நீங்கள் இணையத்தில் எழுதுவதில்லை என்றாலும் இன்றைய காலகட்டத்தில் இணையம் வாசகர்களையும் எழுத்தாளர்களையும் இணைக்கும் அழகிய பாலமாக உள்ளது. அந்தப் பாலத்தில் பயணிக்கையில் ஏற்படும் மனதுக்கு இதம் தரும் நிகழ்வுகள், அசௌகரியங்கள் பற்றிச் சொல்ல முடியுமா?
பிரேமா: நான் கதையைப் பொது வெளியில் எழுதுவதில்லை. நேரடியாகப் புத்தகமாகத் தான் வெளியிடுகிறேன்.
வாசகர்களின் விமர்சனங்களை என்னுடைய மின்னஞ்சலுக்கோ முகநூல் பக்கத்திற்கோ கொண்டு சேர்ப்பது இணையம் தான். அந்த வகையில் இணைய தள சேவை எனக்கு பெரிதும் உதவுகிறது.
வாசகர்களின் விமர்சனத்தின் மூலமாகத் தான் நான் சரியான பாதையில் பயணிக்கிறேனா இல்லையா என்று என்னால் புரிந்து கொள்ள முடியும்.
அசௌகரியங்கள் என்று பெரிதாக எதுவும் எனக்கு நேரவில்லை.
திருமதி லாவண்யா: வாசகர்களுடன் ஏற்படும் நட்பும் அவர்களின் கருத்துப் பரிமாற்றங்களும். எழுத்தாளர்களே யோசிக்காத வேறொரு கோணத்தை வாசகர்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்.
அசௌரியங்கள் என்றால் கண்டிப்பாக நாம் எழுதும் கதைகளைப் புத்தகமாக வெளிவரும் முன்னரே நமக்கே தெரியாமல் அனைவருக்கும் ஒரு சிலர் விநியோகம் செய்வதே.
இதனால் சில நட்புகளுக்குள் நம்பிக்கையின்மை ஏற்படும் சூழல் உண்டாகிறது.
பிரேமா: நான் கதையைப் பொது வெளியில் எழுதுவதில்லை. நேரடியாகப் புத்தகமாகத் தான் வெளியிடுகிறேன்.
வாசகர்களின் விமர்சனங்களை என்னுடைய மின்னஞ்சலுக்கோ முகநூல் பக்கத்திற்கோ கொண்டு சேர்ப்பது இணையம் தான். அந்த வகையில் இணைய தள சேவை எனக்கு பெரிதும் உதவுகிறது.
வாசகர்களின் விமர்சனத்தின் மூலமாகத் தான் நான் சரியான பாதையில் பயணிக்கிறேனா இல்லையா என்று என்னால் புரிந்து கொள்ள முடியும்.
அசௌகரியங்கள் என்று பெரிதாக எதுவும் எனக்கு நேரவில்லை.
திருமதி லாவண்யா: வாசகர்களுடன் ஏற்படும் நட்பும் அவர்களின் கருத்துப் பரிமாற்றங்களும். எழுத்தாளர்களே யோசிக்காத வேறொரு கோணத்தை வாசகர்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்.
அசௌரியங்கள் என்றால் கண்டிப்பாக நாம் எழுதும் கதைகளைப் புத்தகமாக வெளிவரும் முன்னரே நமக்கே தெரியாமல் அனைவருக்கும் ஒரு சிலர் விநியோகம் செய்வதே.
இதனால் சில நட்புகளுக்குள் நம்பிக்கையின்மை ஏற்படும் சூழல் உண்டாகிறது.