அத்தியாயம் 7
இரத்தப்பசை இழந்த முகமும், செய்வதறியா நிலையும் என்று காட்டில் தொலைந்துபோன குழந்தையைப் போலக் குணாளனையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் இளவஞ்சி.
தன் வாழ் நாளில் எந்த நிலையில் அவளைப் பார்த்துவிடவே கூடாது என்று குணாளன் நினைத்திருந்தாரோ, அந்த நிலையில் அவளைப் பார்த்த மனிதர் துடித்துப்போனார். அவர் உள்ளத்தோடு சேர்ந்து உயிரும் அழுதது.
ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டு, யார் என்ன சொன்னாலும் நீ என் மகளம்மா என்று சொல்லி அழ நினைத்தார். இந்தப் பாழாய்ப் போன நரம்புத் தளர்ச்சி அவரின் துடிப்பிற்கு ஏற்ப அவரை இயங்க விட மறுத்தது.
தன்னோடு சேர்ந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட வேண்டும் என்று அவர் நினைத்த உண்மை, இப்படித் தன் மனைவியாலேயே வெளியில் வரும் என்று நினைக்கவே இல்லை.
அவளுக்குத் தெரிந்தது போதாமல் நிலன் வீட்டினருக்கும் தெரிந்துபோயிற்றே. இத்தனை வருடங்களாக இரகசியமாக இருந்த ஒன்று இனிப் பரகசியமாகிவிடும். அவர் சீராட்டிப் பாராட்டி வளர்த்த மகள் இனிப் பலர் வாயிலும் விழுந்து எழும்பப்போகிறாள். அதுவும் அந்தச் சக்திவேலர் ஒருவர் இதை அறிந்தால் போதுமே!
“அம்மாச்சி! அப்பாவ அப்பிடிப் பாக்காதீங்கோம்மா. ஆர் என்ன சொன்னாலும் நீ என்ர மகள்தானம்மா.” என்றார் கண்ணீரோடு.
அவர் என்னவோ நான் பெறாவிட்டாலும் நீ என் மகள்தான் என்று அடித்துச் சொல்வதாக நினைத்தார். அதுவே அவள் அவர் மகள் இல்லை என்று அவரும் சேர்ந்து உறுதிப்படுத்தியது போலாகிவிட அவள் நெஞ்சின் உள்ளே சுருக்கென்று ஆழமாய் எதுவோ பாய்ந்தது.
எப்போதும் எதிரில் நிற்பவர் தன்னை உணர்ந்துவிடவோ, தன் மனத்தில் ஓடுவதைக் கணித்துவிடவோ கூடாது என்பதில் மிகுந்த கவனமாய் இருப்பாள். கம்பீரம் அவளது கவசமென்றால் நிதானம் எப்போதும் அவளோடு கூடவே இருப்பது.
இன்றைய அவளின் கட்டுப்பாடு உடைந்ததற்கு காரணம், தன்னைத் துரத்துவது காணாமல் தன் தங்கையையும் வலை போட்டுச் சிக்க வைத்துவிட்டார்களே என்கிற சினமும், அவள் வாழ்க்கை சிக்கலில் மாட்டிவிடக் கூடாதே என்கிற பதற்றமும்தான்.
ஆனால், அவள் இவளின் தங்கையே இல்லையாம். இல்லை, அப்படிச் சொல்வது கூடத் தவறு! இவள் அந்த வீட்டின் பிள்ளையே இல்லையாம்.
உள்ளே உள்ளம் அழ நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டாள்.
நிலனால் அவளை அப்படிப் பார்க்கவே முடியவில்லை. அவனுக்கும் இது மாபெரும் அதிர்ச்சிதான். அதைவிடவும் அவளைச் சுற்றி அத்தனை பேர் இருந்தும் ஒற்றையாய் நிற்கிறவளைக் கண்டு அவன் இதயம் கண்ணீர் வடித்தது.
உனக்கு யார் உறவாய் இல்லாவிட்டால் என்ன, நான் இருக்கிறேன் என்று சொல்ல நினைத்தான். தன் கைகளுக்குள் வைத்து அவள் மனத்தின் காயத்தை ஆற்றத் துடித்தான். அத்தனை பேரின் முன்னாலும் அதைச் செய்ய முடியாமல் தன் தாய் தந்தையரைப் பார்த்தான்.
அவர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சிதான் என்று அவர்கள் முகங்களே சொல்லின. அதற்குமேல் எதைப் பற்றியும் யோசிக்காமல், “வஞ்சி!” என்றபடி அவளிடம் வந்தான்.
அவ்வளவு நேரமாக நிமிர்ந்து நின்று அவர்களைப் பந்தாடிக்கொண்டிருந்தவள் வார்த்தைகள் அற்ற ஊமையாக அவனைப் பார்த்தாள். அப்போதுதான் அவன், அவர்கள் இங்கே வந்திருக்கும் காரணம், தன் நிலை, தான் இந்த இடத்தில் அதிகப்படி என்பதெல்லாம் உறைத்தன.
ஆழ மூச்சு ஒன்றை எடுத்து விட்டுவிட்டு, “நான் கதைச்ச எல்லாத்துக்கும் சொறி அங்கிள். சுவாதிய என்ர தங்கச்சி எண்டு நினைச்சுத்தான் கதைச்சனான். ஆனா, எனக்கும் இந்த வீட்டுக்கும் உறவே இல்லை எண்டு இப்பதான் தெரிய வந்திருக்கு. அதால என்ன எண்டாலும் அவேயலோடயே கதச்சு முடிவெடுங்கோ.” என்று குணாளன் ஜெயந்தியைக் காட்டிச் சொல்லிவிட்டு நடந்தவள் நின்று, “சொறி மிதுன்!” என்றுவிட்டுப் போகவும் மிதுனுக்கே அவளைக் கண்டு பரிதாபமாயிற்று.
குணாளன் உடைந்தே போனார். “அம்மாச்சி இளவஞ்சி!” தன்னை மறந்து அவளைத் தடுக்கப் போனவர் தடுமாறி விழப்போக, ஓடிப்போய் அவரைப் பற்றி அமர்த்தினான் நிலன்.
“நீங்க இருங்க அங்கிள். நான் பாக்கிறன்.” என்று அவன் வெளியே வந்து பார்ப்பதற்கிடையில் அங்கே வந்த விசாகனோடு காரில் புறப்பட்டிருந்தாள் இளவஞ்சி.
இன்னுமே அவள் உள்ளம், தான் அறிந்துகொண்ட உண்மையை ஜீரணிக்க முடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தது. நெஞ்செல்லாம் விண்டு விண்டு வலித்தது.
எத்தனை சாதாரணமாக ஆரம்பித்த நாள், எவ்வளவு பெரிய அதிர்ச்சிகளை எல்லாம் அவள் தலையில் கொட்டிவிட்டது?
அவள் சரியில்லை என்று காரில் ஏறுகையிலேயே விசாகன் கவனித்திருந்தான். அவளாக ஏதாவது சொல்வாள் என்று அவன் காத்திருக்க, அவள் இங்கேயே இல்லை என்பதை அதன் பிறகுதான் கண்டுகொண்டான்.
என்னாயிற்று என்று எப்படிக் கேட்பது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க, “விசாகன், உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? இந்தப் பூமிப் பந்தே எங்களுக்குச் சொந்தமில்லையாம். அப்ப சொந்தமெண்டு நாங்க நினைச்சுக்கொண்டு இருக்கிறதெல்லாம்?” என்றாள் அவள் திடீரெண்டு.
“மேம்!”
“ஆரை நம்புறது, ஆரைச் சொந்தம் எண்டு நினைக்கிறது எண்டு ஒண்டுமே விளங்கேல்ல விசாகன்.” என்றாள் விரக்தியோடு.
இதற்கு என்ன சொல்வது என்று தெரியாது அவளைப் பார்த்தான் விசாகன்.
இதற்குள் தொழிற்சாலை வந்திருந்தது. காரிலிருந்து இறங்கியவள் ஒரு கணம் அப்படியே நின்றாள்.
அங்கிருந்து ஓடி வந்துவிட்டாள். இங்கு மட்டும் அவளுக்கு உரிமை உண்டா என்ன? அவர்களுக்குச் சொந்தமான சொத்து சுகத்தை எல்லாம் ஆண்டு அனுபவிக்கிறவள் அவளாமே!
இப்படியே எங்காவது போய்விடலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். அப்படியே போவதாக இருந்தால் கூட அத்தனையையும் முறையாக அவர்களிடம் ஒப்படைக்காமல் முடியாதே!
தன்னைச் சமாளித்துக்கொண்டு உள்ளே நடந்தாள்.
எப்போதும்போல் அவளை வரவேற்க வாசலிலேயே புன்னகை முகமாகக் காத்திருந்தார் தையல்நாயகி. அவரைப் பார்த்த நொடியில் முற்றாக உடைந்துவிடப் பார்த்தாள் இளவஞ்சி.
‘என்னச் சுத்தி என்ன நடக்குது அப்பம்மா? நீங்க கூட இதைப் பற்றி ஒரு வார்த்த சொல்லேல்லையே?’அவள் உள்ளம் அழுதது.
‘உங்கள நான் அப்பம்மா எண்டு சொல்லக் கூடாதோ? என்னை வளத்த அம்மா எண்டு சொல்லோணுமோ?’
அதற்குமேல் அங்கேயே நின்றாள் நிச்சயமாக உடைந்துவிடுவோம் என்று தெரிய, அவளின் அலுவலக அறைக்குச் சென்று கைப்பையை வைத்துவிட்டு, தொழிற்சாலையினுள் விடுவிடு என்று நடக்க ஆரம்பித்தாள்.
உள்ளத்தின் போராட்டத்துக்கு ஏதோ ஒரு வடிகால் அவளுக்குத் தேவையாய் இருந்தது.
இதுவரை காலமும் அவள் தையல்நாயகியின் பேத்தி. குணாளன் ஜெயந்தியின் மூத்த மகள். சுவாதி, சுதாகரின் தமக்கை. தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலையின் முதலாளி. மதிப்பும் மரியாதையும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்தவள்.
இன்றானால் இது எதுவும் அவள் அடையாளங்கள் இல்லையாம். அனாதையாம். எடுத்து வளர்த்தார்களாம். எல்லோரும் அவளைத் தையல்நாயகியின் வார்ப்பு என்பார்களே. அது பொய்யா என்ன?
அவள் நடையின் வேகம் கூடிற்று. தன்னைத் துரத்தி துரத்தி வதைக்கும் இந்த எண்ணங்களிலிருந்து தப்பிக்க நினைத்தாள். முடியவேயில்லை.
இத்தனை வருடத்து வாழ்க்கையில் பெரிதாக அவள் மேடு பள்ளங்களைப் பார்த்ததில்லை. ஆனால், தொழிலில் வயதுக்கு மீறிய சவால்களைச் சந்தித்தவள். அத்தனையையும் நல்ல முறையில் கடந்து வந்தவளும் கூட.
ஆனால் இன்று அவளுக்குக் கிடைத்த அதிர்ச்சி அவை அத்தனையையும் மீறியதாய் இருந்தது. கோபுரத்தின் உச்சியில் இருந்தவளைப் பிடித்து யாரோ அதலபாதாளத்தில் தள்ளிவிட்டாற்போல் வலித்தது.
அவளைப் பெற்றவர்கள் யார்? அவளை ஏன் தூக்கி எறிந்தார்கள்? அவள் எப்படி இவர்கள் கையில் வந்தாள்? ஓராயிரம் கேள்விகள் அவளைச் சுற்றிவளைத்தன. அத்தனைக்குமான பதில்களையும் சொல்ல வேண்டியவர் குணாளன். ஆனால், அவளால் அவர் முகம் பார்த்து இதையெல்லாம் கேட்க முடியும் போல் இல்லை.
அங்கிருந்த யாரினதும் இரக்கப் பார்வையையோ, பரிதாபப் பார்வையையோ எதிர்கொள்ள இயலாமல்தான் மன்னிப்பைக் கேட்டுவிட்டு ஓடி வந்திருந்தாள்.
ஆனால், அவளைக் கொள்ளும் இந்தக் கழிவிரக்கத்தை என்ன செய்ய?
இன்னும் வேகமாக நடந்தாள். எதிர்ப்பட்ட ஊழியர்கள் மிகுந்த பணிவுடன் நடந்துகொண்டனர்.
இத்தனை நாள்களும் அதையெல்லாம் அன்போடு ஏற்றுக்கொண்டவளின் உள்ளம் இன்று, இதெல்லாம் உனக்கானது இல்லை, உனக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை, நீயும் இவர்களில் ஒருத்தி என்று அறைந்து சொன்னது.
அவள் யாரில் ஒருத்தியாக இருக்கிறாள் என்பது அவளுக்கு ஒரு விடயமே இல்லை. ஆனால், இத்தனை நாள்களும் என்னுடையது என்கிற சொந்தத்தோடும் உரிமையோடும் நடந்த இடத்தில் இன்று கால்கள் கூசின.
சொல்லி ஆறுவதற்கோ, தோள் சாய்வதற்கோ யாருமே இல்லாமல் தனித்தே நிற்கிறாள். அப்படி யாரிடமும் சொல்வதோ, ஆறுதல் தேடுவதோ அவளுக்குப் பழக்கமும் இல்லாத ஒன்றாயிற்றே.
தனக்குள்ளேயே விழுங்கிக்கொள்ள முயன்றாள்.
*****
இரத்தப்பசை இழந்த முகமும், செய்வதறியா நிலையும் என்று காட்டில் தொலைந்துபோன குழந்தையைப் போலக் குணாளனையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் இளவஞ்சி.
தன் வாழ் நாளில் எந்த நிலையில் அவளைப் பார்த்துவிடவே கூடாது என்று குணாளன் நினைத்திருந்தாரோ, அந்த நிலையில் அவளைப் பார்த்த மனிதர் துடித்துப்போனார். அவர் உள்ளத்தோடு சேர்ந்து உயிரும் அழுதது.
ஓடிப்போய் அவளைக் கட்டிக்கொண்டு, யார் என்ன சொன்னாலும் நீ என் மகளம்மா என்று சொல்லி அழ நினைத்தார். இந்தப் பாழாய்ப் போன நரம்புத் தளர்ச்சி அவரின் துடிப்பிற்கு ஏற்ப அவரை இயங்க விட மறுத்தது.
தன்னோடு சேர்ந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட வேண்டும் என்று அவர் நினைத்த உண்மை, இப்படித் தன் மனைவியாலேயே வெளியில் வரும் என்று நினைக்கவே இல்லை.
அவளுக்குத் தெரிந்தது போதாமல் நிலன் வீட்டினருக்கும் தெரிந்துபோயிற்றே. இத்தனை வருடங்களாக இரகசியமாக இருந்த ஒன்று இனிப் பரகசியமாகிவிடும். அவர் சீராட்டிப் பாராட்டி வளர்த்த மகள் இனிப் பலர் வாயிலும் விழுந்து எழும்பப்போகிறாள். அதுவும் அந்தச் சக்திவேலர் ஒருவர் இதை அறிந்தால் போதுமே!
“அம்மாச்சி! அப்பாவ அப்பிடிப் பாக்காதீங்கோம்மா. ஆர் என்ன சொன்னாலும் நீ என்ர மகள்தானம்மா.” என்றார் கண்ணீரோடு.
அவர் என்னவோ நான் பெறாவிட்டாலும் நீ என் மகள்தான் என்று அடித்துச் சொல்வதாக நினைத்தார். அதுவே அவள் அவர் மகள் இல்லை என்று அவரும் சேர்ந்து உறுதிப்படுத்தியது போலாகிவிட அவள் நெஞ்சின் உள்ளே சுருக்கென்று ஆழமாய் எதுவோ பாய்ந்தது.
எப்போதும் எதிரில் நிற்பவர் தன்னை உணர்ந்துவிடவோ, தன் மனத்தில் ஓடுவதைக் கணித்துவிடவோ கூடாது என்பதில் மிகுந்த கவனமாய் இருப்பாள். கம்பீரம் அவளது கவசமென்றால் நிதானம் எப்போதும் அவளோடு கூடவே இருப்பது.
இன்றைய அவளின் கட்டுப்பாடு உடைந்ததற்கு காரணம், தன்னைத் துரத்துவது காணாமல் தன் தங்கையையும் வலை போட்டுச் சிக்க வைத்துவிட்டார்களே என்கிற சினமும், அவள் வாழ்க்கை சிக்கலில் மாட்டிவிடக் கூடாதே என்கிற பதற்றமும்தான்.
ஆனால், அவள் இவளின் தங்கையே இல்லையாம். இல்லை, அப்படிச் சொல்வது கூடத் தவறு! இவள் அந்த வீட்டின் பிள்ளையே இல்லையாம்.
உள்ளே உள்ளம் அழ நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டாள்.
நிலனால் அவளை அப்படிப் பார்க்கவே முடியவில்லை. அவனுக்கும் இது மாபெரும் அதிர்ச்சிதான். அதைவிடவும் அவளைச் சுற்றி அத்தனை பேர் இருந்தும் ஒற்றையாய் நிற்கிறவளைக் கண்டு அவன் இதயம் கண்ணீர் வடித்தது.
உனக்கு யார் உறவாய் இல்லாவிட்டால் என்ன, நான் இருக்கிறேன் என்று சொல்ல நினைத்தான். தன் கைகளுக்குள் வைத்து அவள் மனத்தின் காயத்தை ஆற்றத் துடித்தான். அத்தனை பேரின் முன்னாலும் அதைச் செய்ய முடியாமல் தன் தாய் தந்தையரைப் பார்த்தான்.
அவர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சிதான் என்று அவர்கள் முகங்களே சொல்லின. அதற்குமேல் எதைப் பற்றியும் யோசிக்காமல், “வஞ்சி!” என்றபடி அவளிடம் வந்தான்.
அவ்வளவு நேரமாக நிமிர்ந்து நின்று அவர்களைப் பந்தாடிக்கொண்டிருந்தவள் வார்த்தைகள் அற்ற ஊமையாக அவனைப் பார்த்தாள். அப்போதுதான் அவன், அவர்கள் இங்கே வந்திருக்கும் காரணம், தன் நிலை, தான் இந்த இடத்தில் அதிகப்படி என்பதெல்லாம் உறைத்தன.
ஆழ மூச்சு ஒன்றை எடுத்து விட்டுவிட்டு, “நான் கதைச்ச எல்லாத்துக்கும் சொறி அங்கிள். சுவாதிய என்ர தங்கச்சி எண்டு நினைச்சுத்தான் கதைச்சனான். ஆனா, எனக்கும் இந்த வீட்டுக்கும் உறவே இல்லை எண்டு இப்பதான் தெரிய வந்திருக்கு. அதால என்ன எண்டாலும் அவேயலோடயே கதச்சு முடிவெடுங்கோ.” என்று குணாளன் ஜெயந்தியைக் காட்டிச் சொல்லிவிட்டு நடந்தவள் நின்று, “சொறி மிதுன்!” என்றுவிட்டுப் போகவும் மிதுனுக்கே அவளைக் கண்டு பரிதாபமாயிற்று.
குணாளன் உடைந்தே போனார். “அம்மாச்சி இளவஞ்சி!” தன்னை மறந்து அவளைத் தடுக்கப் போனவர் தடுமாறி விழப்போக, ஓடிப்போய் அவரைப் பற்றி அமர்த்தினான் நிலன்.
“நீங்க இருங்க அங்கிள். நான் பாக்கிறன்.” என்று அவன் வெளியே வந்து பார்ப்பதற்கிடையில் அங்கே வந்த விசாகனோடு காரில் புறப்பட்டிருந்தாள் இளவஞ்சி.
இன்னுமே அவள் உள்ளம், தான் அறிந்துகொண்ட உண்மையை ஜீரணிக்க முடியாமல் அல்லாடிக்கொண்டிருந்தது. நெஞ்செல்லாம் விண்டு விண்டு வலித்தது.
எத்தனை சாதாரணமாக ஆரம்பித்த நாள், எவ்வளவு பெரிய அதிர்ச்சிகளை எல்லாம் அவள் தலையில் கொட்டிவிட்டது?
அவள் சரியில்லை என்று காரில் ஏறுகையிலேயே விசாகன் கவனித்திருந்தான். அவளாக ஏதாவது சொல்வாள் என்று அவன் காத்திருக்க, அவள் இங்கேயே இல்லை என்பதை அதன் பிறகுதான் கண்டுகொண்டான்.
என்னாயிற்று என்று எப்படிக் கேட்பது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க, “விசாகன், உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? இந்தப் பூமிப் பந்தே எங்களுக்குச் சொந்தமில்லையாம். அப்ப சொந்தமெண்டு நாங்க நினைச்சுக்கொண்டு இருக்கிறதெல்லாம்?” என்றாள் அவள் திடீரெண்டு.
“மேம்!”
“ஆரை நம்புறது, ஆரைச் சொந்தம் எண்டு நினைக்கிறது எண்டு ஒண்டுமே விளங்கேல்ல விசாகன்.” என்றாள் விரக்தியோடு.
இதற்கு என்ன சொல்வது என்று தெரியாது அவளைப் பார்த்தான் விசாகன்.
இதற்குள் தொழிற்சாலை வந்திருந்தது. காரிலிருந்து இறங்கியவள் ஒரு கணம் அப்படியே நின்றாள்.
அங்கிருந்து ஓடி வந்துவிட்டாள். இங்கு மட்டும் அவளுக்கு உரிமை உண்டா என்ன? அவர்களுக்குச் சொந்தமான சொத்து சுகத்தை எல்லாம் ஆண்டு அனுபவிக்கிறவள் அவளாமே!
இப்படியே எங்காவது போய்விடலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். அப்படியே போவதாக இருந்தால் கூட அத்தனையையும் முறையாக அவர்களிடம் ஒப்படைக்காமல் முடியாதே!
தன்னைச் சமாளித்துக்கொண்டு உள்ளே நடந்தாள்.
எப்போதும்போல் அவளை வரவேற்க வாசலிலேயே புன்னகை முகமாகக் காத்திருந்தார் தையல்நாயகி. அவரைப் பார்த்த நொடியில் முற்றாக உடைந்துவிடப் பார்த்தாள் இளவஞ்சி.
‘என்னச் சுத்தி என்ன நடக்குது அப்பம்மா? நீங்க கூட இதைப் பற்றி ஒரு வார்த்த சொல்லேல்லையே?’அவள் உள்ளம் அழுதது.
‘உங்கள நான் அப்பம்மா எண்டு சொல்லக் கூடாதோ? என்னை வளத்த அம்மா எண்டு சொல்லோணுமோ?’
அதற்குமேல் அங்கேயே நின்றாள் நிச்சயமாக உடைந்துவிடுவோம் என்று தெரிய, அவளின் அலுவலக அறைக்குச் சென்று கைப்பையை வைத்துவிட்டு, தொழிற்சாலையினுள் விடுவிடு என்று நடக்க ஆரம்பித்தாள்.
உள்ளத்தின் போராட்டத்துக்கு ஏதோ ஒரு வடிகால் அவளுக்குத் தேவையாய் இருந்தது.
இதுவரை காலமும் அவள் தையல்நாயகியின் பேத்தி. குணாளன் ஜெயந்தியின் மூத்த மகள். சுவாதி, சுதாகரின் தமக்கை. தையல்நாயகி ஆடைத் தொழிற்சாலையின் முதலாளி. மதிப்பும் மரியாதையும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்தவள்.
இன்றானால் இது எதுவும் அவள் அடையாளங்கள் இல்லையாம். அனாதையாம். எடுத்து வளர்த்தார்களாம். எல்லோரும் அவளைத் தையல்நாயகியின் வார்ப்பு என்பார்களே. அது பொய்யா என்ன?
அவள் நடையின் வேகம் கூடிற்று. தன்னைத் துரத்தி துரத்தி வதைக்கும் இந்த எண்ணங்களிலிருந்து தப்பிக்க நினைத்தாள். முடியவேயில்லை.
இத்தனை வருடத்து வாழ்க்கையில் பெரிதாக அவள் மேடு பள்ளங்களைப் பார்த்ததில்லை. ஆனால், தொழிலில் வயதுக்கு மீறிய சவால்களைச் சந்தித்தவள். அத்தனையையும் நல்ல முறையில் கடந்து வந்தவளும் கூட.
ஆனால் இன்று அவளுக்குக் கிடைத்த அதிர்ச்சி அவை அத்தனையையும் மீறியதாய் இருந்தது. கோபுரத்தின் உச்சியில் இருந்தவளைப் பிடித்து யாரோ அதலபாதாளத்தில் தள்ளிவிட்டாற்போல் வலித்தது.
அவளைப் பெற்றவர்கள் யார்? அவளை ஏன் தூக்கி எறிந்தார்கள்? அவள் எப்படி இவர்கள் கையில் வந்தாள்? ஓராயிரம் கேள்விகள் அவளைச் சுற்றிவளைத்தன. அத்தனைக்குமான பதில்களையும் சொல்ல வேண்டியவர் குணாளன். ஆனால், அவளால் அவர் முகம் பார்த்து இதையெல்லாம் கேட்க முடியும் போல் இல்லை.
அங்கிருந்த யாரினதும் இரக்கப் பார்வையையோ, பரிதாபப் பார்வையையோ எதிர்கொள்ள இயலாமல்தான் மன்னிப்பைக் கேட்டுவிட்டு ஓடி வந்திருந்தாள்.
ஆனால், அவளைக் கொள்ளும் இந்தக் கழிவிரக்கத்தை என்ன செய்ய?
இன்னும் வேகமாக நடந்தாள். எதிர்ப்பட்ட ஊழியர்கள் மிகுந்த பணிவுடன் நடந்துகொண்டனர்.
இத்தனை நாள்களும் அதையெல்லாம் அன்போடு ஏற்றுக்கொண்டவளின் உள்ளம் இன்று, இதெல்லாம் உனக்கானது இல்லை, உனக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை, நீயும் இவர்களில் ஒருத்தி என்று அறைந்து சொன்னது.
அவள் யாரில் ஒருத்தியாக இருக்கிறாள் என்பது அவளுக்கு ஒரு விடயமே இல்லை. ஆனால், இத்தனை நாள்களும் என்னுடையது என்கிற சொந்தத்தோடும் உரிமையோடும் நடந்த இடத்தில் இன்று கால்கள் கூசின.
சொல்லி ஆறுவதற்கோ, தோள் சாய்வதற்கோ யாருமே இல்லாமல் தனித்தே நிற்கிறாள். அப்படி யாரிடமும் சொல்வதோ, ஆறுதல் தேடுவதோ அவளுக்குப் பழக்கமும் இல்லாத ஒன்றாயிற்றே.
தனக்குள்ளேயே விழுங்கிக்கொள்ள முயன்றாள்.
*****
Last edited: