அத்தியாயம் 21
இருள் பரவ ஆரம்பித்த வேளையில்தான் வீட்டுக்கு வந்தான் காண்டீபன். அவன் முகமே சரியில்லை. யாரோடும் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று அடைந்துகொண்டான்.
“தம்பி ஏனம்மா ஒரு மாதிரி இருக்கிறான்?” தன்னிடம் கூட ஒரு வார்த்தை பேசாமல் சென்ற மகனைக் கவனித்துவிட்டு வினவினார் சம்மந்தன்.
“என்ன எண்டு எனக்கும் தெரியேல்ல மாமா. இருட்டுது, எங்க நிக்கிறீங்க எண்டு கேட்டு கோல் பண்ணின பிறகுதான் இப்பவும் வந்திருக்கிறார்.” என்றவளுக்கும் என்னவோ என்கிற யோசனைதான்.
பகலும் சாப்பிட வரவில்லை. கேட்டதற்கு வெளியே பார்த்துக்கொண்டதாகச் சொல்லியிருந்தான். இப்போது முகமும் சரியில்லை.
இப்படி ஓடிய யோசனைகளோடு அவனுக்குப் பிடித்த ஏலக்காய்த் தேநீரைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.
காண்டீபனின் மனம் ஒரு நிலையில் நில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தது. சிலவற்றை அவன் நினைப்பதே இல்லை. தன் மனத்தை மிக இறுக்கமாகப் பூட்டி வைத்திருப்பான். இன்றைக்குப் பார்த்த புகைப்படங்கள் அதை உடைத்துப் போட்டிருந்தன.
என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் சுழன்றடித்தன; விரும்பத்தகாத காட்சிகள் எல்லாம் விரிந்தன. காலம் ஆடிய கோரத் தாண்டவத்தில் வதைபட்டுப் போன நிகழ்வுகள் எல்லாம், அவன் தொண்டைக் குழியை நசித்தன.
அத்தனையையும் இறுக்கி மூடிய விழிகளுக்குள் அடக்கி, ஆழ் மனத்துக்குள் புதைக்க முயன்றான். வெற்றி கிட்ட மாட்டேன் என்றது.
ஆதினியிடம் அவன் சொன்னதெல்லாம் முழுப் பொய். மிதிலாவின் அன்னைக்கு எந்த வருத்தமும் இல்லை. அடுத்த அறையில் நிம்மதியான உறக்கத்தில் இருக்கிறார் அவர்.
அவனால் அவர்கள் முன்னே சென்று நிற்க முடியாது. அவர்கள் வாழ்வது அழகான கூடுகளில். சிதைந்து போன சித்திரத்துக்கு அங்கென்ன அலுவல்? அவனுக்கான சாபங்கள் அவனோடே முடியட்டும்.
மிதிலா ஏலக்காய்த் தேநீரோடு அறைக்குள் போனபோது,
அணிந்திருந்த உடையைக் கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் விழுந்திருந்தான் காண்டீபன்.
அவள் வந்ததைக் கூட உணர்ந்தாற்போல் தெரியவில்லை.
அப்படி அவன் படுத்திருப்பது அவளை இன்னுமே கவலைக்குள்ளாக்கியது. அந்த வீட்டின் ஆணிவேரே அவன்தான். அவர்களை எல்லாம் ஆலமரமாகத் தாங்குகிறவனும் அவன்தான்.
தன் சிரிப்பால், கேலியால், சீண்டலால் அவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பவன். அங்கிருந்த மேசையில் கோப்பையை வைத்துவிட்டுச் சென்று அவனருகில் அமர்ந்தாள்.
அவளை அவன் உணராமல் இருக்கப் போவதில்லை. இருந்தும் முகத்தில் இருந்த கையைக் கூட விலக்கவில்லை. என்னவோ?
“தீபன், ஏன் இந்த நேரம் படுத்திருக்கிறீங்க?”
அவனிடம் பதில் இல்லை.
“தீபன்?”
விழிகளைத் திறந்து பார்த்தான்.
“என்னப்பா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” எப்போதும் சீண்டிச் சிரிக்கும் அந்த விழிகளில் தெரிந்த அலைப்புறுதலில் இவள் மனது கலங்கிப் போயிற்று.
ஒன்றும் சொல்லாமல் அவள் கையைப் பற்றி இழுத்தான் அவன். மார்பில் வந்து விழுந்தவளை அப்படியே வளைத்துத் திருப்ப, கட்டிலின் மறு பக்கத்துக்கு வந்து சேர்ந்தாள் மிதிலா. என்ன நடக்கிறது என்று அவள் உணரும் முன்னேயே, இறுக்கி அணைத்து அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்திருந்தான் அவன்.
“தீபன்?” பயமும் பதற்றமுமாக அழைத்தாள்.
“நீ வேணும் எனக்கு!” கரகரத்து வந்தது அவன் குரல்.
மிதிலாவின் அத்தனை அசைவுகளும் நின்று போயின. அணைப்பும் முத்தங்களும் அவர்களுக்குள் இருப்பதுதான். தன் ஆசையையும் மறைமுகமாகச் சொல்லுவான்தான். ஆனால், இந்த நேரடி வேண்டுதல்? இது புதிது.
அவன் முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்க்க முயன்றாள். அதற்கு மறுத்தபடி இன்னுமின்னும் அவளுக்குள் புதைத்தான் அவன்.
அவளும் விடவில்லை. “நீங்க முதல் என்னைப் பாருங்கோ. என்ன பிரச்சினை எண்டு சொல்லுங்கோ?” அவன் முகத்தைத் தாங்கித் தன்னைப் பார்க்க வைத்தபடி வினவினாள்.
“நிம்மதி வேணும். அமைதி வேணும். அதுக்கு எனக்கு நீ வேணும் மிதிலா. தரமாட்டியா?” இப்போது அவள் முகம் பார்த்தே வினவினான் அவன்.
திகைப்புடன் பார்த்தாள் மிதிலா. அவன் சுயத்தில் இல்லை; எதையோ எண்ணி அலைபாய்கிறான்; அவன் மனதுக்குள் பெரும் சூறாவளி வீசுகிறது என்று, தவிப்புடன் அவளிடம் படிந்திருந்த விழிகள் காட்டிக்கொடுத்தன. அப்படியிருக்க எப்படி மறுப்பாள்? சின்ன விம்மலோடு அவனைத் தன் மார்பில் சேர்த்தாள்.
அதற்காகவே ஏங்கிப்போயிருந்தவன் அவளை அள்ளியணைத்து ஆரத்தழுவி முகமெங்கும் முத்தமிட்டான். இதழோடு இதழ் பொருத்தினான்.
அவள் சூறாவளிக்குள் சிக்குண்டுவிட்ட சிறு இறகாகிப்போனாள். அவன் கைகளில் குழைந்து, வளைந்து, கடைசியில் கரைந்தேபோனாள்.
அவளின் இணக்கம் அவனை ஆட்டிப்படைத்த அத்தனை அலைப்புறுதல்களையும் மறக்கடித்தது. அவள் மாத்திரமே அவன் உலகமானாள். அந்த உலகத்துக்குள் தன்னை மொத்தமாகத் தொலைத்தான்.
சூழ்ந்துவிட்ட இருளும் தொந்தரவற்ற பொழுதும் அவர்களுக்குக் கை கொடுத்தது. அவளிடமிருந்து அவன் விலகியபோது, அடித்து ஓய்ந்த சூறாவளிக் காற்றைப் போன்று, அவன் மனமும் ஒரு நிலைக்கு வந்து சேர்ந்திருந்தது.
மிதிலாவின் மனதிலும் பெருத்த அமைதி. அதுநாள் வரையில் அவளைப் போட்டு மருட்டிய அர்த்தமற்ற பயங்கள் எல்லாம் காணாமல் போயிருந்தன. இவ்வளவு காலமும் அவளைச் சூழ்ந்திருந்த வெறுமை அகன்று, இன்றைக்கு நிறைவாக உணர்ந்தாள்.
இதற்கா நானும் பயந்து அவனையும் தவிக்கவிட்டோம் என்று நினைக்கையில், உதட்டினில் சின்ன சிரிப்புக் கூட முகிழ்த்தது.
அந்தச் சிரிப்புடனேயே விழிகளை மாத்திரம் உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவன் முகத்திலும் அவள் காண ஆசைப்பட்ட அமைதி தெரிந்தது. ஆசையோடு அவன் கன்னம் வருடினாள்.
கொஞ்ச நேரம் விழிகளை மூடி அதை அனுபவித்தவன் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான். இருவர் பார்வையும் விலகாமல் கலந்தன.
அவள் புறமாகச் சரிந்து நெற்றியில் முத்தமிட்டு, “கோபம் இல்லையே?” என்று வினவினான் காண்டீபன்.
தலையை மறுப்பாக அசைத்துவிட்டு, “வெளில போறத இணைக்க வெக்கமா இருக்கு. மாமா என்ன நினைப்பார்?” என்றாள் அவள்.
இதுவரையில் இவ்வளவு நேரத்தை அவர்கள் இருவரும் மட்டுமாகத் தனியறையில் செலவழித்ததில்லை. அதுவே, அவர்களுக்குள் நடந்ததை அவரிடம் சொல்லிவிடுமோ என்று வெட்கினாள்.
அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு உண்டாயிற்று. “இப்ப தெரியாட்டியும் இனி இது அடிக்கடி நடக்கேக்க தெரிய வரத்தானே போகுது. அதால இதையெல்லாம் யோசிக்காத.” என்றான் அவன்.
எதிர்காலத்தைக் கோடிட்டுக் காட்டுகிறானா? வெட்கமும் சிரிப்பும் சேர்ந்து வர இன்னும் அவனுக்குள் ஒன்றினாள்.
நிமிடங்கள் சில கழிந்தும் அவன் அமைதியாகவே இருக்கக் கண்டு, “திரும்ப என்ன யோசிக்கிறீங்க?” என்று வினவினாள் மிதிலா.
“இப்போதைக்குப் பிள்ள வேண்டாம் மிது. கொஞ்ச நாள் போகட்டும். அவசரம் ஒண்டும் இல்லையே!”
அதைப்பற்றியெல்லாம் அவள் எங்கே யோசித்தாள்? அதில், “உங்கட விருப்பம்.” என்றாள்.
*****
அன்று காண்டீபனின் வகுப்புக்குச் சாகித்தியன் வரவில்லை. இது முதல் முறையுமன்று. கடந்த இரண்டு வாரங்களாக மற்ற வகுப்புகளில் இருப்பவன் காண்டீபனின் வகுப்பை மாத்திரம் தவிர்க்க ஆரம்பித்திருந்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால், அஜயை வவுனியா பல்கலைக்கு இவன் சேர்த்துவிட்டதிலிருந்து இப்படித்தான்.
அன்று, இவன் வகுப்பு ஆரம்பிக்க முதல் அங்கிருந்து வெளியேறியவனைக் காத்திருந்து பிடித்தான் காண்டீபன்.
“உமக்கு என்னில என்ன கோபம்?”
காண்டீபன் சாகித்தியனின் மிகுந்த மரியாதைக்குரிய விரிவுரையாளன். அவனிடம் நேரடியாகத் தன் கோபத்தைக் காட்ட முடியாமல்தான் இத்தனை நாள்களாகத் தவிர்த்துக்கொண்டிருந்தான். இன்று, அவனே பிடித்து வைத்துக் கேட்கையில் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று.
அதில், “நீங்க செய்தது சரியா சேர்? போலீசும் கோர்ட்டும் எங்களுக்கு நியாயமா நடக்கேல்ல எண்டு பாத்தா, நீங்களும் இப்பிடிச் செய்யலாமா சேர்?” என்று குமுறினான்.
இருள் பரவ ஆரம்பித்த வேளையில்தான் வீட்டுக்கு வந்தான் காண்டீபன். அவன் முகமே சரியில்லை. யாரோடும் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று அடைந்துகொண்டான்.
“தம்பி ஏனம்மா ஒரு மாதிரி இருக்கிறான்?” தன்னிடம் கூட ஒரு வார்த்தை பேசாமல் சென்ற மகனைக் கவனித்துவிட்டு வினவினார் சம்மந்தன்.
“என்ன எண்டு எனக்கும் தெரியேல்ல மாமா. இருட்டுது, எங்க நிக்கிறீங்க எண்டு கேட்டு கோல் பண்ணின பிறகுதான் இப்பவும் வந்திருக்கிறார்.” என்றவளுக்கும் என்னவோ என்கிற யோசனைதான்.
பகலும் சாப்பிட வரவில்லை. கேட்டதற்கு வெளியே பார்த்துக்கொண்டதாகச் சொல்லியிருந்தான். இப்போது முகமும் சரியில்லை.
இப்படி ஓடிய யோசனைகளோடு அவனுக்குப் பிடித்த ஏலக்காய்த் தேநீரைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.
காண்டீபனின் மனம் ஒரு நிலையில் நில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தது. சிலவற்றை அவன் நினைப்பதே இல்லை. தன் மனத்தை மிக இறுக்கமாகப் பூட்டி வைத்திருப்பான். இன்றைக்குப் பார்த்த புகைப்படங்கள் அதை உடைத்துப் போட்டிருந்தன.
என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் சுழன்றடித்தன; விரும்பத்தகாத காட்சிகள் எல்லாம் விரிந்தன. காலம் ஆடிய கோரத் தாண்டவத்தில் வதைபட்டுப் போன நிகழ்வுகள் எல்லாம், அவன் தொண்டைக் குழியை நசித்தன.
அத்தனையையும் இறுக்கி மூடிய விழிகளுக்குள் அடக்கி, ஆழ் மனத்துக்குள் புதைக்க முயன்றான். வெற்றி கிட்ட மாட்டேன் என்றது.
ஆதினியிடம் அவன் சொன்னதெல்லாம் முழுப் பொய். மிதிலாவின் அன்னைக்கு எந்த வருத்தமும் இல்லை. அடுத்த அறையில் நிம்மதியான உறக்கத்தில் இருக்கிறார் அவர்.
அவனால் அவர்கள் முன்னே சென்று நிற்க முடியாது. அவர்கள் வாழ்வது அழகான கூடுகளில். சிதைந்து போன சித்திரத்துக்கு அங்கென்ன அலுவல்? அவனுக்கான சாபங்கள் அவனோடே முடியட்டும்.
மிதிலா ஏலக்காய்த் தேநீரோடு அறைக்குள் போனபோது,
அணிந்திருந்த உடையைக் கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் விழுந்திருந்தான் காண்டீபன்.
அவள் வந்ததைக் கூட உணர்ந்தாற்போல் தெரியவில்லை.
அப்படி அவன் படுத்திருப்பது அவளை இன்னுமே கவலைக்குள்ளாக்கியது. அந்த வீட்டின் ஆணிவேரே அவன்தான். அவர்களை எல்லாம் ஆலமரமாகத் தாங்குகிறவனும் அவன்தான்.
தன் சிரிப்பால், கேலியால், சீண்டலால் அவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பவன். அங்கிருந்த மேசையில் கோப்பையை வைத்துவிட்டுச் சென்று அவனருகில் அமர்ந்தாள்.
அவளை அவன் உணராமல் இருக்கப் போவதில்லை. இருந்தும் முகத்தில் இருந்த கையைக் கூட விலக்கவில்லை. என்னவோ?
“தீபன், ஏன் இந்த நேரம் படுத்திருக்கிறீங்க?”
அவனிடம் பதில் இல்லை.
“தீபன்?”
விழிகளைத் திறந்து பார்த்தான்.
“என்னப்பா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” எப்போதும் சீண்டிச் சிரிக்கும் அந்த விழிகளில் தெரிந்த அலைப்புறுதலில் இவள் மனது கலங்கிப் போயிற்று.
ஒன்றும் சொல்லாமல் அவள் கையைப் பற்றி இழுத்தான் அவன். மார்பில் வந்து விழுந்தவளை அப்படியே வளைத்துத் திருப்ப, கட்டிலின் மறு பக்கத்துக்கு வந்து சேர்ந்தாள் மிதிலா. என்ன நடக்கிறது என்று அவள் உணரும் முன்னேயே, இறுக்கி அணைத்து அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்திருந்தான் அவன்.
“தீபன்?” பயமும் பதற்றமுமாக அழைத்தாள்.
“நீ வேணும் எனக்கு!” கரகரத்து வந்தது அவன் குரல்.
மிதிலாவின் அத்தனை அசைவுகளும் நின்று போயின. அணைப்பும் முத்தங்களும் அவர்களுக்குள் இருப்பதுதான். தன் ஆசையையும் மறைமுகமாகச் சொல்லுவான்தான். ஆனால், இந்த நேரடி வேண்டுதல்? இது புதிது.
அவன் முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்க்க முயன்றாள். அதற்கு மறுத்தபடி இன்னுமின்னும் அவளுக்குள் புதைத்தான் அவன்.
அவளும் விடவில்லை. “நீங்க முதல் என்னைப் பாருங்கோ. என்ன பிரச்சினை எண்டு சொல்லுங்கோ?” அவன் முகத்தைத் தாங்கித் தன்னைப் பார்க்க வைத்தபடி வினவினாள்.
“நிம்மதி வேணும். அமைதி வேணும். அதுக்கு எனக்கு நீ வேணும் மிதிலா. தரமாட்டியா?” இப்போது அவள் முகம் பார்த்தே வினவினான் அவன்.
திகைப்புடன் பார்த்தாள் மிதிலா. அவன் சுயத்தில் இல்லை; எதையோ எண்ணி அலைபாய்கிறான்; அவன் மனதுக்குள் பெரும் சூறாவளி வீசுகிறது என்று, தவிப்புடன் அவளிடம் படிந்திருந்த விழிகள் காட்டிக்கொடுத்தன. அப்படியிருக்க எப்படி மறுப்பாள்? சின்ன விம்மலோடு அவனைத் தன் மார்பில் சேர்த்தாள்.
அதற்காகவே ஏங்கிப்போயிருந்தவன் அவளை அள்ளியணைத்து ஆரத்தழுவி முகமெங்கும் முத்தமிட்டான். இதழோடு இதழ் பொருத்தினான்.
அவள் சூறாவளிக்குள் சிக்குண்டுவிட்ட சிறு இறகாகிப்போனாள். அவன் கைகளில் குழைந்து, வளைந்து, கடைசியில் கரைந்தேபோனாள்.
அவளின் இணக்கம் அவனை ஆட்டிப்படைத்த அத்தனை அலைப்புறுதல்களையும் மறக்கடித்தது. அவள் மாத்திரமே அவன் உலகமானாள். அந்த உலகத்துக்குள் தன்னை மொத்தமாகத் தொலைத்தான்.
சூழ்ந்துவிட்ட இருளும் தொந்தரவற்ற பொழுதும் அவர்களுக்குக் கை கொடுத்தது. அவளிடமிருந்து அவன் விலகியபோது, அடித்து ஓய்ந்த சூறாவளிக் காற்றைப் போன்று, அவன் மனமும் ஒரு நிலைக்கு வந்து சேர்ந்திருந்தது.
மிதிலாவின் மனதிலும் பெருத்த அமைதி. அதுநாள் வரையில் அவளைப் போட்டு மருட்டிய அர்த்தமற்ற பயங்கள் எல்லாம் காணாமல் போயிருந்தன. இவ்வளவு காலமும் அவளைச் சூழ்ந்திருந்த வெறுமை அகன்று, இன்றைக்கு நிறைவாக உணர்ந்தாள்.
இதற்கா நானும் பயந்து அவனையும் தவிக்கவிட்டோம் என்று நினைக்கையில், உதட்டினில் சின்ன சிரிப்புக் கூட முகிழ்த்தது.
அந்தச் சிரிப்புடனேயே விழிகளை மாத்திரம் உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவன் முகத்திலும் அவள் காண ஆசைப்பட்ட அமைதி தெரிந்தது. ஆசையோடு அவன் கன்னம் வருடினாள்.
கொஞ்ச நேரம் விழிகளை மூடி அதை அனுபவித்தவன் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான். இருவர் பார்வையும் விலகாமல் கலந்தன.
அவள் புறமாகச் சரிந்து நெற்றியில் முத்தமிட்டு, “கோபம் இல்லையே?” என்று வினவினான் காண்டீபன்.
தலையை மறுப்பாக அசைத்துவிட்டு, “வெளில போறத இணைக்க வெக்கமா இருக்கு. மாமா என்ன நினைப்பார்?” என்றாள் அவள்.
இதுவரையில் இவ்வளவு நேரத்தை அவர்கள் இருவரும் மட்டுமாகத் தனியறையில் செலவழித்ததில்லை. அதுவே, அவர்களுக்குள் நடந்ததை அவரிடம் சொல்லிவிடுமோ என்று வெட்கினாள்.
அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு உண்டாயிற்று. “இப்ப தெரியாட்டியும் இனி இது அடிக்கடி நடக்கேக்க தெரிய வரத்தானே போகுது. அதால இதையெல்லாம் யோசிக்காத.” என்றான் அவன்.
எதிர்காலத்தைக் கோடிட்டுக் காட்டுகிறானா? வெட்கமும் சிரிப்பும் சேர்ந்து வர இன்னும் அவனுக்குள் ஒன்றினாள்.
நிமிடங்கள் சில கழிந்தும் அவன் அமைதியாகவே இருக்கக் கண்டு, “திரும்ப என்ன யோசிக்கிறீங்க?” என்று வினவினாள் மிதிலா.
“இப்போதைக்குப் பிள்ள வேண்டாம் மிது. கொஞ்ச நாள் போகட்டும். அவசரம் ஒண்டும் இல்லையே!”
அதைப்பற்றியெல்லாம் அவள் எங்கே யோசித்தாள்? அதில், “உங்கட விருப்பம்.” என்றாள்.
*****
அன்று காண்டீபனின் வகுப்புக்குச் சாகித்தியன் வரவில்லை. இது முதல் முறையுமன்று. கடந்த இரண்டு வாரங்களாக மற்ற வகுப்புகளில் இருப்பவன் காண்டீபனின் வகுப்பை மாத்திரம் தவிர்க்க ஆரம்பித்திருந்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால், அஜயை வவுனியா பல்கலைக்கு இவன் சேர்த்துவிட்டதிலிருந்து இப்படித்தான்.
அன்று, இவன் வகுப்பு ஆரம்பிக்க முதல் அங்கிருந்து வெளியேறியவனைக் காத்திருந்து பிடித்தான் காண்டீபன்.
“உமக்கு என்னில என்ன கோபம்?”
காண்டீபன் சாகித்தியனின் மிகுந்த மரியாதைக்குரிய விரிவுரையாளன். அவனிடம் நேரடியாகத் தன் கோபத்தைக் காட்ட முடியாமல்தான் இத்தனை நாள்களாகத் தவிர்த்துக்கொண்டிருந்தான். இன்று, அவனே பிடித்து வைத்துக் கேட்கையில் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று.
அதில், “நீங்க செய்தது சரியா சேர்? போலீசும் கோர்ட்டும் எங்களுக்கு நியாயமா நடக்கேல்ல எண்டு பாத்தா, நீங்களும் இப்பிடிச் செய்யலாமா சேர்?” என்று குமுறினான்.