சுறுசுறுப்பான காலைப்பொழுதொன்று!
ஆதவனின் உக்கிர நகைப்பைச் சிறிதும் பொருட்படுத்தாத அந்நகரம், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
அன்று நல்ல மூகூர்த்தநாளும் கூட! நகரத்தின் மையத்திலிருந்த அத்திருமணமண்டபத்தை நோக்கி விருந்தினர் சென்ற வண்ணமிருந்தனர்.
குதூகலம் தரும் திரையிசை மிதமான ஒலியில் தவழ, அவற்றோடு போட்டி போட்டது அம்மண்டபத்தை நிறைத்திருந்தவர்களின் ஆரவாரப் பேச்சொலி!
சர்ரென்று வந்து நின்ற காரிலிருந்து இறங்கிக்கொண்ட மலர், பின்புறமிருந்து தங்கையும் மகள்களும் இறங்கியதும், “கலியாணம் முடிஞ்சதும் ஃபோன் பண்ணுறன் ஐயா! ஏதோ வேலை இருக்கென்று சொன்னீங்களே; முடிச்சிட்டு வாங்க!” ஓட்டுனரிடம் கூறியவர், அவர் புறப்பட்டுச் செல்ல, தங்கையோடு இணைந்து மண்டபத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
அக்கா, தங்கை இருவர் விழிகளுமே, முன்னே சென்று கொண்டிருந்த தத்தம் மகள்களில் வாஞ்சையுடன் படிந்திருந்தன.
மலரின் ஒரே மகள், மருத்துவம் இரண்டாம் வருடத்தில் படிக்கும் அனு; நல்ல அழகி மட்டுமில்லை, தாயில் உயிரானவள்!
வேதாவின் ஒரே செல்ல மகள், ஒன்பது வயதேயான ப்ரீத்தி; பார்த்தவுடன் கட்டிக் கொள்ளத் தோன்றும் சுட்டிப்பெண்! துறுதுறுவென்ற அழகிய இளம் மொட்டு! என்னேரமும், ஓயாத பேச்சும் வற்றாத கிண்கிணிச் சிரிப்பும் சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவளோடு ஒட்டிக் கொண்டிருப்பது.
தமக்கை, அழகிய டிசைனர் சேலையிலும், குட்டித்தங்கை சரசரக்கும் பட்டுப்பாவாடையிலும் கலகலத்துக்கொண்டே சென்று கொண்டிருக்க, இரசித்துக்கொண்டே நடந்த வேதா, சட்டென்று தமக்கையைப் பார்த்துவிட்டு , அவர் தன்னைப் பார்க்கமுன் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
அதேவேகத்தில், விழிகளில் மின்னி மறைந்த அடங்கா வேதனையை, திரைபோட்டு மறைத்துக்கொண்டாள்.
நெருங்கிய உறவினர் வீட்டு திருமணமென்பதால் உள்ளே நுழைந்ததும் குறைவற்ற முகமன், நலவிசாரிப்புகள்!
இன்முகத்தோடு உரையாடிய பின், ஓரமாக இருந்த மேசை ஒன்றில் நால்வரும் அமர்ந்துகொண்டனர்.
தொடர்ந்து, வரவேற்பாக வந்த குளிர்பாணத்தை உறிஞ்சிக்கொண்டே தன் பக்கவாட்டில் திரும்பிய வேதா, முகத்தில் திடுக்கிடலைப் பூசிக் கொண்டாள்.
“பெரியக்கா! அப்பிடியே வலதுபக்கமாத் திரும்பிப் பாருங்க; உங்கட மாமி... உங்களயே முறச்சிக் கொண்டிருக்கிறார்!” என்றவள் மனதில், கலவரம் தான் மூண்டது.
‘ஊரில இருந்து எப்ப வந்தார்? இவர் இப்ப வாயைத் திறந்தால், கல்யாணவீட்டில எல்லார் பார்வையும் மாப்பிள்ள பெண்ண விட்டுட்டு எங்களையல்லவா மொய்க்கும்!’ வேதாவின் மனதில் புலம்பல் களை கட்டியது.
தங்கை கண் காட்டிய திக்கில் திரும்பிப் பார்த்த மலரோ, மாமியாரின் வெறுப்புக் கலந்த நெருப்புப் பார்வையைத் தயங்காது வாங்கிக்கொண்டே, அடுத்து வந்த சிற்றுண்டித் தட்டிலிருந்தவற்றைச் சுவைப்பதில் முனைந்தார்.
தன் அப்பம்மாவைக் கண்ட அனுவோ, அவரோடு போய்க் கதைக்கும் எண்ணமின்றி தங்கையோடு இரகசியம் பேசிக் கொண்டிருந்தாள்.
சற்றுநேரத்தில், இதுவரை மலரின் மாமியாரருகில் அமர்ந்திருந்த இரு உறவுக்காரப் பெண்கள், முகமெல்லாம் முறுவலாக இவர்களருகில் வந்தமர்ந்தனர்.
“எப்படி இருக்கிறாய் மலர்? பார்த்து கன (நிறைய)நாளாச்சு!”
“நல்லா இருக்கிறோம்கா! நீங்க எப்படி இருக்கிறீங்க?”
“எனக்கென்ன! கடவுள் புண்ணியத்தில அமோகமாக இருக்கிறன்!” என்றவர் பார்வை, ஒளிவு மறைவின்றி மலரை அளவிட்டது.
“அழகான சாரி! என்ன விலைக்கு வாங்கினாய்? புதுசா? இல்ல முதலே கட்டினதா?”
“புதுசுதான் கா! பத்தாயிரம்.”
“ஓ! பார்த்தால் தெரியுது!” என்று சொன்னவர் பார்வை, தன்னோடு வந்தமர்ந்த பெண்மணியை அர்த்தத்தோடு சந்தித்து மீண்டது.
“அதுசரி, உன் புருசனுக்கு இப்ப எப்படியிருக்கு? அவரைப் பார்க்க வீட்டுக்கு வரவேணும் என்றுதான் நினைப்பன்! எங்க, நேரமா கிடைக்குது?”
“இதிலென்ன இருக்கக்கா! இப்படிச் சந்திக்கிற நேரங்களில சுகம் கேட்கிறதே போதும்!” அளவாக முறுவலித்தார் மலர்.
“அப்ப, இதோட நிறுத்திக்கொள்; வீடுவரை வந்திராத என்றா சொல்லுறாய்?” இடக்காகக் கேட்டார், இரண்டாவது பெண்மணி.
“நான் அப்பிடிச் சொல்ல இல்ல; வீடு வரை வந்து பாக்க இல்லையே என்று வருத்தப்படுவது போலச் சொன்னதால சொன்னன்!” மலரின் குரலில் வந்திருந்த இறுக்கம் முகத்திலும் பரவியது.
“இந்தக் காலத்தில அவரவர் வேலையைப் பாக்கவே நேரமில்ல; இதில அடுத்தவன் வீட்டு விசயம் பாக்கவா நேரமிருக்கும்? நான் சொல்வது சரிதானேக்கா?” என்றபடி, வந்ததும் கதைக்க ஆரம்பித்த பெண்மணியை நேராகப் பார்த்தார் மலர்.
சட்டென்று முகம் கறுத்தாலும் சமாளித்துக் கொண்டவரோ, “ஆங்! அதுவும் சரிதான்!” என்றவர், ‘திமிர் பிடிச்சவள்! அதுதான் புருஷனப் படுக்கையில போட்டுட்டு இப்பிடி மினுக்கிக்கொண்டு திரியிறாள்! கடவுளும் எல்லாருக்கும் அளந்துதான் கொடுப்பார் போலும்! கண்ணுக்கு நிறைவான, கைநிறைய உழைத்த புருஷனும் சுகதேகியாக இருந்திருந்தால், இவளப் பிடிக்கவே முடியாது!’ காரணமற்ற எரிச்சலில் மனதில் கறுவிக் கொண்டார்.
