அத்தியாயம் 10
அவள் சம்மதித்துவிட்டதை அறிந்து அதற்கும் குதித்தார் ஜானகி. இதுதான் அவள் திட்டம், இனிச் சக்திவேல் அழிந்துவிடும் என்று திட்டித் தீர்த்தார்.
சக்திவேலர் மட்டும் இன்னும் அமைதி காத்தார். என்னவோ அவர் ஏதோ ஒரு உலகில் தன்னை தொலைத்துவிட்டது போலொரு நிலை. நிலன் மிதுன் இருவர் முகமும் பார்க்க மறுத்தார்.
ஆனால், நிலனும் மிதுனும் விடவில்லை. அவரோடு தொடர்ந்து பேசி, மன்னிப்புக் கேட்டு, சமாதானம் செய்து, திருமணத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இரு தரப்புக் குடும்பங்களும் யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்லும்படியான குடும்பங்கள். ஆனாலும் மிக எளிமையாக, தொழில்துறை வட்டாரத்திலிருந்து யாரையும் அழைக்காமல், நல்லூரானின் முன்னே, நிலன் இளவஞ்சி, மிதுன் சுவாதி திருமணங்கள் நல்லபடியாகவே நடந்து முடிந்தன.
தன் இரண்டு பெண்களையும் மணக்கோலத்தில் கண்டதில் மிகவுமே நெகிழ்ந்துபோயிருந்தார் குணாளன். சுவாதி மீதிருந்த கோபம் கூடக் கரைந்துவிட்ட உணர்வு.
கண்ணுக்கு நிறைவாய்க் கணவனின் அருகில் நின்றிருந்த இளவஞ்சியைக் கண்ணீரினூடு கண்டு மகிழ்ந்தார்.
தான் அவளை மிக ஆழமாகக் காயப்படுத்திவிட்டோம் என்று அவருக்குத் தெரியாமல் இல்லை. இன்னுமே சொல்லப்போனால் அதைத் தெரிந்தேதான் செய்தார்.
அவளுக்கு அவள் பற்றிய உண்மை தெரியவராமல் இருந்திருந்தால் கூட வேறு. இனி அவள் அதை அப்படியே விடமாட்டாள். அவளிடம் இருக்கும் அமைதி கூட முதற்கட்ட அதிர்வினால் உண்டானது. அது நீங்கியதும் தோண்டித் துருவி எப்படியாவது உண்மையை அறிந்துகொள்வாள். ஏன், அவரிடமிருந்துகூட அத்தனையையும் கறந்துவிடக் கூடியவள்.
அப்படியொன்று அவள் திருமணத்தின் முன்னே நடக்குமாயின் உலகின் மொத்த ஆண்களையும் வெறுத்துவிட்டு, காலம் முழுக்கத் தனியாகவே இருந்துவிடுகிறேன் என்று சொல்லிவிடக் கூடியவள்.
அதைவிட அவளைப் போன்ற ஒருத்திக்கு அவரால் நிலனைத் தவிர்த்துப் பொறுத்தமான ஒருவனைத் தேட முடியவில்லை. அப்படியே தேடிக் கொண்டுவந்த ஒரு சில வரன்கள் கூட அவள் மனத்தைக் கவரும் வல்லமை இல்லாமல் தோற்றுத்தான் போனார்கள்.
என்றோ ஒரு நாள் என்றாலும் நிலன் அவள் உள்ளத்தைச் சலனப்படுத்தியவன் என்கையில் வேறு யோசிக்கவில்லை அவர். எதைச் சொன்னால் அவள் கட்டுப்படுவாளோ அதைச் சொல்லித் திருமணத்தை முடித்துவிட்டார். கூடவே இதை ஆண்டவன் போட்ட முடிச்சாகவே நினைத்தார்.
என்ன, அதுவரையில் அவர்களிடமிருந்து மனத்தளவில் மட்டுமே விலகி நின்றவள் அதன் பிறகு அவரோடு பேசுவதைக் கூட நிறுத்திவிட்டாள்.
நிலன் தனியாக அகப்பட்டபோது, “வெளில சாதாரணமா காட்டிக்கொண்டாலும் உள்ளுக்க படாதபாடு பட்டுக்கொண்டிருப்பா. இனியும் அவாவை அழ விட்டுடாதீங்க தம்பி. உங்கள நம்பித்தான் அவாவத் தந்திருக்கிறன்.” என்றார் கலங்கிவிட்ட விழிகளோடு.
அவர் கரத்தைப் பற்றி அழுத்திக்கொடுத்து, “கவலைப்படாதீங்க மாமா. அவளைச் சந்தோசமா வச்சிருக்க வேண்டியது என்ர பொறுப்பு.” என்றான் அவன் ஆறுதலாக.
இரண்டு தம்பதியரும் முதலில் சக்திவேலரிடம்தான் ஆசிர்வாதம் வாங்க வந்தனர்.
நிலன் இளவஞ்சி வணங்கி எழுந்ததும், “என்னவோ என்ர பேரனைக் கட்டுற எண்ணமே இல்லை எண்டு சொன்னா. இப்ப என்னவாம்?” என்றார் நிலனிடம்.
பதிலேதும் சொல்லாமல் அமைதியாகவே நின்றாள் இளவஞ்சி. என்னவோ அன்றைக்குப் போன்று இன்று அவளுக்குக் கோபம் வரவேயில்லை. நடந்துகொண்டிருப்பது அவள் திருமணம். ஆனால், யாரோ ஒருத்தியாக மனத்தளவில் தள்ளி நின்றாள்.
அவள் முகம் பார்த்த நிலன், “நீ போ!” என்று அவளை அனுப்பிவிட்டு, “அப்பப்பா! உங்களுக்கு உங்கட பேரன் நல்லாருக்கோணுமா இல்லையா?” என்றான் மெல்லிய அதட்டலாக.
“உனக்கு என்னடா பேரா குறை? நீ நல்லாத்தான் இருப்பாய்.”
“அப்ப பேசாம இருங்க.” என்றதும் அவனை முறைத்தவர் தன் ஊன்றுகோளாலேயே அவனுக்கு ஒரு அடியைப் போட்டார்.
“திமிறாடா உனக்கு? என்னையே பேசாம இருக்கச் சொல்லுவியா நீ?” என்றவரிடம், “சரி சரி கோவப்படாதீங்க! அதே மாதிரி அவளோட வம்புக்கும் போகாதீங்க.” என்று அவரைச் சமாதானம் செய்துவிட்டு அவளிடம் வந்தான்.
பிரபாகரன் சந்திரமதி, பாலகுமாரன் ஜானகி தம்பதியரையும் வணங்கி எழுந்தனர்.
ஜானகிக்கு அனைத்தையும் பார்க்க பார்க்க நெஞ்சு எரிந்தது. தன் வீட்டின் இரண்டு ஆண் வாரிசுகளையும் வளைத்துப்போட்டுவிட்டார்களே! அதைவிட அவர் மகனின் திருமணம் இப்படியா நடக்க வேண்டும்? ஆனால், நிலனின் எச்சரிக்கையும், மகன் எல்லோர் முன்னும் ஏதாவது சொல்லிவிடுவானோ என்கிற பயமும், தந்தையின் அமைதியும் அவர் வாயையும் கட்டிப் போட்டிருந்தன.
அடுத்ததாக மணமக்கள் குணாளன் ஜெயந்தியிடம் வந்தனர். அவர் முகம் கூடப் பாராது வணங்கி எழுந்தவளை உச்சி முகர்ந்த குணாளன், கட்டுப்பாட்டை இழந்து உடைந்து அழுதார்.
“அப்பாவும் சேந்து உங்களைக் காயப்படுத்திப்போட்டன் எண்டு எனக்குத் தெரியும் பிள்ளை. ஆனாம்மா…” என்றவரால் தன் மனத்தில் உள்ளவற்றைச் சொல்ல முடியவில்லை.
அன்னைக்குத் தன்னை விளங்கும் என்றே நம்பினார். அதேபோல் என்றாவது ஒரு நாள் மகளும் தன்னை உணர்வாள் என்கிற நம்பிக்கையோடு, “நீங்க நல்லா இருந்திடோணும் குஞ்சு. அது மட்டும் தானம்மா இந்த அப்பான்ர ஆசை. அதுக்காகத்தானம்மா இந்தக் கலியாணம்.” என்றார்.
அவரிடமும் அவள் எதுவும் பேசத் தயாராயில்லை.
தாய் தந்தையரை மிதுனோடு விழுந்து வணங்கிய சுவாதி, தகப்பனைக் கட்டிக்கொண்டு அழுது மன்னிப்பைக் கேட்டாள்.
மிச்ச சொச்சமாய் இருந்த அவள் மீதான குற்றம் குறைகள் எல்லாம் கரைந்துபோய்விட, அவளைத் தேற்றிக் கண்ணீரைத் துடைத்துவிட்டார் குணாளன்.
*****
அவள் சம்மதித்துவிட்டதை அறிந்து அதற்கும் குதித்தார் ஜானகி. இதுதான் அவள் திட்டம், இனிச் சக்திவேல் அழிந்துவிடும் என்று திட்டித் தீர்த்தார்.
சக்திவேலர் மட்டும் இன்னும் அமைதி காத்தார். என்னவோ அவர் ஏதோ ஒரு உலகில் தன்னை தொலைத்துவிட்டது போலொரு நிலை. நிலன் மிதுன் இருவர் முகமும் பார்க்க மறுத்தார்.
ஆனால், நிலனும் மிதுனும் விடவில்லை. அவரோடு தொடர்ந்து பேசி, மன்னிப்புக் கேட்டு, சமாதானம் செய்து, திருமணத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இரு தரப்புக் குடும்பங்களும் யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்லும்படியான குடும்பங்கள். ஆனாலும் மிக எளிமையாக, தொழில்துறை வட்டாரத்திலிருந்து யாரையும் அழைக்காமல், நல்லூரானின் முன்னே, நிலன் இளவஞ்சி, மிதுன் சுவாதி திருமணங்கள் நல்லபடியாகவே நடந்து முடிந்தன.
தன் இரண்டு பெண்களையும் மணக்கோலத்தில் கண்டதில் மிகவுமே நெகிழ்ந்துபோயிருந்தார் குணாளன். சுவாதி மீதிருந்த கோபம் கூடக் கரைந்துவிட்ட உணர்வு.
கண்ணுக்கு நிறைவாய்க் கணவனின் அருகில் நின்றிருந்த இளவஞ்சியைக் கண்ணீரினூடு கண்டு மகிழ்ந்தார்.
தான் அவளை மிக ஆழமாகக் காயப்படுத்திவிட்டோம் என்று அவருக்குத் தெரியாமல் இல்லை. இன்னுமே சொல்லப்போனால் அதைத் தெரிந்தேதான் செய்தார்.
அவளுக்கு அவள் பற்றிய உண்மை தெரியவராமல் இருந்திருந்தால் கூட வேறு. இனி அவள் அதை அப்படியே விடமாட்டாள். அவளிடம் இருக்கும் அமைதி கூட முதற்கட்ட அதிர்வினால் உண்டானது. அது நீங்கியதும் தோண்டித் துருவி எப்படியாவது உண்மையை அறிந்துகொள்வாள். ஏன், அவரிடமிருந்துகூட அத்தனையையும் கறந்துவிடக் கூடியவள்.
அப்படியொன்று அவள் திருமணத்தின் முன்னே நடக்குமாயின் உலகின் மொத்த ஆண்களையும் வெறுத்துவிட்டு, காலம் முழுக்கத் தனியாகவே இருந்துவிடுகிறேன் என்று சொல்லிவிடக் கூடியவள்.
அதைவிட அவளைப் போன்ற ஒருத்திக்கு அவரால் நிலனைத் தவிர்த்துப் பொறுத்தமான ஒருவனைத் தேட முடியவில்லை. அப்படியே தேடிக் கொண்டுவந்த ஒரு சில வரன்கள் கூட அவள் மனத்தைக் கவரும் வல்லமை இல்லாமல் தோற்றுத்தான் போனார்கள்.
என்றோ ஒரு நாள் என்றாலும் நிலன் அவள் உள்ளத்தைச் சலனப்படுத்தியவன் என்கையில் வேறு யோசிக்கவில்லை அவர். எதைச் சொன்னால் அவள் கட்டுப்படுவாளோ அதைச் சொல்லித் திருமணத்தை முடித்துவிட்டார். கூடவே இதை ஆண்டவன் போட்ட முடிச்சாகவே நினைத்தார்.
என்ன, அதுவரையில் அவர்களிடமிருந்து மனத்தளவில் மட்டுமே விலகி நின்றவள் அதன் பிறகு அவரோடு பேசுவதைக் கூட நிறுத்திவிட்டாள்.
நிலன் தனியாக அகப்பட்டபோது, “வெளில சாதாரணமா காட்டிக்கொண்டாலும் உள்ளுக்க படாதபாடு பட்டுக்கொண்டிருப்பா. இனியும் அவாவை அழ விட்டுடாதீங்க தம்பி. உங்கள நம்பித்தான் அவாவத் தந்திருக்கிறன்.” என்றார் கலங்கிவிட்ட விழிகளோடு.
