நீ வாழவே என் கண்மணி - நிதனிபிரபு
அத்தியாயம் 1
“இந்தப் பெட்டிய நான்தான் கொண்டு போவன்.”
“இல்ல நான்தான்!”
“அப்பா எனக்குத்தான் தந்தவர். அம்மாஆ!” பிள்ளைகளின் பிடுங்குப்பாடுதான் அன்று நிர்மலனுக்குச் சுப்ரபாதம். புன்னகையோடு புரண்டு படுத்தாலும், அவர்களின் சண்டை எதற்காய் என்று அறிந்து புன்னகைத்தான். ஊருக்குப் போகப் போகிறார்கள். இரவு ஃபிளைட். உற்சாகத்துக்கு என்ன குறை வரப்போகிறது?
அவனுக்குள்ளும் அவர்களின் உற்சாகம் தொற்றிக்கொண்டது. சுவிஸ் வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களாகிவிட்டது. இப்போதுதான் நாட்டையும் சொந்த பந்தங்களையும் பார்க்கப்போகிறான். ஊர் எப்படி இருக்கும்? அவன் படித்த கல்லூரி? நண்பர்கள் என்று ஓடிய நினைவுகள் தப்பியோட முயல, “அங்க அப்பா படுத்திருக்கிறார். கத்தாதிங்கோ!” என்ற மனைவியின் குரல் அதைத் தடுத்து நிறுத்தியது.
உஷா அவனுடைய அன்புக்கினிய துணைவி. எப்போதுமே அவனது மனமறிந்து நடந்துகொள்வாள். இன்றுபோல! இனியும் படுத்தால் சரியாக வராது என்று எழுந்து வெளியே வந்தான். ஹோலில் அவர்கள் ஊருக்கு கொண்டுபோகும் பெட்டிகள் தயார் நிலையில் இருந்தன. அதில் இருந்த ஒரு பெட்டிக்குத்தான் அவனது குழந்தைகளுக்குள் சண்டை உருவாகியிருந்தது.
தகப்பனைக் கண்டதும் பஞ்சாயத்துக்கு அவனிடம் வந்தனர். அவர்களை அவன் சமாளித்துக்கொண்டு இருக்கையிலேயே, “அப்பா! எங்கட அம்மாவுக்கு என்ர இந்தப் பழைய ஃபோனை கொண்டுபோய்க் குடுக்கட்டா? வீட்டுல சும்மாதானே கிடக்கு.” என்றபடி வந்தாள் உஷா.
“என்னட்ட என்னத்துக்குக் கேக்கிறாய்? எடுத்து வையன்!” அவன் சம்மதிக்க, சந்தோசத்தோடு எடுத்து வைத்தாள்.
“நகையெல்லாம் எல்லாருக்கும் எடுத்து வச்சாச்சா?” நினைவு வந்தவனாகக் கேட்டான் நிர்மலன்.
“லொக்கர்ல இருந்து எடுத்துக்கொண்டு வந்திட்டன். ஆனா, ஊருக்குக் கொண்டு போகவேணுமே? களவு கிளவு போய்ட்டுது எண்டா? அதுதான் யோசிக்கிறன்.” என்றாள் உஷா.
“அப்பிடி எல்லாம் நடக்காது. அப்பிடியே களவு போனாலும் வேற வாங்கலாம். ஆனா, அங்க ஊருல எல்லாரும் என்ர மனுசி பிள்ளைகளைப் பார்த்து மூக்கில விரலை வைக்கோணும். அப்பிடி இருக்கோணும் நீங்க மூண்டுபேரும்.” என்றான் ஒரு அழுத்தத்தோடு.
கணவனைப் புதிராகப் பார்த்தாள் உஷா. அவனோ தன்மீது உருண்டு புரண்ட குழந்தைகளோடு ஐக்கியமாகியிருந்தான். மிகவுமே அன்பானவன். குழந்தைகளோடு அவள் படும் சிரமங்களை எல்லாம் உணர்ந்து ஒத்துழைப்பாக இருப்பவன். அவளுக்குக் குறை என்று இதுவரை எதுவுமே இல்லை. அவன் காட்டும் அன்பிலாகட்டும், அக்கறையிலாகட்டும், காதலிலாகட்டும். அவர்களின் பாதுகாப்பை யோசிக்காமல் பகட்டை விரும்புகிறவனும் அல்ல. பின்னே?
அவன் சொன்னது போலவே, எல்லோரும் முதன் முதலாக ஊருக்குப் போவதால் மனைவி பிள்ளைகளைத் தான் நல்லபடியாக வைத்திருப்பதைக் காட்ட விரும்புகிறான் போலும். அதிலே தப்பில்லையே. அவன் அப்படித்தானே அவர்களை வைத்திருக்கிறான்.
மனம் நிறைய அவன் சொன்னபடியே அனைத்தையும் எடுத்து வைத்தாள். அவளுக்கும் அம்மா, அப்பா, தம்பி, தங்கைகள் என்று எல்லோரையும் பார்க்கப்போகிறோம் என்கிற சந்தோசம். உற்சாகத்தோடு தயாராகினர். நிர்மலனுக்கும் மனதில் துள்ளல் தான். கூடவே ஒரு வேகமும்!
‘பார்! நல்லா பார்! நான் வாழும் வாழ்க்கையைப் பார். என் மனைவி பிள்ளைகளைப் பார். என் சந்தோசமான வாழ்க்கையைப் பார்’ என்று காட்டிவிடும் உத்வேகம்!
சூரிச் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு ஒருவழியாகக் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் சென்றிறங்கினார்கள். பெற்றவர்களைக் கண்டதும் ஆளாளுக்குக் கட்டியணைத்து கண்ணீர்விட்டுச் சந்தோசத்தைப் பரிமாறிக்கொண்டனர். ஒருவரில் தெரிந்த மாற்றங்களை மற்றவர்கள் வியப்போடும் கேலியோடும் பேசிக்கொண்டனர். உற்சாகமாகவே பயணம் வன்னியை நோக்கி நகர்ந்தது.
விசாரிப்பு ஆரவாரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்க, பேரக்குழந்தைகளை அள்ளியணைத்துக்கொண்ட பெரியவர்களின் மடியிலேயே குழந்தைகள் சோர்ந்துபோய் உறங்கிவிடவும், அவர்களது உறக்கம் கெட்டுவிடாமலிருக்க எல்லோரும் மெல்ல மெல்ல அமைதியாகினர். வீட்டாருக்கு இரவிரவாக முழித்திருந்து பயணித்த களைப்பு. நிர்மலன் குடும்பத்துக்கு நெடுந்தூரப் பயணம் செய்த களைப்பு. அதில், எல்லோரும் அவரவர் அமர்ந்திருந்த சீட்டுகளிலேயே தளர்வாகச் சாய்ந்துகொண்டனர்.
எல்லோரும் மெல்ல மெல்ல உறங்க, நிர்மலன் மட்டும் விழித்திருந்தான். வன்னியை அடைந்து அவர்களின் சொந்த ஊரான வட்டக்கச்சியை வாகனம் நெருங்கவும் பிரதான சந்தியை ஆவலுடன் எட்டிப் பார்த்தான். புதுப்புது கட்டடங்கள், மதில் சுவர்கள், திருத்தப்பட்ட அகன்ற வீதிகள் என்று விழிகள் அங்கிருந்த மாற்றங்களை வியப்போடு வேகமாக உள்வாங்கத் தொடங்கிற்று!
அந்தச் சந்தியைக் கடந்து இருபக்கமும் வயல்காணிகள் நிறைந்த அவர்களின் வீட்டுக்குச் செல்லும் வீதிக்குள் வாகனம் நுழையவும் சுற்றுப்புறத்தை மறந்து வீதியை வெறித்தான்.
இதே வீதியில் எவ்வளவு வேகமாகச் சைக்கிளை மிதிப்பான். ஹாண்டிலை இறுக்கிப் பிடித்து, முதுகை முன்னே சரித்து. எதிர்காற்றுக்கு முகம் கொடுத்து அவன் மிதிக்கும் சைக்கிளுக்கு முன்னால் மோட்டார் வண்டியே தோற்றுவிடும். அவ்வளவு உத்வேகத்தைக் கொடுப்பது அவள் மீது அவன் கொண்ட ஆசை!
ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும் கடல் திடீரெனச் சுனாமியாக மாறிச் சுழற்றி அடிப்பது போன்று, அவன் மனதுக்குள் இருந்து பெரும் கொந்தளிப்புடன் பழைய நினைவுகள் வெளிவந்தன.
காலையில் எழுந்ததும் குளித்து, கண்ணாடி முன் நின்று தங்கையின் ஃபெயார் அண்ட் லவ்லியை அவளுக்குத் தெரியாமல் முகத்தில் அப்பி, பௌடரால் திருநீறு பூசி, சந்தனத்தைக் குழைத்து பெரிய பொட்டாக வைத்துக்கொண்டு, சுவாமியே கும்பிடாமல் வேக வேகமாக அவன் போவது பள்ளிக்கூடத்துக்கு. படிக்கவல்ல! அவளைப் பார்க்க!
அவள் ஒன்றும் அவனுக்குத் தெரியாதவள் அல்ல. ஒரே ஊர். ஒரே தெரு. சின்ன வயதிலிருந்தே நண்பர்கள் தான். பாடசாலையும் ஒன்றுதான். அவள் பெரியவளானதும் விழுந்த இடைவெளி மெல்ல மெல்ல நீண்டுகொண்டே போனதை இருவருமே பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஒரு நாள் அவளைக் கண்டான்! புதிதாக.. புத்தம் புதுப் பூவாக! அவனுக்காகவே பிரம்மனால் பிரத்யோகமாகப் படைக்கப்பட்ட அவனவளாக! ஏதோ ஒரு நொடியில் அந்த மந்திரக்கோல் சுழலுமே. இனி இவள்தான் உனக்குக் காலம் முழுக்க என்று மனம் சொல்லுமே. அந்த நொடி ஒரு மழைநாளில் அவனுக்குள் நிகழ்ந்தது.
அத்தியாயம் 1
“இந்தப் பெட்டிய நான்தான் கொண்டு போவன்.”
“இல்ல நான்தான்!”
“அப்பா எனக்குத்தான் தந்தவர். அம்மாஆ!” பிள்ளைகளின் பிடுங்குப்பாடுதான் அன்று நிர்மலனுக்குச் சுப்ரபாதம். புன்னகையோடு புரண்டு படுத்தாலும், அவர்களின் சண்டை எதற்காய் என்று அறிந்து புன்னகைத்தான். ஊருக்குப் போகப் போகிறார்கள். இரவு ஃபிளைட். உற்சாகத்துக்கு என்ன குறை வரப்போகிறது?
அவனுக்குள்ளும் அவர்களின் உற்சாகம் தொற்றிக்கொண்டது. சுவிஸ் வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களாகிவிட்டது. இப்போதுதான் நாட்டையும் சொந்த பந்தங்களையும் பார்க்கப்போகிறான். ஊர் எப்படி இருக்கும்? அவன் படித்த கல்லூரி? நண்பர்கள் என்று ஓடிய நினைவுகள் தப்பியோட முயல, “அங்க அப்பா படுத்திருக்கிறார். கத்தாதிங்கோ!” என்ற மனைவியின் குரல் அதைத் தடுத்து நிறுத்தியது.
உஷா அவனுடைய அன்புக்கினிய துணைவி. எப்போதுமே அவனது மனமறிந்து நடந்துகொள்வாள். இன்றுபோல! இனியும் படுத்தால் சரியாக வராது என்று எழுந்து வெளியே வந்தான். ஹோலில் அவர்கள் ஊருக்கு கொண்டுபோகும் பெட்டிகள் தயார் நிலையில் இருந்தன. அதில் இருந்த ஒரு பெட்டிக்குத்தான் அவனது குழந்தைகளுக்குள் சண்டை உருவாகியிருந்தது.
தகப்பனைக் கண்டதும் பஞ்சாயத்துக்கு அவனிடம் வந்தனர். அவர்களை அவன் சமாளித்துக்கொண்டு இருக்கையிலேயே, “அப்பா! எங்கட அம்மாவுக்கு என்ர இந்தப் பழைய ஃபோனை கொண்டுபோய்க் குடுக்கட்டா? வீட்டுல சும்மாதானே கிடக்கு.” என்றபடி வந்தாள் உஷா.
“என்னட்ட என்னத்துக்குக் கேக்கிறாய்? எடுத்து வையன்!” அவன் சம்மதிக்க, சந்தோசத்தோடு எடுத்து வைத்தாள்.
“நகையெல்லாம் எல்லாருக்கும் எடுத்து வச்சாச்சா?” நினைவு வந்தவனாகக் கேட்டான் நிர்மலன்.
“லொக்கர்ல இருந்து எடுத்துக்கொண்டு வந்திட்டன். ஆனா, ஊருக்குக் கொண்டு போகவேணுமே? களவு கிளவு போய்ட்டுது எண்டா? அதுதான் யோசிக்கிறன்.” என்றாள் உஷா.
“அப்பிடி எல்லாம் நடக்காது. அப்பிடியே களவு போனாலும் வேற வாங்கலாம். ஆனா, அங்க ஊருல எல்லாரும் என்ர மனுசி பிள்ளைகளைப் பார்த்து மூக்கில விரலை வைக்கோணும். அப்பிடி இருக்கோணும் நீங்க மூண்டுபேரும்.” என்றான் ஒரு அழுத்தத்தோடு.
கணவனைப் புதிராகப் பார்த்தாள் உஷா. அவனோ தன்மீது உருண்டு புரண்ட குழந்தைகளோடு ஐக்கியமாகியிருந்தான். மிகவுமே அன்பானவன். குழந்தைகளோடு அவள் படும் சிரமங்களை எல்லாம் உணர்ந்து ஒத்துழைப்பாக இருப்பவன். அவளுக்குக் குறை என்று இதுவரை எதுவுமே இல்லை. அவன் காட்டும் அன்பிலாகட்டும், அக்கறையிலாகட்டும், காதலிலாகட்டும். அவர்களின் பாதுகாப்பை யோசிக்காமல் பகட்டை விரும்புகிறவனும் அல்ல. பின்னே?
அவன் சொன்னது போலவே, எல்லோரும் முதன் முதலாக ஊருக்குப் போவதால் மனைவி பிள்ளைகளைத் தான் நல்லபடியாக வைத்திருப்பதைக் காட்ட விரும்புகிறான் போலும். அதிலே தப்பில்லையே. அவன் அப்படித்தானே அவர்களை வைத்திருக்கிறான்.
மனம் நிறைய அவன் சொன்னபடியே அனைத்தையும் எடுத்து வைத்தாள். அவளுக்கும் அம்மா, அப்பா, தம்பி, தங்கைகள் என்று எல்லோரையும் பார்க்கப்போகிறோம் என்கிற சந்தோசம். உற்சாகத்தோடு தயாராகினர். நிர்மலனுக்கும் மனதில் துள்ளல் தான். கூடவே ஒரு வேகமும்!
‘பார்! நல்லா பார்! நான் வாழும் வாழ்க்கையைப் பார். என் மனைவி பிள்ளைகளைப் பார். என் சந்தோசமான வாழ்க்கையைப் பார்’ என்று காட்டிவிடும் உத்வேகம்!
சூரிச் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு ஒருவழியாகக் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் சென்றிறங்கினார்கள். பெற்றவர்களைக் கண்டதும் ஆளாளுக்குக் கட்டியணைத்து கண்ணீர்விட்டுச் சந்தோசத்தைப் பரிமாறிக்கொண்டனர். ஒருவரில் தெரிந்த மாற்றங்களை மற்றவர்கள் வியப்போடும் கேலியோடும் பேசிக்கொண்டனர். உற்சாகமாகவே பயணம் வன்னியை நோக்கி நகர்ந்தது.
விசாரிப்பு ஆரவாரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்க, பேரக்குழந்தைகளை அள்ளியணைத்துக்கொண்ட பெரியவர்களின் மடியிலேயே குழந்தைகள் சோர்ந்துபோய் உறங்கிவிடவும், அவர்களது உறக்கம் கெட்டுவிடாமலிருக்க எல்லோரும் மெல்ல மெல்ல அமைதியாகினர். வீட்டாருக்கு இரவிரவாக முழித்திருந்து பயணித்த களைப்பு. நிர்மலன் குடும்பத்துக்கு நெடுந்தூரப் பயணம் செய்த களைப்பு. அதில், எல்லோரும் அவரவர் அமர்ந்திருந்த சீட்டுகளிலேயே தளர்வாகச் சாய்ந்துகொண்டனர்.
எல்லோரும் மெல்ல மெல்ல உறங்க, நிர்மலன் மட்டும் விழித்திருந்தான். வன்னியை அடைந்து அவர்களின் சொந்த ஊரான வட்டக்கச்சியை வாகனம் நெருங்கவும் பிரதான சந்தியை ஆவலுடன் எட்டிப் பார்த்தான். புதுப்புது கட்டடங்கள், மதில் சுவர்கள், திருத்தப்பட்ட அகன்ற வீதிகள் என்று விழிகள் அங்கிருந்த மாற்றங்களை வியப்போடு வேகமாக உள்வாங்கத் தொடங்கிற்று!
அந்தச் சந்தியைக் கடந்து இருபக்கமும் வயல்காணிகள் நிறைந்த அவர்களின் வீட்டுக்குச் செல்லும் வீதிக்குள் வாகனம் நுழையவும் சுற்றுப்புறத்தை மறந்து வீதியை வெறித்தான்.
இதே வீதியில் எவ்வளவு வேகமாகச் சைக்கிளை மிதிப்பான். ஹாண்டிலை இறுக்கிப் பிடித்து, முதுகை முன்னே சரித்து. எதிர்காற்றுக்கு முகம் கொடுத்து அவன் மிதிக்கும் சைக்கிளுக்கு முன்னால் மோட்டார் வண்டியே தோற்றுவிடும். அவ்வளவு உத்வேகத்தைக் கொடுப்பது அவள் மீது அவன் கொண்ட ஆசை!
ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும் கடல் திடீரெனச் சுனாமியாக மாறிச் சுழற்றி அடிப்பது போன்று, அவன் மனதுக்குள் இருந்து பெரும் கொந்தளிப்புடன் பழைய நினைவுகள் வெளிவந்தன.
காலையில் எழுந்ததும் குளித்து, கண்ணாடி முன் நின்று தங்கையின் ஃபெயார் அண்ட் லவ்லியை அவளுக்குத் தெரியாமல் முகத்தில் அப்பி, பௌடரால் திருநீறு பூசி, சந்தனத்தைக் குழைத்து பெரிய பொட்டாக வைத்துக்கொண்டு, சுவாமியே கும்பிடாமல் வேக வேகமாக அவன் போவது பள்ளிக்கூடத்துக்கு. படிக்கவல்ல! அவளைப் பார்க்க!
அவள் ஒன்றும் அவனுக்குத் தெரியாதவள் அல்ல. ஒரே ஊர். ஒரே தெரு. சின்ன வயதிலிருந்தே நண்பர்கள் தான். பாடசாலையும் ஒன்றுதான். அவள் பெரியவளானதும் விழுந்த இடைவெளி மெல்ல மெல்ல நீண்டுகொண்டே போனதை இருவருமே பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஒரு நாள் அவளைக் கண்டான்! புதிதாக.. புத்தம் புதுப் பூவாக! அவனுக்காகவே பிரம்மனால் பிரத்யோகமாகப் படைக்கப்பட்ட அவனவளாக! ஏதோ ஒரு நொடியில் அந்த மந்திரக்கோல் சுழலுமே. இனி இவள்தான் உனக்குக் காலம் முழுக்க என்று மனம் சொல்லுமே. அந்த நொடி ஒரு மழைநாளில் அவனுக்குள் நிகழ்ந்தது.