அத்தியாயம் 34
ஆதினியின் வீடு நோக்கி ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்தான் கதிரவன். அவனருகில் அமர்ந்திருந்த எல்லாளனின் னென்றியில் சிந்தனை ரேககைகள் படர்ந்திருக்க, புருவங்கள் சுழித்திருந்தன; முகத்தில் பெரும் இறுக்கம். எதைக் குறித்துச் சிந்திக்கிறான் என்கிற சின்ன அனுமானம் கதிரவனுக்கு இருந்தது.
சற்று நேரம் அமைதியாகவே வாகனத்தைச் செலுத்திவிட்டு, “இதையே நாங்க காண்டீபன் சேருக்கும் செய்யலாம், சேர்.” என்று சொன்னான்.
கொஞ்சம் யோசித்துவிட்டு மறுப்பாகத் தலையை அசைத்தான் எல்லாளன்.
“சாகித்தியன்ர தாய் தகப்பனுக்கு அவனை விட்டா வேற ஆரும் இல்ல கதிரவன். அதைவிட, இது அவனா விரும்பிப் போன பாதை இல்ல. அவனைத் தூக்கி உள்ளுக்க போட்டா மொத்த எதிர்காலமும் பாழாப் போயிடும். குறைஞ்ச பட்சம் அஞ்சு வருசம் கடூழியத் தண்டனை கிடைக்கும். அப்பிடி நடந்தா அந்தத் தாய் தகப்பனுக்கு என்ன ஆகுமோ தெரியாது. அதாலதான் கரிசனையோடயும் மனிதாபிமானத்தோடயும் அவனை விட்டிருக்கிறன். காண்டீபன் அப்பிடி இல்ல. என்ன நடக்கும் எண்டு தெரிஞ்சே செய்திருக்கிறான். அவனுக்கும் இதையே நான் செய்தா, அதுக்குப் பின்னால இருக்கிறது, அவன் என்ர நண்பன் எண்டுற சுயநலம் மட்டும்தான். நாளைக்கு இதே மாதிரி மாட்டுற ஒருத்தனை மனம் முரண்டாம என்னால தண்டிக்கேலாமப் போயிடும். முக்கியமா காண்டீபனே இதுக்கு ஓம் எண்ட மாட்டான். எல்லாத்தையும் விட, கொஞ்ச நாளைக்கு அவன் உள்ளுக்கு இருக்கிறதுதான் நல்லம் போல இருக்கு!”
கடைசியாக அவன் சொன்னதன் பொருள் புரியாத போதும் விவரம் கேட்கப் போகவில்லை கதிரவன். சொல்ல நினைத்தால் நிச்சயம் சொல்வான் என்று தெரியும்.
இதற்குள் வீடு வந்திருந்தது. வாசலில் நின்றிருந்த இளந்திரையனின் வாகனம், அவர்களும் வந்துவிட்டதைச் சொல்லிற்று. புகையிரத நிலையத்துக்கே செல்லத்தான் எண்ணியிருந்தான். சாகித்தியன் வீடு சென்றிருந்ததில் நேரம் போயிருந்தது.
இவனை இறக்கி விட்டுவிட்டு அப்படியே புறப்படுகிறேன் என்று சொன்ன கதிரவனையும் இழுத்துக்கொண்டு வந்த எல்லாளனின் பார்வை, கருப்பு அங்கியை அணிந்து நின்றிருந்த ஆதினியைக் கண்டு, அவளிலேயே தங்கிற்று.
“வாங்கண்ணா, வாங்கோ!” இன்னும் தமையனைக் காணவில்லையே என்று, வாசலிலேயே கவனமாக இருந்த சியாமளாதான் இருவரையும் உள்ளே அழைத்தாள்.
அதில், வீட்டு வாசலுக்கு முதுகு காட்டி நின்றிருந்த அண்ணனும் தங்கையும் ஒன்றாகத் திரும்பிப் பார்த்தனர்.
“மச்சி, பாத்தியாடா என்ர தங்கச்சிய? லோயர் ஆகிட்டாள்.” அவள் தோளில் ஒரு கையைப் போட்டு அணைத்துக்கொண்டு, அளவற்ற பூரிப்பும் பெருமிதமுமாகச் சொன்னான் அகரன்.
அவன்தான் அந்த அங்கியை அணிய வைத்து அவளை அழகு பார்த்திருக்கிறான் என்று விளங்க, ‘வண்டு முருகனாக் கூட வரமாட்டாய்’ என்று தான் சொன்னது தனக்கே கேட்பது போலிருந்தது எல்லாளனுக்கு.
ஆதினிக்கும் அந்த நினைவு வந்திருக்க வேண்டும். அவள் பார்வை, ‘எப்படி?’ என்றது அவனிடம் சவாலாக.
அவ்வளவு நேரமாக அவனை அழுத்திக்கொண்டிருந்த அத்தனை பாரங்களும் அகல, இலேசாக அரும்பிய முறுவலை உதட்டுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு சென்று அமர்ந்தான் எல்லாளன்.
அவனுடனேயே வீட்டுக்குள் வந்த கதிரவன் அமரவில்லை. இளந்திரையனிடம், “ஹல்லோ சேர்!” என்றான் பணிவுடன்.
சிறு தலையசைப்புடன் அதை ஏற்றுக்கொண்டவர், “ஏன் நிக்கிறீங்க? இருங்கோ கதிரவன்.” என்று, தன் அருகில் இருந்த இருக்கையைக் காட்டினார்.
அதன் பிறகுதான் அமர்ந்தான் கதிரவன்.
ஆதினியும் அவனைப் பார்த்து முறுவலித்தாள்.
“எப்பிடி இருக்கிறீங்க கதிரவன்?”
“நான்... நான் நல்லாருக்கிறன் மேம். நீங்க?” அவள் இயல்பாகப் பேசியதும் கொஞ்சம் தடுமாறினான். கடைசியாகக் காவல் நிலையத்தில் வைத்துப் பார்த்தபோது நல்லபடியாக உபசரிக்காமல் விட்டது வேறு நினைவில் வந்து நின்றது.
அவளுக்கு அதெல்லாம் நினைவில் இல்லை போலும். இன்முகமாகவே இரண்டொரு வார்த்தைகள் கதைத்தாள்.
இளந்திரையனோடு பயணம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தாலும், மற்றவரின் கவனத்தை ஈர்க்காத வகையில், அவளைத்தான் கவனித்துக்கொண்டிருந்தான் எல்லாளன்.
ஸ்டேஷனுக்கு வராத கோபத்தில் தன்னைப் பார்ப்பதையும் தன்னோடான பேச்சையும் அவள் கவனமெடுத்துத் தவிர்ப்பது நன்றாகத் தெரிந்தது.
அப்போது சமநல நாயக்க அவள் ஸ்கூட்டியை கொண்டுவந்து வாசலில் நிறுத்தினார். அதைக் கண்ட அகரன், “ஆதிம்மா, பாத்தியா உன்ர சிலுக்க. நீ வர அதுவும் சேவிசுக்கு போயிட்டு வந்திட்டுது.” என்றான் உற்சாகமாக.
ஆதினி அவசரமாக எல்லாளனைத்தான் திரும்பிப் பார்த்தாள். அவன் உதட்டில் மலர்ந்திருந்த விசமச் சிரிப்பைக் கண்டு, கண்ணாலேயே முறைத்தவளுக்கு முகம் சூடாகிப் போவதைத் தவிர்க்கவே முடியாமல் போயிற்று.
வீட்டுப் பெண்ணாக எல்லோரையும் உணவுண்ண அழைத்தாள் சியாமளா. பயணம் செய்த களைப்பில் இப்போது தனக்கு ஒன்றும் வேண்டாம் என்று இளந்திரையன் ஓய்வெடுக்கச் சென்றுவிட, “நான் சாப்பிட்டனமா. நீ கதிரவனுக்குக் குடு.” என்றான் எல்லாளன்.
நிறைய நாள்களுக்குப் பிறகு எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்கள். நடுவில் நந்தியாக நிற்க வேண்டாம் என்றெண்ணி மறுத்துவிட்டுப் புறப்பட ஆயத்தமான கதிரவனை அகரன் விடவில்லை.
“நீயும் பிரெஷ் ஆகிக்கொண்டு வாவன் ஆதி. எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம்.” என்றாள் சியாமளா.
சரி என்றுவிட்டுப் போனவளுக்கு அவசரமாகக் கீழே வரும் எண்ணமே இல்லை.
களை தீரக் குளித்துவிட்டுக் கட்டிலில் சரிந்தாள். என் வீட்டில், என் அறையில், என் கட்டிலில் இருக்கிறேன் எனும் உணர்வே மனத்துக்குப் பெரும் உவகையைத் தந்தது.
அப்போது, “அத்த...” என்றபடி வந்தாள் மகிழினி.
நிற்சிந்தையாகக் கட்டிலில் சரிந்திருந்தவள் திரும்பிப் பார்த்தாள். அச்சு அசல் தமையனின் வார்ப்பில், கதவு நிலையைப் பற்றியபடி நின்றிருந்தாள் அவள். பார்த்தவளின் நெஞ்சினில் பாசம் சுரந்தது.
“அம்முக்குட்டி, ஏன் அங்கேயே நிக்கிறீங்க? அத்தேட்ட வாங்க!” என்றபடி எழுந்து அமர்ந்தாள்.
ஆதினியின் வீடு நோக்கி ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்தான் கதிரவன். அவனருகில் அமர்ந்திருந்த எல்லாளனின் னென்றியில் சிந்தனை ரேககைகள் படர்ந்திருக்க, புருவங்கள் சுழித்திருந்தன; முகத்தில் பெரும் இறுக்கம். எதைக் குறித்துச் சிந்திக்கிறான் என்கிற சின்ன அனுமானம் கதிரவனுக்கு இருந்தது.
சற்று நேரம் அமைதியாகவே வாகனத்தைச் செலுத்திவிட்டு, “இதையே நாங்க காண்டீபன் சேருக்கும் செய்யலாம், சேர்.” என்று சொன்னான்.
கொஞ்சம் யோசித்துவிட்டு மறுப்பாகத் தலையை அசைத்தான் எல்லாளன்.
“சாகித்தியன்ர தாய் தகப்பனுக்கு அவனை விட்டா வேற ஆரும் இல்ல கதிரவன். அதைவிட, இது அவனா விரும்பிப் போன பாதை இல்ல. அவனைத் தூக்கி உள்ளுக்க போட்டா மொத்த எதிர்காலமும் பாழாப் போயிடும். குறைஞ்ச பட்சம் அஞ்சு வருசம் கடூழியத் தண்டனை கிடைக்கும். அப்பிடி நடந்தா அந்தத் தாய் தகப்பனுக்கு என்ன ஆகுமோ தெரியாது. அதாலதான் கரிசனையோடயும் மனிதாபிமானத்தோடயும் அவனை விட்டிருக்கிறன். காண்டீபன் அப்பிடி இல்ல. என்ன நடக்கும் எண்டு தெரிஞ்சே செய்திருக்கிறான். அவனுக்கும் இதையே நான் செய்தா, அதுக்குப் பின்னால இருக்கிறது, அவன் என்ர நண்பன் எண்டுற சுயநலம் மட்டும்தான். நாளைக்கு இதே மாதிரி மாட்டுற ஒருத்தனை மனம் முரண்டாம என்னால தண்டிக்கேலாமப் போயிடும். முக்கியமா காண்டீபனே இதுக்கு ஓம் எண்ட மாட்டான். எல்லாத்தையும் விட, கொஞ்ச நாளைக்கு அவன் உள்ளுக்கு இருக்கிறதுதான் நல்லம் போல இருக்கு!”
கடைசியாக அவன் சொன்னதன் பொருள் புரியாத போதும் விவரம் கேட்கப் போகவில்லை கதிரவன். சொல்ல நினைத்தால் நிச்சயம் சொல்வான் என்று தெரியும்.
இதற்குள் வீடு வந்திருந்தது. வாசலில் நின்றிருந்த இளந்திரையனின் வாகனம், அவர்களும் வந்துவிட்டதைச் சொல்லிற்று. புகையிரத நிலையத்துக்கே செல்லத்தான் எண்ணியிருந்தான். சாகித்தியன் வீடு சென்றிருந்ததில் நேரம் போயிருந்தது.
இவனை இறக்கி விட்டுவிட்டு அப்படியே புறப்படுகிறேன் என்று சொன்ன கதிரவனையும் இழுத்துக்கொண்டு வந்த எல்லாளனின் பார்வை, கருப்பு அங்கியை அணிந்து நின்றிருந்த ஆதினியைக் கண்டு, அவளிலேயே தங்கிற்று.
“வாங்கண்ணா, வாங்கோ!” இன்னும் தமையனைக் காணவில்லையே என்று, வாசலிலேயே கவனமாக இருந்த சியாமளாதான் இருவரையும் உள்ளே அழைத்தாள்.
அதில், வீட்டு வாசலுக்கு முதுகு காட்டி நின்றிருந்த அண்ணனும் தங்கையும் ஒன்றாகத் திரும்பிப் பார்த்தனர்.
“மச்சி, பாத்தியாடா என்ர தங்கச்சிய? லோயர் ஆகிட்டாள்.” அவள் தோளில் ஒரு கையைப் போட்டு அணைத்துக்கொண்டு, அளவற்ற பூரிப்பும் பெருமிதமுமாகச் சொன்னான் அகரன்.
அவன்தான் அந்த அங்கியை அணிய வைத்து அவளை அழகு பார்த்திருக்கிறான் என்று விளங்க, ‘வண்டு முருகனாக் கூட வரமாட்டாய்’ என்று தான் சொன்னது தனக்கே கேட்பது போலிருந்தது எல்லாளனுக்கு.
ஆதினிக்கும் அந்த நினைவு வந்திருக்க வேண்டும். அவள் பார்வை, ‘எப்படி?’ என்றது அவனிடம் சவாலாக.
அவ்வளவு நேரமாக அவனை அழுத்திக்கொண்டிருந்த அத்தனை பாரங்களும் அகல, இலேசாக அரும்பிய முறுவலை உதட்டுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு சென்று அமர்ந்தான் எல்லாளன்.
அவனுடனேயே வீட்டுக்குள் வந்த கதிரவன் அமரவில்லை. இளந்திரையனிடம், “ஹல்லோ சேர்!” என்றான் பணிவுடன்.
சிறு தலையசைப்புடன் அதை ஏற்றுக்கொண்டவர், “ஏன் நிக்கிறீங்க? இருங்கோ கதிரவன்.” என்று, தன் அருகில் இருந்த இருக்கையைக் காட்டினார்.
அதன் பிறகுதான் அமர்ந்தான் கதிரவன்.
ஆதினியும் அவனைப் பார்த்து முறுவலித்தாள்.
“எப்பிடி இருக்கிறீங்க கதிரவன்?”
“நான்... நான் நல்லாருக்கிறன் மேம். நீங்க?” அவள் இயல்பாகப் பேசியதும் கொஞ்சம் தடுமாறினான். கடைசியாகக் காவல் நிலையத்தில் வைத்துப் பார்த்தபோது நல்லபடியாக உபசரிக்காமல் விட்டது வேறு நினைவில் வந்து நின்றது.
அவளுக்கு அதெல்லாம் நினைவில் இல்லை போலும். இன்முகமாகவே இரண்டொரு வார்த்தைகள் கதைத்தாள்.
இளந்திரையனோடு பயணம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தாலும், மற்றவரின் கவனத்தை ஈர்க்காத வகையில், அவளைத்தான் கவனித்துக்கொண்டிருந்தான் எல்லாளன்.
ஸ்டேஷனுக்கு வராத கோபத்தில் தன்னைப் பார்ப்பதையும் தன்னோடான பேச்சையும் அவள் கவனமெடுத்துத் தவிர்ப்பது நன்றாகத் தெரிந்தது.
அப்போது சமநல நாயக்க அவள் ஸ்கூட்டியை கொண்டுவந்து வாசலில் நிறுத்தினார். அதைக் கண்ட அகரன், “ஆதிம்மா, பாத்தியா உன்ர சிலுக்க. நீ வர அதுவும் சேவிசுக்கு போயிட்டு வந்திட்டுது.” என்றான் உற்சாகமாக.
ஆதினி அவசரமாக எல்லாளனைத்தான் திரும்பிப் பார்த்தாள். அவன் உதட்டில் மலர்ந்திருந்த விசமச் சிரிப்பைக் கண்டு, கண்ணாலேயே முறைத்தவளுக்கு முகம் சூடாகிப் போவதைத் தவிர்க்கவே முடியாமல் போயிற்று.
வீட்டுப் பெண்ணாக எல்லோரையும் உணவுண்ண அழைத்தாள் சியாமளா. பயணம் செய்த களைப்பில் இப்போது தனக்கு ஒன்றும் வேண்டாம் என்று இளந்திரையன் ஓய்வெடுக்கச் சென்றுவிட, “நான் சாப்பிட்டனமா. நீ கதிரவனுக்குக் குடு.” என்றான் எல்லாளன்.
நிறைய நாள்களுக்குப் பிறகு எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்கள். நடுவில் நந்தியாக நிற்க வேண்டாம் என்றெண்ணி மறுத்துவிட்டுப் புறப்பட ஆயத்தமான கதிரவனை அகரன் விடவில்லை.
“நீயும் பிரெஷ் ஆகிக்கொண்டு வாவன் ஆதி. எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம்.” என்றாள் சியாமளா.
சரி என்றுவிட்டுப் போனவளுக்கு அவசரமாகக் கீழே வரும் எண்ணமே இல்லை.
களை தீரக் குளித்துவிட்டுக் கட்டிலில் சரிந்தாள். என் வீட்டில், என் அறையில், என் கட்டிலில் இருக்கிறேன் எனும் உணர்வே மனத்துக்குப் பெரும் உவகையைத் தந்தது.
அப்போது, “அத்த...” என்றபடி வந்தாள் மகிழினி.
நிற்சிந்தையாகக் கட்டிலில் சரிந்திருந்தவள் திரும்பிப் பார்த்தாள். அச்சு அசல் தமையனின் வார்ப்பில், கதவு நிலையைப் பற்றியபடி நின்றிருந்தாள் அவள். பார்த்தவளின் நெஞ்சினில் பாசம் சுரந்தது.
“அம்முக்குட்டி, ஏன் அங்கேயே நிக்கிறீங்க? அத்தேட்ட வாங்க!” என்றபடி எழுந்து அமர்ந்தாள்.