“சரி, அதை விடு; உன் புருஷனுக்கு எப்படி இருக்கென்று சொல்லு? வைத்தியர் என்ன சொல்லுறார்?” முதலில் கதைக்க ஆரம்பித்த பெண்மணி, இலகுவில் பின்வாங்க விரும்பவில்லை.
“ஹ்ம்ம்...அவர் அப்பிடியே தான் இருக்கிறார். டாக்டர்கள் சுகம் வரும் என்றுதானே சொல்வார்கள். சுகமாகும் போது கண்டுகொள்ள வேண்டியது தான்.” மலரின் குரலில் அப்பட்டமான சலிப்பு.
எப்போதுமே, மனதைத் துல்லியமாக வெளிக்காட்டும் குரலும் முகமும் மலருக்கு!
“நீ துணிஞ்சவள் மலர்! புருஷனுக்கு இப்பிடி ஏலாமப் போன பிறகும் கொஞ்சமும் முடங்கிப் போக இல்ல! அதுமட்டுமா? அதை மறந்து, ஒதுக்கி, இயல்பாக அன்றாட வாழ்க்கையைச் சமாளிக்கிறாய்!” ஏகத்துக்கும் வியந்தார் இரண்டாவது பெண்மணி .
பாராட்டுப் போலிருந்தாலும் அதன் பின்னால் இருந்த எள்ளல் புரியாதவரா மலர்!
சட்டென்று மலரின் மனதில் வந்து போன விரக்தியை அடித்து விரட்டியது அவரில் ஆதிக்கம் செலுத்தும் வன்மம்!
ஆமாம், வன்மமேதான்! ஏன், ஒருவகை வெறியுணர்வு என்றும் சொல்லலாம்.
அமைதியாக அந்தப் பெண்மணியைப் பார்த்தார்.
கேட்டு கேட்டுப் புளித்துப் போன வார்த்தையாடல்கள் இவை. அவரை எதுவுமே செய்யாதே!
முதல் இவையெல்லாம் அவர் வாழ்வில் தூசலல்வா?
“உன்ர நிலையில நான் இருந்திருந்தால்...நினைச்சா நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்கு மலர். ஹப்பா! நம்மால் முடியுதுடா சாமி!” தொடர்ந்தார் முதல் பெண்மணி.
இதழில் உதித்த அமைதியான மென்முறுவலுடன், அருகிலிருந்த தங்கையின் விழிகளைத் தொட்டு மீண்டன, மலரின் விழிகள்.
“உண்மையைச் சொன்னால், உன்னப் போலத்தான் பொம்பளைகள் இருக்க வேணும் மலர்! வருத்தக்காரப் புருஷனை கட்டிப்பிடிச்சுக்கொண்டு, கண்ணக் கசக்கிக் கொண்டிருந்தால் நம்மட வாழ்க்கையை யார் பாக்கிறது? வாழுற காலத்தில சந்தோசமாக வாழ வேணாமா? இந்த வயசில, நல்லா உடுத்தி நாலு இடங்களுக்குப் போய்வந்து என்று சந்தோஷமாக வாழாமல், கிழவியான பின்னா அனுபவிக்கிறது?” முதலாவது பெண்மணியின் ஊக்க மருந்தான பாராட்டுப் பத்திரம்!
‘ஏய் மனிஷி, இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை?’ நாக்கில் துருத்தி நின்ற வார்த்தைகளை கடினப்பட்டு விழுங்கினாள், மலரின் மகள் அனு.
இப்படியான மனிதர்களைச் சந்திக்கையில் அவளின் இள உள்ளம் கொதித்தாலும், அவற்றையெல்லாம் முறுவலோடு, இலாவகமாக எதிர்கொள்ளும் தன் அன்னையின் தைரியம் அறியாதவளல்லவே அவள்.
ஆனாலும், அவளுக்கு அவ்விடத்தில் இருக்கவே பிடிக்கவில்லை.
இள உள்ளம் தணலாகக் கொந்தளிக்கத் தொடங்கியது.
ஆதவனின் உக்கிர நகைப்பைச் சிறிதும் பொருட்படுத்தாத அந்நகரம், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
அன்று நல்ல மூகூர்த்தநாளும் கூட! நகரத்தின் மையத்திலிருந்த அத்திருமணமண்டபத்தை நோக்கி விருந்தினர் சென்ற வண்ணமிருந்தனர்.
குதூகலம் தரும் திரையிசை மிதமான ஒலியில் தவழ, அவற்றோடு போட்டி போட்டது அம்மண்டபத்தை நிறைத்திருந்தவர்களின் ஆரவாரப் பேச்சொலி!
சர்ரென்று வந்து நின்ற காரிலிருந்து இறங்கிக்கொண்ட மலர், பின்புறமிருந்து தங்கையும் மகள்களும் இறங்கியதும், “கலியாணம் முடிஞ்சதும் ஃபோன் பண்ணுறன் ஐயா! ஏதோ வேலை இருக்கென்று சொன்னீங்களே; முடிச்சிட்டு வாங்க!” ஓட்டுனரிடம் கூறியவர், அவர் புறப்பட்டுச் செல்ல, தங்கையோடு இணைந்து மண்டபத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
அக்கா, தங்கை இருவர் விழிகளுமே, முன்னே சென்று கொண்டிருந்த தத்தம் மகள்களில் வாஞ்சையுடன் படிந்திருந்தன.
மலரின் ஒரே மகள், மருத்துவம் இரண்டாம் வருடத்தில் படிக்கும் அனு; நல்ல அழகி மட்டுமில்லை, தாயில் உயிரானவள்!
வேதாவின் ஒரே செல்ல மகள், ஒன்பது வயதேயான ப்ரீத்தி; பார்த்தவுடன் கட்டிக் கொள்ளத் தோன்றும் சுட்டிப்பெண்! துறுதுறுவென்ற அழகிய இளம் மொட்டு! என்னேரமும், ஓயாத பேச்சும் வற்றாத கிண்கிணிச் சிரிப்பும் சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவளோடு ஒட்டிக் கொண்டிருப்பது.
தமக்கை, அழகிய டிசைனர் சேலையிலும், குட்டித்தங்கை சரசரக்கும் பட்டுப்பாவாடையிலும் கலகலத்துக்கொண்டே சென்று கொண்டிருக்க, இரசித்துக்கொண்டே நடந்த வேதா, சட்டென்று தமக்கையைப் பார்த்துவிட்டு , அவர் தன்னைப் பார்க்கமுன் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
அதேவேகத்தில், விழிகளில் மின்னி மறைந்த அடங்கா வேதனையை, திரைபோட்டு மறைத்துக்கொண்டாள்.
நெருங்கிய உறவினர் வீட்டு திருமணமென்பதால் உள்ளே நுழைந்ததும் குறைவற்ற முகமன், நலவிசாரிப்புகள்!
இன்முகத்தோடு உரையாடிய பின், ஓரமாக இருந்த மேசை ஒன்றில் நால்வரும் அமர்ந்துகொண்டனர்.
தொடர்ந்து, வரவேற்பாக வந்த குளிர்பாணத்தை உறிஞ்சிக்கொண்டே தன் பக்கவாட்டில் திரும்பிய வேதா, முகத்தில் திடுக்கிடலைப் பூசிக் கொண்டாள்.
“பெரியக்கா! அப்பிடியே வலதுபக்கமாத் திரும்பிப் பாருங்க; உங்கட மாமி... உங்களயே முறச்சிக் கொண்டிருக்கிறார்!” என்றவள் மனதில், கலவரம் தான் மூண்டது.
‘ஊரில இருந்து எப்ப வந்தார்? இவர் இப்ப வாயைத் திறந்தால், கல்யாணவீட்டில எல்லார் பார்வையும் மாப்பிள்ள பெண்ண விட்டுட்டு எங்களையல்லவா மொய்க்கும்!’ வேதாவின் மனதில் புலம்பல் களை கட்டியது.
தங்கை கண் காட்டிய திக்கில் திரும்பிப் பார்த்த மலரோ, மாமியாரின் வெறுப்புக் கலந்த நெருப்புப் பார்வையைத் தயங்காது வாங்கிக்கொண்டே, அடுத்து வந்த சிற்றுண்டித் தட்டிலிருந்தவற்றைச் சுவைப்பதில் முனைந்தார்.
தன் அப்பம்மாவைக் கண்ட அனுவோ, அவரோடு போய்க் கதைக்கும் எண்ணமின்றி தங்கையோடு இரகசியம் பேசிக் கொண்டிருந்தாள்.
சற்றுநேரத்தில், இதுவரை மலரின் மாமியாரருகில் அமர்ந்திருந்த இரு உறவுக்காரப் பெண்கள், முகமெல்லாம் முறுவலாக இவர்களருகில் வந்தமர்ந்தனர்.
“எப்படி இருக்கிறாய் மலர்? பார்த்து கன (நிறைய)நாளாச்சு!”
“நல்லா இருக்கிறோம்கா! நீங்க எப்படி இருக்கிறீங்க?”
“எனக்கென்ன! கடவுள் புண்ணியத்தில அமோகமாக இருக்கிறன்!” என்றவர் பார்வை, ஒளிவு மறைவின்றி மலரை அளவிட்டது.
“அழகான சாரி! என்ன விலைக்கு வாங்கினாய்? புதுசா? இல்ல முதலே கட்டினதா?”
“புதுசுதான் கா! பத்தாயிரம்.”
“ஓ! பார்த்தால் தெரியுது!” என்று சொன்னவர் பார்வை, தன்னோடு வந்தமர்ந்த பெண்மணியை அர்த்தத்தோடு சந்தித்து மீண்டது.
“அதுசரி, உன் புருசனுக்கு இப்ப எப்படியிருக்கு? அவரைப் பார்க்க வீட்டுக்கு வரவேணும் என்றுதான் நினைப்பன்! எங்க, நேரமா கிடைக்குது?”
“இதிலென்ன இருக்கக்கா! இப்படிச் சந்திக்கிற நேரங்களில சுகம் கேட்கிறதே போதும்!” அளவாக முறுவலித்தார் மலர்.
“அப்ப, இதோட நிறுத்திக்கொள்; வீடுவரை வந்திராத என்றா சொல்லுறாய்?” இடக்காகக் கேட்டார், இரண்டாவது பெண்மணி.
“நான் அப்பிடிச் சொல்ல இல்ல; வீடு வரை வந்து பாக்க இல்லையே என்று வருத்தப்படுவது போலச் சொன்னதால சொன்னன்!” மலரின் குரலில் வந்திருந்த இறுக்கம் முகத்திலும் பரவியது.
“இந்தக் காலத்தில அவரவர் வேலையைப் பாக்கவே நேரமில்ல; இதில அடுத்தவன் வீட்டு விசயம் பாக்கவா நேரமிருக்கும்? நான் சொல்வது சரிதானேக்கா?” என்றபடி, வந்ததும் கதைக்க ஆரம்பித்த பெண்மணியை நேராகப் பார்த்தார் மலர்.
சட்டென்று முகம் கறுத்தாலும் சமாளித்துக் கொண்டவரோ, “ஆங்! அதுவும் சரிதான்!” என்றவர், ‘திமிர் பிடிச்சவள்! அதுதான் புருஷனப் படுக்கையில போட்டுட்டு இப்பிடி மினுக்கிக்கொண்டு திரியிறாள்! கடவுளும் எல்லாருக்கும் அளந்துதான் கொடுப்பார் போலும்! கண்ணுக்கு நிறைவான, கைநிறைய உழைத்த புருஷனும் சுகதேகியாக இருந்திருந்தால், இவளப் பிடிக்கவே முடியாது!’ காரணமற்ற எரிச்சலில் மனதில் கறுவிக் கொண்டார்.
“சரி, அதை விடு; உன் புருஷனுக்கு எப்படி இருக்கென்று சொல்லு? வைத்தியர் என்ன சொல்லுறார்?” முதலில் கதைக்க ஆரம்பித்த பெண்மணி, இலகுவில் பின்வாங்க விரும்பவில்லை.
“ஹ்ம்ம்...அவர் அப்பிடியே தான் இருக்கிறார். டாக்டர்கள் சுகம் வரும் என்றுதானே சொல்வார்கள். சுகமாகும் போது கண்டுகொள்ள வேண்டியது தான்.” மலரின் குரலில் அப்பட்டமான சலிப்பு.
எப்போதுமே, மனதைத் துல்லியமாக வெளிக்காட்டும் குரலும் முகமும் மலருக்கு!
“நீ துணிஞ்சவள் மலர்! புருஷனுக்கு இப்பிடி ஏலாமப் போன பிறகும் கொஞ்சமும் முடங்கிப் போக இல்ல! அதுமட்டுமா? அதை மறந்து, ஒதுக்கி, இயல்பாக அன்றாட வாழ்க்கையைச் சமாளிக்கிறாய்!” ஏகத்துக்கும் வியந்தார் இரண்டாவது பெண்மணி .
பாராட்டுப் போலிருந்தாலும் அதன் பின்னால் இருந்த எள்ளல் புரியாதவரா மலர்!
சட்டென்று மலரின் மனதில் வந்து போன விரக்தியை அடித்து விரட்டியது அவரில் ஆதிக்கம் செலுத்தும் வன்மம்!
ஆமாம், வன்மமேதான்! ஏன், ஒருவகை வெறியுணர்வு என்றும் சொல்லலாம்.
அமைதியாக அந்தப் பெண்மணியைப் பார்த்தார்.
கேட்டு கேட்டுப் புளித்துப் போன வார்த்தையாடல்கள் இவை. அவரை எதுவுமே செய்யாதே!
முதல் இவையெல்லாம் அவர் வாழ்வில் தூசலல்வா?
“உன்ர நிலையில நான் இருந்திருந்தால்...நினைச்சா நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்கு மலர். ஹப்பா! நம்மால் முடியுதுடா சாமி!” தொடர்ந்தார் முதல் பெண்மணி.
இதழில் உதித்த அமைதியான மென்முறுவலுடன், அருகிலிருந்த தங்கையின் விழிகளைத் தொட்டு மீண்டன, மலரின் விழிகள்.
“உண்மையைச் சொன்னால், உன்னப் போலத்தான் பொம்பளைகள் இருக்க வேணும் மலர்! வருத்தக்காரப் புருஷனை கட்டிப்பிடிச்சுக்கொண்டு, கண்ணக் கசக்கிக் கொண்டிருந்தால் நம்மட வாழ்க்கையை யார் பாக்கிறது? வாழுற காலத்தில சந்தோசமாக வாழ வேணாமா? இந்த வயசில, நல்லா உடுத்தி நாலு இடங்களுக்குப் போய்வந்து என்று சந்தோஷமாக வாழாமல், கிழவியான பின்னா அனுபவிக்கிறது?” முதலாவது பெண்மணியின் ஊக்க மருந்தான பாராட்டுப் பத்திரம்!
‘ஏய் மனிஷி, இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை?’ நாக்கில் துருத்தி நின்ற வார்த்தைகளை கடினப்பட்டு விழுங்கினாள், மலரின் மகள் அனு.
இப்படியான மனிதர்களைச் சந்திக்கையில் அவளின் இள உள்ளம் கொதித்தாலும், அவற்றையெல்லாம் முறுவலோடு, இலாவகமாக எதிர்கொள்ளும் தன் அன்னையின் தைரியம் அறியாதவளல்லவே அவள்.
ஆனாலும், அவளுக்கு அவ்விடத்தில் இருக்கவே பிடிக்கவில்லை.
இள உள்ளம் தணலாகக் கொந்தளிக்கத் தொடங்கியது.