இலங்கநாதன் குகநாதன் அண்ணாவின் பதிவு இது :
`நாத்தனார்` என்ற உறவுமுறைச்சொல் ஈழத்தில் இல்லாமலிருப்பது ஏன்?
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் ஒரு பெண் தனது கணவனின் தங்கையினை ஒரு விழாவில் தனது உறவினருக்கும் நண்பர்களுக்கும் ( எல்லோருமே ஈழத்தின் வழி வந்தவர்கள்) அறிமுகப்படுத்தும் போது, `இவ என்னுடைய நாத்தனார்` எனச் சொல்லி அறிமுகப்படுத்தியமை அங்கிருந்தவர்களுக்கு வியப்பினை ஏற்படுத்திற்று.
உடனடியாகவே அங்கிருந்த மூதாட்டி ஒருவர் அப் பெண்ணைப் பார்த்து , `நல்லா ரீவி சீரியல் பார்க்கிறாய் போல` எனக் கேட்டே விட்டார்.
ஈழத்தில் பொதுவாகக் கணவனின் உடன்பிறந்தவளை `நாத்தனார்` என அழைக்கும் பழக்கமில்லை, மாறாக `மச்சாள்` என அழைக்கும் பழக்கமே உண்டு. தமிழ்நாட்டிலிருந்து வரும் தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள், புதினங்கள், சிறுகதைகள் என்பவற்றினூடாக ஈழத்தமிழர் `நாத்தனார்` எனும் சொல்லின் பொருளினை அறிந்திருந்தாலும், தமக்கிடையேயான நாள்தோறுமான பயன்பாட்டுச் சொல்லாக, அச் சொல்லினைப் பயன்படுத்துவதில்லை.
தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் ஏன் இந்த உறவுமுறைச் சொல்லின் பயன்பாட்டில் வேறுபாடு காணப்படுகின்றது? இதனை அறிந்து கொள்வதற்கு நாம் அச் சொற்பிறப்பினை அறிந்து கொள்ள வேண்டும். அதனைப் பார்ப்போம்.
நாத்தனார் என்ற சொற்பிறப்புக்குக் கூறப்படும் விளக்கங்களைப் பார்ப்போம்.
நாற்று+அன்னார் = நாற்றன்னார்>>> நாத்தனார்.
(நாற்றன்னார் என்பதே நாத்தனார் எனத் திரிந்து விட்டது என்பது முதல் விளக்கம் )
………………………..
நாத்துணையார் > நாத்தனார்
……………………………………………..
.........................
இப்போது ஈழத்துக்கு வருவோம், ஈழத்தில் பிறந்த வீட்டிலிருந்து பெண் புகுந்த வீட்டுக்குச் செல்வதில்லை, மாறாக இன்றும் மணமகன்தான் மணமகளின் வீட்டுக்குச் சென்று குடியேறுவார். இது பழந்தமிழரின் தாய்வழிக் குமுக அமைப்பின் எச்சம். தமிழ்நாட்டிலும் இவ்வாறான ஒரு நிலைமையே முன்னர் இருந்தது, பின்னர் அங்கு முறைமை மாறிவிட்டது. ஈழத்திலோ இன்றும் அந்த மரபு தொடருகின்றது. எனவே ஈழத்துக்கு நாற்று அல்லது நாத்துணை அல்லது நாத்தூண் போன்ற விளக்கங்களில் எதுவும் பொருந்ததாது, அதனால்தான் `நாத்தனார்` என்ற சொல் ஈழத்து வழக்கிலில்லை. எமது ஈழத்து மரபுக்கு அச் சொல் பொருந்தாது.