“ஆஆஆஆ...நோகுதம்மா! அய்யோ வேணாம்மா! இல்ல இல்ல வேணாம்மா! நான் எடுக்க இல்ல! சத்தியமா எனக்கு ஒண்டுமே(ஒன்றுமே) தெரியாது!”
உச்சஸ்தானியில் வீறிட்டலறினாள் சிறுமி பிரியா. தாயின் பிடியிலிருந்து விடுபட்டு ஓடிட தன்னால் முயன்றளவு போராடினாள்.
அவளுக்கு இப்போதுதான் ஒன்பது வயது நிறைந்து இரு மாதங்கள் கடந்திருந்தன. இருந்தும், இளையவர்கள் இருவருக்கு மூத்தவளாக இருப்பதாலோ என்னவோ, அவள் நடவடிக்கைகள் வயதுக்கு முதிர்ந்ததாகவே இருக்கும்.
“ஏன்டி! கண்டவேட வாய்க்குள்ள போய்வரத்தான் உன்னப் பெத்து(பெற்று) வளக்கிறனா?”
மகளின் அழுகைக்கும் மேலாகக் கத்தினாள் ரஞ்சி. ஆவேசமிகுதியில் சிறுமியின் கன்னத்தில் பளாரென்று இழுத்தாள். கோபம் தந்தும்பித் தெறிக்கும் அவள் பார்வையோ, சற்றே தள்ளி நிற்கும் தன் தாயிலும் தங்கையிலும்.
“இங்க பார் ரஞ்சி, சின்னப்பிள்ளயப் போட்டு எருமமாட்ட அடிக்கிறது போல அடிக்கிறாயே! இப்படிக்கேட்டா அவள் எப்படி உண்மையை சொல்லுவாள்?” சிடுசிடுத்தார், ரஞ்சியின் தாய்.
“பார் பார்! நீதான் எடுத்தாய் என்று முடிவு செய்திட்டுத்தான் கேட்கீனம்.
ஏன்? நான் ஒரு இழிச்சவாய்; அப்ப என் பிள்ளைகள் என்றால் இளப்பம்.”
வாய், வார்த்தைகளைத் தெறிக்க விட, இடக்கரத்தால் இறுகப் பற்றியிருந்த மகளை, அவள் சுழல சுழல துவைத்தெடுத்தது ரஞ்சியின் வலக்கரம்.
சிறுமியோ, தாயிடமிருந்து தப்பமுடியாது நிலத்தில் சுருண்டு விழுந்து குழறி அழுதாள்.
‘தொம்! தொம்!’ சிறுமியின் முதுகு பிரிந்தது. அது போதாதென்று, தொடையில், மேல்கையில், கன்னத்தில் என, கிடைத்த இடமெல்லாம் நுள்ளு!
“ஐயோ! அம்மம்மா காப்பாத்துங்கோவன்! நோகுது சித்தி! அம்மாவைப் பிடியுங்கோ!” வீரிடலோடு இறைஞ்சினாள் சிறுமி.
அவர்களும் நெருங்கவில்லை. சிறுமியே என்றாலும் அவள் செய்த காரியத்தில் அத்தனை விசனம் கொண்டிருந்தார்கள்.
“நல்ல சித்தியும் சொத்தியும். அம்மம்மாவா? அவேக்கு (அவர்களுக்கு) என்னிலேயே இளப்பம்; நான் பெத்த உன்னில் எப்படி அன்பிருக்கும்?
சின்னதா ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதும் கள்ளிப்பட்டம் கட்டுறதிலிருந்தே அவேண்ட(அவர்களின்) அன்பு தெரிய இல்லையா? பிறகும் அவயக் (அவர்களை) கூப்பிடுறாய்!”
சட் சட்டென்று மகளின் வாயில் இரண்டு போட்டாள் ரஞ்சி.
அப்போதுதான் தோட்டத்திலிருந்து வந்த அவள் கணவன், ஓடிவந்து, மகளை மனைவியிடம் இருந்து பிரித்தெடுத்தான்.
“உங்களுக்கென்ன பைத்தியமே? சின்னப்பிள்ளயப் போட்டு இந்த அடி அடிக்கிறீங்க?” அடங்க மறுத்த கோபத்தோடு சாடினான்.
“ஒமோம்! சரியாச் சொல்லுறீங்க! எனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிட்டு. எல்லாம் யாரால என்று நினைக்கிறீங்க? உங்களாலதான்.”
குரல் உயர்த்திய மனைவியை உறுத்துப் பார்த்தான் அந்த மனிதன்.
“இந்தப் பார்வைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. வெளிநாடு போற வழியைப் பாருங்க, இல்லையோ, வெளியூரில சரி ஒரு நல்ல சம்பளத்தில ஒரு வேலயத் தேடுங்க என்றால்...கொஞ்சம் சரி காதில வாங்குறீங்களா?
இப்படி, இங்க கிடந்து குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓட்டினால் எல்லாருக்கும் இளப்பமாகத்தானே இருக்கும்?
அதுவும், வெளிநாட்டுக் காசு அந்த மாதிரிப் புழக்கத்தில உள்ள இடம் இது! பாருங்க, சும்மா வந்து போனதுக்கே கள்ளிப்பட்டம்.” மூச்சு வாங்க, அடங்கா ஆத்திரத்தோடு கணவனைச் சாடியவள், உக்கிரப்பார்வையோடு தாய் சகோதரியிடம் திரும்பினாள்.
“என் பிள்ளைகள் இந்த வீட்டுக்கு வந்தால் உள்ளறைக்கு எல்லாம் போறவையா? இல்லையே! விறாந்தையைத் தாண்ட விடுவீங்களா என்ன? பிறகு எப்படி சாமியறையில் இருந்த சாமி உண்டியலை இவள் உடைச்சிருப்பாள்?”
“இதேன் ரஞ்சி இப்படிப் பிரிச்சுக் கதைக்கிறாய்? எனக்கு எல்லாப் பேரப்பிள்ளைகளும் ஒன்றுதான்.” சிடுசிடுத்தார், ரஞ்சியின் அன்னை.
“ஆங்! இப்படிப் பேச்சுக்கு இனிக்க இனிக்க சொல்லுங்க. உங்களைப்பற்றி எனக்குத் தெரியாதா? நான் இந்த வீட்டில கழிவு தானே? பொரிச்ச மீனில சதையே இல்லாத தலையை எனக்குத் தந்திட்டு, உங்கட செல்லப்பிள்ளைகளுக்கு துண்டு துண்டா குடுக்கிற வஞ்சகக் குணம் எனக்குத் தெரியாதா என்ன?”
மருமகனின் முன்னால் மகள் இப்படிக் கதைக்க(பேச), முகம் சிறுத்துப் போனது, ரஞ்சியின் அன்னைக்கு.
எதிரியோடு கதைக்கும் பாவனையில் நின்ற சகோதரியைக் கோபத்தோடு பார்த்தபடி முன்னால் வந்தாள், ரஞ்சியின் இளைய சகோதரி; எப்போதும் சற்றே பெரிய துண்டாகப் பொரித்த மீனின் வால் பகுதி இவளுக்குத்தான்.
“இங்க பாரு ரஞ்சிக்கா, இப்படி அறம் கொட்டுறத முதல் நிப்பாட்டு! அம்மாவோட இப்படிக் கதைக்க, பார்த்துக்கொண்டு நிப்பன் என்று மட்டும் நினைக்காத!” எச்சரித்தாள்.
“என்னடி பெரிசாச் செய்வாய்? அதை முதல் செய் பாப்பம்! வந்திட்டாள் கதைக்க!(பேச)”
“ஏய்! முதல் கத்தாத! இப்பிடி மீன், முட்டை என்று கண்டதையும் சொல்லி கதையை மாத்தாத!
உன்ர மகள் சின்னப்பிள்ள; சரி, செய்யக்கூடாத வேலயத் தெரியாமல் செய்திட்டாள் என்றால் அது பிழையென்று எடுத்துச் சொல்லவேணும்.
இனிமேல்பட்டு அப்படிச் செய்யாதே என்று சொல்லிக் குடுக்க வேணும். அதைவிட்டுட்டு, எங்களோட சண்டை போடுறாய்! எங்களுக்கு அப்படி இவளில என்ன கோபம்? கள்ளி என்று சொல்ல வேணும் என்று ஆசையா என்ன? முதல், சரியாத் தெரியாமல் சொல்லுறோம் என்று நினைக்கிறாயா?” கோபமாகத் தொடங்கி, பொறுமையாகவே எடுத்துச் சொல்ல முயன்றாள் அப்பெண்.
