1. இது பற்றிய உங்கள் பொதுப்படையான கருத்து என்ன?
உன் விருப்பம் என்ன என்பது எல்லோரிடமும் விடப்படவேண்டிய கேள்வி. முடிவெடுப்பதில் அவர் தடுமாறுகிறாரோ தவறான முடிவை எடுக்கிறாரோ எதுவாயினும், அதிலிருந்து அவர் கற்கப்போகிற பாடம் தான் முக்கியம் என்பேன். தன் விருப்பத்தைச் சொல்வதில் சிறப்பான மாற்றம் உருவாகுமாயின், அவருடைய விருப்பு வெறுப்புகள் மீது முடிவுகளின் மீது நம்பிக்கை உண்டாகும். இல்லையோ தவறுகளில் இருந்து பாடம் கற்பர். ஆக, உன் விருப்பம் என்ன என்கிற கேள்வியை கேட்கமாட்டார்களா என்று எண்ணுவதைக் காட்டிலும், நம் விருப்பத்தை ஒருமுறை தெரிவித்துவிடல் சிறப்பு என்பேன்.
வாழ்க்கை என்பது வாழ்தல். வாழ்தல் என்பது வாழ்க்கையைக் கற்றல். ஆக திட முடிகள் எடுக்க முடியாவிட்டாலும் அவரின் தடுமாற்றம் அவருக்குப் பாடம் கற்பிக்கும். ஆக, உஷாந்தி சொன்னதுபோல கேள்விகள் அதன் பெறுமதியை இழக்காது. அக்கேள்விக்கு உரிய பதிலைத் தெரிவிக்காமல் தடுமாறுகிறவருக்கு அத்தடுமாற்றம் என்ன விளைவைக் கொடுக்கும் என்கிற படிப்பினை நிச்சயம் உண்டாகும். ஆக, கேள்வி எல்லோரிடமும் முன்வைக்கப்பட வேண்டும்.
2. நீங்கள் இக்கேள்வியை எதிர்கொண்டுள்ளீர்களா? யார் யாரிடமிருந்து எத்தகைய சந்தர்ப்பங்களில்.
சின்ன வயதில் இப்படிக் கேள்வியாக முன்வைக்கப்பட்ட நினைவு இல்லை. ஆனால், விருப்பங்கள் நிறைவேறாமல் போன நிகழ்வுகள் மிகக் குறைவு. சாப்பாடு, உடுப்பு, விளையாட்டு இன்னும் என்னென்னவோ இதற்கெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டதில்லை. என் விருப்பத்துக்கு ஏற்ப இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். அதனாலோ என்னவோ நிறைவேறாமல் போனவை அத்தனையும் மறக்காமல் நினைவில் இருக்கு. அப்படி நிறைவேறாத விருப்பங்கள் அன்றைக்கு பெரிய குறையாக இருந்தாலும் இன்றைக்கு அம்மாவாக நானும் அதையேதான் செய்திருப்பேன் என்று விளங்குகிறது.
உயர் தரத்தில் தெரிவு செய்த பாடங்களில் இருந்து போடுகிற உடை வரைக்கும், ஏன் தலைமுடியை விருப்பம்போல் வெட்டிக்கொள்வது வரை எல்லாமே என் விருப்பம் தான்.
ஆனால், உயர்தரம் படிக்கப் போகிறபோது புதுச் சைக்கிள் ஆசையாகக் கேட்டு அம்மா வாங்கித் தரவே இல்லை. அதனாலேயே பின்னாளில் அடம்பிடித்து டிரைவிங் லைசென்ஸ் பழகினேன். அதேமாதிரி செல்போன் அப்போதுதான் அறிமுகமானது. எவ்வளவு அழுது கெஞ்சியும் அடிதான் விழுந்ததே தவிர கிடைக்கவே இல்லை. அதனாலேயே அம்மாவை அலையோ அலை என்று அலையவைத்து இலங்கை டெலிகொம்மில் வீட்டுக்கு டெலிபோன் கனெக்ஷன் கொண்டுவந்தேன். அப்போதெல்லாம் அதற்கு விண்ணப்பித்துவிட்டு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையினர் சேர்ந்தபிறகுதான் போஸ்ட் கொண்டுவந்து பூட்டி கனக்ஷன் தருவார்கள்.
இப்படி என் விருப்பம் மறுக்கப்பட்டால் அதற்கு ஈடாக இன்னுமொன்றை தலைகீழாக நின்றேனும் நிறைவேற்றுவேன்.
இப்படி மறுக்கப்பட்ட என் விருப்பங்களை இன்றைக்கு யோசித்துப்பார்க்கையில் மறுக்கப்பட்டதுதான் சிறந்த முடிவு என்று என்னையே நினைக்க வைத்திருக்கிறது. இன்றுவரை என் விருப்பங்களை மறுக்கும் சகலவல்லமை படைத்த ஒற்றை ஜீவன் இவ்வுலகில் என்ர அம்மா மட்டும் தான்.
என்னளவில் என் விருப்பம் எனக்கு முக்கியம். காரணம் எனக்கு நான் முக்கியம். என்னை நானே நேசிக்காத பட்சத்தில், என் விருப்பு வெறுப்புக்கான மரியாதையை நானே கொடுக்காத பட்சத்தில் என்னை வேறு யார் மதிப்பார்கள்? என் விருப்பு வெறுப்புக்கள் தானே நான் என்கிற அடையாளப்படுத்தல். நான் விரும்பி அணிகிற உடை என்னைக் கணிக்க வைக்கும். நான் விரும்பி உதிர்க்கிற வார்த்தைகள் என்னை எடைபோட வைக்கும். நான் எதை நேசிக்கிறேன் நான் எதை வெறுக்கிறேன் என்பதெல்லாம் என்னை யார் என்று சொல்லும் விடயங்கள். அதனால் எனக்கு என் விருப்பங்கள் முக்கியம்.
திருமணத்தின் பின்பு நான் எனக்கு என்று வருகிற எந்த விடயத்திலும் என் விருப்பம் மட்டுமே முக்கியமாக இருந்திருக்கிறது. இங்கும் கேள்விகள் எழுப்பப்பட்ட நினைவு இல்லை. ஆனால், குடும்பம் பிள்ளைகள் எனும்போது நாங்கள் நான்குபேருமே சேர்ந்து கதைப்போம். எங்கள் வீட்டு விஷயங்கள் பெரும்பான்மை பிள்ளைகளுக்கும் தெரியும். நால்வரின் கருத்தும் கேட்கப்பட்டு இறுதி முடிவு எடுப்பதும் நால்வரும் தான்.
திருமணத்திற்குப் பின்பும் என் விருப்பங்களை நானே விலக்கி வைத்த சந்தர்ப்பங்களும் உண்டு. அதில் ஒன்று மேலே கற்பது. நான் கற்பதா இல்லை குழந்தைகளின் எதிர்காலமா என்று வந்தபோது மெல்லிய கவலையோடு குழந்தைகளின் எதிர்காலத்தை தெரிவு செய்திருக்கிறேன். அன்று மெல்லிய வருத்தம் இருந்தது உண்மை. இன்று அதற்காக, நல்ல முடிவு எடுத்திருக்கிறேன் என்கிற நிறைவு எனக்கு உண்டு.
உன் விருப்பம் என்ன என்பது எல்லோரிடமும் விடப்படவேண்டிய கேள்வி. முடிவெடுப்பதில் அவர் தடுமாறுகிறாரோ தவறான முடிவை எடுக்கிறாரோ எதுவாயினும், அதிலிருந்து அவர் கற்கப்போகிற பாடம் தான் முக்கியம் என்பேன். தன் விருப்பத்தைச் சொல்வதில் சிறப்பான மாற்றம் உருவாகுமாயின், அவருடைய விருப்பு வெறுப்புகள் மீது முடிவுகளின் மீது நம்பிக்கை உண்டாகும். இல்லையோ தவறுகளில் இருந்து பாடம் கற்பர். ஆக, உன் விருப்பம் என்ன என்கிற கேள்வியை கேட்கமாட்டார்களா என்று எண்ணுவதைக் காட்டிலும், நம் விருப்பத்தை ஒருமுறை தெரிவித்துவிடல் சிறப்பு என்பேன்.
வாழ்க்கை என்பது வாழ்தல். வாழ்தல் என்பது வாழ்க்கையைக் கற்றல். ஆக திட முடிகள் எடுக்க முடியாவிட்டாலும் அவரின் தடுமாற்றம் அவருக்குப் பாடம் கற்பிக்கும். ஆக, உஷாந்தி சொன்னதுபோல கேள்விகள் அதன் பெறுமதியை இழக்காது. அக்கேள்விக்கு உரிய பதிலைத் தெரிவிக்காமல் தடுமாறுகிறவருக்கு அத்தடுமாற்றம் என்ன விளைவைக் கொடுக்கும் என்கிற படிப்பினை நிச்சயம் உண்டாகும். ஆக, கேள்வி எல்லோரிடமும் முன்வைக்கப்பட வேண்டும்.
2. நீங்கள் இக்கேள்வியை எதிர்கொண்டுள்ளீர்களா? யார் யாரிடமிருந்து எத்தகைய சந்தர்ப்பங்களில்.
சின்ன வயதில் இப்படிக் கேள்வியாக முன்வைக்கப்பட்ட நினைவு இல்லை. ஆனால், விருப்பங்கள் நிறைவேறாமல் போன நிகழ்வுகள் மிகக் குறைவு. சாப்பாடு, உடுப்பு, விளையாட்டு இன்னும் என்னென்னவோ இதற்கெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டதில்லை. என் விருப்பத்துக்கு ஏற்ப இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். அதனாலோ என்னவோ நிறைவேறாமல் போனவை அத்தனையும் மறக்காமல் நினைவில் இருக்கு. அப்படி நிறைவேறாத விருப்பங்கள் அன்றைக்கு பெரிய குறையாக இருந்தாலும் இன்றைக்கு அம்மாவாக நானும் அதையேதான் செய்திருப்பேன் என்று விளங்குகிறது.
உயர் தரத்தில் தெரிவு செய்த பாடங்களில் இருந்து போடுகிற உடை வரைக்கும், ஏன் தலைமுடியை விருப்பம்போல் வெட்டிக்கொள்வது வரை எல்லாமே என் விருப்பம் தான்.
ஆனால், உயர்தரம் படிக்கப் போகிறபோது புதுச் சைக்கிள் ஆசையாகக் கேட்டு அம்மா வாங்கித் தரவே இல்லை. அதனாலேயே பின்னாளில் அடம்பிடித்து டிரைவிங் லைசென்ஸ் பழகினேன். அதேமாதிரி செல்போன் அப்போதுதான் அறிமுகமானது. எவ்வளவு அழுது கெஞ்சியும் அடிதான் விழுந்ததே தவிர கிடைக்கவே இல்லை. அதனாலேயே அம்மாவை அலையோ அலை என்று அலையவைத்து இலங்கை டெலிகொம்மில் வீட்டுக்கு டெலிபோன் கனெக்ஷன் கொண்டுவந்தேன். அப்போதெல்லாம் அதற்கு விண்ணப்பித்துவிட்டு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையினர் சேர்ந்தபிறகுதான் போஸ்ட் கொண்டுவந்து பூட்டி கனக்ஷன் தருவார்கள்.
இப்படி என் விருப்பம் மறுக்கப்பட்டால் அதற்கு ஈடாக இன்னுமொன்றை தலைகீழாக நின்றேனும் நிறைவேற்றுவேன்.
இப்படி மறுக்கப்பட்ட என் விருப்பங்களை இன்றைக்கு யோசித்துப்பார்க்கையில் மறுக்கப்பட்டதுதான் சிறந்த முடிவு என்று என்னையே நினைக்க வைத்திருக்கிறது. இன்றுவரை என் விருப்பங்களை மறுக்கும் சகலவல்லமை படைத்த ஒற்றை ஜீவன் இவ்வுலகில் என்ர அம்மா மட்டும் தான்.
என்னளவில் என் விருப்பம் எனக்கு முக்கியம். காரணம் எனக்கு நான் முக்கியம். என்னை நானே நேசிக்காத பட்சத்தில், என் விருப்பு வெறுப்புக்கான மரியாதையை நானே கொடுக்காத பட்சத்தில் என்னை வேறு யார் மதிப்பார்கள்? என் விருப்பு வெறுப்புக்கள் தானே நான் என்கிற அடையாளப்படுத்தல். நான் விரும்பி அணிகிற உடை என்னைக் கணிக்க வைக்கும். நான் விரும்பி உதிர்க்கிற வார்த்தைகள் என்னை எடைபோட வைக்கும். நான் எதை நேசிக்கிறேன் நான் எதை வெறுக்கிறேன் என்பதெல்லாம் என்னை யார் என்று சொல்லும் விடயங்கள். அதனால் எனக்கு என் விருப்பங்கள் முக்கியம்.
திருமணத்தின் பின்பு நான் எனக்கு என்று வருகிற எந்த விடயத்திலும் என் விருப்பம் மட்டுமே முக்கியமாக இருந்திருக்கிறது. இங்கும் கேள்விகள் எழுப்பப்பட்ட நினைவு இல்லை. ஆனால், குடும்பம் பிள்ளைகள் எனும்போது நாங்கள் நான்குபேருமே சேர்ந்து கதைப்போம். எங்கள் வீட்டு விஷயங்கள் பெரும்பான்மை பிள்ளைகளுக்கும் தெரியும். நால்வரின் கருத்தும் கேட்கப்பட்டு இறுதி முடிவு எடுப்பதும் நால்வரும் தான்.
திருமணத்திற்குப் பின்பும் என் விருப்பங்களை நானே விலக்கி வைத்த சந்தர்ப்பங்களும் உண்டு. அதில் ஒன்று மேலே கற்பது. நான் கற்பதா இல்லை குழந்தைகளின் எதிர்காலமா என்று வந்தபோது மெல்லிய கவலையோடு குழந்தைகளின் எதிர்காலத்தை தெரிவு செய்திருக்கிறேன். அன்று மெல்லிய வருத்தம் இருந்தது உண்மை. இன்று அதற்காக, நல்ல முடிவு எடுத்திருக்கிறேன் என்கிற நிறைவு எனக்கு உண்டு.
Last edited: