என்ன மச்சான், வெளிக்கிட்டாச்சா? இன்னும் நேரமிருக்கே!”
“இப்பவே போனால் தான்டா சரியா இருக்கும். வழியில ட்ராஃபிக்காக இருந்தாலும் நேரத்துக்கே போயிருவமே!” என்றபடி, பயணப்பையை இழுத்து வந்து வரவேற்பறையில் வைத்தான் கோகுலன்.
“சரிதான், ஹாண்ட் லகேஜை எடுத்துக்கொண்டு வா; நான் இதைக் கொண்டு இறங்கிறன்.” என்றுவிட்டு, பையை உருட்டிக்கொண்டு வெளியில் வந்த அவன் நண்பன், இவர்களின் மாடிக்குடியிருப்புக்கு நேரெதிரில் இருந்து வெளிப்பட்ட மங்கையோடு விழிகளால் பேச முயன்றவாறே லிஃப்ட்டை நோக்கி முன்னேறினான்.
இவன் பின்னால் வந்த அம்மங்கையும் இவனருகில் நெருங்கி நின்று இவனுள் பனிச்சாரலை உணரச் செய்தாள் தான்! அதேவேளை, தன்னையே பார்வையால் வருடியபடி ஒருவன் நிற்கிறானே என உணர்ந்தவள் போலவே காட்டிக்கொள்ளவில்லை.
“திமிர் பிடிச்சவள்!” சூடான நீண்ட பெருமூச்சோடு முணுமுணுத்தவாறே, பணிவோடு வாய்திறந்த லிஃப்ட்டில் நுழையாது ஒதுங்கி வழிவிட்டான் அவன்.
“பெண்களுக்கு முன்னுரிமை குடுக்கிறது என்ட வழக்கம்!” என்ற இவன் குரலை செவிகளில் ஏற்றாது உள்ளே நுழைந்து, ஓரமாக நின்ற வேகத்தில் அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைச் சரி பார்த்தாள், அம்மங்கை.
“உதாசீனம்! இதைவிட அவமானம் வேணவே வேணாம்!” சத்தமாகவே முணுமுணுத்தபடி இவன் நுழைய, கையில் சிறிய பயணப்பை சகிதம் ஓடி வந்து புகுந்தான் கோகுலன். அவளோ, அவனையும் கண்டு கொள்ளவில்லைதான்!
“ராங்கிக்காரி! ஒரு நாளா இரண்டு நாளா? வருசக் கணக்கு மச்சான்!” நண்பனின் முணுமுணுப்பில், கோகுலனின் நகைக்கும் விழிகளில் முறுவல் பளிச்சிட்டது.
“உனக்கு எவ்வளவுதான் விழுந்தாலும் ஒட்டாதடா! வயதுக்கேத்த மாதிரி நடந்து கொள். கல்லூரி போகும் இளம் பெடியன் என்ற நினைப்பு! உன்ர நிலை உணராமல் அலையாத!” கேலியாகச்சொன்ன கோகுலன் நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தான். ஆறடியை நெருங்கிப் பிடிக்கும் உயரமும் கச்சிதமான உடல்வாகும் இவனுக்கும் உடற்பயிற்ச்சிக்குமுள்ள நெருங்கிய நட்பை பறைசாற்றியது!
“தமிழன்டா!” தயங்காது சொல்லும் நிறம்; குறைவற்ற கவர்ச்சி; கம்பீரவிழிகளில் மின்னும் விஷயஞானம்; தடித்த மீசையின் கீழ் உதடுகளோடு ஒட்டி உறவாடும் மென்னகை என, எப்போதும் இளம்பெண்களின் கடைவிழிப் பார்வைகளுக்கு உரிமையாளன் அவன். அக்கர்வத்தின் சாயல் துளியுமற்றவன்; பெரிதாக அவற்றைப் பொருட்படுத்துவதும் இல்லை. ஒன்றுக்கு மூன்று சகோதரிகளோடு பிறந்தவன் ஆச்சே!
தாம் வசிக்கும் அடுக்கு மாடியின் கீழ் பகுதிக்கு வந்தவர்கள், எதிர்ப்படுவோரை சிறு தலையசைப்போடு கடந்தனர்; அவர்களிடமிருந்து பதில் தலையசைப்புக்குக் காத்திருக்க நினைக்கவில்லை.
காத்திருப்புக்கும் இவர்களுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்ததில்லையே!
தம்முள் உரையாடிக்கொண்டே விரைந்தவர்கள், பயணப்பைகளை காரின் டிக்கியில் அடக்கிவிட்டு, நண்பன் ஓட்டுனர் இருக்கையை ஆக்கிரமிக்க, பக்கத்தில் அமர்ந்து கொண்ட கோகுலனின் விழிகளோ, நகரும் வாகனத்தோடு கைகோர்த்து நகரும் வீதியை ஒருவித ஆவலோடு துளாவின!
அறிந்தவர், தெரிந்தவர், நட்புகள், உறவுகள் இவன் கண்ணில் பட்டால் நின்று நான்கு வார்த்தைகள் பேசவேண்டுமென்றோ சின்னதாகவேனும் முறுவல் செய்யவேண்டுமென்றோ இவனிடம் எதிர்பார்ப்பு இருந்ததேயில்லை. தன் பார்வை அவர்களைப் ஸ்பரிசிக்கும் அக்கணம், ஒருவித அலாதியான சுகமும் இதமும் பரவுவதை அனுபவித்து விடுவான்.. இதுவே, அன்றைய பொழுதை அளவற்ற உற்சாகத்தோடு கழிக்கப் போதுமானதாக இருக்கும்.
ஆமாம்! கொஞ்சமே கொஞ்சமாக ஆச்சரியமானவன் தான் இவன்!
‘எப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் வெளிக்கிட்டிருந்தாலும் நான் வருவன் என்று அவளுக்குத் தெரியும். நிச்சயம் எதிர்பார்ப்போடுதான் வளைய வருவாள்.’ மென்முறுவலோடு நினைத்துக் கொண்டவனுள், தன்னைவிட இருவயது பெரியவளான தமக்கை நிம்மதி, அவள் கணவன், மகன்கள், இவர்களைக் காணப்போகிறோம் எனும் எண்ணமே மட்டற்ற மகிழ்வை ஏற்படுத்தியது.
ஐந்து பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பம் இவனது. மூத்தவள் நிம்மதி, அடுத்தவன் கோகுலன். ‘ஆண் ஒன்று பெண் ஒன்று; இருவருமே நமக்குப் போதும்.’ என்று ஆரம்பத்தில் எடுத்திருந்த முடிவை மீற நினைத்தார்களோ என்ற வகையில், நீண்ட இடைவெளியின் பின்னரே இளைய சகோதரிகளும் சகோதரனும் பிறந்தார்கள். அதுவே இவனையும் தமக்கையையும் இறுகப் பிணைத்ததோ என்னவோ, பாம்பும் கீரியுமாக சீறிக்கொள்ளும் அதேவேளை, நகமும் சதையுமாகவும் திரிவார்கள். சிறுவயதிலிருந்து இருவரும் போடும் கூத்தில் அவர்கள் வீடே அலறுவதுண்டு. வேலை முடிந்து வந்தால் இவன் அப்பாவுக்கு பெரிய வேலையே இவர்களை விசாரிப்பதும் தீர்ப்புக் கூறுவதும் தான்.
வீட்டில் கூடவே இருக்கும் அம்மாவுக்கு இந்த விசயத்தில் இவர்களின் ஒத்துழைப்பு கிட்டுவதேயில்லை.
“என்ன சத்தம் அங்க? பொறு வாறன்.” என்ற, தாயின் சத்தத்தில் இவன் கூரை மீதே ஏறி விடுவான்
. “ஓடுடி, அம்மாவால பிடிக்க முடியாது; அகப்படமால் ஓடு!” தமக்கையையும் உசுப்பி விட்டுவிடுவான். அதன் பிறகு, ‘மாலையில், வட்டியும் முதலுமாக அப்பாவிடம் வாங்குவது; அதுவும், முழங்காலில் நின்றுகொண்டு!’ அன்றைய தண்டனைகளின் நினைவு கூட இன்று இதத்தையே தந்தது!
“இப்பவே போனால் தான்டா சரியா இருக்கும். வழியில ட்ராஃபிக்காக இருந்தாலும் நேரத்துக்கே போயிருவமே!” என்றபடி, பயணப்பையை இழுத்து வந்து வரவேற்பறையில் வைத்தான் கோகுலன்.
“சரிதான், ஹாண்ட் லகேஜை எடுத்துக்கொண்டு வா; நான் இதைக் கொண்டு இறங்கிறன்.” என்றுவிட்டு, பையை உருட்டிக்கொண்டு வெளியில் வந்த அவன் நண்பன், இவர்களின் மாடிக்குடியிருப்புக்கு நேரெதிரில் இருந்து வெளிப்பட்ட மங்கையோடு விழிகளால் பேச முயன்றவாறே லிஃப்ட்டை நோக்கி முன்னேறினான்.
இவன் பின்னால் வந்த அம்மங்கையும் இவனருகில் நெருங்கி நின்று இவனுள் பனிச்சாரலை உணரச் செய்தாள் தான்! அதேவேளை, தன்னையே பார்வையால் வருடியபடி ஒருவன் நிற்கிறானே என உணர்ந்தவள் போலவே காட்டிக்கொள்ளவில்லை.
“திமிர் பிடிச்சவள்!” சூடான நீண்ட பெருமூச்சோடு முணுமுணுத்தவாறே, பணிவோடு வாய்திறந்த லிஃப்ட்டில் நுழையாது ஒதுங்கி வழிவிட்டான் அவன்.
“பெண்களுக்கு முன்னுரிமை குடுக்கிறது என்ட வழக்கம்!” என்ற இவன் குரலை செவிகளில் ஏற்றாது உள்ளே நுழைந்து, ஓரமாக நின்ற வேகத்தில் அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைச் சரி பார்த்தாள், அம்மங்கை.
“உதாசீனம்! இதைவிட அவமானம் வேணவே வேணாம்!” சத்தமாகவே முணுமுணுத்தபடி இவன் நுழைய, கையில் சிறிய பயணப்பை சகிதம் ஓடி வந்து புகுந்தான் கோகுலன். அவளோ, அவனையும் கண்டு கொள்ளவில்லைதான்!
“ராங்கிக்காரி! ஒரு நாளா இரண்டு நாளா? வருசக் கணக்கு மச்சான்!” நண்பனின் முணுமுணுப்பில், கோகுலனின் நகைக்கும் விழிகளில் முறுவல் பளிச்சிட்டது.
“உனக்கு எவ்வளவுதான் விழுந்தாலும் ஒட்டாதடா! வயதுக்கேத்த மாதிரி நடந்து கொள். கல்லூரி போகும் இளம் பெடியன் என்ற நினைப்பு! உன்ர நிலை உணராமல் அலையாத!” கேலியாகச்சொன்ன கோகுலன் நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தான். ஆறடியை நெருங்கிப் பிடிக்கும் உயரமும் கச்சிதமான உடல்வாகும் இவனுக்கும் உடற்பயிற்ச்சிக்குமுள்ள நெருங்கிய நட்பை பறைசாற்றியது!
“தமிழன்டா!” தயங்காது சொல்லும் நிறம்; குறைவற்ற கவர்ச்சி; கம்பீரவிழிகளில் மின்னும் விஷயஞானம்; தடித்த மீசையின் கீழ் உதடுகளோடு ஒட்டி உறவாடும் மென்னகை என, எப்போதும் இளம்பெண்களின் கடைவிழிப் பார்வைகளுக்கு உரிமையாளன் அவன். அக்கர்வத்தின் சாயல் துளியுமற்றவன்; பெரிதாக அவற்றைப் பொருட்படுத்துவதும் இல்லை. ஒன்றுக்கு மூன்று சகோதரிகளோடு பிறந்தவன் ஆச்சே!
தாம் வசிக்கும் அடுக்கு மாடியின் கீழ் பகுதிக்கு வந்தவர்கள், எதிர்ப்படுவோரை சிறு தலையசைப்போடு கடந்தனர்; அவர்களிடமிருந்து பதில் தலையசைப்புக்குக் காத்திருக்க நினைக்கவில்லை.
காத்திருப்புக்கும் இவர்களுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்ததில்லையே!
தம்முள் உரையாடிக்கொண்டே விரைந்தவர்கள், பயணப்பைகளை காரின் டிக்கியில் அடக்கிவிட்டு, நண்பன் ஓட்டுனர் இருக்கையை ஆக்கிரமிக்க, பக்கத்தில் அமர்ந்து கொண்ட கோகுலனின் விழிகளோ, நகரும் வாகனத்தோடு கைகோர்த்து நகரும் வீதியை ஒருவித ஆவலோடு துளாவின!
அறிந்தவர், தெரிந்தவர், நட்புகள், உறவுகள் இவன் கண்ணில் பட்டால் நின்று நான்கு வார்த்தைகள் பேசவேண்டுமென்றோ சின்னதாகவேனும் முறுவல் செய்யவேண்டுமென்றோ இவனிடம் எதிர்பார்ப்பு இருந்ததேயில்லை. தன் பார்வை அவர்களைப் ஸ்பரிசிக்கும் அக்கணம், ஒருவித அலாதியான சுகமும் இதமும் பரவுவதை அனுபவித்து விடுவான்.. இதுவே, அன்றைய பொழுதை அளவற்ற உற்சாகத்தோடு கழிக்கப் போதுமானதாக இருக்கும்.
ஆமாம்! கொஞ்சமே கொஞ்சமாக ஆச்சரியமானவன் தான் இவன்!
‘எப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் வெளிக்கிட்டிருந்தாலும் நான் வருவன் என்று அவளுக்குத் தெரியும். நிச்சயம் எதிர்பார்ப்போடுதான் வளைய வருவாள்.’ மென்முறுவலோடு நினைத்துக் கொண்டவனுள், தன்னைவிட இருவயது பெரியவளான தமக்கை நிம்மதி, அவள் கணவன், மகன்கள், இவர்களைக் காணப்போகிறோம் எனும் எண்ணமே மட்டற்ற மகிழ்வை ஏற்படுத்தியது.
ஐந்து பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பம் இவனது. மூத்தவள் நிம்மதி, அடுத்தவன் கோகுலன். ‘ஆண் ஒன்று பெண் ஒன்று; இருவருமே நமக்குப் போதும்.’ என்று ஆரம்பத்தில் எடுத்திருந்த முடிவை மீற நினைத்தார்களோ என்ற வகையில், நீண்ட இடைவெளியின் பின்னரே இளைய சகோதரிகளும் சகோதரனும் பிறந்தார்கள். அதுவே இவனையும் தமக்கையையும் இறுகப் பிணைத்ததோ என்னவோ, பாம்பும் கீரியுமாக சீறிக்கொள்ளும் அதேவேளை, நகமும் சதையுமாகவும் திரிவார்கள். சிறுவயதிலிருந்து இருவரும் போடும் கூத்தில் அவர்கள் வீடே அலறுவதுண்டு. வேலை முடிந்து வந்தால் இவன் அப்பாவுக்கு பெரிய வேலையே இவர்களை விசாரிப்பதும் தீர்ப்புக் கூறுவதும் தான்.
வீட்டில் கூடவே இருக்கும் அம்மாவுக்கு இந்த விசயத்தில் இவர்களின் ஒத்துழைப்பு கிட்டுவதேயில்லை.
“என்ன சத்தம் அங்க? பொறு வாறன்.” என்ற, தாயின் சத்தத்தில் இவன் கூரை மீதே ஏறி விடுவான்
. “ஓடுடி, அம்மாவால பிடிக்க முடியாது; அகப்படமால் ஓடு!” தமக்கையையும் உசுப்பி விட்டுவிடுவான். அதன் பிறகு, ‘மாலையில், வட்டியும் முதலுமாக அப்பாவிடம் வாங்குவது; அதுவும், முழங்காலில் நின்றுகொண்டு!’ அன்றைய தண்டனைகளின் நினைவு கூட இன்று இதத்தையே தந்தது!