையோ வருடத்துத் தவம்! மிகவும் ஆசுவாசமாகவும் நிறைவாகவும் உணர்ந்தவன் அவள் முகம் பார்த்து நிறைவாய்ப் புன்னகைத்தான்.
என்னதான் மனத்தைத் தயார் படுத்தி வைத்திருந்தபோதிலும் நிரல்யாவினால் அந்த நொடிகளை அத்தனை இலகுவாய்க் கடக்க முடியவில்லை. அலையடிக்கும் கடலாய் அவள் கட்டுப்பாட்டையும் மீறி ஏதேதோ எண்ணங்கள் சுழன்றடித்து அவளையும் சுழற்றியடிக்க முயன்றன. அதையெல்லாம் தனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு தானும் அவன் முகம் பார்த்து முறுவலிக்க முயன்றாள்.
மகள் கழுத்தில் தாளியேறிய அந்தக் கனத்தைக் கண்ணாரக் கண்டுவிட்ட அமிர்தவல்லி அம்மாவினால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை. பட்டுப்போயிற்றோ என்று பயந்துபோயிருந்த மகளின் வாழ்க்கை, வசந்தகாலத்து மரங்களாக மீண்டும் துளிர்க்க ஆரம்பித்துவிட்டதில் ஆரம்பித்துவிட்டதில் முற்றிலும் நெகிழ்ந்துபோயிருந்தார். சுந்தரலிங்கத்தின் நிலையும் அதேதான். இமைக்கவும் மறந்து அவர்களையே பார்த்திருந்தார்.
கணவன் மனைவியாக வந்து அனந்தனும் நிரல்யாவும் அவர்கள் பாதம் பணிந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டபோது சுந்தரலிங்கத்தினால் பேசவே முடியவில்லை. அனந்தனை எழுப்பி நிறுத்தி இறுக்கி அணைத்துக்கொண்டார். “சந்தோசமப்பு!” என்ற அந்த ஒற்றை வார்த்தையின் பின்னிருந்த அவர் மனத்தின் நிறைவை முழுமையாய் உணர்ந்தவன், “எனக்கும்தான் மாமா!” என்றான் விரிந்த சிரிப்புடன்.
அவன் தோள்கள் இரண்டையும் பற்றி, “திரும்பவும் சொல்லுறன் நந்தா, என்ர வாழ்க்கைல நான் செய்த ஒரேயொரு நல்ல காரியம் உன்னக் கையோட கூட்டிக்கொண்டு வந்ததுதான்.” என்றார் நெகிழ்ந்த குரலில்.
அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருப்பது புரிய, “என்ன மாமா இது? நான் இன்னும் சீதனம் கேக்கவே இல்ல. அதுக்கிடையில அவசரப்பட்டுப் பாராட்டாதீங்க.” என்றான் அவரை இலகுவாக்கும் பொருட்டு.
அவர் அசையவே இல்லை. “என்ன பெரிய சீதனம்? முழுச் சொத்தும் உனக்குத்தான். என்ர ஒரேயொரு சொத்து நீ மட்டும்தான். நீ இருந்தாப் போதும். இதைப் போலப் பத்து மடங்கு சேர்த்திடுவன்.” என்றவரின் பேச்சில் வாய்விட்டே சிரித்தான். உள்ளத்தில் அவர்பால் அன்பு இன்னும் பெருக, “நீங்களும் அப்பிடித்தான் மாமா எனக்கு!” என்றான் நெகிழ்ந்த குரலில்.
அமிர்தவல்லியும், “அவர் சொன்னது உண்மைதான் நந்தா. நீ இல்லாட்டி நாங்க என்னவாகி இருப்பம் எண்டு யோசிக்கவே ஏலாம இருக்கு. கடவுள் தந்த வரம் எங்களுக்கு நீ!” என்றார் விழிகளில் நீர் அரும்ப.
“அப்பிடியே நீங்க இல்லாட்டி நான் என்னாகி இருப்பன் எண்டும் யோசிங்க மாமி.” என்றான் அவன் மென்மையாகிப்போன குரலில்.
மறுப்பாய்த் தலையசைத்தார் அவர். “உன்ர மனதுக்கும் குணத்துக்கும் நீ எங்க இருந்திருந்தாலும் நல்லா இருந்திருப்பாய். ஆனா எங்களுக்கு…” என்றவரை மேலே பேசவிடாமல், “மாமி, அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல. என்ர அம்மா அப்பாக்கு நான் செய்ய மாட்டனா? எனக்கு நீங்க ரெண்டு பேரும் அப்பிடித்தான். அதால சும்மா மனதைப் போட்டுக் குழப்பாதீங்கோ.” என்று அவரைத் தடுத்து நிறுத்தினான் அவன்.
