அத்தியாயம் 18
பல்கலைக் கழகத்தில் எப்போதும் அமரும் மரத்தடி வாங்கிலில் அமர்ந்திருந்தாள் ஆதினி. அவள் சிந்தை முழுக்க நிறைந்திருந்தவன் அஜய்.
இனிமையாகப் பழகுவான், மரியாதை மிகுந்தவன் என்று எண்ணியிருந்த ஒருவன் பொய்த்துப் போனானே. அவளை விடவும் சின்ன பெண்ணிடம் போய்…
“என்ன பலமான யோசனை?” அவள் சிந்தனைக்குள் ஊடு புகுந்தது காண்டீபனின் குரல்.
திரும்பி அவனைப் பார்த்தவள் விழிகளில் கேள்வியும் குழப்பமும்.
“என்ன?”
“நீங்க நல்லவரா கெட்டவரா?”
எந்த முலாமும் பூசப்படாத நேரடிக் கேள்வியில் ஒரு கணம் திகைத்துவிட்டுச் சிரித்தான் அவன்.
“திடீரெண்டு ஏன் இந்தச் சந்தேகம்?”
“கனகாலமா நண்பன் எண்டு நம்பிப் பழகினவன் முழுக் கெட்டவனா இருக்கிறான். என்னை மாதிரி இன்னொரு பொம்பிளைப் பிள்ளையின்ர வாழ்க்கைல விளையாடி இருக்கிறான். அதுதான் ஆர நம்புறது, ஆர நம்பக் கூடாது எண்டு தெரியுதே இல்ல.” என்றவள், “உங்கள நான் நம்பலாமா?” என்று, அதையும் அவனிடமே கேட்டாள்.
அதுவரை நேரமும் அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து போயிற்று. நீயும் உனக்குள் பல முகங்களை வைத்திருக்கிறாயா என்று கேட்கிறாள். முகத்தைத் திருப்பிப் பார்வையை எங்கோ பதித்தான். சற்று நேரம் அமைதியிலேயே கழிந்தது.
“தயவுசெய்து நீங்களும் கெட்டவனா இருந்திடாதீங்க அண்ணா. எனக்கு இப்ப எல்லாம் ஆரோட கதைக்கவும் பயமா இருக்கு.” என்றாள் கலங்கிப்போய்.
வேகமாகத் திரும்பி அவள் முகம் பார்த்தான் காண்டீபன். எப்போதும் தலையைக் கலைத்து விடுகிறவன் இன்று அவள் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தான். அதில், கலங்காதே என்கிற செய்தி இருக்க, ஆதினியின் மனம் தானாக அமைதியடைந்தது.
“இந்த நல்லவன் கெட்டவன எத வச்சுத் தீர்மானிக்கிறது?” என்று நிதானமாக வினவினான்.
இந்தளவுக்கெல்லாம் அவள் எங்கே யோசித்தாள்? பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள்.
“எல்லாருக்கும் நல்லவனா இருக்கிற வரம் எல்லாருக்கும் கிடைக்கிறேல்ல ஆதினி. எனக்கும் கிடைக்கேல்ல.”
அதைச் சொல்லும்போது அவன் குரலில் என்ன இருந்தது? அதைக் கண்டு பிடிக்கவும் அவளுக்குத் தெரியவில்லை. விழிகளில் பெரும் குழப்பம்.
அவன் மனம் கனிந்து போயிற்று. இந்த உலகத்தின் கொடூர முகத்தை அறியாதவள். அவள் கடந்து வந்த பாதையில் சூறாவளியோ, சுழற்றி அடிக்கும் காற்றோ வீசியதே இல்லை.
கூடப்பிறந்த தமையன் முதன் முறையாகக் கையை நீட்டியதற்கும், நெருங்கிப் பழகியவர்கள் விட்ட நான்கு வார்த்தைகளிலும் மனமுடைந்து, வெறுப்பின் விளிம்பில் ஓடிப்போய் நிற்கிறவளுக்கு, அவன் சொல்வதில் இருக்கும் உள்ளர்த்தம் விளங்கப்போவதில்லை.
ஆதூரத்துடன் அவள் கரம் பற்றி அழுத்திக்கொடுத்துவிட்டு, “நிறைய யோசிக்காத. உனக்கு நான் எண்டைக்கும் நல்லவன்தான், சரியா? சரி சொல்லு, என்னவாம் உன்ர எல்லாளன்?” என்று பேச்சை மாற்றினான்.
“அவர் ஒண்டும் என்ர எல்லாளன் இல்ல!” கடுப்புடன் வந்தது பதில்.
“இத அவனிட்டச் சொல்லி இருக்கிறியா?”
“ஏன், எனக்கென்ன பயமா? எப்பவோ சொல்லிட்டன்.” அலட்சியமாகத் தலையைச் சிலுப்பிக்கொண்டு சொன்னாள்.
“ஓ! அதுக்கு அவன் என்ன சொன்னவன்?”
அந்தக் கேள்வி அவன் ரோல்ஸைத் திணித்ததை நினைவூட்டி அவள் முகத்தைச் சூடாக்கிற்று.
அவளையே குறுகுறு என்று பார்த்துக்கொண்டு இருந்தவன், “என்னவோ வில்லங்கமாச் சொல்லியிருக்கிறான் போலயே!” என்றான் கேலி இழையோடும் உரலில்.
“சேர், நீங்க ஒரு வாத்தி. எழும்பிப் போய்ப் பாடம் எடுக்கிற வேலையப் பாருங்க. போங்க!” முகம் சிவக்கப் பொய்க் கோபத்துடன் துரத்தினாள்.
அவன் உதட்டோரத்தில் மெல்லிய முறுவல்.
“சேர்ர்ர்ர்ர்ர்...”
“சரிசரி விடு! உன்ர ரகசியம் உன்னட்டையே இருக்கட்டும். இப்ப சொல்லு, என்ன நடந்தது?” என்று கேட்டு, அஜயைப் பற்றித் தெரிந்துகொண்டான்.
அவள் மனது ஏன் குழம்பி இருக்கிறது என்று விளங்கிற்று. அதில், “அவனைப் பற்றி நிறைய யோசிக்காத. அவன் மட்டுமே இந்த உலகம் இல்ல. நிறைய நல்ல மனுசர் எங்களைச் சுத்தி இன்னும் இருக்கினம். என்ன, எப்பவும் கொஞ்சம் கவனமாவும் விழிப்பாவும் இரு, போதும்.” என்று சொன்னான்.
இப்போதும் அவளுக்கு அவன் சொன்னதன் முழுமையான அர்த்தம் பிடிபடவில்லை. அதில் உண்டான சலிப்புடன் எழுந்து, வாங்கிலில் இருந்த தன் பொருட்களைச் சேகரித்துக்கொண்டே, “என்னவோ தெரியா சேர். இனி ஆரையும் அவ்வளவு ஈசியா நம்புவனா தெரியாது. உங்களையும்தான்.” என்றாள்.
அவன் உதட்டினில் பொருள் விளங்காப் புன்னகை ஒன்று உதயமாயிற்று. ஒற்றைத் தலையசைப்பால் அவளைத் தன்னருகே அழைத்தான்.
வந்தவளிடம், அவள் கண்களையே பார்த்து, “கனவுல கூட இந்தக் குட்டிப் பிள்ளைக்கு ஒரு பாவமும் செய்ய மாட்டன். உனக்குத் தெரியாது, நீ எனக்கு எத்தினையோ வருசமாத் தணியாம இருந்த தாகத்தைத் தணிய வச்சுக்கொண்டு இருக்கிறாய். அதால, எந்தக் கவலையும் இல்லாமப் போ. நானே நினைச்சாக் கூட என்னால உனக்கு ஒரு தீமையச் செய்யேலாது.” என்றான், அவள் மனதை வருடும் பட்டுப் போன்ற மென் குரலில்.
ஆதினியின் மனம், மந்திரத்துக்குக் கட்டுண்டது போன்று அவன் வார்த்தைகளில் கட்டுண்டு நின்றது. அவன் சொன்னதற்குத் தலையசைத்துவிட்டுப் புறப்பட்டாள்.
கேட்டவள் போய்விட்டாள்.
பல்கலைக் கழகத்தில் எப்போதும் அமரும் மரத்தடி வாங்கிலில் அமர்ந்திருந்தாள் ஆதினி. அவள் சிந்தை முழுக்க நிறைந்திருந்தவன் அஜய்.
இனிமையாகப் பழகுவான், மரியாதை மிகுந்தவன் என்று எண்ணியிருந்த ஒருவன் பொய்த்துப் போனானே. அவளை விடவும் சின்ன பெண்ணிடம் போய்…
“என்ன பலமான யோசனை?” அவள் சிந்தனைக்குள் ஊடு புகுந்தது காண்டீபனின் குரல்.
திரும்பி அவனைப் பார்த்தவள் விழிகளில் கேள்வியும் குழப்பமும்.
“என்ன?”
“நீங்க நல்லவரா கெட்டவரா?”
எந்த முலாமும் பூசப்படாத நேரடிக் கேள்வியில் ஒரு கணம் திகைத்துவிட்டுச் சிரித்தான் அவன்.
“திடீரெண்டு ஏன் இந்தச் சந்தேகம்?”
“கனகாலமா நண்பன் எண்டு நம்பிப் பழகினவன் முழுக் கெட்டவனா இருக்கிறான். என்னை மாதிரி இன்னொரு பொம்பிளைப் பிள்ளையின்ர வாழ்க்கைல விளையாடி இருக்கிறான். அதுதான் ஆர நம்புறது, ஆர நம்பக் கூடாது எண்டு தெரியுதே இல்ல.” என்றவள், “உங்கள நான் நம்பலாமா?” என்று, அதையும் அவனிடமே கேட்டாள்.
அதுவரை நேரமும் அவன் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து போயிற்று. நீயும் உனக்குள் பல முகங்களை வைத்திருக்கிறாயா என்று கேட்கிறாள். முகத்தைத் திருப்பிப் பார்வையை எங்கோ பதித்தான். சற்று நேரம் அமைதியிலேயே கழிந்தது.
“தயவுசெய்து நீங்களும் கெட்டவனா இருந்திடாதீங்க அண்ணா. எனக்கு இப்ப எல்லாம் ஆரோட கதைக்கவும் பயமா இருக்கு.” என்றாள் கலங்கிப்போய்.
வேகமாகத் திரும்பி அவள் முகம் பார்த்தான் காண்டீபன். எப்போதும் தலையைக் கலைத்து விடுகிறவன் இன்று அவள் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தான். அதில், கலங்காதே என்கிற செய்தி இருக்க, ஆதினியின் மனம் தானாக அமைதியடைந்தது.
“இந்த நல்லவன் கெட்டவன எத வச்சுத் தீர்மானிக்கிறது?” என்று நிதானமாக வினவினான்.
இந்தளவுக்கெல்லாம் அவள் எங்கே யோசித்தாள்? பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள்.
“எல்லாருக்கும் நல்லவனா இருக்கிற வரம் எல்லாருக்கும் கிடைக்கிறேல்ல ஆதினி. எனக்கும் கிடைக்கேல்ல.”
அதைச் சொல்லும்போது அவன் குரலில் என்ன இருந்தது? அதைக் கண்டு பிடிக்கவும் அவளுக்குத் தெரியவில்லை. விழிகளில் பெரும் குழப்பம்.
அவன் மனம் கனிந்து போயிற்று. இந்த உலகத்தின் கொடூர முகத்தை அறியாதவள். அவள் கடந்து வந்த பாதையில் சூறாவளியோ, சுழற்றி அடிக்கும் காற்றோ வீசியதே இல்லை.
கூடப்பிறந்த தமையன் முதன் முறையாகக் கையை நீட்டியதற்கும், நெருங்கிப் பழகியவர்கள் விட்ட நான்கு வார்த்தைகளிலும் மனமுடைந்து, வெறுப்பின் விளிம்பில் ஓடிப்போய் நிற்கிறவளுக்கு, அவன் சொல்வதில் இருக்கும் உள்ளர்த்தம் விளங்கப்போவதில்லை.
ஆதூரத்துடன் அவள் கரம் பற்றி அழுத்திக்கொடுத்துவிட்டு, “நிறைய யோசிக்காத. உனக்கு நான் எண்டைக்கும் நல்லவன்தான், சரியா? சரி சொல்லு, என்னவாம் உன்ர எல்லாளன்?” என்று பேச்சை மாற்றினான்.
“அவர் ஒண்டும் என்ர எல்லாளன் இல்ல!” கடுப்புடன் வந்தது பதில்.
“இத அவனிட்டச் சொல்லி இருக்கிறியா?”
“ஏன், எனக்கென்ன பயமா? எப்பவோ சொல்லிட்டன்.” அலட்சியமாகத் தலையைச் சிலுப்பிக்கொண்டு சொன்னாள்.
“ஓ! அதுக்கு அவன் என்ன சொன்னவன்?”
அந்தக் கேள்வி அவன் ரோல்ஸைத் திணித்ததை நினைவூட்டி அவள் முகத்தைச் சூடாக்கிற்று.
அவளையே குறுகுறு என்று பார்த்துக்கொண்டு இருந்தவன், “என்னவோ வில்லங்கமாச் சொல்லியிருக்கிறான் போலயே!” என்றான் கேலி இழையோடும் உரலில்.
“சேர், நீங்க ஒரு வாத்தி. எழும்பிப் போய்ப் பாடம் எடுக்கிற வேலையப் பாருங்க. போங்க!” முகம் சிவக்கப் பொய்க் கோபத்துடன் துரத்தினாள்.
அவன் உதட்டோரத்தில் மெல்லிய முறுவல்.
“சேர்ர்ர்ர்ர்ர்...”
“சரிசரி விடு! உன்ர ரகசியம் உன்னட்டையே இருக்கட்டும். இப்ப சொல்லு, என்ன நடந்தது?” என்று கேட்டு, அஜயைப் பற்றித் தெரிந்துகொண்டான்.
அவள் மனது ஏன் குழம்பி இருக்கிறது என்று விளங்கிற்று. அதில், “அவனைப் பற்றி நிறைய யோசிக்காத. அவன் மட்டுமே இந்த உலகம் இல்ல. நிறைய நல்ல மனுசர் எங்களைச் சுத்தி இன்னும் இருக்கினம். என்ன, எப்பவும் கொஞ்சம் கவனமாவும் விழிப்பாவும் இரு, போதும்.” என்று சொன்னான்.
இப்போதும் அவளுக்கு அவன் சொன்னதன் முழுமையான அர்த்தம் பிடிபடவில்லை. அதில் உண்டான சலிப்புடன் எழுந்து, வாங்கிலில் இருந்த தன் பொருட்களைச் சேகரித்துக்கொண்டே, “என்னவோ தெரியா சேர். இனி ஆரையும் அவ்வளவு ஈசியா நம்புவனா தெரியாது. உங்களையும்தான்.” என்றாள்.
அவன் உதட்டினில் பொருள் விளங்காப் புன்னகை ஒன்று உதயமாயிற்று. ஒற்றைத் தலையசைப்பால் அவளைத் தன்னருகே அழைத்தான்.
வந்தவளிடம், அவள் கண்களையே பார்த்து, “கனவுல கூட இந்தக் குட்டிப் பிள்ளைக்கு ஒரு பாவமும் செய்ய மாட்டன். உனக்குத் தெரியாது, நீ எனக்கு எத்தினையோ வருசமாத் தணியாம இருந்த தாகத்தைத் தணிய வச்சுக்கொண்டு இருக்கிறாய். அதால, எந்தக் கவலையும் இல்லாமப் போ. நானே நினைச்சாக் கூட என்னால உனக்கு ஒரு தீமையச் செய்யேலாது.” என்றான், அவள் மனதை வருடும் பட்டுப் போன்ற மென் குரலில்.
ஆதினியின் மனம், மந்திரத்துக்குக் கட்டுண்டது போன்று அவன் வார்த்தைகளில் கட்டுண்டு நின்றது. அவன் சொன்னதற்குத் தலையசைத்துவிட்டுப் புறப்பட்டாள்.
கேட்டவள் போய்விட்டாள்.