என்னை மட்டும் காதலி
அன்று காதலர் தினம். ஆராதனாவுக்கு விடிந்ததில் இருந்தே கைகால்களில் ஒரே பரபரப்பு. மனம் ஒன்றை ஆவலாக எதிர்பார்த்து, இன்பக் கனவுகளில் மூழ்கிக்கொண்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவியாக இருந்தவள் கம்பஸ் போய் வந்ததும், மாலை, தோழி வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுத் தயாரானாள்.
தலைக்குக் குளித்து, பிரத்தியேகமாகத் தயாராகி புறப்பட்டவளின் விழிகள் யாரையோ எதிர்பார்த்து வீதி முழுவதும் சுழன்று தேடியது. கதிரும் அவளை ஏமாற்றவில்லை. அடர் சிவப்பு வெல்வெட்டைப் போன்ற மிருதுவான பெரிய ஒற்றை ரோஜாவுடன் மோட்டார் வண்டியில் வந்துகொண்டிருந்தான். தூரத்திலேயே கண்டுகொண்டாள். உள்ளம் துள்ளிற்று! ஆனாலும் காணாதவள் போன்று பார்வையை நேரே பதித்து சைக்கிளை மிதித்தாலும் அப்போதே கன்னங்கள் சிவக்கவாரம்பித்திருந்தது.
இவள் இந்தப் பக்கமாகவும் அவன் அந்தப் பக்கமாகவும் வந்துகொண்டிருக்க, அவளை நெருங்கியதும், அவன் தன் வண்டியை இவள் பக்கமாகத் திருப்பினான்.
அதைக் கண்டதும், அவள் எதிர்பார்த்த விடயம் நடக்கப் போகிறது என்று இதயம் எம்பிக் குதிக்கவாரம்பிக்க, அவளுக்குள் படபடப்பு அதிகரித்துப் போயிற்று. ஆயினும், எதுவுமே அறியாதவள் போன்று அவனை ஏறிட்டாள்.
அவளின் கள்ளத்தனத்தை அவன் ரசித்தான் போலும். உதட்டோரம் அவளைக் கண்டுகொண்ட சிரிப்பு சட்டென்று முளைக்க, சரியாக அவளின் அருகில் தன் வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தினான். அவளின் ஒற்றைக்காலும் சைக்கிளில் இருந்து விடுபட்டுத் தானாக நிலத்தைப் பற்றியது. பயமும் எதிர்பார்ப்புமாக அவள் பார்க்க, “இண்டைக்கு என்ன நாள் எண்டு தெரியுமோ?” என்று துள்ளலாகக் கேட்டான் அவன்.
தெரியாது என்று சொல்லத்தான் நினைத்தாள். அவளுக்குத் தெரியாமல் இருக்காது என்று அவனுக்குத் தெரியுமென்பதில், “தெரியும்.” என்றாள் மெல்ல.
“அப்ப நான் ஏன் வந்திருக்கிறன் எண்டும் தெரியும் போல!” கண்ணைச் சிமிட்டியபடிக் கேட்டான் அவன்.
சில் என்று நெஞ்சைத் தொட்டது அவனது கண் சிமிட்டல்.
“எனக்கு என்ன தெரியும்?” உதட்டை ஆக்கிரமிக்க முனைந்த சிரிப்பை அடக்கப்பார்த்தபடி சொன்னாள் ஆராதனா.
“பொய்! அழகான பொய்!” என்று அவளை வெட்கத்தில் திணறவைத்துவிட்டு கையிலிருந்த ரோஜாவை நீட்டினான் அவன்.
“என் காதல் ரோஜாவுக்கு இந்த ஒற்றை ரோஜா!” கவிதையாகக் காதல் சொன்னவனை விழிகள் விரிய ஆனந்தமாய் ஏறிட்டாள் ஆராதனா.
“என்ன, வாங்க மாட்டியா?” அவளை அறிந்தவனாக உல்லாசமாய்க் கேட்டான் அவன்.
சட்டென்று இதழ்களில் பூத்துவிட்ட வெட்கச் சிரிப்புடன் வாங்கிக்கொண்டாள் ஆராதனா.
“யாஹூ! சக்ஸஸ்!” என்று கையைக் காற்றில் வீசி அவன் சத்தமிட்ட போது, “ஐயோ இது ரோட்டு! என்ன செய்றீங்க?” என்று ஆனந்தமாக அலறினாள் ஆராதனா.
அந்த ஒற்றை ரோஜாவை வாங்கியதற்கா இந்த ஆர்ப்பாட்டம்? விழிகள் மலரப் பார்த்தாள். அவளின் சம்மதம் அவனுக்கு அவ்வளவு முக்கியமாமா? அவள் சம்மதித்துவிட வேண்டும் என்று ஏங்கியிருக்கிறான் என்கிற நினைவே அவளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவனோ, வேகமாக ஒரு சாக்லேட்டினைப் பிரித்துப் பாதியை அவளுக்கு நீட்டினான். வாங்கி அவள் வாயில் போட்டுக்கொண்டபிறகு மிகுதியைத் தன் வாயில் போட்டுக்கொண்டான்.
“அடுத்தமுறை, நீ கடிச்சிட்டுத் தாற பாதியை நான் சாப்பிடவேணும்!” என்றான் குறும்புடன்.
தைரியம்தான்! சம்மதம் சொன்னதுமே என்னவெல்லாம் கதைக்கிறான்! மனம் சீராட்டிக்கொண்டது, அவனை. நீண்ட நேரமாய் அங்கேயே அவனோடு நிற்பது மெல்ல உறைக்க, “வரவா? நேரமாச்சு!” என்று மனமேயில்லாமல் சைக்கிளை நகர்த்தத் துவங்கினாள் ஆராதனா.
“இனி எப்ப எங்க எண்டு ஒண்டும் சொல்லேல்ல?” என்றான் அவன்.
அவள் விளங்காமல் பார்க்க, “கதைக்கோணும்..” என்றான் அவன்.
“நான் படிக்கோணும்; நீங்களும் படிச்சு முடியுங்கோ, ஆறுதலா கதைக்கலாம்.” அவனோடு கதைக்க அவளுக்கும் ஆசைதான், என்றாலும் மனதை அடக்கிச் சொன்னாள்.
“கதைச்சா படிக்கேலாது எண்டு யார் சொன்னது? எப்பயாவது தானே கேக்கிறன்?”
உண்மைதானே! ஆனால் எப்படிக் கதைப்பது? பதில் சொல்லத் தெரியாமல் திணறிவிட்டு, “ நேரமாகுது!” என்றுவிட்டு அங்கிருந்து ஓடியே போனாள் ஆராதனா.
அவன் முகம் வாடிப்போயிற்று! தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டு மேலே படித்துக்கொண்டும் இருந்தான் கதிர்.
அதன்பிறகு சந்திப்புக்களை அவனாக உருவாக்கினான். கோயிலுக்குச் செல்கையில், லைப்ரரிக்குப் போகையில் என்று அவள் போகுமிடங்களில் எங்காவது நின்று ஒருசில நிமிடங்கள் கதைத்தான். ஆசைகொண்ட மனதுக்கு அந்த ஒருசில நிமிடங்கள் போதாமலிருந்தது. அவளுக்கோ, நாளுக்கு நாள் அதிகரித்த அவனது வரவில் மெல்லிய சங்கடம் அதிகரிக்கத் துவங்கிற்று!
“பாக்கிற ஆக்கள் என்ன நினைப்பீனம்?” என்று அவள் சொல்ல, “அதுதான், தனியா வா எண்டு கூப்பிடுறன். வாறியே இல்ல. அந்தளவுக்கு என்னில நம்பிக்கை இல்லையா ஆராதனா?” என்றான் அவன் வறண்ட குரலில்.
கவலையோடு பார்த்தாள் அவள். அவன் பாவம் தான். நம்பிக்கை இல்லாவிட்டால் காதலுக்குச் சம்மதம் சொல்வாளா என்ன? ஏதோ ஒரு பயம். தனியாக அவனைச் சந்திப்பதை நினைத்தாலே மனம் படபடத்தது. இன்னதுதான் என்று தெரியாத அச்சம். அதேநேரம், அவனோடு தனியாக அமர்ந்திருந்து கதைக்கவும் ஆவலாயிருந்தது.
“எனக்கு மட்டும் விருப்பம் இல்லாம இல்லக் கதிர், பயமாயிருக்கு; யாராவது பாத்தா?”
“வெளில எங்கயும் சந்திச்சாத்தானே பயம்? நீ வா, நாங்க ஒரு வீட்டுக்குப் போய்க் கதைப்பம்.” என்றான் அவன்.
“விசரா உங்களுக்கு? அம்மாக்குத் தெரிஞ்சுது தோலை உரிச்சுப் போடுவா!”
“அப்ப எங்க தான் வருவாய் எண்டு சொல்லு? கோயில்ல வச்சுக் கதைக்கக் கூடாது எண்டு சொல்லுறாய்; தியேட்டருக்கு வரமாட்டாய்; ஒரு ரெஸ்டாரண்டுக்கு போவம் எண்டால், அதுக்கும் மாட்டன்; என்ன ஆராதனா இது?” என்று, கோபம் காட்டினான் அவன்.
அன்று காதலர் தினம். ஆராதனாவுக்கு விடிந்ததில் இருந்தே கைகால்களில் ஒரே பரபரப்பு. மனம் ஒன்றை ஆவலாக எதிர்பார்த்து, இன்பக் கனவுகளில் மூழ்கிக்கொண்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவியாக இருந்தவள் கம்பஸ் போய் வந்ததும், மாலை, தோழி வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுத் தயாரானாள்.
தலைக்குக் குளித்து, பிரத்தியேகமாகத் தயாராகி புறப்பட்டவளின் விழிகள் யாரையோ எதிர்பார்த்து வீதி முழுவதும் சுழன்று தேடியது. கதிரும் அவளை ஏமாற்றவில்லை. அடர் சிவப்பு வெல்வெட்டைப் போன்ற மிருதுவான பெரிய ஒற்றை ரோஜாவுடன் மோட்டார் வண்டியில் வந்துகொண்டிருந்தான். தூரத்திலேயே கண்டுகொண்டாள். உள்ளம் துள்ளிற்று! ஆனாலும் காணாதவள் போன்று பார்வையை நேரே பதித்து சைக்கிளை மிதித்தாலும் அப்போதே கன்னங்கள் சிவக்கவாரம்பித்திருந்தது.
இவள் இந்தப் பக்கமாகவும் அவன் அந்தப் பக்கமாகவும் வந்துகொண்டிருக்க, அவளை நெருங்கியதும், அவன் தன் வண்டியை இவள் பக்கமாகத் திருப்பினான்.
அதைக் கண்டதும், அவள் எதிர்பார்த்த விடயம் நடக்கப் போகிறது என்று இதயம் எம்பிக் குதிக்கவாரம்பிக்க, அவளுக்குள் படபடப்பு அதிகரித்துப் போயிற்று. ஆயினும், எதுவுமே அறியாதவள் போன்று அவனை ஏறிட்டாள்.
அவளின் கள்ளத்தனத்தை அவன் ரசித்தான் போலும். உதட்டோரம் அவளைக் கண்டுகொண்ட சிரிப்பு சட்டென்று முளைக்க, சரியாக அவளின் அருகில் தன் வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தினான். அவளின் ஒற்றைக்காலும் சைக்கிளில் இருந்து விடுபட்டுத் தானாக நிலத்தைப் பற்றியது. பயமும் எதிர்பார்ப்புமாக அவள் பார்க்க, “இண்டைக்கு என்ன நாள் எண்டு தெரியுமோ?” என்று துள்ளலாகக் கேட்டான் அவன்.
தெரியாது என்று சொல்லத்தான் நினைத்தாள். அவளுக்குத் தெரியாமல் இருக்காது என்று அவனுக்குத் தெரியுமென்பதில், “தெரியும்.” என்றாள் மெல்ல.
“அப்ப நான் ஏன் வந்திருக்கிறன் எண்டும் தெரியும் போல!” கண்ணைச் சிமிட்டியபடிக் கேட்டான் அவன்.
சில் என்று நெஞ்சைத் தொட்டது அவனது கண் சிமிட்டல்.
“எனக்கு என்ன தெரியும்?” உதட்டை ஆக்கிரமிக்க முனைந்த சிரிப்பை அடக்கப்பார்த்தபடி சொன்னாள் ஆராதனா.
“பொய்! அழகான பொய்!” என்று அவளை வெட்கத்தில் திணறவைத்துவிட்டு கையிலிருந்த ரோஜாவை நீட்டினான் அவன்.
“என் காதல் ரோஜாவுக்கு இந்த ஒற்றை ரோஜா!” கவிதையாகக் காதல் சொன்னவனை விழிகள் விரிய ஆனந்தமாய் ஏறிட்டாள் ஆராதனா.
“என்ன, வாங்க மாட்டியா?” அவளை அறிந்தவனாக உல்லாசமாய்க் கேட்டான் அவன்.
சட்டென்று இதழ்களில் பூத்துவிட்ட வெட்கச் சிரிப்புடன் வாங்கிக்கொண்டாள் ஆராதனா.
“யாஹூ! சக்ஸஸ்!” என்று கையைக் காற்றில் வீசி அவன் சத்தமிட்ட போது, “ஐயோ இது ரோட்டு! என்ன செய்றீங்க?” என்று ஆனந்தமாக அலறினாள் ஆராதனா.
அந்த ஒற்றை ரோஜாவை வாங்கியதற்கா இந்த ஆர்ப்பாட்டம்? விழிகள் மலரப் பார்த்தாள். அவளின் சம்மதம் அவனுக்கு அவ்வளவு முக்கியமாமா? அவள் சம்மதித்துவிட வேண்டும் என்று ஏங்கியிருக்கிறான் என்கிற நினைவே அவளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவனோ, வேகமாக ஒரு சாக்லேட்டினைப் பிரித்துப் பாதியை அவளுக்கு நீட்டினான். வாங்கி அவள் வாயில் போட்டுக்கொண்டபிறகு மிகுதியைத் தன் வாயில் போட்டுக்கொண்டான்.
“அடுத்தமுறை, நீ கடிச்சிட்டுத் தாற பாதியை நான் சாப்பிடவேணும்!” என்றான் குறும்புடன்.
தைரியம்தான்! சம்மதம் சொன்னதுமே என்னவெல்லாம் கதைக்கிறான்! மனம் சீராட்டிக்கொண்டது, அவனை. நீண்ட நேரமாய் அங்கேயே அவனோடு நிற்பது மெல்ல உறைக்க, “வரவா? நேரமாச்சு!” என்று மனமேயில்லாமல் சைக்கிளை நகர்த்தத் துவங்கினாள் ஆராதனா.
“இனி எப்ப எங்க எண்டு ஒண்டும் சொல்லேல்ல?” என்றான் அவன்.
அவள் விளங்காமல் பார்க்க, “கதைக்கோணும்..” என்றான் அவன்.
“நான் படிக்கோணும்; நீங்களும் படிச்சு முடியுங்கோ, ஆறுதலா கதைக்கலாம்.” அவனோடு கதைக்க அவளுக்கும் ஆசைதான், என்றாலும் மனதை அடக்கிச் சொன்னாள்.
“கதைச்சா படிக்கேலாது எண்டு யார் சொன்னது? எப்பயாவது தானே கேக்கிறன்?”
உண்மைதானே! ஆனால் எப்படிக் கதைப்பது? பதில் சொல்லத் தெரியாமல் திணறிவிட்டு, “ நேரமாகுது!” என்றுவிட்டு அங்கிருந்து ஓடியே போனாள் ஆராதனா.
அவன் முகம் வாடிப்போயிற்று! தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டு மேலே படித்துக்கொண்டும் இருந்தான் கதிர்.
அதன்பிறகு சந்திப்புக்களை அவனாக உருவாக்கினான். கோயிலுக்குச் செல்கையில், லைப்ரரிக்குப் போகையில் என்று அவள் போகுமிடங்களில் எங்காவது நின்று ஒருசில நிமிடங்கள் கதைத்தான். ஆசைகொண்ட மனதுக்கு அந்த ஒருசில நிமிடங்கள் போதாமலிருந்தது. அவளுக்கோ, நாளுக்கு நாள் அதிகரித்த அவனது வரவில் மெல்லிய சங்கடம் அதிகரிக்கத் துவங்கிற்று!
“பாக்கிற ஆக்கள் என்ன நினைப்பீனம்?” என்று அவள் சொல்ல, “அதுதான், தனியா வா எண்டு கூப்பிடுறன். வாறியே இல்ல. அந்தளவுக்கு என்னில நம்பிக்கை இல்லையா ஆராதனா?” என்றான் அவன் வறண்ட குரலில்.
கவலையோடு பார்த்தாள் அவள். அவன் பாவம் தான். நம்பிக்கை இல்லாவிட்டால் காதலுக்குச் சம்மதம் சொல்வாளா என்ன? ஏதோ ஒரு பயம். தனியாக அவனைச் சந்திப்பதை நினைத்தாலே மனம் படபடத்தது. இன்னதுதான் என்று தெரியாத அச்சம். அதேநேரம், அவனோடு தனியாக அமர்ந்திருந்து கதைக்கவும் ஆவலாயிருந்தது.
“எனக்கு மட்டும் விருப்பம் இல்லாம இல்லக் கதிர், பயமாயிருக்கு; யாராவது பாத்தா?”
“வெளில எங்கயும் சந்திச்சாத்தானே பயம்? நீ வா, நாங்க ஒரு வீட்டுக்குப் போய்க் கதைப்பம்.” என்றான் அவன்.
“விசரா உங்களுக்கு? அம்மாக்குத் தெரிஞ்சுது தோலை உரிச்சுப் போடுவா!”
“அப்ப எங்க தான் வருவாய் எண்டு சொல்லு? கோயில்ல வச்சுக் கதைக்கக் கூடாது எண்டு சொல்லுறாய்; தியேட்டருக்கு வரமாட்டாய்; ஒரு ரெஸ்டாரண்டுக்கு போவம் எண்டால், அதுக்கும் மாட்டன்; என்ன ஆராதனா இது?” என்று, கோபம் காட்டினான் அவன்.
Last edited by a moderator: