அத்தியாயம் 19
“என்ன சொன்னவர் சுகிர்தன்?” செண்டரை விட்டு வெளியே வந்ததுமே கேட்டாள் ஆரணி.
“லோனுக்குத்தான் வாங்கினவராம். கொஞ்சம் முதல் குடுக்கவேணுமாம். காணி வீடு சொந்தமா இருந்ததால அதைக்காட்டி எடுத்திருக்கிறார் போல.” என்று விளக்கம் சொன்னான் அவன்.
“நாங்களும் வாங்குவமா? எங்கட வீடும் சொந்தக்காணில தானே இருக்கு.”
ஆரணியின் கேள்வியில் அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன்.
“வாங்கி?”
“ட்ரிப் ஓடலாம் தானேடா.”
நடந்தபடி சற்றுச் சிந்தித்துவிட்டு அவன் மறுத்துத் தலையசைத்தான்.
“அப்பிடி வேன் வாங்கினா ரெண்டு வேலையையும் விடவேண்டி வரும் ஆரா. அப்பிடி விட்டா அந்த ரெண்டு சம்பளமும் வருமானமா இதுல வருமா தெரியாது. லோன் கட்டவேணும். வேனுக்கு எண்டு மாதா மாதம் ஏதோ ஒரு செலவு வரும். வாகனம், ஒரு நேரம் உழைச்சுத்தரும். இன்னொரு நேரம் அதுக்கும் மேலால கொண்டுபோயிடும். முதல் எங்களிட்ட கொஞ்சமாவது முதல் வேணும். அவர் அந்த வேன் செக்கண்ட் ஹாண்ட் தான் வாங்கினவராம். அதுக்கே நாற்பது லட்சம் முடிஞ்சதாம்.” நிகழ்காலச் சிக்கல்களை எடுத்துரைத்தான் அவன்.
“இப்ப வாற நாலு ஐந்து ட்ரிப்பை வச்சு மாத வருமானம் கிடைக்கும் எண்டு நம்புறதே முட்டாள் தனம். மெயினா ஒரு உழைப்பை வச்சுக்கொண்டு சைட் பிஸ்னஸ் மாதிரி அதை வச்சிருக்கிறது வேற. அதையே மெயினா செய்றது வேற.” என்று மேலும் எடுத்துச் சொன்னான் அவன்.
எல்லாம் சரிதான். என்றாலும்.. ராஜேந்திரனிடம் இருந்து அவனை வெளியே கொண்டுவருவதற்கு இது ஒன்றுதான் நல்ல வழியாகப் பட்டது அவளுக்கு.
“சுகிர்தனும் எங்களை மாதிரித் தானே நிக்கி. அந்த வேனை வச்சுத்தான் அவரும் நீ சொன்ன செலவு எல்லாம் பாக்கிறார். அவரால முடியும் எண்டேக்க ஏன் எங்களால முடியாது? எங்களுக்கு நானும் உழைக்கிறன் தானே. குடும்பச் செலவை என்ர சம்பளம் பாக்கும். உனக்கு நேரம் இல்லாததால தான் நைட் ட்ரிப் மட்டும் போறாய். இதுவே வேன் இருந்தா எந்த ட்ரிப் வந்தாலும் போகலாம். எப்ப வந்தாலும் போகலாம். சுகிர்தன் மாதிரி கார்மெண்ட்ஸ் ஹயர் ஓடலாம்.” அவளுக்கு ஏனோ அந்த ஐடியாவை அப்படியே விட்டுவிட மனமேயில்லை.
“நீ சொல்லுறது எல்லாம் சரி எண்டு வச்சாலும் முதலுக்கு எங்க போறது?” என்றான் அவன்.
அந்தக் கேள்விக்குத்தான் அவளிடமும் பதில் இல்லை. வாடிவிட்ட முகத்தோடு நின்றவளைப் பாக்கப் பாவமாக இருந்தது அவனுக்கு. “ஒண்டுக்கும் கவலைப்படாத. கொஞ்ச காலம் போகட்டும். என்ன செய்றது எண்டு பாப்பம்.” என்று தேற்றிவிட்டு அவளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.
“பள்ளிமுனைக்கு விடு நிக்கி!” எப்போதெல்லாம் மனது சரியில்லாமல் போகிறதோ அப்போதெல்லாம் அவள் தேடுவது அந்த இடத்தைத்தான். “உன்ர மனதை என்ன கிடந்து அரிக்குது?” இதமான குரலில் வினவினான் அவன்.
“தெரியாடா. நினைக்கிற வேகத்துக்கு முன்னுக்கு வர ஏலாம இருக்கே எண்டு இருக்கு. ஒரு வழி கிடைச்சிருக்கு; அதைப் பிடிச்சுக்கொண்டு போவம் எண்டு பாத்தா ஆயிரம் தடை!” மனச்சோர்வுடன் சொன்னாள் அவள்.
“அப்பிடி ஏன் நினைக்கிறாய்? இப்பிடி யோசிச்சு பார். நாங்க கலியாணம் கட்டேக்க எங்களிட்ட என்ன இருந்தது? ஒண்டுமே இல்ல. ஒரு வேலை கூட இல்ல. ஆனா இண்டைக்கு, ஒண்டுக்கு மூண்டு வேலை கைல இருக்கு. அதோட சைட் பிஸ்னஸ்ஸா ஹயர் ஓடுறன். சீட்டுப் போட்டிருக்கிறாய். குட்டியா ஒரு சேமிப்புச் செய்றாய். எங்களுக்குத் திருமணம் நடந்து ஒரு வருசம் இன்னும் முடியேல்ல. அதுக்குள்ள எவ்வளவு பெரிய முன்னேற்றம் சொல்லு?” என்றான் அவன்.
அவள் முகம் பட்டென்று மலர்ந்தது. “ஓம் என்னடா! இத நான் யோசிக்க இல்லையே. விடு மச்சி! நாங்க சாதிக்கிறம்! நினைச்சதை செய்து காட்டுறோம்! ஓகே?” என்றாள் உற்சாகமாய்.
“டன்!” என்றவனும் வண்டியை மன்னாரின் பள்ளிமுனை நோக்கி விரட்டினான்.
மனதிலிருந்த பாரம் அகன்றுபோயிருந்ததில் பின்னால் அமர்ந்திருந்த ஆரணி, சிறகில்லாமல் வானில் பறந்துகொண்டிருந்தாள்.
“லவ் பண்ணின காலத்துக்கே போனமாதிரி இருக்கு மச்சி!”
“என்ன சொன்னவர் சுகிர்தன்?” செண்டரை விட்டு வெளியே வந்ததுமே கேட்டாள் ஆரணி.
“லோனுக்குத்தான் வாங்கினவராம். கொஞ்சம் முதல் குடுக்கவேணுமாம். காணி வீடு சொந்தமா இருந்ததால அதைக்காட்டி எடுத்திருக்கிறார் போல.” என்று விளக்கம் சொன்னான் அவன்.
“நாங்களும் வாங்குவமா? எங்கட வீடும் சொந்தக்காணில தானே இருக்கு.”
ஆரணியின் கேள்வியில் அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன்.
“வாங்கி?”
“ட்ரிப் ஓடலாம் தானேடா.”
நடந்தபடி சற்றுச் சிந்தித்துவிட்டு அவன் மறுத்துத் தலையசைத்தான்.
“அப்பிடி வேன் வாங்கினா ரெண்டு வேலையையும் விடவேண்டி வரும் ஆரா. அப்பிடி விட்டா அந்த ரெண்டு சம்பளமும் வருமானமா இதுல வருமா தெரியாது. லோன் கட்டவேணும். வேனுக்கு எண்டு மாதா மாதம் ஏதோ ஒரு செலவு வரும். வாகனம், ஒரு நேரம் உழைச்சுத்தரும். இன்னொரு நேரம் அதுக்கும் மேலால கொண்டுபோயிடும். முதல் எங்களிட்ட கொஞ்சமாவது முதல் வேணும். அவர் அந்த வேன் செக்கண்ட் ஹாண்ட் தான் வாங்கினவராம். அதுக்கே நாற்பது லட்சம் முடிஞ்சதாம்.” நிகழ்காலச் சிக்கல்களை எடுத்துரைத்தான் அவன்.
“இப்ப வாற நாலு ஐந்து ட்ரிப்பை வச்சு மாத வருமானம் கிடைக்கும் எண்டு நம்புறதே முட்டாள் தனம். மெயினா ஒரு உழைப்பை வச்சுக்கொண்டு சைட் பிஸ்னஸ் மாதிரி அதை வச்சிருக்கிறது வேற. அதையே மெயினா செய்றது வேற.” என்று மேலும் எடுத்துச் சொன்னான் அவன்.
எல்லாம் சரிதான். என்றாலும்.. ராஜேந்திரனிடம் இருந்து அவனை வெளியே கொண்டுவருவதற்கு இது ஒன்றுதான் நல்ல வழியாகப் பட்டது அவளுக்கு.
“சுகிர்தனும் எங்களை மாதிரித் தானே நிக்கி. அந்த வேனை வச்சுத்தான் அவரும் நீ சொன்ன செலவு எல்லாம் பாக்கிறார். அவரால முடியும் எண்டேக்க ஏன் எங்களால முடியாது? எங்களுக்கு நானும் உழைக்கிறன் தானே. குடும்பச் செலவை என்ர சம்பளம் பாக்கும். உனக்கு நேரம் இல்லாததால தான் நைட் ட்ரிப் மட்டும் போறாய். இதுவே வேன் இருந்தா எந்த ட்ரிப் வந்தாலும் போகலாம். எப்ப வந்தாலும் போகலாம். சுகிர்தன் மாதிரி கார்மெண்ட்ஸ் ஹயர் ஓடலாம்.” அவளுக்கு ஏனோ அந்த ஐடியாவை அப்படியே விட்டுவிட மனமேயில்லை.
“நீ சொல்லுறது எல்லாம் சரி எண்டு வச்சாலும் முதலுக்கு எங்க போறது?” என்றான் அவன்.
அந்தக் கேள்விக்குத்தான் அவளிடமும் பதில் இல்லை. வாடிவிட்ட முகத்தோடு நின்றவளைப் பாக்கப் பாவமாக இருந்தது அவனுக்கு. “ஒண்டுக்கும் கவலைப்படாத. கொஞ்ச காலம் போகட்டும். என்ன செய்றது எண்டு பாப்பம்.” என்று தேற்றிவிட்டு அவளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.
“பள்ளிமுனைக்கு விடு நிக்கி!” எப்போதெல்லாம் மனது சரியில்லாமல் போகிறதோ அப்போதெல்லாம் அவள் தேடுவது அந்த இடத்தைத்தான். “உன்ர மனதை என்ன கிடந்து அரிக்குது?” இதமான குரலில் வினவினான் அவன்.
“தெரியாடா. நினைக்கிற வேகத்துக்கு முன்னுக்கு வர ஏலாம இருக்கே எண்டு இருக்கு. ஒரு வழி கிடைச்சிருக்கு; அதைப் பிடிச்சுக்கொண்டு போவம் எண்டு பாத்தா ஆயிரம் தடை!” மனச்சோர்வுடன் சொன்னாள் அவள்.
“அப்பிடி ஏன் நினைக்கிறாய்? இப்பிடி யோசிச்சு பார். நாங்க கலியாணம் கட்டேக்க எங்களிட்ட என்ன இருந்தது? ஒண்டுமே இல்ல. ஒரு வேலை கூட இல்ல. ஆனா இண்டைக்கு, ஒண்டுக்கு மூண்டு வேலை கைல இருக்கு. அதோட சைட் பிஸ்னஸ்ஸா ஹயர் ஓடுறன். சீட்டுப் போட்டிருக்கிறாய். குட்டியா ஒரு சேமிப்புச் செய்றாய். எங்களுக்குத் திருமணம் நடந்து ஒரு வருசம் இன்னும் முடியேல்ல. அதுக்குள்ள எவ்வளவு பெரிய முன்னேற்றம் சொல்லு?” என்றான் அவன்.
அவள் முகம் பட்டென்று மலர்ந்தது. “ஓம் என்னடா! இத நான் யோசிக்க இல்லையே. விடு மச்சி! நாங்க சாதிக்கிறம்! நினைச்சதை செய்து காட்டுறோம்! ஓகே?” என்றாள் உற்சாகமாய்.
“டன்!” என்றவனும் வண்டியை மன்னாரின் பள்ளிமுனை நோக்கி விரட்டினான்.
மனதிலிருந்த பாரம் அகன்றுபோயிருந்ததில் பின்னால் அமர்ந்திருந்த ஆரணி, சிறகில்லாமல் வானில் பறந்துகொண்டிருந்தாள்.
“லவ் பண்ணின காலத்துக்கே போனமாதிரி இருக்கு மச்சி!”