“பார்! இவ்வளவு அடிகுடுத்திட்டன். இந்தச் சனியன் எடுக்க இல்லை என்று கதறுது. அப்படியிருந்தும் ‘நீதான் எடுத்தாய்’ என்று சொல்லீனமே! உன்னைக் கொன்று போட்டால்தான் அடங்குவீனம் போல!”
கத்தியவாறே, கணவனிடமிருந்து மகளை இழுத்து இரண்டு மொத்து மொத்த, மீண்டும் மகளை விடுவித்துத் தனக்குப் பின்னால் பிடித்துக் கொண்டான் ரஞ்சியின் கணவன்.
“இன்னொருக்கா இவளில கைவைச்சா நான் பொல்லாதவன் ஆகீறுவன் ரஞ்சி!” சீறவும் செய்தான்.
“உங்க மகளைக் கள்ளியாம்! நீங்க என்னடா என்றால் என்னை மிரட்டுறீங்க. உங்களைச் சொல்ல வேணும், எல்லாம் என் தலைவிதி!” தன் தலையில் அடித்து ஓவென்று அழுதபடி நகர்ந்தாள்.
பக்கத்தில் தான் அவர்களின் வீடும். விடுவிடுவென்று ‘கேட்’வரை சென்று நின்றவள், “அந்த உண்டியலை, உன்ர மகள்தாண்டி உடச்சிருப்பாள்; நீ இவளச் சாட்டுறாய்.” தங்கையைப் பார்த்துக் கத்தினாள்.
“உனக்கு இப்ப நான் சொல்லுறது விளங்க இல்ல ரஞ்சி, இப்படியே விட்டால் பிறகு நீதான் கஷ்டப்படுவாய்; உன்ர மகள் இன்றைக்கு பள்ளிக்கூடத்தில காண்டீனுக்கு எவ்வளவு காசு செலவளித்தாள் என்று ஒருக்காக் கேளன்; அப்போ உண்மை தெரியும்.” திடமாகவே சொன்னாள் இளையவள்.
“பெரிய அக்கறை! அதப்பற்றி நீ ஒன்றும் கவலைப்படாத! உன்ர பிள்ளைகளை நீ பார்; எனக்கு என் குடும்பத்தைப் பார்க்கத் தெரியும்.” சகோதரி சொன்னதன் பின்பகுதியைக் காதில் வாங்கவே இல்லை, ரஞ்சி.
கேட்டை அடித்துச் சாத்திவிட்டு, கணவனும் மகளும் பின்னால் வர வெளியேறியவள், “இனி உயிரே போனாலும் நானும் என்ட பிள்ளைகளும் இந்த வீட்டு வளவுக்குள்ள வர மாட்டம்! சொல்லிப்போட்டன்.” என்றுவிட்டே நகர்ந்தாள். இப்படி, இதற்கு முதல் எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டாள்.
இவ்வளவுக்குப் பிறகும், சொந்தத் தாய், சகோதரியின் இத்தனை பெரிய குற்றச்சாட்டு சிறிதுமே மகள் மீது சந்தேகம் கொள்ள வைக்கவில்லை.
அத்தனை நம்பிக்கையா? அன்பா? அதுவும் தான். இல்லையென்று சொல்ல முடியாதுதானே? அதையும் மேவி, ‘அவள் என்ட மகள். அவளை எப்படி மற்றவர் குறை சொல்லலாம்? அது தாயோ உடன் பிறந்த சகோதரியோ யாராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். என் குழந்தையைக் குறை சொல்லும் தகுதி யாருக்குமே இல்லை.’ என்ற ஆவேசமே அங்கு முன்னணியில் நின்றது.
அடிவாங்கி, கைகால் கன்னங்கள் என்று வீங்கியிருந்த சிறுமிக்கு எண்ணெய் தடவிவிட்ட ரஞ்சியின் கணவனோ, ரஞ்சியோ ‘நீ அந்த உண்டியலை உடைத்தாயா?’ என்றோ ‘நாங்க தர இல்லையே, காண்டீனுக்குக் காசு ஏது?’ என்றோ கேட்கவில்லை.
அதற்கென்று சிறுமி அமைதியாக இருக்கவில்லை.
“அம்மா, போனகிழமை என் பிறந்தநாளன்று காண்டீனுக்கு என்று தந்த காசை நான் செலவழிக்க இல்ல. அதத்தான் இன்றைக்கு செழவளிச்சன்.” தேம்பித் தேம்பி அழுதபடி சொல்ல, மைத்துனி சொன்னதை கேட்டிருந்த ரஞ்சியின் கணவனுக்கும் அவர்களில் அடங்காக் கோபமே ஏற்பட்டது.
ரஞ்சிக்கோ, மகள் ஏன் இதைச் சொல்கிறாள் என்றிருந்தது.
“இப்ப நாம வெளியில வரேக்க உங்க தங்கச்சி என்ன சொன்னா என்று நீங்க கவனிக்க இல்லையா?” என்ற ரஞ்சியின் கணவன், கண்டீனில் வாங்கி உண்டது உண்டியல் காசு என்று சொன்னதைச் சொல்ல, விசுக்கென்று எழுந்தாள் ரஞ்சி.
முன்னரைவிடவும் எகிறிக் குதித்தாள். தம் வீட்டு வாயிலால் வெளியில் வந்து நின்று பக்கத்து வீட்டைப் பார்த்து கண்டபடி திட்டித் தீர்த்தாள்.
“சரி சரி, விட்டுத்துலையுங்க; இனிமேல்பட்டு அந்த வீட்டுப்பக்கமே போகவேணாம்.” தன்பங்குக்கு சொன்னான் ரஞ்சியின் கணவர்.
அது ஒரு மண் உண்டியல். சிவப்பில் கழுத்தோரம் ஆரம் போல் மஞ்சளில் பூ வேலைப்பாட்டோடு பார்க்கையில் வெகு அழகாக, பளபளப்பாக இருந்தது. பிரியாவுக்கு எப்போதும் அதை ஒருதரம் தொட்டுப்பார்க்க ஆசை. தனக்கே தனக்கென்று ஒரு உண்டியல் வைத்துக்கொள்ளவும் தான்.
“இதை எனக்குத் தாறீங்களா அம்மம்மா!” என்றும் கேட்டிருக்கிறாள்.
“அது சாமியுண்டியல்; முதல் உனக்கு என்னத்துக்கு?” என்றவர், அதோடு நிறுத்தவில்லை
“உன் அம்மா, கையில நாலு காசு அதிகம் கிடைச்சாலே செலவளிச்சுப் போட்டுத்தான் முதல் வேலை பார்ப்பாள்; வாழத் தெரியாதவள்; அதுதானே உன் அப்பா எவ்வளவு உழைச்சாலும் தங்குதில்ல.”
உச்சஸ்தானியில் வீறிட்டலறினாள் சிறுமி பிரியா. தாயின் பிடியிலிருந்து விடுபட்டு ஓடிட தன்னால் முயன்றளவு போராடினாள்.
அவளுக்கு இப்போதுதான் ஒன்பது வயது நிறைந்து இரு மாதங்கள் கடந்திருந்தன. இருந்தும், இளையவர்கள் இருவருக்கு மூத்தவளாக இருப்பதாலோ என்னவோ, அவள் நடவடிக்கைகள் வயதுக்கு முதிர்ந்ததாகவே இருக்கும்.
“ஏன்டி! கண்டவேட வாய்க்குள்ள போய்வரத்தான் உன்னப் பெத்து(பெற்று) வளக்கிறனா?”
மகளின் அழுகைக்கும் மேலாகக் கத்தினாள் ரஞ்சி. ஆவேசமிகுதியில் சிறுமியின் கன்னத்தில் பளாரென்று இழுத்தாள். கோபம் தந்தும்பித் தெறிக்கும் அவள் பார்வையோ, சற்றே தள்ளி நிற்கும் தன் தாயிலும் தங்கையிலும்.
“இங்க பார் ரஞ்சி, சின்னப்பிள்ளயப் போட்டு எருமமாட்ட அடிக்கிறது போல அடிக்கிறாயே! இப்படிக்கேட்டா அவள் எப்படி உண்மையை சொல்லுவாள்?” சிடுசிடுத்தார், ரஞ்சியின் தாய்.
“பார் பார்! நீதான் எடுத்தாய் என்று முடிவு செய்திட்டுத்தான் கேட்கீனம்.
ஏன்? நான் ஒரு இழிச்சவாய்; அப்ப என் பிள்ளைகள் என்றால் இளப்பம்.”
வாய், வார்த்தைகளைத் தெறிக்க விட, இடக்கரத்தால் இறுகப் பற்றியிருந்த மகளை, அவள் சுழல சுழல துவைத்தெடுத்தது ரஞ்சியின் வலக்கரம்.
சிறுமியோ, தாயிடமிருந்து தப்பமுடியாது நிலத்தில் சுருண்டு விழுந்து குழறி அழுதாள்.
‘தொம்! தொம்!’ சிறுமியின் முதுகு பிரிந்தது. அது போதாதென்று, தொடையில், மேல்கையில், கன்னத்தில் என, கிடைத்த இடமெல்லாம் நுள்ளு!
“ஐயோ! அம்மம்மா காப்பாத்துங்கோவன்! நோகுது சித்தி! அம்மாவைப் பிடியுங்கோ!” வீரிடலோடு இறைஞ்சினாள் சிறுமி.
அவர்களும் நெருங்கவில்லை. சிறுமியே என்றாலும் அவள் செய்த காரியத்தில் அத்தனை விசனம் கொண்டிருந்தார்கள்.
“நல்ல சித்தியும் சொத்தியும். அம்மம்மாவா? அவேக்கு (அவர்களுக்கு) என்னிலேயே இளப்பம்; நான் பெத்த உன்னில் எப்படி அன்பிருக்கும்?
சின்னதா ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதும் கள்ளிப்பட்டம் கட்டுறதிலிருந்தே அவேண்ட(அவர்களின்) அன்பு தெரிய இல்லையா? பிறகும் அவயக் (அவர்களை) கூப்பிடுறாய்!”
சட் சட்டென்று மகளின் வாயில் இரண்டு போட்டாள் ரஞ்சி.
அப்போதுதான் தோட்டத்திலிருந்து வந்த அவள் கணவன், ஓடிவந்து, மகளை மனைவியிடம் இருந்து பிரித்தெடுத்தான்.
“உங்களுக்கென்ன பைத்தியமே? சின்னப்பிள்ளயப் போட்டு இந்த அடி அடிக்கிறீங்க?” அடங்க மறுத்த கோபத்தோடு சாடினான்.
“ஒமோம்! சரியாச் சொல்லுறீங்க! எனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிட்டு. எல்லாம் யாரால என்று நினைக்கிறீங்க? உங்களாலதான்.”
குரல் உயர்த்திய மனைவியை உறுத்துப் பார்த்தான் அந்த மனிதன்.
“இந்தப் பார்வைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. வெளிநாடு போற வழியைப் பாருங்க, இல்லையோ, வெளியூரில சரி ஒரு நல்ல சம்பளத்தில ஒரு வேலயத் தேடுங்க என்றால்...கொஞ்சம் சரி காதில வாங்குறீங்களா?
இப்படி, இங்க கிடந்து குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓட்டினால் எல்லாருக்கும் இளப்பமாகத்தானே இருக்கும்?
அதுவும், வெளிநாட்டுக் காசு அந்த மாதிரிப் புழக்கத்தில உள்ள இடம் இது! பாருங்க, சும்மா வந்து போனதுக்கே கள்ளிப்பட்டம்.” மூச்சு வாங்க, அடங்கா ஆத்திரத்தோடு கணவனைச் சாடியவள், உக்கிரப்பார்வையோடு தாய் சகோதரியிடம் திரும்பினாள்.
“என் பிள்ளைகள் இந்த வீட்டுக்கு வந்தால் உள்ளறைக்கு எல்லாம் போறவையா? இல்லையே! விறாந்தையைத் தாண்ட விடுவீங்களா என்ன? பிறகு எப்படி சாமியறையில் இருந்த சாமி உண்டியலை இவள் உடைச்சிருப்பாள்?”
“இதேன் ரஞ்சி இப்படிப் பிரிச்சுக் கதைக்கிறாய்? எனக்கு எல்லாப் பேரப்பிள்ளைகளும் ஒன்றுதான்.” சிடுசிடுத்தார், ரஞ்சியின் அன்னை.
“ஆங்! இப்படிப் பேச்சுக்கு இனிக்க இனிக்க சொல்லுங்க. உங்களைப்பற்றி எனக்குத் தெரியாதா? நான் இந்த வீட்டில கழிவு தானே? பொரிச்ச மீனில சதையே இல்லாத தலையை எனக்குத் தந்திட்டு, உங்கட செல்லப்பிள்ளைகளுக்கு துண்டு துண்டா குடுக்கிற வஞ்சகக் குணம் எனக்குத் தெரியாதா என்ன?”
