• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 31

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அவர்கள் வீட்டில் நிம்மதி போய்விடுமோ? உயிர் போய்விடுமோ? என்று எத்தனை பயம்?. இதில் உண்மையை சொன்னது மட்டும் தான் வஞ்சி... இவர்களின் இன்றைய நிலைக்கு காரணம் ஜானகியின் வாய், துவேஷம்.


ஆனால் ஒரு உயிர் போகவும், ஒரு குடும்பம் குலையவும், காரணமாக இருந்தது மட்டுமில்லாமல் இரு உயிர்களை வார்தையால் கொன்று அவர்களின் நடத்தையையும் கேவலப்படுத்தியவர்களை இன்று அதே சக்திவேலரின் மகளே தான் தண்டித்து உள்ளார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
 

Goms

Active member
நிலன் நிலைமை கவலைக்கிடம்தான். என்ன செய்வது, உண்மை ஒரு நாள் வெளி வந்து தானே ஆகும். 😔

சொத்து ஆசை கொண்டு பிரச்சனையை கொண்டு வந்தது ஜானகி, சொல்லச் சொல்லக் கேட்காமல் எல்லோரையும் சொற்களால் கூறு போட்டது ஜானகி, கணவனையும், தந்தையையும் மிகக் கேவலமாக கேள்வி கேட்டு மூன்று பேரையும் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பியது ஜானகி, ஆனால் பழி மட்டும் இளவஞ்சி மேலையா?😡😡😡

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்😊. ஆனாலும் நிலன் உனக்காக, உன் பெற்றோருக்காக மட்டும் நாங்களும் பரிதாபப்படுறோம். 😔

தீபாவளிக்கு அட்வான்ஸ் ஹேப்பி தீபாவளி சொல்லலாம். நீங்க என்ன அட்வான்சா ஹேப்பி வீக் என்டு சொல்லிட்டீங்க, அப்போ நாளை எபிசோட்? 🤔 ஓகே திங்கள் தீபாவளி அன்று வந்து நிலனின் ஆர்டரை கன்பார்ம் பண்ணிட்டுப் போங்க😜 பையன் கொஞ்சம் தெம்பா மூன்று பேரையும் வீட்டுக்கு கூட்டி வரட்டும். 😜😂😂 நாங்களும் சந்தோஷமா தீபாவளி கொண்டாடுவோம் 😜🤣🤣🤣🤣🤣

மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நிதாமா 💖 💖 🧨🧨🎉🎉🎆🧨🧨
 
Top Bottom