அவர் கரத்தைப் பற்றி அழுத்திக்கொடுத்து, “கவலைப்படாதீங்க மாமா. அவளைச் சந்தோசமா வச்சிருக்க வேண்டியது என்ர பொறுப்பு.” என்றான் அவன் ஆறுதலாக.
இரண்டு தம்பதியரும் முதலில் சக்திவேலரிடம்தான் ஆசிர்வாதம் வாங்க வந்தனர்.
நிலன் இளவஞ்சி வணங்கி எழுந்ததும், “என்னவோ என்ர பேரனைக் கட்டுற எண்ணமே இல்லை எண்டு சொன்னா. இப்ப என்னவாம்?” என்றார் நிலனிடம்.
பதிலேதும் சொல்லாமல் அமைதியாகவே நின்றாள் இளவஞ்சி. என்னவோ அன்றைக்குப் போன்று இன்று அவளுக்குக் கோபம் வரவேயில்லை. நடந்துகொண்டிருப்பது அவள் திருமணம். ஆனால், யாரோ ஒருத்தியாக மனத்தளவில் தள்ளி நின்றாள்.
அவள் முகம் பார்த்த நிலன், “நீ போ!” என்று அவளை அனுப்பிவிட்டு, “அப்பப்பா! உங்களுக்கு உங்கட பேரன் நல்லாருக்கோணுமா இல்லையா?” என்றான் மெல்லிய அதட்டலாக.
“உனக்கு என்னடா பேரா குறை? நீ நல்லாத்தான் இருப்பாய்.”
“அப்ப பேசாம இருங்க.” என்றதும் அவனை முறைத்தவர் தன் ஊன்றுகோளாலேயே அவனுக்கு ஒரு அடியைப் போட்டார்.
“திமிறாடா உனக்கு? என்னையே பேசாம இருக்கச் சொல்லுவியா நீ?” என்றவரிடம், “சரி சரி கோவப்படாதீங்க! அதே மாதிரி அவளோட வம்புக்கும் போகாதீங்க.” என்று அவரைச் சமாதானம் செய்துவிட்டு அவளிடம் வந்தான்.
பிரபாகரன் சந்திரமதி, பாலகுமாரன் ஜானகி தம்பதியரையும் வணங்கி எழுந்தனர்.
ஜானகிக்கு அனைத்தையும் பார்க்க பார்க்க நெஞ்சு எரிந்தது. தன் வீட்டின் இரண்டு ஆண் வாரிசுகளையும் வளைத்துப்போட்டுவிட்டார்களே! அதைவிட அவர் மகனின் திருமணம் இப்படியா நடக்க வேண்டும்? ஆனால், நிலனின் எச்சரிக்கையும், மகன் எல்லோர் முன்னும் ஏதாவது சொல்லிவிடுவானோ என்கிற பயமும், தந்தையின் அமைதியும் அவர் வாயையும் கட்டிப் போட்டிருந்தன.
அடுத்ததாக மணமக்கள் குணாளன் ஜெயந்தியிடம் வந்தனர். அவர் முகம் கூடப் பாராது வணங்கி எழுந்தவளை உச்சி முகர்ந்த குணாளன், கட்டுப்பாட்டை இழந்து உடைந்து அழுதார்.
“அப்பாவும் சேந்து உங்களைக் காயப்படுத்திப்போட்டன் எண்டு எனக்குத் தெரியும் பிள்ளை. ஆனாம்மா…” என்றவரால் தன் மனத்தில் உள்ளவற்றைச் சொல்ல முடியவில்லை.
அன்னைக்குத் தன்னை விளங்கும் என்றே நம்பினார். அதேபோல் என்றாவது ஒரு நாள் மகளும் தன்னை உணர்வாள் என்கிற நம்பிக்கையோடு, “நீங்க நல்லா இருந்திடோணும் குஞ்சு. அது மட்டும் தானம்மா இந்த அப்பான்ர ஆசை. அதுக்காகத்தானம்மா இந்தக் கலியாணம்.” என்றார்.
அவரிடமும் அவள் எதுவும் பேசத் தயாராயில்லை.
தாய் தந்தையரை மிதுனோடு விழுந்து வணங்கிய சுவாதி, தகப்பனைக் கட்டிக்கொண்டு அழுது மன்னிப்பைக் கேட்டாள்.
மிச்ச சொச்சமாய் இருந்த அவள் மீதான குற்றம் குறைகள் எல்லாம் கரைந்துபோய்விட, அவளைத் தேற்றிக் கண்ணீரைத் துடைத்துவிட்டார் குணாளன்.
*****
Last edited: