• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 13

Sripriya

Member
அவர்கள் இருவர்களுக்கும் அவர்கள் நடந்து கொண்ட முறையும் செயல்களும் சரியாக படுகிறது
 

Kameswari

Member
என்னதான் நிலனோட கோபம் நியாயமா இருந்தாலும், வஞ்சி நடந்த விஷயங்களால இப்போ அவளாவே இல்லை. அவ மனசுல எத்தனை வேதனையோட இருக்கான்னு தெரியாதா? அப்புறம் வந்து விட்டுகொடுத்து பேசிட்டா, விட்டுட்டு போறேன்னு சொல்றான்னு... என்ன நிலன் இதெல்லாம்?

அவளுக்கு அவ யாருன்னே தெரியாம தவிச்சுட்டு இருக்கா, உண்மையை தெரிஞ்சவங்களும் சொல்ல மாட்டேங்கிறாங்க, பாவம்! அவ என்னதான் செய்வா?

நிலனை அவற் வற்புறுத்தினதால கட்டிக்கல, அவளோட அப்பா, அம்மா வற்புறுத்தினதாலதான் கல்யாணம் கட்டினாள்னு குற்றம் சுமத்துறது என்ன நியாயம்?

வஞ்சி அவனை கல்யாணம் பண்ணினதுக்கு காரணம், கேம்பஸ்ல படிக்கும்போது வஞ்சிக்கு அவனை ரொம்ப பிடிக்கும்னு சொன்னதுதான். வஞ்சி எங்கே தன்னை திரும்பவும் மறுத்துடுவாளோன்ற பயத்துலதான் நிலன் எல்லார் முன்னாடியும் சொன்னான். அதையே குணாளனும் பிடிச்சிட்டு, வஞ்சியை கார்னர் பண்ண, ஜெயந்தியும் அவ பெத்த பொண்ணுக்காக கார்னர் பண்ண வேற வழியில்லாமதான் நிலனை கல்யாணம் கட்டினாள். பண்றதெல்லாம் நிலனே பண்ணிட்டு எவ்ளோ சுலபமா அவ மேல பழியை போடுறான்.

எந்த உண்மையையும் சொல்லாம, அவளை வற்புறுத்தி எதுவும் மறுக்க முடியாத சூழ்நிலையில் நிறுத்தி கட்டினவன், எநத உரிமையில் அவ பக்கத்துல வரான்? க்ரைம் ரேட் கூடுது நிலனுக்கு 😠 ஜுனியர் ஆர்டர் போடலாமான்னு கேக்கறானே அதுக்கு இவனோட விருப்பம் மட்டுமே போதுமா? வஞ்சி... அவளோட மனசு? அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லையா? இவனுக்குமே அவ மேல எந்த கத்திரிக்காயுமே இல்லையே... அப்புறம் இப்போ மட்டும் என்ன? 🧐

வஞ்சி என்ன விரும்பியா கல்யாணம் கட்டினா? இல்லையே! அவளுக்கு நடந்தது ஒரு கார்னர் கல்யாணம் 🤣

நிதா 18+ எழுதுறேன்னு சொன்னீங்களே அது இந்த எபியா? 🤣🤣
 

Sowdharani

Well-known member
எதுக்காக இந்த கல்யாணம் அப்படிகிற விஷயம் தெரிஞ்சா தான் நிலன் கிட்ட இயல்பாக நடக்க முடியும் ஆனா அவன் அது வரை பொறுக்க போறது இல்ல போல... இன்னும் இன்னும் சிக்கல் ஆக்க பாக்குறான்...
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அடேய் நிலன் நீங்க எல்லோரும் செய்யக்கூடாத வேலையெல்லாம் செய்வீங்க..சொல்லக் கூடாததெல்லாம் சொல்லுவீங்க.. எந்த உண்மையை கேட்கிறாளோ அதை மட்டும் சொல்ல மாட்டீங்க.. ஆனா உங்ளுக்கு வஞ்சி மட்டும் வளைஞ்சு குடுக்கனுமா?.
 
Top Bottom