“ஆனா, அம்மா எங்கட அப்பாவை முதலே கலியாணம் கட்டிட்டாவே.” அவள் முகத்தில் பெரும் குழப்பம்.
“கெட்டிக்காரி. எங்கட தூரிக்குட்டிக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு.” என்று பாராட்டிவிட்டு, “ஆனா, இப்ப உங்கட அப்பா இல்லை எல்லோ. அவர் திரும்பி வரவும் மாட்டார் என்ன? அவர் இருந்திருந்தா உங்கட பெரியப்பா மாதிரி, கஜன் மாமா மாதிரி உங்களோடதானே இருந்திருப்பார். இப்ப அவர் இல்லாததால, அவருக்குப் பதிலா, உங்க ரெண்டுபேருக்கும் அப்பா மாதிரி இருக்க எனக்கு ஆசையா இருக்கு. உங்களோடயே இருந்து, உங்களோடயே சாப்பிட்டு, உங்களோடயே விளையாடி, உங்க ரெண்டுபேரையும் பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டுபோக எல்லாம் விருப்பமா இருக்கு. நான் உங்களோடயே வந்து இருந்தாத்தானே அதெல்லாம் நடக்கும்.” என்றதும் தூரிகாவுக்கு உருகியே போயிற்று.
ஓடிவந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “நீங்க எங்களோட வந்தா எங்களுக்கும் சந்தோசம் மாமா.” என்றாள் அவன் முகம் பார்த்து.
அகத்தியன் தன்னைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டான். ஏற்கனவே சிந்தூரி அவன் மடியில் இருக்க, பனித்த விழிகளோடு அவளையும் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.
அவர்களிடம் பேசுகிறவரைக்கும் அவனுக்குள்ளும் ஒரு பயம் இருந்துகொண்டுதான் இருந்தது. இப்போதோ எல்லாம் நன்றாகவே நடக்கும் என்கிற நம்பிக்கை பிறந்தது. தாமினியையும் இன்னொரு கையால் அணைத்துக் கொண்டு, “ஆனா உங்கட அம்மா ஓம் எண்டு சொல்லுறா இல்லையே. என்ன செய்வம்?” என்றான் சோகமாக.
அப்படியா என்பதுபோல் மூவர் பார்வையும் ஒன்றாக இவள் புறம் தாவிற்று. மெல்லிய சிரிப்பும் படபடப்புமாக அவள் அமர்ந்திருக்க, “ஓமா அம்மா? உங்களுக்கு விருப்பம் இல்லையா?” என்று, அவனிடம் இருந்தே வினவினாள் தூரிகா.
“நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்களுக்கு விருப்பமா?” தன்னைச் சாதாரணமாகக் காட்ட முயன்றுகொண்டே திருப்பிக் கேட்டாள்.
அகத்தியன் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, “மாமா பாவம்தானே. கூட்டிக்கொண்டு போவம். சிந்து உனக்கு?” என்றாள் தங்கையிடம்.
அவள் அகத்தியனையும் அன்னையையும் மாறிமாறிப் பார்த்தாள்.
“ஓம் எண்டு சொல்ல மாட்டீங்களா? அப்ப உங்களுக்கு மாமாவப் பிடிக்காது என்ன?” என்று அவன் உதடு பிதுக்க, “கூட்டிக்கொண்டு போவம்.” என்றாள் சிந்தூரி.
“அப்பாடி, இவ்வளவு நேரத்துக்கு இப்பதான் வாயத் திறந்து கதைச்சிருக்கிறா. அவ்வளவுக்குப் பெரிய ஆள் நீங்க?” என்றவன் அவளுக்குக் கிச்சு கிச்சு மூட்டினான்.
அவள் அடக்கமாட்டாமல் அவன் மடிக்குள்ளேயே உருண்டு பிரண்டு சிரிக்க ஆரம்பித்தாள். சின்னவர்களும் அவனோடு சேர்ந்துகொண்டனர். மூவருக்கும் மாறி மாறிக் கிச்சு கிச்சு மூட்டி, அதை ஒரு விளையாட்டாகவே மாற்றி, அதற்குமேல் அந்தப் பேச்சை வளரவிடாமல் சூழ்நிலையையே மாற்றி இருந்தான் அகத்தியன்.
காரியம் சாதித்துவிட்டானே! யசோவின் உள்ளம், தன் இறுக்கம் தளர்த்தி வெகுவாக நெகிழ்ந்திருந்தது. விழிகளின் ஓரம் மெலிதாகக் கரித்திருக்க அவனையே பார்த்திருந்தாள்.
என்னவெல்லாமோ கதைத்தார்கள். எதற்கெல்லாமோ சிரித்தார்கள். அவன் மீதே உருண்டு பிரண்டார்கள். அவர்களுக்குள் யசோ போகவே இல்லை. ஒருவித சுகமான மயக்க மனநிலைக்குள் மூழ்கிப் போயிருந்தாள்.
இதற்கிடையில் எப்போது, எப்படி நடந்தது என்றெல்லாம் அவள் கருத்தில் பதியவே இல்லை. பாறையின் தரையில் கொண்டுவந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்க, அதில் ஒரு கையைத் தலைக்குக் கொடுத்து, கால் நீட்டிப் படுத்திருந்தான் அகத்தியன். அவன் மார்பில் சிந்தூரி நல்ல உறக்கத்தில் இருந்தாள். மற்ற இரண்டு பக்கமும் தாமினியும் தூரிகாவும். பார்க்கவே மனத்துக்கு இதம் சேர்த்தது. அவன்தான் அவர்களுக்கு இனி அப்பாவின் இடத்தில் இருக்கப் போகிறான் என்று அறிந்ததில் இருந்து, தூரிகாவும் சிந்தூரியும் ஒரு படி அதிகமாக அவனோடு ஒட்டிக்கொண்டது போலொரு மாயை.
அவள் மிக மிகப் பயந்த தருணம். அதை எத்தனை இலாவகமாகக் கையாண்டுவிட்டான். ஆக, எல்லாவற்றுக்கும் வழியிருக்கிறது. கொஞ்சம் நிதானமும் புத்திசாலித்தனமும் இருந்தால் போதுமானது.
அவள் பார்வை, அவர்களிலேயே நிலைத்திருப்பதைக் கண்டு, “இன்னும் இடமிருக்கு.” என்றான் அவன் மெல்லிய குரலில்.
முதலில் விளங்காமல் புருவம் சுருக்கியவள், விளங்கியதும் அவனை முறைக்கப் பார்த்து முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
மனத்தில் ஒரு விதமான இனிமை. காற்றின் தாலாட்டும் சேர்ந்துகொள்ள, இந்த நொடிகளை அனுபவிக்கத் தனிமை வேண்டும் போலிருந்தது. எழுந்து வந்து தனியாக நின்றிருந்த ஒற்றைக் கல்லில் சாய்ந்துகொண்டாள். மனத்தில் எந்தச் சலனமும் இல்லை. பயம், பதற்றம், யோசனை என்று எதுவுமில்லை. இப்படி, நிர்சிந்தையாய் அவள் இருந்து எத்தனையோ வருடங்களாயிற்றே!
கைக்குள் பொத்தி வைத்திருந்த வண்ணத்துப் பூச்சியைப் பறந்துபோ என்று விட்டால் எப்படிச் சிறகடித்துப் பறக்கும்? அப்படி இருந்தது அவள் மனநிலை! சுகமாய், சொர்க்கமாய், சந்தோசமாய், அழவேண்டும்போல், சிரிக்கவேண்டும்போல், புதிதாய்ப் பிறந்ததுபோல், கடந்துவிட்ட இளமையெல்லாம் திரும்பிவிட்டதுபோல் என்று அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை.
அதற்கென்று அவள் அர்த்தமற்ற கனவில் மிதக்கவும் இல்லை; கற்பனைக் கோட்டையைக் கட்டவுமில்லை. அவன் தன்னைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குவான் என்றோ, தன் ஒற்றைக் கண்ணசைவுக்கே காரியம் புரிவான் என்றோ நினைக்க, வாழ்வின் யதார்த்தம் தெரியாதவளும் அல்லள்!
சண்டை சச்சரவு, கண்ணீர், அழுகை, சிலபல கோபதாபங்கள், சின்ன சின்ன ஏமாற்றங்கள், வலிகள் எல்லாமே எதிர்காலத்தில் இல்லாமல் இருக்கப் போவதில்லை. அதுதான் வாழ்க்கை. அப்படி வரப்போகிற அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி, அவனோடு நன்றாக வாழ்வேன் என்கிற நம்பிக்கை, இந்த நொடியில் அவள் மனத்தில் அழுத்தமாக விழுந்து போயிற்று.
அந்த நம்பிக்கை போதாதா, அவள் வாழ்வில் புது அத்தியாயம் எழுத?
“என்ன இங்க வந்தாச்சு?” பின்னால் கேட்ட அவன் குரலில் பிள்ளைகள் எங்கே என்றுதான் முதலில் பார்த்தாள்.
“மூண்டு பேரும் நல்ல நித்திரை.”
“பின்ன, இந்தப் பெரிய மலையை ஏறி இருக்கினமே! நாளைக்கு எப்பிடிப் பள்ளிக்கூடம் போகப்போயினமோ தெரியா.” சிறு முறுவலோடு சொன்னாள்.
பார்வை அந்த முறுவலில் படிய, “இப்ப நிம்மதியா?” என்றான் அவன்.
நிம்மதியா? எந்தளவுக்கு ஆசுவாசமாக உணர்கிறாள் என்று அவளுக்குத்தானே தெரியும். அதில், “ம்ம்.” என்றாள்.
“கெட்டிக்காரி. எங்கட தூரிக்குட்டிக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு.” என்று பாராட்டிவிட்டு, “ஆனா, இப்ப உங்கட அப்பா இல்லை எல்லோ. அவர் திரும்பி வரவும் மாட்டார் என்ன? அவர் இருந்திருந்தா உங்கட பெரியப்பா மாதிரி, கஜன் மாமா மாதிரி உங்களோடதானே இருந்திருப்பார். இப்ப அவர் இல்லாததால, அவருக்குப் பதிலா, உங்க ரெண்டுபேருக்கும் அப்பா மாதிரி இருக்க எனக்கு ஆசையா இருக்கு. உங்களோடயே இருந்து, உங்களோடயே சாப்பிட்டு, உங்களோடயே விளையாடி, உங்க ரெண்டுபேரையும் பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டுபோக எல்லாம் விருப்பமா இருக்கு. நான் உங்களோடயே வந்து இருந்தாத்தானே அதெல்லாம் நடக்கும்.” என்றதும் தூரிகாவுக்கு உருகியே போயிற்று.
ஓடிவந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “நீங்க எங்களோட வந்தா எங்களுக்கும் சந்தோசம் மாமா.” என்றாள் அவன் முகம் பார்த்து.
அகத்தியன் தன்னைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டான். ஏற்கனவே சிந்தூரி அவன் மடியில் இருக்க, பனித்த விழிகளோடு அவளையும் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.
அவர்களிடம் பேசுகிறவரைக்கும் அவனுக்குள்ளும் ஒரு பயம் இருந்துகொண்டுதான் இருந்தது. இப்போதோ எல்லாம் நன்றாகவே நடக்கும் என்கிற நம்பிக்கை பிறந்தது. தாமினியையும் இன்னொரு கையால் அணைத்துக் கொண்டு, “ஆனா உங்கட அம்மா ஓம் எண்டு சொல்லுறா இல்லையே. என்ன செய்வம்?” என்றான் சோகமாக.
அப்படியா என்பதுபோல் மூவர் பார்வையும் ஒன்றாக இவள் புறம் தாவிற்று. மெல்லிய சிரிப்பும் படபடப்புமாக அவள் அமர்ந்திருக்க, “ஓமா அம்மா? உங்களுக்கு விருப்பம் இல்லையா?” என்று, அவனிடம் இருந்தே வினவினாள் தூரிகா.
“நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்களுக்கு விருப்பமா?” தன்னைச் சாதாரணமாகக் காட்ட முயன்றுகொண்டே திருப்பிக் கேட்டாள்.
அகத்தியன் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, “மாமா பாவம்தானே. கூட்டிக்கொண்டு போவம். சிந்து உனக்கு?” என்றாள் தங்கையிடம்.
அவள் அகத்தியனையும் அன்னையையும் மாறிமாறிப் பார்த்தாள்.
“ஓம் எண்டு சொல்ல மாட்டீங்களா? அப்ப உங்களுக்கு மாமாவப் பிடிக்காது என்ன?” என்று அவன் உதடு பிதுக்க, “கூட்டிக்கொண்டு போவம்.” என்றாள் சிந்தூரி.
“அப்பாடி, இவ்வளவு நேரத்துக்கு இப்பதான் வாயத் திறந்து கதைச்சிருக்கிறா. அவ்வளவுக்குப் பெரிய ஆள் நீங்க?” என்றவன் அவளுக்குக் கிச்சு கிச்சு மூட்டினான்.
அவள் அடக்கமாட்டாமல் அவன் மடிக்குள்ளேயே உருண்டு பிரண்டு சிரிக்க ஆரம்பித்தாள். சின்னவர்களும் அவனோடு சேர்ந்துகொண்டனர். மூவருக்கும் மாறி மாறிக் கிச்சு கிச்சு மூட்டி, அதை ஒரு விளையாட்டாகவே மாற்றி, அதற்குமேல் அந்தப் பேச்சை வளரவிடாமல் சூழ்நிலையையே மாற்றி இருந்தான் அகத்தியன்.
காரியம் சாதித்துவிட்டானே! யசோவின் உள்ளம், தன் இறுக்கம் தளர்த்தி வெகுவாக நெகிழ்ந்திருந்தது. விழிகளின் ஓரம் மெலிதாகக் கரித்திருக்க அவனையே பார்த்திருந்தாள்.
என்னவெல்லாமோ கதைத்தார்கள். எதற்கெல்லாமோ சிரித்தார்கள். அவன் மீதே உருண்டு பிரண்டார்கள். அவர்களுக்குள் யசோ போகவே இல்லை. ஒருவித சுகமான மயக்க மனநிலைக்குள் மூழ்கிப் போயிருந்தாள்.
இதற்கிடையில் எப்போது, எப்படி நடந்தது என்றெல்லாம் அவள் கருத்தில் பதியவே இல்லை. பாறையின் தரையில் கொண்டுவந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்க, அதில் ஒரு கையைத் தலைக்குக் கொடுத்து, கால் நீட்டிப் படுத்திருந்தான் அகத்தியன். அவன் மார்பில் சிந்தூரி நல்ல உறக்கத்தில் இருந்தாள். மற்ற இரண்டு பக்கமும் தாமினியும் தூரிகாவும். பார்க்கவே மனத்துக்கு இதம் சேர்த்தது. அவன்தான் அவர்களுக்கு இனி அப்பாவின் இடத்தில் இருக்கப் போகிறான் என்று அறிந்ததில் இருந்து, தூரிகாவும் சிந்தூரியும் ஒரு படி அதிகமாக அவனோடு ஒட்டிக்கொண்டது போலொரு மாயை.
அவள் மிக மிகப் பயந்த தருணம். அதை எத்தனை இலாவகமாகக் கையாண்டுவிட்டான். ஆக, எல்லாவற்றுக்கும் வழியிருக்கிறது. கொஞ்சம் நிதானமும் புத்திசாலித்தனமும் இருந்தால் போதுமானது.
அவள் பார்வை, அவர்களிலேயே நிலைத்திருப்பதைக் கண்டு, “இன்னும் இடமிருக்கு.” என்றான் அவன் மெல்லிய குரலில்.
முதலில் விளங்காமல் புருவம் சுருக்கியவள், விளங்கியதும் அவனை முறைக்கப் பார்த்து முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
மனத்தில் ஒரு விதமான இனிமை. காற்றின் தாலாட்டும் சேர்ந்துகொள்ள, இந்த நொடிகளை அனுபவிக்கத் தனிமை வேண்டும் போலிருந்தது. எழுந்து வந்து தனியாக நின்றிருந்த ஒற்றைக் கல்லில் சாய்ந்துகொண்டாள். மனத்தில் எந்தச் சலனமும் இல்லை. பயம், பதற்றம், யோசனை என்று எதுவுமில்லை. இப்படி, நிர்சிந்தையாய் அவள் இருந்து எத்தனையோ வருடங்களாயிற்றே!
கைக்குள் பொத்தி வைத்திருந்த வண்ணத்துப் பூச்சியைப் பறந்துபோ என்று விட்டால் எப்படிச் சிறகடித்துப் பறக்கும்? அப்படி இருந்தது அவள் மனநிலை! சுகமாய், சொர்க்கமாய், சந்தோசமாய், அழவேண்டும்போல், சிரிக்கவேண்டும்போல், புதிதாய்ப் பிறந்ததுபோல், கடந்துவிட்ட இளமையெல்லாம் திரும்பிவிட்டதுபோல் என்று அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை.
அதற்கென்று அவள் அர்த்தமற்ற கனவில் மிதக்கவும் இல்லை; கற்பனைக் கோட்டையைக் கட்டவுமில்லை. அவன் தன்னைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குவான் என்றோ, தன் ஒற்றைக் கண்ணசைவுக்கே காரியம் புரிவான் என்றோ நினைக்க, வாழ்வின் யதார்த்தம் தெரியாதவளும் அல்லள்!
சண்டை சச்சரவு, கண்ணீர், அழுகை, சிலபல கோபதாபங்கள், சின்ன சின்ன ஏமாற்றங்கள், வலிகள் எல்லாமே எதிர்காலத்தில் இல்லாமல் இருக்கப் போவதில்லை. அதுதான் வாழ்க்கை. அப்படி வரப்போகிற அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி, அவனோடு நன்றாக வாழ்வேன் என்கிற நம்பிக்கை, இந்த நொடியில் அவள் மனத்தில் அழுத்தமாக விழுந்து போயிற்று.
அந்த நம்பிக்கை போதாதா, அவள் வாழ்வில் புது அத்தியாயம் எழுத?
“என்ன இங்க வந்தாச்சு?” பின்னால் கேட்ட அவன் குரலில் பிள்ளைகள் எங்கே என்றுதான் முதலில் பார்த்தாள்.
“மூண்டு பேரும் நல்ல நித்திரை.”
“பின்ன, இந்தப் பெரிய மலையை ஏறி இருக்கினமே! நாளைக்கு எப்பிடிப் பள்ளிக்கூடம் போகப்போயினமோ தெரியா.” சிறு முறுவலோடு சொன்னாள்.
பார்வை அந்த முறுவலில் படிய, “இப்ப நிம்மதியா?” என்றான் அவன்.
நிம்மதியா? எந்தளவுக்கு ஆசுவாசமாக உணர்கிறாள் என்று அவளுக்குத்தானே தெரியும். அதில், “ம்ம்.” என்றாள்.