மருமகனின் முன்னால் மகள் இப்படிக் கதைக்க(பேச), முகம் சிறுத்துப் போனது, ரஞ்சியின் அன்னைக்கு.
எதிரியோடு கதைக்கும் பாவனையில் நின்ற சகோதரியைக் கோபத்தோடு பார்த்தபடி முன்னால் வந்தாள், ரஞ்சியின் இளைய சகோதரி; எப்போதும் சற்றே பெரிய துண்டாகப் பொரித்த மீனின் வால் பகுதி இவளுக்குத்தான்.
“இங்க பாரு ரஞ்சிக்கா, இப்படி அறம் கொட்டுறத முதல் நிப்பாட்டு! அம்மாவோட இப்படிக் கதைக்க, பார்த்துக்கொண்டு நிப்பன் என்று மட்டும் நினைக்காத!” எச்சரித்தாள்.
“என்னடி பெரிசாச் செய்வாய்? அதை முதல் செய் பாப்பம்! வந்திட்டாள் கதைக்க!(பேச)”
“ஏய்! முதல் கத்தாத! இப்பிடி மீன், முட்டை என்று கண்டதையும் சொல்லி கதையை மாத்தாத!
உன்ர மகள் சின்னப்பிள்ள; சரி, செய்யக்கூடாத வேலயத் தெரியாமல் செய்திட்டாள் என்றால் அது பிழையென்று எடுத்துச் சொல்லவேணும்.
இனிமேல்பட்டு அப்படிச் செய்யாதே என்று சொல்லிக் குடுக்க வேணும். அதைவிட்டுட்டு, எங்களோட சண்டை போடுறாய்! எங்களுக்கு அப்படி இவளில என்ன கோபம்? கள்ளி என்று சொல்ல வேணும் என்று ஆசையா என்ன? முதல், சரியாத் தெரியாமல் சொல்லுறோம் என்று நினைக்கிறாயா?” கோபமாகத் தொடங்கி, பொறுமையாகவே எடுத்துச் சொல்ல முயன்றாள் அப்பெண்.
“பார்! இவ்வளவு அடிகுடுத்திட்டன். இந்தச் சனியன் எடுக்க இல்லை என்று கதறுது. அப்படியிருந்தும் ‘நீதான் எடுத்தாய்’ என்று சொல்லீனமே! உன்னைக் கொன்று போட்டால்தான் அடங்குவீனம் போல!”
கத்தியவாறே, கணவனிடமிருந்து மகளை இழுத்து இரண்டு மொத்து மொத்த, மீண்டும் மகளை விடுவித்துத் தனக்குப் பின்னால் பிடித்துக் கொண்டான் ரஞ்சியின் கணவன்.
“இன்னொருக்கா இவளில கைவைச்சா நான் பொல்லாதவன் ஆகீறுவன் ரஞ்சி!” சீறவும் செய்தான்.
“உங்க மகளைக் கள்ளியாம்! நீங்க என்னடா என்றால் என்னை மிரட்டுறீங்க. உங்களைச் சொல்ல வேணும், எல்லாம் என் தலைவிதி!” தன் தலையில் அடித்து ஓவென்று அழுதபடி நகர்ந்தாள்.
பக்கத்தில் தான் அவர்களின் வீடும். விடுவிடுவென்று ‘கேட்’வரை சென்று நின்றவள், “அந்த உண்டியலை, உன்ர மகள்தாண்டி உடச்சிருப்பாள்; நீ இவளச் சாட்டுறாய்.” தங்கையைப் பார்த்துக் கத்தினாள்.
“உனக்கு இப்ப நான் சொல்லுறது விளங்க இல்ல ரஞ்சி, இப்படியே விட்டால் பிறகு நீதான் கஷ்டப்படுவாய்; உன்ர மகள் இன்றைக்கு பள்ளிக்கூடத்தில காண்டீனுக்கு எவ்வளவு காசு செலவளித்தாள் என்று ஒருக்காக் கேளன்; அப்போ உண்மை தெரியும்.” திடமாகவே சொன்னாள் இளையவள்.
“பெரிய அக்கறை! அதப்பற்றி நீ ஒன்றும் கவலைப்படாத! உன்ர பிள்ளைகளை நீ பார்; எனக்கு என் குடும்பத்தைப் பார்க்கத் தெரியும்.” சகோதரி சொன்னதன் பின்பகுதியைக் காதில் வாங்கவே இல்லை, ரஞ்சி.
கேட்டை அடித்துச் சாத்திவிட்டு, கணவனும் மகளும் பின்னால் வர வெளியேறியவள், “இனி உயிரே போனாலும் நானும் என்ட பிள்ளைகளும் இந்த வீட்டு வளவுக்குள்ள வர மாட்டம்! சொல்லிப்போட்டன்.” என்றுவிட்டே நகர்ந்தாள். இப்படி, இதற்கு முதல் எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டாள்.
இவ்வளவுக்குப் பிறகும், சொந்தத் தாய், சகோதரியின் இத்தனை பெரிய குற்றச்சாட்டு சிறிதுமே மகள் மீது சந்தேகம் கொள்ள வைக்கவில்லை.
அத்தனை நம்பிக்கையா? அன்பா? அதுவும் தான். இல்லையென்று சொல்ல முடியாதுதானே? அதையும் மேவி, ‘அவள் என்ட மகள். அவளை எப்படி மற்றவர் குறை சொல்லலாம்? அது தாயோ உடன் பிறந்த சகோதரியோ யாராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். என் குழந்தையைக் குறை சொல்லும் தகுதி யாருக்குமே இல்லை.’ என்ற ஆவேசமே அங்கு முன்னணியில் நின்றது.
அடிவாங்கி, கைகால் கன்னங்கள் என்று வீங்கியிருந்த சிறுமிக்கு எண்ணெய் தடவிவிட்ட ரஞ்சியின் கணவனோ, ரஞ்சியோ ‘நீ அந்த உண்டியலை உடைத்தாயா?’ என்றோ ‘நாங்க தர இல்லையே, காண்டீனுக்குக் காசு ஏது?’ என்றோ கேட்கவில்லை.
அதற்கென்று சிறுமி அமைதியாக இருக்கவில்லை.
“அம்மா, போனகிழமை என் பிறந்தநாளன்று காண்டீனுக்கு என்று தந்த காசை நான் செலவழிக்க இல்ல. அதத்தான் இன்றைக்கு செழவளிச்சன்.” தேம்பித் தேம்பி அழுதபடி சொல்ல, மைத்துனி சொன்னதை கேட்டிருந்த ரஞ்சியின் கணவனுக்கும் அவர்களில் அடங்காக் கோபமே ஏற்பட்டது.
ரஞ்சிக்கோ, மகள் ஏன் இதைச் சொல்கிறாள் என்றிருந்தது.
“இப்ப நாம வெளியில வரேக்க உங்க தங்கச்சி என்ன சொன்னா என்று நீங்க கவனிக்க இல்லையா?” என்ற ரஞ்சியின் கணவன், கண்டீனில் வாங்கி உண்டது உண்டியல் காசு என்று சொன்னதைச் சொல்ல, விசுக்கென்று எழுந்தாள் ரஞ்சி.
முன்னரைவிடவும் எகிறிக் குதித்தாள். தம் வீட்டு வாயிலால் வெளியில் வந்து நின்று பக்கத்து வீட்டைப் பார்த்து கண்டபடி திட்டித் தீர்த்தாள்.
“சரி சரி, விட்டுத்துலையுங்க; இனிமேல்பட்டு அந்த வீட்டுப்பக்கமே போகவேணாம்.” தன்பங்குக்கு சொன்னான் ரஞ்சியின் கணவர்.
அது ஒரு மண் உண்டியல். சிவப்பில் கழுத்தோரம் ஆரம் போல் மஞ்சளில் பூ வேலைப்பாட்டோடு பார்க்கையில் வெகு அழகாக, பளபளப்பாக இருந்தது. பிரியாவுக்கு எப்போதும் அதை ஒருதரம் தொட்டுப்பார்க்க ஆசை. தனக்கே தனக்கென்று ஒரு உண்டியல் வைத்துக்கொள்ளவும் தான்.
“இதை எனக்குத் தாறீங்களா அம்மம்மா!” என்றும் கேட்டிருக்கிறாள்.
“அது சாமியுண்டியல்; முதல் உனக்கு என்னத்துக்கு?” என்றவர், அதோடு நிறுத்தவில்லை
“உன் அம்மா, கையில நாலு காசு அதிகம் கிடைச்சாலே செலவளிச்சுப் போட்டுத்தான் முதல் வேலை பார்ப்பாள்; வாழத் தெரியாதவள்; அதுதானே உன் அப்பா எவ்வளவு உழைச்சாலும் தங்குதில்ல.”