இலங்கையின் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சுதாராஜ் அவர்களின் கதைகளை அவரின் அனுமதியுடன் இங்கே பதிவிடுகிறோம். ஈழத்தின் பேச்சு வழக்கு முதற்கொண்டு, அவர்களின் எளிமையான வாழ்வாதாரங்கள், வாழ்க்கை முறைகளையும் வெகு இலகுவாக தொட்டுச் செல்லும் தன்மை உடையவை அவரின் சிறுகதைகள்.
எத்தனையோ நாட்கள் என்னை மனப்பாரத்துடன் அலையவைத்த ஒரு தந்தையின் வாழ்க்கை
நேற்றைய இரவும் அவர் வீட்டுக்கு வந்தபோது நேரம் கடந்துவிட்டது. வெறும் கையோடுதான் வந்தார்.
“இஞ்சரும்…! ஏதாவது இருக்கே?” ஓ! அவரது வயிறும் வெறுமையாகவே இருக்கிறது. அவளுக்கு அழுகை பொங்கியது. பிள்ளைகளும் வயிற்றுப் பசியோடு கிடந்ததைப் பொறுக்கமுடியாதிருந்தவள்.. ‘இப்ப இந்த மனிசனும் அலைஞ்சுபோட்டு ஒன்றுக்கும் வழியில்லாமல் வருகுதே!’ – தங்களது இயலாமை நெஞ்சை வருத்தியது. இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவரது சுக துக்கங்களில் சமபங்கு கொண்டு அவருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட பவளத்திற்கு அவர் பசியோடு கிடக்கப்போகிறாரே என்ற வேதனை தொண்டயை உடைத்துக் கொண்டு வந்தது.
ஆறுமுகம் மனைவியைத் தேற்றினார். ‘சரி சரி… ஏனப்பா இப்ப அழுகிறாய்…? நான் சாப்பிட்டிட்டுத்தான் வந்தனான். உங்கடை பாடு எப்பிடி எண்டுதான் கேட்டனான்..” என ஒரு பொய்யைக்கூறினார். அவர்களுடைய பாடு எப்படி இருந்திருக்கும் என்பதும் அவர் அறியாததல்ல.
பிள்ளைகளின் வயிறு காய்வதை பார்த்துக்கொண்டு ஒரு தாயினால் எப்படித்தான் சும்மாயிருக்க முடியும்? வெளியிலே சொன்னால் வெட்கக்கேடு. மத்தியானம் ஒரு பேணி அரிசியில் (அதுகூடக் கடன்பட்டு) கஞ்சியாகக் காய்ச்சி ஊற்றினாள். இரண்டு குமர், மூன்று சிறுசுகள், நடுவில் இரண்டு படிக்கிற வயசுப் பெடியள். எத்தனை நாட்களுக்கு இப்படி மற்றவர்களை இரந்துகொண்டு போவது, அவர்களது நொட்டைக் கதைகளைக் கேட்பது? பவளத்திற்கு நெஞ்சு பொறுக்காத கவலை முட்டியது.
‘இஞ்சருங்கோ…. பிள்ளையளுக்கெல்லாம் நஞ்சைக் குடுத்திட்டு, நாங்களும் சாவமே?”
‘உனக்கென்ன விசரே…? இப்ப என்ன குடி முழுகிப் போச்செண்டே இந்தக் கதை கதைக்கிறாய்?” மனைவியே தனது தன்மானத்துக்குச் சவால் விடுவதாக நினைத்துக்கொண்டு ஆறுமுகம் சீறிப் பாய்ந்தார்.
அவள் அதற்குமேற் பேசவில்லை. ‘அந்த மனிசனும்தான் என்ன செய்யிறது?’
ஆறுமுகம் பாயைத் தட்டிப் போட்டுக்கொண்டு படுக்கப் போனபொழுது பவளம் ஒரு பேணியிற் சுடுதண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தாள்: ‘இந்தாங்கோ…. வெறுவயித்தோடை கிடக்கக்கூடாது..” அவர் ஒன்றும் பேசாமல் தண்ணீரை வேண்டி மொடுமொடென்று குடித்துவிட்டுப் படுத்தார்.
பவளம் திண்ணையில் சேலைத்தலைப்பை விரித்து ‘சிவனே!’ எனப் படுத்துக்கொண்டாள்.
பாவம், தன்னிடம் வந்த காலத்தில் அவள் என்ன சுகத்தைக் கண்டிருக்கிறாள் எனக் கவலை தோன்றியது.
‘இந்தக் குளிருக்குள்ளை… ஏன் வெறும் திண்ணையிலை படுக்கிறீர்…? பாயை எடுத்துப் போட்டுக்கொண்டு படுங்கோவன்!” அடங்காத இரக்கத்தோடுதான் சொன்னார். அவர் சொல்வது கேட்காதது போல பவளம் படுத்திருந்தாள்.
அவரும் பேசவில்லை. இரக்கப்படத்தான் முடிகிறது. அவர்களது தேவைகளையெல்லாம் பூரணமாகக் கொடுக்க முடியாத தனது இயலாமையை எண்ணி வருந்தினார். பிறகு சொன்னார்: ‘நாளைக்கு எப்படியாவது ஒரு வழியைப் பாப்பம்..!” ஒரு ஆறுதலுக்காகவாவது அப்படிச் சொல்லவேண்டியிருந்தது. ஆனால் நாளைக்கு என்ன செய்யப்போகிறார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
நித்திரை வர மறுத்தது. நாளைக்கு என்ன செய்யலாம்? எங்கே போகலாம்? யாரைப் பிடிக்கலாம்? மனைவியும், குழந்தைகளும்கூட உறங்காமலிருக்கிற அசுகை தெரிகிறது. என்னவென்று புரியாத வேதனை மனதை அலைத்தது.
ஒரு வேலை கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையில் அவரும் அலையாத இடமில்லை. கார் சாரதியாக முப்பது வருடங்களாகக் காலத்தைக் கடத்தியவர். கடைசியாக ஓடிய இடத்தில் கணக்குத் தீர்க்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிறது. பெற்றோல் விலை ஏறியதும், இனிக் கட்டுப்படியாகாது என முதலாளி வாகனத்தை விற்கப்போகிறாராம்.
நன்கு அனுபவமுள்ள கார் டிரைவர்கள் தேவை எனப் பத்திரிகையில் விளம்பரப்படுத்துகிறார்கள் – நேரில் வரவும்! குழந்தை குட்டிகளையும், பொறுப்புகளையும் மறந்து கொழும்பிற்குப் போகமுடியாது. என்னப்பா, யாழ்ப்பாணத்தில் அப்படியொரு வேலை இல்லாமற் போய்விட்டதா எனக் காரணமற்ற எரிச்சலும் ஏற்பட்டது. ஒரு வேலை கிடைக்கும்வரை என்று சொல்லிக்கொண்டு பெண்சாதி பிள்ளைகளின் காதில், கழுத்தில் தப்பியொட்டிக் கிடந்தவற்றையும் விற்றுச் “சரிக்கட்டிய” நாட்களும் போய்விட்டன. பல நினைவுகளோடும் விடியப்புறமாகத்தான் உறங்கியிருக்கவேண்டும்.. மீண்டும் விடிய தன் பிள்ளைகளின் முகத்திலே விழிக்கக்கூடக் கூச்சமடைந்தவராய் நேரத்தோடு போய்விட எழுந்தார்.
ஆறுமுகம் வெளியே போக ஆயத்தமாக வந்தபொழுது பவளம் ஏற்கனவே எழுந்து வீடு வாசலைக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு நிற்பதைக் கண்டார். அன்றுதொட்டே அவளிடம் உள்ள பழக்கம் இது. நிலம் விடிவதற்கு முன்னரே எழுந்து பாத்திரங்களைத் துலக்கி, வீடுவாசலைத் துப்புரவு செய்து….
அதற்கு மேல் அவரால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.. அதற்குப் பிறகு அவள் கைச்சுறுக்காகச் சமைத்து கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பிடக் கொடுப்பாள். அந்த நாட்கள் இனித் திரும்ப வராதா..?
வெறும் தேயிலைச்சாயத்தை கொண்டுவந்து அவரிடம் கொடுத்தாள் பவளம். சூடாக இருந்ததால் அவ்வளவு கசப்புத் தெரியவில்லை.
‘எப்பிடியும் பத்துப் பதினொரு மணிக்கு முதல் ஏதாவது பார்த்துக்கொண்டு வாறன்..” எனச் சமாதானம் கூறிவிட்டு நடந்தார் ஆறுமுகம். அவள் சேலைத்தலைப்பில் முடிந்து வைத்திருந்த ஒரு ரூபாய்க் குற்றியை அவிழ்த்து அவரிடம் கொடுத்தாள்!
எத்தனையோ நாட்கள் என்னை மனப்பாரத்துடன் அலையவைத்த ஒரு தந்தையின் வாழ்க்கை
கொடுத்தல்
சிட்டுக்குருவியொன்று குரல் கொடுத்து அவரை எழுப்பியது. பிள்ளைகள் விழிப்பதற்கு முன்னர் போய்விடவேண்டுமென்பது அவரது எண்ணம். இன்னும் பொழுது புலரவில்லை. அந்தக் குருவிக்கு என்ன மகிழ்ச்சியோ? இப்படி விடிவதற்கு முன்னர் வந்து பாடத் தொடங்கிவிடுகிறது. அதற்குச் சாப்பாட்டைப் பற்றிய கவலை இல்லை. இங்கிருந்து பறந்து போய் எங்காவது கொட்டிக் கிடக்கும் இரையைத் தேடிக்கொள்ளும்.
நேற்றைய இரவும் அவர் வீட்டுக்கு வந்தபோது நேரம் கடந்துவிட்டது. வெறும் கையோடுதான் வந்தார்.
“இஞ்சரும்…! ஏதாவது இருக்கே?” ஓ! அவரது வயிறும் வெறுமையாகவே இருக்கிறது. அவளுக்கு அழுகை பொங்கியது. பிள்ளைகளும் வயிற்றுப் பசியோடு கிடந்ததைப் பொறுக்கமுடியாதிருந்தவள்.. ‘இப்ப இந்த மனிசனும் அலைஞ்சுபோட்டு ஒன்றுக்கும் வழியில்லாமல் வருகுதே!’ – தங்களது இயலாமை நெஞ்சை வருத்தியது. இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவரது சுக துக்கங்களில் சமபங்கு கொண்டு அவருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட பவளத்திற்கு அவர் பசியோடு கிடக்கப்போகிறாரே என்ற வேதனை தொண்டயை உடைத்துக் கொண்டு வந்தது.
ஆறுமுகம் மனைவியைத் தேற்றினார். ‘சரி சரி… ஏனப்பா இப்ப அழுகிறாய்…? நான் சாப்பிட்டிட்டுத்தான் வந்தனான். உங்கடை பாடு எப்பிடி எண்டுதான் கேட்டனான்..” என ஒரு பொய்யைக்கூறினார். அவர்களுடைய பாடு எப்படி இருந்திருக்கும் என்பதும் அவர் அறியாததல்ல.
பிள்ளைகளின் வயிறு காய்வதை பார்த்துக்கொண்டு ஒரு தாயினால் எப்படித்தான் சும்மாயிருக்க முடியும்? வெளியிலே சொன்னால் வெட்கக்கேடு. மத்தியானம் ஒரு பேணி அரிசியில் (அதுகூடக் கடன்பட்டு) கஞ்சியாகக் காய்ச்சி ஊற்றினாள். இரண்டு குமர், மூன்று சிறுசுகள், நடுவில் இரண்டு படிக்கிற வயசுப் பெடியள். எத்தனை நாட்களுக்கு இப்படி மற்றவர்களை இரந்துகொண்டு போவது, அவர்களது நொட்டைக் கதைகளைக் கேட்பது? பவளத்திற்கு நெஞ்சு பொறுக்காத கவலை முட்டியது.
‘இஞ்சருங்கோ…. பிள்ளையளுக்கெல்லாம் நஞ்சைக் குடுத்திட்டு, நாங்களும் சாவமே?”
‘உனக்கென்ன விசரே…? இப்ப என்ன குடி முழுகிப் போச்செண்டே இந்தக் கதை கதைக்கிறாய்?” மனைவியே தனது தன்மானத்துக்குச் சவால் விடுவதாக நினைத்துக்கொண்டு ஆறுமுகம் சீறிப் பாய்ந்தார்.
அவள் அதற்குமேற் பேசவில்லை. ‘அந்த மனிசனும்தான் என்ன செய்யிறது?’
ஆறுமுகம் பாயைத் தட்டிப் போட்டுக்கொண்டு படுக்கப் போனபொழுது பவளம் ஒரு பேணியிற் சுடுதண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தாள்: ‘இந்தாங்கோ…. வெறுவயித்தோடை கிடக்கக்கூடாது..” அவர் ஒன்றும் பேசாமல் தண்ணீரை வேண்டி மொடுமொடென்று குடித்துவிட்டுப் படுத்தார்.
பவளம் திண்ணையில் சேலைத்தலைப்பை விரித்து ‘சிவனே!’ எனப் படுத்துக்கொண்டாள்.
பாவம், தன்னிடம் வந்த காலத்தில் அவள் என்ன சுகத்தைக் கண்டிருக்கிறாள் எனக் கவலை தோன்றியது.
‘இந்தக் குளிருக்குள்ளை… ஏன் வெறும் திண்ணையிலை படுக்கிறீர்…? பாயை எடுத்துப் போட்டுக்கொண்டு படுங்கோவன்!” அடங்காத இரக்கத்தோடுதான் சொன்னார். அவர் சொல்வது கேட்காதது போல பவளம் படுத்திருந்தாள்.
அவரும் பேசவில்லை. இரக்கப்படத்தான் முடிகிறது. அவர்களது தேவைகளையெல்லாம் பூரணமாகக் கொடுக்க முடியாத தனது இயலாமையை எண்ணி வருந்தினார். பிறகு சொன்னார்: ‘நாளைக்கு எப்படியாவது ஒரு வழியைப் பாப்பம்..!” ஒரு ஆறுதலுக்காகவாவது அப்படிச் சொல்லவேண்டியிருந்தது. ஆனால் நாளைக்கு என்ன செய்யப்போகிறார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
நித்திரை வர மறுத்தது. நாளைக்கு என்ன செய்யலாம்? எங்கே போகலாம்? யாரைப் பிடிக்கலாம்? மனைவியும், குழந்தைகளும்கூட உறங்காமலிருக்கிற அசுகை தெரிகிறது. என்னவென்று புரியாத வேதனை மனதை அலைத்தது.
ஒரு வேலை கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையில் அவரும் அலையாத இடமில்லை. கார் சாரதியாக முப்பது வருடங்களாகக் காலத்தைக் கடத்தியவர். கடைசியாக ஓடிய இடத்தில் கணக்குத் தீர்க்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிறது. பெற்றோல் விலை ஏறியதும், இனிக் கட்டுப்படியாகாது என முதலாளி வாகனத்தை விற்கப்போகிறாராம்.
நன்கு அனுபவமுள்ள கார் டிரைவர்கள் தேவை எனப் பத்திரிகையில் விளம்பரப்படுத்துகிறார்கள் – நேரில் வரவும்! குழந்தை குட்டிகளையும், பொறுப்புகளையும் மறந்து கொழும்பிற்குப் போகமுடியாது. என்னப்பா, யாழ்ப்பாணத்தில் அப்படியொரு வேலை இல்லாமற் போய்விட்டதா எனக் காரணமற்ற எரிச்சலும் ஏற்பட்டது. ஒரு வேலை கிடைக்கும்வரை என்று சொல்லிக்கொண்டு பெண்சாதி பிள்ளைகளின் காதில், கழுத்தில் தப்பியொட்டிக் கிடந்தவற்றையும் விற்றுச் “சரிக்கட்டிய” நாட்களும் போய்விட்டன. பல நினைவுகளோடும் விடியப்புறமாகத்தான் உறங்கியிருக்கவேண்டும்.. மீண்டும் விடிய தன் பிள்ளைகளின் முகத்திலே விழிக்கக்கூடக் கூச்சமடைந்தவராய் நேரத்தோடு போய்விட எழுந்தார்.
ஆறுமுகம் வெளியே போக ஆயத்தமாக வந்தபொழுது பவளம் ஏற்கனவே எழுந்து வீடு வாசலைக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு நிற்பதைக் கண்டார். அன்றுதொட்டே அவளிடம் உள்ள பழக்கம் இது. நிலம் விடிவதற்கு முன்னரே எழுந்து பாத்திரங்களைத் துலக்கி, வீடுவாசலைத் துப்புரவு செய்து….
அதற்கு மேல் அவரால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.. அதற்குப் பிறகு அவள் கைச்சுறுக்காகச் சமைத்து கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பிடக் கொடுப்பாள். அந்த நாட்கள் இனித் திரும்ப வராதா..?
வெறும் தேயிலைச்சாயத்தை கொண்டுவந்து அவரிடம் கொடுத்தாள் பவளம். சூடாக இருந்ததால் அவ்வளவு கசப்புத் தெரியவில்லை.
‘எப்பிடியும் பத்துப் பதினொரு மணிக்கு முதல் ஏதாவது பார்த்துக்கொண்டு வாறன்..” எனச் சமாதானம் கூறிவிட்டு நடந்தார் ஆறுமுகம். அவள் சேலைத்தலைப்பில் முடிந்து வைத்திருந்த ஒரு ரூபாய்க் குற்றியை அவிழ்த்து அவரிடம் கொடுத்தாள்!