• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 14

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 14


மலர்கள் இல்லத்திற்குத் தானே நேரில் சென்று, தன்னை இளவஞ்சியின் கணவன் என்று அறிமுகப்படுத்தி, அந்தப் பிள்ளைகளைத் தானே பொறுப்பெடுத்துக்கொள்வதாகச் சொன்னான் நிலன்.

சரஸ்வதி அம்மாவிற்கு என்ன சொல்வது என்று தெரியா நிலை. என்னதான் இந்த உலகத்தைப் பற்றியும், மனிதர்களின் குணநலன் பற்றியும் சொல்லிக்கொடுத்து வளர்த்திருந்தாலும் அத்தனையும் ஏட்டுச் சுரைக்காய்தான். அந்த இல்லத்தை மட்டுமே உலகமாகப் பாவித்து வளர்ந்த பிள்ளைகள் அவர்கள்.

இளவஞ்சி என்கையில் எந்தப் பயமும் இல்லாமல் அனுப்பி வைப்பார். அவ்வளவு நம்பிக்கை. அவளை இவர்கள் எல்லோருக்கும் ஏற்கனவே நன்றாகத் தெரியும். அதோடு ஒவ்வொரு வருடமும் இப்படியான பிள்ளைகளை அவள் வேலைக்கு எடுப்பதால் அங்கே இவர்களோடு வளர்ந்த பிள்ளைகள் ஏற்கனவே இருப்பார்கள். ஆக, சமாளித்துக்கொள்வார்கள்.

அதே நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கிற வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கும் உரிமை அவருக்கு இல்லை. அதில் இளவஞ்சிக்கு அழைத்துப் பேசினார்.

“பிள்ளைகள் புது இடம் எண்டு பயந்துகொண்டு இருக்கினம் இளவஞ்சி. நீங்களே கூடப்போய் என்ன ஏது எண்டு பாத்துச் சேத்துவிட மாட்டீங்களாம்மா?” தயவாக அவர் வேண்டிக் கேட்டபோது அவளால் மறுக்க முடியாமல் போயிற்று.

என் கணவனின் தொழிசாலைக்கு நான் போகமாட்டேன் என்று சொல்லவா முடியும்? திரும்பவும் நிலன் தன்னை வலை போட்டுச் சக்திவேலுக்குள் இழுப்பது போலிருக்க சினமும் எரிச்சலும் பொங்கின.

கடந்த சில நாள்களாகவே அதிகமான சஞ்சலத்தில் உழன்றுகொண்டிருந்தாள் இளவஞ்சி. காரணம் ஆனந்தியிடமிருந்து வருகிற குறுந்தகவல்கள். சக்திவேலர் தையல்நாயகிக்கு வந்திருக்கிறார் என்று அவள் அனுப்பிய செய்தியிலேயே அவள் இதயம் ஒரு நொடி நின்று போயிற்று.

அது போதாது என்று தொழிசாலையையே சுற்றி சுற்றி வந்தபடி, முக்கிய பொறுப்பிலிருக்கிறவர்களை அழைத்து ஆதியோடு அந்தமாக அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறாராம் என்று அறிந்ததில் இருந்தே அவள் உள்ளத்து அமைதி மொத்தமாகத் தொலைந்துபோயிற்று.

அங்கிருப்பவை எல்லாம் அவளின் தனித்துவத்தைச் சொல்பவை; தையல்நாயகியின் தரத்தைச் சொல்பவை; அவள் பார்த்து பார்த்துச் செய்து வைத்தவை.

இனி அது எல்லாம் பறிபோய்விடும். தையல்நாயகி தன் தனித்துவத்தை இழந்துவிடும்.

எவ்வளவு பெரிய தவறான முடிவை எடுத்துவிட்டாள் என்று உழன்றுகொண்டிருந்தாள். அது போதாது என்று இப்போது சக்திவேலுக்குப் போகும் நிலை.

எதெல்லாம் அவள் வாழ்வில் நடந்துவிடவே கூடாது என்று எண்ணினாளோ அதெல்லாம்தான் நடந்துகொண்டிருந்தது.

சக்திவேல் குடும்பத்தைச் சாதாரணமாக எதிர்கொள்வதையே அவள் விரும்பியதில்லை. இன்று அந்த வீட்டு மருமகள் மட்டுமில்லை அங்கேயே வாழும் நிலை அவளுக்கு.

தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலை இல்லாத ஒரு வாழ்க்கையை அவள் கனவில் கூட யோசித்ததில்லை. ஆனால் இன்று அவளுக்கும் தையல்நாயகிக்கும் உறவே இல்லை.

சக்திவேல் தொழிற்சாலையினுள் அவள் நுழைவாள் என்று எண்ணிப் பார்த்ததே இல்லை. இப்போது அதையும் செய்யப்போகிறாள்.

அவன்தான் சேலை கொண்டுவந்து கொடுத்தான். அவள் கேள்வியாக ஏறிட, “நீ எப்பவும் கட்டுற மாதிரி கொட்டன் சாறிதான்.” என்றான்.

எடுத்துப் பார்த்தாள். கையால் நெய்யப்பட்ட, உடல் முழுவதும் பஞ்சு போன்ற வெண்மையில் இருக்க, சிவப்பு மெல்லிய போடர் கொண்ட கொட்டன் சேலை.

போடர் அடர் சிவப்பிலும், அதன் அடுத்த அரை சான் அளவுக்கான பகுதி மென் சிவப்பிலும், அதற்கு அடுத்த அரை சான் பகுதி வெளிர் சிவப்பிலும் வந்து வெண்மையோடு கலந்து, உள்ளத்தையே இதமாகத் தாலாட்டுவது போலிருந்தது சேலை.

ஏதாவது சொல்வாளா என்று பார்த்து நின்றவனிடம் ஒன்றும் சொல்லாமல் சேலையை மாற்றச் சென்றாள் இளவஞ்சி.

தனிச் சிவப்பில் முழங்கை தாண்டிக் கைகள் இருக்க, கழுத்துவரை மூடிய பிளவுசின் கழுத்தோரத்தில் வெள்ளை நிறத்தில் கேரளா நெக்லஸ் டிசைன் போட்டிருந்தான். முதுகுப் பகுதியில் பெரிய வெற்றிலை வடிவத்தில் வெற்றிடம் விட்டு, கீழே இடுப்புப் பகுதியை வெளிர் சிவப்புப் பட்டிகளால் இழுத்துக் கட்டி, போ ஒன்று போட்டு, அதன் பட்டிகளைத் தொங்கவிட்டிருப்பது போல் வடிவமைத்திருந்தான். அந்த பிளவுசுக்கு சிப், சைட் பக்கத்தில் இருந்தது.

அந்தச் சேலைக்குப் பொருத்தமாக நகைகளும் அணிந்துகொண்டு வந்தவளைக் கண்டு மலைத்துப்போனான் நிலன். கைப்பை, கைப்பேசி என்று தன் பொருள்களை எடுக்க அவள் அங்குமிங்குமாக நடமாடுகையில் தெரிந்த அவளின் வாளிப்பான முதுகைப் பார்த்தவனின் உதடுகள் அங்கே முத்தமிடத் துடித்தன.

அப்படி எதையாவது இப்போது செய்தான் என்றால், ஊசியால் அவன் வாயைத் தைத்தாலும் தைத்துவிடுவாள் என்கிற பயத்தில் தன்னை அடக்கிக்கொண்டான்.

அவர்கள் இருவருமாக இறங்கி வருகையில் எதிர்ப்பட்டார் பாலகுமாரன். இவளைக் கண்டதும் அப்படியே நின்றார். அன்று நிலனின் கடையில் வைத்துப் பார்த்த அதே பார்வை.

ஜானகி அம்மாள் பக்கத்தில் இல்லை போலும். இல்லாவிட்டால் அவராவது அவளை நிமிர்ந்து பார்ப்பதாவது. உள்ளே எள்ளலாக எண்ணியபடி அவரை அவள் கடக்க முயல, அவள் கரம் பற்றித் தடுத்து நிறுத்தி, “சக்திவேலுக்குப் போறம் மாமா.” என்றான் நிலன்.

தடுமாற்றத்துடன் பார்வை இளவஞ்சியிடம் சென்று வர, “கவனமப்பு. சந்தோசமாப் போயிற்று வாங்கோ.” என்று சொல்வதற்கிடையிலேயே அவர் குரல் கரகரத்தது.

தையல்நாயகியைப் போன்று இரண்டு மடங்கு பெரிய தொழிற்சாலை சக்திவேல். அதைக் கண்டபோது அவளுக்குள் பிரமிப்போ மலைப்போ உண்டாகவில்லை. மாறாகத் தையல்நாயகிதான் கண்முன்னே வந்து நின்றது.

தாய்மடி தேடும் கன்றுக்குட்டியாக அங்கே ஓடிவிடத் துடித்தாள். முடியாதே. கம்பீரமாக நிமிர்ந்து நின்ற சக்திவேல் அவள் இழப்பைப் பல மடங்காக்கிக் காட்டியது. அதைத் தனக்குள் விழுங்கிக்கொண்டு நிலனோடு நடந்தாள்.

இரண்டு பெண்கள் வாசலுக்கே வந்து, பூங்கொத்து ஒன்றினைத் தந்து அவளை வரவேற்றனர்.

நிலன் அவள் வருகையை ஒட்டி ஒன்றுகூடல் ஒன்றினை ஒழுங்குசெய்திருந்தான். பிரபாகரனும் அங்கேதான் இருந்தார். முறையான மரியாதையோடு அவளை அங்கு அழைத்துச் சென்று, தன் மனைவி என்று அறிமுகம் செய்துவைத்தான் நிலன். இனி அவளும் தொழிற்சாலையைக் கவனித்துக்கொள்வாள் என்பதுபோல் பேசினார் பிரபாகரன்.

எல்லோரினதும் வாழ்த்தையும் வணக்கத்தையும் அழகான மௌனத்தோடும் கனிவான முறுவலோடும் ஏற்றுக்கொண்டாள்.

அப்படியே தொழிற்சாலையைச் சுற்றிக் காட்டினான் நிலன். முழுமனத்தோடு அவளால் அவனோடு நடக்க முடியாதுபோனாலும் அவள் இரத்தத்திலேயே ஊறிப்போன தொழிலும், தொழில் அறிவும் அவளையும் மீறி அவளைக் கவனிக்க வைத்தன.

பல வசதிகளோடு நவீன முறையில் அனைத்தையும் செய்திருந்தான் நிலன். தையல்நாயகியில் இன்னுமே உடைக்கான அளவுகளைத் துணியின் மீது கீறி, மெஷினினால் வெட்டும் முறைதான் இருந்தது.

ஆனால் இங்கே, அதற்கென்று தனியாக மெஷின் போட்டிருந்தான் நிலன். அளவுகளை அதில் கொடுத்து, செட் பண்ணிவிட்டால் போதும். தானே அளவு டிசைனை தயாரித்து, தனி தனி துண்டுகளாக அதுவே வெட்டித் தந்துகொண்டிருந்தது. துணியைக் கட்டாக, சுருக்கம் எதுவும் இல்லாமல் அதற்குள் வைத்தால் மட்டும் போதும்.

இதில் அளவும் பிழைக்காது, அதனாலேயே மொத்தத் துணியும் வீணாகிப் போகும் அபாயமும் இல்லை. தன்னை மீறி, இந்த மெஷினை எங்கே வாங்கினீர்கள் என்று கேட்க வந்துவிட்டு, வேகமாக வாயை மூடிக்கொண்டாள் இளவஞ்சி.

அப்படிப் பல மெஷின்கள். அயர்னிங் பகுதியில் கூட நீராவியில் செய்யும் வழி கொண்டுவந்திருந்தான்.

முத்துமாணிக்கமும் சக்திவேலும் கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டவை. முத்துமாணிக்கம் பழமையை அப்படியே பறைசாற்றிக்கொண்டிருக்க, அனைத்து நவீன வசதிகளோடும் கூடவே தன் பழமையையும் சுமந்தபடி சக்திவேல் நிற்பதைக் கண்டு மெச்சிக்கொண்டாள்.

“எப்பிடி இருக்கு?” அவனின் அலுவலக அறைக்குள் வந்ததும் வினவினான்.

“நல்லாருக்கு.”

இன்னும் ஏதாவது சொல்வாளா என்று பார்த்தான். அவள் வாயைத் திறக்கவேயில்லை.

“ஏதாவது மாத்தினா நல்லாருக்கும் மாதிரி இருந்தா சொல்லு.” என்றான்.

தலையாட்டிக் கேட்டுக்கொண்டாளே தவிர்த்து எதுவும் சொன்னாளில்லை.

அவனுடைய அலுவலக அறை விசாலமானது. அதன் ஒரு மூலையில் ஒரு சின்ன வட்ட மேசையும் அதன் முன்னே இரண்டு குஷன் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. அதில் அமர்ந்து, அந்த மேசையில் கிடந்த சக்திவேல் பிராண்டினைச் சுமந்த ஆடைகளின் கட்லொக்கில் (Catalog) ஒன்றினை எடுத்துப் புரட்டினாள்.

கொஞ்சமும் இளகுகிறாள் இல்லையே என்றிருந்தது அவனுக்கு. அவள் தாங்கி நிற்பது மிகப்பெரிய வலியை என்று அவனுக்கும் தெரியும். ஆனால், முத்துமாணிக்கத்தைத் தருகிறேன் என்றதற்கு மறுத்துவிட்டாள். தையல்நாயகியைக் கொடுக்காதே என்றதையும் கேட்கவில்லை. இனி அவனும்தான் என்ன செய்ய?

ஒரு நெடிய மூச்சடன் போய் மெஷினில் இரண்டு கோப்பிகளை வார்த்துக்கொண்டு வந்து ஒன்றை அவளிடம் கொடுத்தான்.

“மெஷின்தான் போட்டது. நம்பிக் குடி!” என்றதற்கு ஒன்றும் சொல்லாமல் வாங்கிப் பருகினாள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனுக்கு வேலைகள் இருந்தன. அந்தப் பெண் பிள்ளைகள் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. இவளை இப்படி இங்கே தனியே விட்டுவிட்டுப் போக மனமில்லை.

“எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நீயும் வாறியா?” என்றான் கோப்பியைப் பருகியபடி.

“நான் என்னத்துக்கு?” என்றாள் அவள்.

பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தான் நிலன். எதையாவது செய்து, எதற்குள்ளாவது அவளை இழுத்துவிட்டு அவளின் இறுக்கத்தைத் தளர்த்திவிடத்தான் அவனும் முயல்கிறான். எதற்கும் அசைந்துகொடுக்கவே மாட்டேன் என்று நிற்கிறாள் அவள்.

“ஒரு… ஒரு மணித்தியாலம்தான். ஆனாலும் வேகமா முடிச்சுக்கொண்டு வரப்பாக்கிறன். தனியா இருப்பியா?”

இருப்பேன் என்பதுபோல் தலையை அசைத்தாள் அவள்.

“சாப்பாட்டுக்குச் சொல்லிப்போட்டுப் போறன். வரும், சாப்பிடு.” என்றுவிட்டுப் போனான்.

அந்தக் கடலொக்குகளை பார்த்து முடித்தாள் இளவஞ்சி. உணவு வந்தது. சற்று முன்னர்தான் கோப்பி அருந்தியதால் பசிக்கவில்லை. இப்படிச் சும்மா இருந்து பழக்கமில்லாததால் எழுந்து அந்த அறைக்குள்ளேயே நடந்தாள். ஒரு பக்கம் கதவுபோல் இருக்கக் கண்டு திறந்து பார்த்தாள்.

அது அவன் தனக்கான டிசைன்களை உருவாக்கும் இடம் என்று புரிந்தது. இப்படி ஒரு தனிப்பகுதி அவளும் அவளின் அலுவலக அறையில் வைத்திருக்கிறாள். மெல்ல நடந்து உள்ளே போனாள். நீள் சதுர வடிவ மேசை ஒன்றில் பல வர்ணங்களில் துணிகள் கலைந்து கிடந்தன. அருகில் டேப், மார்க்கர், பேனாக்கள், நோட் புக், கத்தரிக்கோல் என்று நாளாந்தம் அவள் புழங்கிய பொருள்கள். அவற்றைக் காண்கையில் நெஞ்சினில் துயரம் பெருகிற்று.

இது அவள் உலகம். அவள் ஆத்மார்த்தமாக இயங்கும் இடம். எதையாவது எடுத்து வரையவும் வெட்டவும் கைகள் துறுதுறுத்தன. வேண்டாம் என்று விட்டது விட்டதுதான் என்கிற பிடிவாதத்தோடு திரும்பியவள் அப்போதுதான் எதிர் சுவரைக் கவனித்தாள்.

பெண் குழந்தைகளுக்கான உடைகளை மினியேச்சர் வடிவத்தில் குட்டி குட்டியாக உருவாக்கி, அந்தச் சுவர் முழுக்கக் கொழுவி வைத்திருந்தான் நிலன். குறைந்தது நூற்றுக்கும் மேலான உடைகள்.

அவள் கணனியில் 3D படங்களாக வரைவாள். இப்படிச் செய்து வைப்பதில்லை. கெட்டிக்காரன்தான். உள்ளே அவனை மெச்சிக்கொண்டபோதும் தன் உலகம் மொத்தமாகச் சிதைந்துபோன சோகம் இன்னும் அதிகமாக அவளைத் தாக்கிற்று.

அதனோடே அவள் அந்த அறையை விட்டு வெளியில் வர, அவனும் கதவைத் திறந்துகொண்டு வந்தான். அணிந்திருந்த கோர்ட்டை கழற்றி அங்கிருந்த கொழுவியில் மாட்டிவிட்டு, டையையும் தளர்த்திவிட்டான்.

“இன்னும் சாப்பிடேல்லையா?” அங்கே மூடி வைக்கப்பட்டிருந்த உணவைத் திறந்து பார்த்துவிட்டு வினவினான்.

“பசிக்கேல்ல.” என்றாள் அக்கறையற்ற குரலில்.

திரும்பி அவள் முகத்தை ஒரு கணம் ஆராய்ந்துவிட்டு, “இவ்வளவு நேரத்துக்கு அப்பிடி எப்பிடிப் பசிக்காம இருக்கும்? வந்து சாப்பிடு!” என்று அழைத்தான்.

“பிள்ளைகள் இன்னும் வரேல்லையா?” உணவு விடயத்தை அப்படியே புறம் தள்ளிவிட்டு வினவினாள் இளவஞ்சி.

திரும்பவும் அவளையே சில கணங்களுக்கு விடாமல் பார்த்தவன் வேறு பேசவில்லை. பேசாமல் வந்து அவளைத் தூக்கிக்கொண்டு போய்த் தன் மேசையின் மீது அமர்த்தினான்.

“நிலன்! என்ன இது? சும்மா சும்மா நீங்க தூக்க நான் என்ன பொம்மையா?” என்று அதட்டினாள் இளவஞ்சி.

“இந்த சாறில பொம்மை மாதிரித்தான் இருக்கிறாய். நடமாடும் பொம்மை.” என்றபடி உணவை எடுத்துக் கரண்டியினால் குழைத்து அவனே அவளுக்கு நீட்டினான்.

அவளுக்குள் மெல்லிய வியப்பு. அவனையே பார்த்தாள். “என்ன பார்வை. வாயத் திற. இல்ல அதுக்கும் ஏதும் செய்யோணுமா?” என்றதும் திறந்து வாங்கினாள்.

அவள் மேசையில் அமர்ந்திருக்க அவள் முன்னே நின்று அவளுக்கு ஒவ்வொரு கரண்டியாகத் தந்துகொண்டிருந்தான் அவன்.

சக்திவேல் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் தலைமகன். அனைத்துப் பொறுப்புகளையும் தன் தோள்களில் தாங்குகிறவன். அவனின் இந்த இணக்கமான செய்கையில் அவள் உள்ளமும் இலேசாய் இளகிற்று.

“நீங்க சாப்பிட்டீங்களா?” தன்னை மீறி வினவினாள்.

மீட்டிங்கில் நடந்ததைப் பற்றிச் சொல்லியபடி, புட்டோடு தக்காளிப்பழம் போட்ட உருளைக்கிழங்கு குழம்பையும், பருப்புக் கறியையும் சேர்த்துக் கரண்டியால் பிரட்டிக்கொண்டிருந்தவன் சட்டென்று கை வேலையை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

அப்போதுதான் தான் கேட்ட கேள்வி அவளுக்கும் உறைத்தது. இது எப்படி நடந்தது என்கிற குழப்பமும் தடுமாற்றமுமாக அவன் பார்வையைச் சந்திக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அவன் உதட்டில் மெல்லிய முறுவல். முதன்முதலாக அவள் தடுமாற்றத்தைப் பார்க்கிறான். மிக மிகப் பிடித்திருந்தது. அவளை அள்ளியணைத்துக் கொஞ்சித் தீர்க்க ஆசை எழுந்தாலும் அடக்கி, “நான் அங்க மீட்டிங்கிலேயே சாப்பிட்டன். ஆனா இப்ப நீ கேட்டதாலயே பசிக்குது.” என்றவன் தன் வாயிலும் ஒரு கரண்டி உணவைப் போட்டுவிட்டு அவளுக்கும் நீட்டினான்.

அவன் கண்களில் இருந்த சிரிப்பு வாங்கிவிடாதே என்று எச்சரித்தாலும் அவனைப் பாராமல் வாங்கியிருந்தாள் இளவஞ்சி.

அப்போது நாசூக்காய்க் கதவைத் தட்டிவிட்டு யாரோ திறக்கவும் வேகமாகத் தட்டை அவளருகில் வைத்துவிட்டு ஓடிப்போய்த் தன்னிருக்கையில் அமர்ந்துகொண்டான் நிலன்.

அதாவது நிலன் பிரபாகரன் அவன் மனைவிக்கு உணவினை ஊட்டிவிடவில்லையாம். அந்தளவில் கௌரவம் பார்ப்பானா இவன்? ஆச்சரியமும் வியப்புமாக அவனைப் பார்த்தாள் இளவஞ்சி.

இதில், மகனின் அலுவலக அறை என்கிற உரிமையில் காத்திராமல் கதவைத் திறந்துவிட்ட பிரபாகரன், மருமகளிடமிருந்து விலகி மகன் வந்த வேகத்தை வைத்து என்னவோ வில்லங்கமாக எண்ணிக்கொண்டு, சங்கடப்பட்டு வாசலிலேயே நின்றுவிட்டார்.

அப்பா மகன் இருவரையும் பார்த்த இளவஞ்சி சட்டென்று கலக்கலத்துச் சிரித்தாள்.

பிரபாகரன் வேறு அவர்களை நிமிர்ந்தும் பாராமல், “நான் பிறகு வாறன்!” என்றுவிட்டு அங்கிருந்து ஓடியே போக அவளால் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியாமல் போயிற்று.

இல்லத்துப் பிள்ளைகள் வந்துவிட்டார்கள் என்று சொல்வதற்குத்தான் வந்தார். ஆனால், அவர் பார்த்த காட்சி?

இருவரும் இரு திசையில் இருக்கிறார்களே, இவர்கள் வாழ்க்கை என்னாகும் என்று கலங்கிக்கொண்டிருந்த பிரபாகரனுக்கு மிகுந்த சந்தோசம். கவலை நீங்கியவராக நடந்தார்.

இங்கே, “வஞ்சி! சிரிக்காம சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடு!” என்று அதட்டிக்கொண்டிருந்தான் நிலன்.

“அதுதானே பாத்தன்! எங்கட கம்பஸ் ஹீரோ, மிஸ்டர் சக்திவே…” என்று ஆரம்பித்தவள் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டாள். அன்று அவன் அவரை அப்படிச் சொல்லாதே என்று உத்தரவிட்டது நினைவில் வந்தது. அதுவரையில் அவள் முகத்திலிருந்த சிரிப்பு துணிகொண்டு துடைத்தாற்போல் காணாமல் போயிற்று.

அப்படி அவள் பேச்சை நிறுத்தித் தன்னை அடக்கிக்கொண்டதைக் கண்ட நிலனுக்குமே ஒரு மாதிரியாகிப் போயிற்று. முதல் வேலையாகப் போய்த் தன் அலுவலக அறையின் கதவைப் பூட்டிவிட்டு வந்து, அவளை அணைத்துக்கொண்டான்.

ஒன்றும் பேசவில்லை. எந்த ஆறுதல் வார்த்தைகளும் சொல்லவில்லை. ஆனால், உனக்கு நானிருக்கிறேன் என்று சொல்வது போன்ற இறுக்கமான அணைப்பு.

அவள் முதுகை அவன் கரம் வருடிவிட்டுக்கொண்டிருக்க, அவளுக்குத் தன் துக்கமெல்லாம் பெருகிக்கொண்டு வருவது போலிருந்தது. அவன் காட்டும் இந்த அன்பும் அரவணைப்பும் அவளைப் பலகீனப் படுத்துவது போலிருக்க அவனிடமிருந்து விலக முயன்றாள்.

அவன் விடவில்லை. தன்னைப் பார்க்க மறுக்கும் அந்த விழிகளின் மீது தன் உதடுகளை ஒற்றி எடுத்தான் நிலன்.

அவளுக்குள் என்னவெல்லாமோ உடையும் சத்தம். இன்னும் இறுக்கமாக விழிகளை மூடிக்கொண்டாள்.

அவள் கன்னம் தாங்கி, “என்னட்ட நீ எப்பிடி வேணுமெண்டாலும் கதை. ஆனா நாலு பேருக்கு முன்னாலயோ, வீட்டாக்களுக்கு முன்னால வச்சோ அப்பிடிக் கதைக்காத. என்ன இருந்தாலும் வயசான மனுசன். என்ர அப்பப்பா. என்னைப் பாசமா வளத்தவர். இண்டைக்கு நாங்க எல்லாரும் இந்தளவுக்கு நல்லாருக்கக் காரணமானவர். எனக்கு முன்னால அவரை நீ அப்பிடிக் கதைக்கிறத என்னால பாத்துக்கொண்டு இருக்கேலாது வஞ்சி. யோசிச்சுப் பார், உன்ர அப்பம்மாவை ஆராவது ஒரு வார்த்த சொன்னா விடுவியா நீ? அதே மாதிரித்தான் இதுவும்.” என்று தன் நிலையை நல்ல விதமாகவே அவளுக்கு எடுத்துரைத்தான்.

அன்றைக்கு விடவும் இன்றைக்கு அவன் நிலை நன்றாகப் புரிந்ததில் அவளும் மறுத்து எதுவும் சொல்லப்போகவில்லை. மௌனமாகவே அவனிடமிருந்து விலகினாள்.

ஆனால், அவள் இன்னும் தன்னை விளங்கிக்கொள்ளவில்லை போலும் என்றெண்ணிய நிலன், “வஞ்சிமா! ஒரு குறை இல்லாம அவரப் பாக்கிற கடமை எனக்கு இருக்கெல்லாடி?” என்றான் கெஞ்சலாக.

“அப்ப என்னைப் பாக்கிற கடம உங்களுக்கு இல்லையா?” நிமிர்ந்து அவன் முகம் பார்த்து நிதானமாய் வினவினாள் அவள்.

ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டான் அவன். அவள் அவன் சொந்தம் என்கிறாளா? உள்ளே ஜில் என்று எதுவோ இனித்துக்கொண்டு ஓட, “அதான் அண்டைக்கு நான் கேட்டும் உன்னைப் பாக்க விடேல்லையே நீ!” என்றான் அவன் குறை சொல்வதுபோல்.

தன் கேள்வியின் பொருளையே மாற்றிவிட்டவனை முறைத்தாள் அவள்.

“இனியாவது உன்னைப் பாக்கட்டா? உனக்கு ஓகேயா?” என்றான் கிசுகிசுப்பாக.
 
Last edited:

sarjana

Member
ஐயோ அந்த பாலகுமாரனுக்கும் வஞ்சிக்கும் என்ன உறவு 🤔
எப்படியும் மகளோ அல்லது மகள் உறவோ வருமோ.
கடும் உணர்வு பூர்வம் நிறைந்த flashback எதிர்பாக்கலாம் போல.
நிலன் உன் அன்பும் அக்கறையும் வஞ்சிக்கு பாதுகாப்பு
 

indu4

Member
அவனுக்கு வேலைகள் இருந்தன. அந்தப் பெண் பிள்ளைகள் வருவதற்கும் இன்னும் நேரமிருந்தது. இவளை இப்படி இங்கே தனியே விட்டுவிட்டுப் போக மனமில்லை.

“எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நீயும் வாறியா?” என்றான் கோப்பியைப் பருகியபடி.

“நான் என்னத்துக்கு?” என்றாள் அவள்.

பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தான் நிலன். எதையாவது செய்து, எதற்குள்ளாவது அவளை இழுத்துவிட்டு அவளின் இறுக்கத்தைத் தளர்த்திவிடத்தான் அவனும் முயல்கிறான். எதற்கும் அசைந்துகொடுக்கவே மாட்டேன் என்று நிற்கிறாள் அவள்.

“ஒரு ஒரு மணித்தியாலம்தான். ஆனாலும் வேகமா முடிச்சுக்கொண்டு வரப்பாக்கிறன். தனியா இருப்பியா?”

இருப்பேன் என்பதுபோல் தலையை அசைத்தாள் அவள்.

“சாப்பாட்டுக்குச் சொல்லிப்போட்டுப் போறன். வரும், சாப்பிடு.” என்றுவிட்டுப் போனான்.

அந்தக் கடலொக்குகளை பார்த்து முடித்தாள். உணவு வந்தது. சற்று முன்னர்தான் கோப்பி அருந்தியதால் பசிக்கவில்லை அவளுக்கு. இப்படி சும்மா இருந்து பழக்கமில்லாததால் எழுந்து நடந்தாள். ஒரு பக்கம் கதவுபோல் இருக்கக் கண்டு திறந்து பார்த்தாள்.

அது அவன் தனக்கான டிசைன்களை உருவாக்கும் இடம் என்று புரிந்தது. மெல்ல நடந்து உள்ளே போனாள். நீள் சதுர வடிவ மேசை ஒன்றில் பல வர்ணங்களில் துணிகள் கலைந்து கிடந்தன. அருகில் டேப், மார்க்கர், பேனாக்கள், நோட் புக், கத்தரிக்கோல் என்று நாளாந்தம் அவள் புழங்கிய பொருள்கள். அவற்றைக் காண்கையில் நெஞ்சினில் துயரம் பெருகிற்று.

இது அவள் உலகம். அவள் ஆத்மார்த்தமாக இயங்கும் இடம். எதையாவது எடுத்து வரையவும் வெட்டவும் கைகள் துறுதுறுத்தன. வேண்டாம் என்று பிடிவாதத்தோடு திரும்பியவள் அப்போதுதான் எதிர் சுவரைக் கவனித்தாள்.

பெண் குழந்தைகளுக்கான உடைகளை மினியேச்சர் வடிவத்தில் குட்டி குட்டியாக உருவாக்கி, அந்தச் சுவர் முழுக்கக் கொழுவி வைத்திருந்ததைக் கண்டு புருவங்களை உயர்த்தினாள்.

அவள் கணனியில் 3D படங்களாக வரைவாள். இப்படிச் செய்து வைப்பதில்லை. கெட்டிக்காரன்தான். உள்ளே அவனை மெச்சிக்கொண்டபோதும் தன் உலகம் மொத்தமாகச் சிதைந்துபோன சோகம் இன்னும் அதிகமாக அவளைத் தாக்கிற்று.

அதனோடே அவள் அந்த அறையை விட்டு வெளியில் வர, அவனும் கதவைத் திறந்துகொண்டு வந்தான். அணிந்திருந்த கோர்ட்டை கழற்றி அங்கிருந்த கொழுவியில் மாட்டிவிட்டு, டையையும் தளர்த்திவிட்டான்.

“இன்னும் சாப்பிடேல்லையா?” அங்கே மூடி வைக்கப்பட்டிருந்த உணவைத் திறந்து பார்த்துவிட்டு வினவினான்.

“பசிக்கேல்ல.” என்றாள் அக்கறையற்ற குரலில்.

திரும்பி அவள் முகத்தை ஒரு கணம் ஆராய்ந்துவிட்டு, “இவ்வளவு நேரத்துக்கு அப்பிடி எப்பிடிப் பசிக்காம இருக்கும்? வந்து சாப்பிடு!” என்று அழைத்தான்.

“பிள்ளைகள் இன்னும் வரேல்லையா?” உணவு விடயத்தை அப்படியே புறம் தள்ளிவிட்டு வினவினாள்.

திரும்பவும் அவளையே சில கணங்களுக்கு விடாமல் பார்த்தவன் வேறு பேசவில்லை. பேசாமல் வந்து அவளைத் தூக்கிக்கொண்டுபோய் தன் மேசையின் மீது அமர்த்தினான்.

“நிலன்! என்ன இது? சும்மா சும்மா நீங்க தூக்க நான் என்ன பொம்மையா?” என்று அதட்டினாள் இளவஞ்சி.

“இந்த சாறில பொம்மை மாதிரித்தான் இருக்கிறாய். நடமாடும் பொம்மை.” என்றபடி உணவை எடுத்துக் கரண்டியினால் குழைத்து அவனே அவளுக்கு நீட்டினான்.

அவளுக்குள் மெல்லிய வியப்பு. அவனையே பார்த்தாள். “என்ன பார்வை. வாய திற. இல்ல அதுக்கும் ஏதும் செய்யோணுமா?” என்றதும் திறந்து வாங்கினாள்.

அவள் மேசையில் அமர்ந்திருக்க அவள் முன்னே நின்று அவளுக்கு ஒவ்வொரு கரண்டியாகத் தந்துகொண்டிருந்தான் அவன்.

சக்திவேல் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் தலைமகன். அனைத்துப் பொறுப்புகளையும் தன் தோள்களில் தாங்குகிறவன். அவனின் இந்த இணக்கமான செய்கையில் அவள் உள்ளமும் இலேசாய் இலக்கிற்று.

“நீங்க சாப்பிட்டீங்களா?” அவளை மீறியே கேள்வி வந்திருந்தது.

மீட்டிங்கில் நடந்ததைப் பற்றிச் சொல்லியபடி, புட்டோடு சேர்த்துத் தக்காளிப்பழம் போட்ட உருளைக்கிழங்கு குழம்பையும், பருப்புக்கறியையும் சேர்த்துக் கரண்டியால் பிரட்டிக்கொண்டிருந்தவன் சட்டென்று கை வேலையை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

அப்போதுதான் தான் கேட்ட கேள்வி அவளுக்கு உறைக்க அவன் பார்வையைச் சந்திக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அவன் உதட்டில் மெல்லிய முறுவல். “நான் அங்க மீட்டிங்கிலேயே சாப்பிட்டன். ஆனா இப்ப நீ கேட்டதாலயே பசிக்குது.” என்றவன் தன் வாயிலும் ஒரு கரண்டி உணவைப் போட்டுவிட்டு அவளுக்கும் நீட்டினான்.

அவன் கண்களில் இருந்த சிரிப்பு வாங்கிவிடாதே என்று எச்சரித்தாலும் அவனைப் பாராமல் வாங்கியிருந்தாள் இளவஞ்சி.

அப்போது நாசூக்காய்க் கதவைத் தட்டிவிட்டு யாரோ திறக்கவும் வேகமாகத் தட்டை அவளருகில் வைத்துவிட்டு ஓடிப்போய்த் தன்னிருக்கையில் அமர்ந்துகொண்டான் அவன்.

அதாவது நிலன் பிரபாகரன் அவன் மனைவிக்கு உணவினை ஊட்டிவிடவில்லையாம்.

இதில் மகன் அறை என்கிற உரிமையில் காத்திராமல் கதவைத் திறந்துவிட்ட பிரபாகரன், மருமகளிடம் இருந்து விலகி மகன் வந்த வேகத்தை வைத்து என்னவோ வில்லங்கமாக எண்ணிக்கொண்டு அவர் வேறு சங்கடப்பட்டு நின்றுவிட, அப்பா மகன் இருவரையும் பார்த்த இளவஞ்சியால் சிரிப்பை அடக்கவே முடியாமல் போயிற்று.

பிரபாகரன் வேறு அவர்களை நிமிர்ந்தும் பாராமல், “நான் பிறகு வாறன்!” என்றுவிட்டு அங்கிருந்து ஓடியே போனார்.

இல்லத்துப் பிள்ளைகள் வந்துவிட்டார்கள் என்று சொல்வதற்குத்தான் வந்தார். ஆனால், அவர் பார்த்த காட்சி?

இருவரும் இரு திசையில் இருக்கிறார்களே, இவர்கள் வாழ்க்கை என்னாகும் என்று கலங்கிக்கொண்டிருந்த பிரபாகரனுக்கு மிகுந்த சந்தோசம். கவலை நீங்கியவராக அவர் போக, இங்கே, “வஞ்சி! சிரிக்காம சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடு!” என்று இளவஞ்சியை அதட்டிக்கொண்டிருந்தான் நிலன்.

“அதுதானே பாத்தன்! எங்கட கம்பஸ் ஹீரோ, மிஸ்டர் சக்திவே…” என்று ஆரம்பித்தவள் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டாள். அன்று அவன் அவரை அப்படிச் சொல்லாதே என்று உத்தரவிட்டது நினைவில் வரவும் அதுவரையில் அவள் முகத்திலிருந்த சிரிப்பு துணைகொண்டு துடைத்தாற்போல் காணாமல் போயிற்று.

அப்படி அவள் பேச்சை நிறுத்தித் தன்னை அடக்கிக்கொண்டதைக் கண்டா நிலனுக்குமே ஒரு மாதிரியாகிப் போயிற்று. முதல் வேலையாகப் போய்த் தன் அலுவலக அறையின் கதவைப் பூட்டிவிட்டு வந்து அவளை அணைத்துக்கொண்டான்.

ஒன்றும் பேசவில்லை. உனக்கு நானிருக்கிறேன் என்று சொல்வது போன்ற இதமான அணைப்பு.

அவளுக்குத் தன் துக்கமெல்லாம் பெருகிக்கொண்டு வருவது போலிருந்தது. அவனிடம் உடைந்துவிடுவோமோ என்று பயந்தாள். அவனைப் பாராமல் அவனிடமிருந்து அவள் விலக முயல, தன்னைப் பார்க்க மறுக்கும் அந்த விழிகளின் மீது தன் உதடுகளை ஒற்றி எடுத்தான் நிலன்.

அவள் கன்னம் தாங்கி, “என்னட்ட நீ எப்பிடி வேணுமெண்டாலும் கதை. ஆனா நாலுபேருக்கு முன்னாலயோ, வீட்டாக்களுக்கு முன்னால வச்சோ அப்பிடிக் கதைக்காத. என்ன இருந்தாலும் வயசான மனுசன். என்ர அப்பப்பா. என்னைப் பாசமா வளத்தவர். இண்டைக்கு நாங்க எல்லாரும் இந்தளவுக்கு நல்லாருக்கக் காரணமானவர். எனக்கு முன்னால அவரை நீ அப்பிடிக் கதைக்கிறத என்னால பாத்துக்கொண்டு இருக்கேலாது வஞ்சி. யோசிச்சுப் பார், உன்ர அப்பம்மாவை ஆராவது ஒரு வார்த்த சொன்னா விடுவியா நீ? அதே மாதிரித்தான் இதுவும்.” என்று தன் நிலையை நல்ல விதமாகவே அவளுக்கு எடுத்துரைத்தான்.

அன்றைக்கு விடவும் இன்றைக்கு அவன் நிலை நன்றாகப் புரிந்ததில் அவளும் மறுத்து எதுவும் சொல்லப்போகவில்லை. மௌனமாகவே அவனிடமிருந்து அவள் விலகப்போக, அவள் இன்னும் தன்னை விளங்கிக்கொள்ளவில்லையோ என்றெண்ணி, “வஞ்சிமா! ஒரு குறை இல்லாம அவரப் பாக்கிற கடமை எனக்கு இருக்கெல்லாடி?” என்றான் கெஞ்சலாக.

“அப்ப என்னைப் பாக்கிற கடம உங்களுக்கு இல்லையா?” நிமிர்ந்து அவன் முகம் பார்த்து நிதானமாய் வினவினாள் அவள்.

ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டான் அவன். அவள் அவன் சொந்தம் என்கிறாளா? உள்ளே ஜில் என்று எதுவோ இனித்துக்கொண்டு ஓட, “அதான் அண்டைக்கு நான் கேட்டும் உன்னைப் பாக்க விடேல்லையே நீ!” என்றான் அவன் குறை சொல்வதுபோல்.

அவள் கேள்வியின் பொருளையே மாற்றியவனை முறைப்புடன் அவள் பார்க்க, “இனியாவது உன்னைப் பாக்கட்டா? உனக்கு ஓகேயா?” என்றான் கிசுகிசுப்பாக.

தொடரும்…


சைட் கொஞ்சம் வேலை நடந்தது. அதுதான் ஏனோ மனம் தள்ளாடுதே போட இல்லை. நாளைல இருந்து போடுறேன்.
Enna sonnalum...enna pannalum Vanji gethu.... loved it 👍 👌👏❤💃
 

Kameswari

Member
ஆர்டர் போடலாமா? பார்க்கட்டா? இதெல்லாம் தான் 18+ ஆ நிதா? 🤣🤣🤣

இதுல பிரபாகரன் வேற ஏதோ வில்லங்கமா நினைச்சு வந்த வழியே ஓடுறார் 😁😁

இந்த சக்திவேல் ஐயாவுக்கு வஞ்சி பொறுப்புல இருந்த வரை தையல்நாயகி உள்ளே போக முடியாம இருந்துச்சு... ஆனா இப்போ போய் அவளோட தொழில் ரகசியங்களை பார்க்க போயிருக்கார் போல... 🧐

ஆனா வஞ்சி தனக்குள்ள ரொம்ப போராடுறா... 😔 இதுல பாலகுமாரன் வேற ஜானகி பக்கத்துல இல்லைன்னாதான் வஞ்சியை பார்ப்பாராம் 😏 ஆக, இவர் குமாரனாக இருந்தப்போ விளையாடின வினை தான் நம்ம வஞ்சி போல 🙄 (விளையாட்டை சந்தோசமா நடத்துறவங்க வினையை நேருக்கு நேர் பார்க்கும்போது...😢 ஒண்ணும் சொல்றதுக்கில்லைங்க 🙄)

நிதா ❤ சீக்கிரமா வஞ்சிக்கு உண்மையை தெரியப்படுத்துங்க. பாவம் பிள்ளை! எவ்ளோ மன உளைச்சல்! அதையெல்லாம் தனக்குள்ளேயே மறைச்சு நடமாடுறது எல்லாம் எவ்ளோ வலி தெரியுமா? 😢

உண்மை தெரிஞ்சு அவளோட இந்த மன உளைச்சலை, அழுத்தத்தை சம்பந்தப்பட்டவங்க எல்லார் மேலேயும் கொட்டிட்டா சரியாகிடுவா ❤


இதுவரைக்கும் உங்க கதைகள் எல்லாமே படிச்சிட்டேன். ஆனா, கமெண்ட்...🧐 அதுவும் இவ்ளோ பெரிய பெரிய கமெண்ட் குடுக்கிறது இதுதான் முதல் தடவை 😍 நீங்க என்னை நிறைய எழுத வைக்கிறீங்க நிதா 🤣🤣
 
Top Bottom