இதையெல்லாம் பார்த்திருந்த நிரல்யா, குற்ற உணர்ச்சியில் குன்றிப்போனாள். அவளைக் குறித்து எந்தளவுக்குப் பயந்திருந்தால் இந்தளவுக்கு உடைந்து போயிருப்பார்கள்? மகளாகத் தான் செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறியதுமல்லாமல் அவள் அவர்களுக்குக் கொடுத்த கஸ்டங்கள் கொஞ்ச நஞ்சமா? இன்றைக்குத்தான் நிம்மதியாக மூச்சு விடுவார்கள் போலும். அதற்கு மேலும் முடியாமல், “சொறி அம்மா. உண்மையாவே சொறி!” என்றாள் தழுதழுத்து.
பெற்றவர்களின் உள்ளம் உருகிப் போயிற்று. நல்லது நடந்திருக்கும் இந்த நாளில் அவள் இனி நன்றாய் வாழ வேண்டும் என்று அவர்கள் உள்ளம் பிரார்த்திக்கும் இந்த நேரம் மகள் மீது அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.
அதில், “அப்பிடியெல்லாம் இல்லையாச்சி. உன்னில எங்களுக்கு எந்தக் கோபதாபமும் இல்ல. இனிப் பழசை எல்லாம் நினைக்காத. அதெல்லாம் நடந்து முடிஞ்சுது. இனி நீ எப்பவும் சந்தோசமா இருக்கோணும். சரியா?” என்றார் அமிர்தவல்லி அவள் கன்னம் வருடி.
சரி என்று தலையசைத்தாள் கேட்டுக்கொண்டாள் மகள்.
ஆண்கள் இருவரும் வந்திருந்தவர்கள் பக்கம் நகரவும், “அம்மாச்சி இங்கப் பார், இனியும் கண்டதையும் யோசிச்சு மனதைக் குழப்பக் கூடாது. இனி நீ நந்தன்ர மனுசி. அதை மனதில நல்லாப் பதிய வை! முக்கியமா நந்தனச் சந்தோசமா வச்சிரு. அவனுக்கு எண்டும் ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கும். விளங்குதாம்மா நான் சொல்லுறது? வளத்த பாசத்துக்காக எல்லாத்தையும் தாங்குகிறான் எண்டுறதுக்காகச் சுமையக் கூட்டிக்கொண்டே போகக் கூடாது. யோசிச்சுப் பார், அவன்ர வாழ்க்கைல அவன் என்ன சந்தோசத்தை அனுபவிச்சான் எண்டு? ஒண்டுமே இல்ல. அவனுக்கு முப்பத்திநாலு வயசாகப் போகுது. இதை எல்லாம் நினைவில வச்சு நடக்கோணும், சரியா?” பூடகமாய் அவர் சொன்னது அவளுக்கு விளங்காமல் இல்லை. மெல்லிய சங்கடம் தாக்க அவர் விழிகளைச் சந்திக்க முடியாமல் தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள் நிரல்யா.
சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிய நல்லபடியாக உணவையும் முடித்துக்கொண்டு, நிறைவாகத் திருமணத்தை நடத்தி முடித்த பாராட்டையும் வாழ்த்துகளையும் வந்திருந்தவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, சுகமான அயர்ச்சியுடன் நால்வரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
அன்று இரவும் அவள் அறையின் கதவைத் தட்டினான் அனந்தன். அவள் திரும்பிப் பார்க்க எப்போதும் அவளை அழைக்கிறவன் இப்போது திறந்த கதவினூடு உள்ளே வந்தான். அதுவும் கதவை உட்புறமாகத் தாளிட்டுவிட்டு வரவும் அவளுக்குத் தேகம் தூக்கிப் போட்டது. நெஞ்சில் பெரும் அதிர்வு. இமைக்கவும் மறந்து அவனையே பார்த்தாள். அன்று காலையில் அவன் அணிவித்துவிட்ட தாலி அவனுக்கான எல்லைகளைத் தகர்த்து எறிந்துவிட்டது என்று சொல்லாமல் சொல்கிறானா? உள்ளே ஒரு பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ள, கோயிலில் வைத்து அன்னை சொன்ன வார்த்தைகள் வேறு காதினுள் எதிரொலிக்க, அவன் வருகைக்கு எப்படி வினையாற்றுவது என்று தெரியாது தடுமாறினாள் நிரல்யா.
வந்து கட்டிலில் இலகுவாய் அமர்ந்து, “என்ன செய்றாய்?” என்றான் அவள் கையிலிருந்த திருமணச் சேலையைக் கவனித்தபடி.
“அது… சாறி…” என்று தடுமாறினாள் அவள்.
“இப்பவே மடிச்சு வைக்காத. அந்தக் கதிரைல விரிச்சுப் போடு. நாளைக்கு மடிச்சு வைக்கலாம்.”
ஒரு பொம்மையைப் போல் அவன் சொன்னதைச் செய்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. பயமும் படபடப்புமாய் அவன் முகம் பார்த்து நின்றாள்.