அத்தியாயம் 20
நிகேதன் அவர்களைப் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தபோது, “என்ர மாமி ஊருக்கு போய்ட்டா! என்ர மச்சாளும் சேர்ந்து போய்ட்டா! யேஏஏ..!” என்று, கத்திக்கொண்டு ஓடிவந்து அவன் தோள்களைப்பற்றித் துள்ளினாள் ஆரணி.
அவனோ முறைத்தான். “என்ர அம்மாவும் தங்கச்சியும் உனக்கு அவ்வளவு கொடுமைக்காரராவோ தெரியினம்?” அவனும் சற்று ஆசுவாசமாகத்தான் உணர்ந்தான். என்றாலும் காட்டிக்கொள்ளவில்லை.
“ஹல்லோ பொஸ், எனக்கு இல்ல எங்களுக்கு! உண்மையைச் சொல்லு, இப்ப உன்ர மனது என்ன சொல்லுது? அப்பாடி போயிட்டினம். இனி கொஞ்ச நாளைக்கு நிம்மதி எண்டு சொல்லுதா இல்லையா?” அவன் முகத்தின் முன்னே விரல் நீட்டிக் கேட்டவளின் விரலைப் பற்றி இழுத்தான் அவன்.
“கட்டின மனுசனிட்ட விரல் நீட்டிக் கதைப்பியா?” அவனது பார்வை மாறியதிலேயே என்ன செய்யப்போகிறான் என்று புரிந்துவிட, வேகமாக அவனிடமிருந்து நழுவி கலகலவென்று சிரித்தபடி ஓடத் தொடங்கினாள் ஆரணி.
“தப்பி ஓடினதா நினைப்போ?” இடுப்பில் கைகளை வைத்துக் கிண்டல் சிரிப்புடன் கேட்டான் நிகேதன்.
“முடிஞ்சா பிடிடா!” என்றவளை அவள் எதிர்பாரா நொடியில் துரத்தத் தொடங்கினான் அவன்.
ஒருகணம் திகைத்து நின்றாலும் அடுத்தகணமே வேகமாக அவர்களின் அறைக்குள் நுழைந்து, அங்கிருந்து டெரஸ் கதவைத் திறந்துகொண்டு தோட்டத்துக்குப் பாய்ந்திருந்தாள் ஆரணி.
“எங்க ஓடுறாய் எண்டு நானும் பாக்கிறன்.”
அடக்க முடியாமல் சிரித்தபடி, “முதல்ல பிடிடா! மிச்சத்தைப் பிறகு பாக்கலாம்!” என்று, போக்குக்காட்டி அவனை இன்னுமே உசுப்பேற்றி அவன் வேகம் கொண்டதும் பிடித்துவிடப்போகிறான் என்று தெரிந்து கிணற்றைச் சுற்றி ஓடத்தொடங்கினாள்.
நிகேதன் நிதானித்தான். கிணற்றைச் சுற்றி ஓடினால் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். நடுவால் பாயவும் முடியாது. எனவே, “ஒழுங்கு மரியாதையா நீயே வந்திடு. நானே பிடிச்சனோ மகளே அனுபவிப்பாயடி!” என்று இப்போது அவன் விரல் நீட்டி மிரட்டினான்.
“முதல் பிடி மச்சி! பிறகு வீரத்தை காட்டலாம்.” என்று சவால்விட்டாள் அவள்.
மனதுக்குள் அவளைச் சிக்கவைக்கத் திட்டம் தீட்டியபடி, “அப்ப உன்ன பிடிக்கேலாது எண்டு சொல்லுறாய்!” என்று பேச்சை வளர்த்தான் அவன்.
“ம்ஹூம்!”
“பிடிச்சா?”
“நீ என்ன கேட்டாலும் தருவன்!” என்று அவள் பேச்சில் கவனம் செலுத்திய கணத்தில் வாளியில் இருந்த தண்ணீரை வேகமாக அவளை நோக்கி வீசியிருந்தான் அவன்.
“அடே...ய்!” அவள் சமாளித்து நிமிரும் முன்னே பாய்ந்து, அவளைப் பிடித்தான்.
“ஆருக்கு(யாருக்கு) விளையாட்டு காட்டுறாய்? இதுல வீரத்தை காட்டுறதோ?” என்றவன் கொடுத்த தண்டனையில் அவனுக்குள்ளேயே புதைந்திருந்தாள் ஆரணி.
----------------
அன்று செண்டரில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து குழந்தைகளோடு பில்டிங் பிளாக்ஸ் விளையாடிக்கொண்டிருந்தாள் ஆரணி. கூடவே மெல்லிசையாய் அறையின் ஒரு மூலையில் இருந்து சிறுவர்களுக்கான பாடல் கசிந்து வந்து கொண்டிருக்க, அதற்கு ஏற்ற பாவங்களை அவர்களைச் செய்யவைக்கப் பழக்கிக்கொண்டிருந்தாள்.
அதாவது விளையாட்டோடு விளையாட்டாக ஒரு பாட்டுக்கு ஆடக்கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஒரு குழந்தை தூங்கி வழிந்தது. மற்றவள் அவளைத் தட்டிவிட்டு, “அனு! படுக்கிறேல்ல. படுக்கிற நேரம் முடிஞ்சுது. இங்க பாருங்கோ இப்படிச் செய்யவேணும்.” என்று அசைவுகளைச் சொல்லிக்கொடுக்க குழந்தை அனுவோ கொட்டாவி விட்டபடி சிணுங்கினாள்.
பார்த்துக்கொண்டிருந்த ஆரணிக்குத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அங்கு அப்படித்தான். ஒன்பதுக்குக் காலைச் சாப்பாடு. கொஞ்ச நேரம் வெளியே விளையாட்டு. பிறகு ஏதும் ரைம்ஸ். பிறகு அறைக்குள் ஏதும் கைவினைகள் செய்வது, கிளேயில் விளையாடுவது, வரைவது, பாட்டுக் கேட்பது இப்படிக் கழியும். பன்னிரண்டுக்கு டான் என்று வந்திறங்கும் உணவைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். ஒரு மணிக்கு உறங்கவிட வேண்டும். இரண்டரையில் இருந்து எழுப்பி அவர்களை இப்போது மாதிரி ஏதாவது செய்யவைக்க வேண்டும். எல்லாமே புரோகிராம் செய்யப்பட்ட கணணி போன்று இயங்கவேண்டும். அதுதான் செண்டரின் நிர்வாகி அபிராமியின் சட்டத்திட்டம்.
குழந்தைகளால் அப்படி நேரா நேரத்துக்கு அனைத்தையும் செய்ய முடியுமா, என்ன? இதை ஒருமுறை அவரிடம் கேட்டபோது, “ஆரணி! இந்த செண்டரை பத்து வருசமா நடத்திறன். உம்மை விட எனக்கு அனுபவம் கூட, ரூல்ஸ்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்கோ பிளீஸ்!” என்றுவிட்டிருந்தார் அபிராமி.
மீண்டும் மற்றவள் தட்டி அனுவை எழுப்பிவிட, அவளின் சிணுங்கல் அழுகையாக மாறிற்று. அதற்குமேல் பொறுக்கமாட்டாமல், “சிந்து மிஸ்! அனுவுக்கு இண்டைக்கு முழுக்க உடம்பு சோர்வாத்தான் இருக்கு. அதால நான் கொஞ்சநேரம் அவளைப் படுக்கவைக்கிறன்.” என்றுவிட்டு, அவளின் பதிலை எதிர்பாராமல் அருகிலிருந்த குழந்தைகள் உறங்கும் அறைக்கு அனுவைக் கொண்டு நடந்தாள்.
அபிராமி பார்த்தால் திட்டுவார் என்று தெரிந்தும் இப்படி நடந்துகொள்ளும் ஆரணியை என்ன செய்வது என்று தெரியாமல் மற்றக் குழந்தைகளைக் கவனித்தார் சிந்து.
சிந்து பயந்தது போலவே வகுப்புகளை மேற்பார்வையிட்டுக்கொண்டு வந்த அபிராமி, நடப்பதைக் கண்டுவிட்டு புருவங்களைச் சுருக்கி ஆரணியை ஏறிட்டார்.
நடந்ததை அவள் சொல்ல, “அப்பிடிக் கண்ட கண்ட நேரம் படுக்க விடேலாது ஆரணி. அதுக்கு எண்டு ஒரு நேரகாலம் இருக்கு. நீங்க நினைச்சபடிதான் நடப்பீங்க எண்டால் பிறகு என்னத்துக்கு இங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் எல்லாம் போட்டுவச்சிருக்கு?” என்று கேட்டார் அவர்.
நிகேதன் அவர்களைப் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தபோது, “என்ர மாமி ஊருக்கு போய்ட்டா! என்ர மச்சாளும் சேர்ந்து போய்ட்டா! யேஏஏ..!” என்று, கத்திக்கொண்டு ஓடிவந்து அவன் தோள்களைப்பற்றித் துள்ளினாள் ஆரணி.
அவனோ முறைத்தான். “என்ர அம்மாவும் தங்கச்சியும் உனக்கு அவ்வளவு கொடுமைக்காரராவோ தெரியினம்?” அவனும் சற்று ஆசுவாசமாகத்தான் உணர்ந்தான். என்றாலும் காட்டிக்கொள்ளவில்லை.
“ஹல்லோ பொஸ், எனக்கு இல்ல எங்களுக்கு! உண்மையைச் சொல்லு, இப்ப உன்ர மனது என்ன சொல்லுது? அப்பாடி போயிட்டினம். இனி கொஞ்ச நாளைக்கு நிம்மதி எண்டு சொல்லுதா இல்லையா?” அவன் முகத்தின் முன்னே விரல் நீட்டிக் கேட்டவளின் விரலைப் பற்றி இழுத்தான் அவன்.
“கட்டின மனுசனிட்ட விரல் நீட்டிக் கதைப்பியா?” அவனது பார்வை மாறியதிலேயே என்ன செய்யப்போகிறான் என்று புரிந்துவிட, வேகமாக அவனிடமிருந்து நழுவி கலகலவென்று சிரித்தபடி ஓடத் தொடங்கினாள் ஆரணி.
“தப்பி ஓடினதா நினைப்போ?” இடுப்பில் கைகளை வைத்துக் கிண்டல் சிரிப்புடன் கேட்டான் நிகேதன்.
“முடிஞ்சா பிடிடா!” என்றவளை அவள் எதிர்பாரா நொடியில் துரத்தத் தொடங்கினான் அவன்.
ஒருகணம் திகைத்து நின்றாலும் அடுத்தகணமே வேகமாக அவர்களின் அறைக்குள் நுழைந்து, அங்கிருந்து டெரஸ் கதவைத் திறந்துகொண்டு தோட்டத்துக்குப் பாய்ந்திருந்தாள் ஆரணி.
“எங்க ஓடுறாய் எண்டு நானும் பாக்கிறன்.”
அடக்க முடியாமல் சிரித்தபடி, “முதல்ல பிடிடா! மிச்சத்தைப் பிறகு பாக்கலாம்!” என்று, போக்குக்காட்டி அவனை இன்னுமே உசுப்பேற்றி அவன் வேகம் கொண்டதும் பிடித்துவிடப்போகிறான் என்று தெரிந்து கிணற்றைச் சுற்றி ஓடத்தொடங்கினாள்.
நிகேதன் நிதானித்தான். கிணற்றைச் சுற்றி ஓடினால் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். நடுவால் பாயவும் முடியாது. எனவே, “ஒழுங்கு மரியாதையா நீயே வந்திடு. நானே பிடிச்சனோ மகளே அனுபவிப்பாயடி!” என்று இப்போது அவன் விரல் நீட்டி மிரட்டினான்.
“முதல் பிடி மச்சி! பிறகு வீரத்தை காட்டலாம்.” என்று சவால்விட்டாள் அவள்.
மனதுக்குள் அவளைச் சிக்கவைக்கத் திட்டம் தீட்டியபடி, “அப்ப உன்ன பிடிக்கேலாது எண்டு சொல்லுறாய்!” என்று பேச்சை வளர்த்தான் அவன்.
“ம்ஹூம்!”
“பிடிச்சா?”
“நீ என்ன கேட்டாலும் தருவன்!” என்று அவள் பேச்சில் கவனம் செலுத்திய கணத்தில் வாளியில் இருந்த தண்ணீரை வேகமாக அவளை நோக்கி வீசியிருந்தான் அவன்.
“அடே...ய்!” அவள் சமாளித்து நிமிரும் முன்னே பாய்ந்து, அவளைப் பிடித்தான்.
“ஆருக்கு(யாருக்கு) விளையாட்டு காட்டுறாய்? இதுல வீரத்தை காட்டுறதோ?” என்றவன் கொடுத்த தண்டனையில் அவனுக்குள்ளேயே புதைந்திருந்தாள் ஆரணி.
----------------
அன்று செண்டரில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து குழந்தைகளோடு பில்டிங் பிளாக்ஸ் விளையாடிக்கொண்டிருந்தாள் ஆரணி. கூடவே மெல்லிசையாய் அறையின் ஒரு மூலையில் இருந்து சிறுவர்களுக்கான பாடல் கசிந்து வந்து கொண்டிருக்க, அதற்கு ஏற்ற பாவங்களை அவர்களைச் செய்யவைக்கப் பழக்கிக்கொண்டிருந்தாள்.
அதாவது விளையாட்டோடு விளையாட்டாக ஒரு பாட்டுக்கு ஆடக்கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஒரு குழந்தை தூங்கி வழிந்தது. மற்றவள் அவளைத் தட்டிவிட்டு, “அனு! படுக்கிறேல்ல. படுக்கிற நேரம் முடிஞ்சுது. இங்க பாருங்கோ இப்படிச் செய்யவேணும்.” என்று அசைவுகளைச் சொல்லிக்கொடுக்க குழந்தை அனுவோ கொட்டாவி விட்டபடி சிணுங்கினாள்.
பார்த்துக்கொண்டிருந்த ஆரணிக்குத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அங்கு அப்படித்தான். ஒன்பதுக்குக் காலைச் சாப்பாடு. கொஞ்ச நேரம் வெளியே விளையாட்டு. பிறகு ஏதும் ரைம்ஸ். பிறகு அறைக்குள் ஏதும் கைவினைகள் செய்வது, கிளேயில் விளையாடுவது, வரைவது, பாட்டுக் கேட்பது இப்படிக் கழியும். பன்னிரண்டுக்கு டான் என்று வந்திறங்கும் உணவைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். ஒரு மணிக்கு உறங்கவிட வேண்டும். இரண்டரையில் இருந்து எழுப்பி அவர்களை இப்போது மாதிரி ஏதாவது செய்யவைக்க வேண்டும். எல்லாமே புரோகிராம் செய்யப்பட்ட கணணி போன்று இயங்கவேண்டும். அதுதான் செண்டரின் நிர்வாகி அபிராமியின் சட்டத்திட்டம்.
குழந்தைகளால் அப்படி நேரா நேரத்துக்கு அனைத்தையும் செய்ய முடியுமா, என்ன? இதை ஒருமுறை அவரிடம் கேட்டபோது, “ஆரணி! இந்த செண்டரை பத்து வருசமா நடத்திறன். உம்மை விட எனக்கு அனுபவம் கூட, ரூல்ஸ்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்கோ பிளீஸ்!” என்றுவிட்டிருந்தார் அபிராமி.
மீண்டும் மற்றவள் தட்டி அனுவை எழுப்பிவிட, அவளின் சிணுங்கல் அழுகையாக மாறிற்று. அதற்குமேல் பொறுக்கமாட்டாமல், “சிந்து மிஸ்! அனுவுக்கு இண்டைக்கு முழுக்க உடம்பு சோர்வாத்தான் இருக்கு. அதால நான் கொஞ்சநேரம் அவளைப் படுக்கவைக்கிறன்.” என்றுவிட்டு, அவளின் பதிலை எதிர்பாராமல் அருகிலிருந்த குழந்தைகள் உறங்கும் அறைக்கு அனுவைக் கொண்டு நடந்தாள்.
அபிராமி பார்த்தால் திட்டுவார் என்று தெரிந்தும் இப்படி நடந்துகொள்ளும் ஆரணியை என்ன செய்வது என்று தெரியாமல் மற்றக் குழந்தைகளைக் கவனித்தார் சிந்து.
சிந்து பயந்தது போலவே வகுப்புகளை மேற்பார்வையிட்டுக்கொண்டு வந்த அபிராமி, நடப்பதைக் கண்டுவிட்டு புருவங்களைச் சுருக்கி ஆரணியை ஏறிட்டார்.
நடந்ததை அவள் சொல்ல, “அப்பிடிக் கண்ட கண்ட நேரம் படுக்க விடேலாது ஆரணி. அதுக்கு எண்டு ஒரு நேரகாலம் இருக்கு. நீங்க நினைச்சபடிதான் நடப்பீங்க எண்டால் பிறகு என்னத்துக்கு இங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் எல்லாம் போட்டுவச்சிருக்கு?” என்று கேட்டார் அவர்.