• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ibc தொலைக்காட்சியில் வெளியாகிய என்னுடைய பேட்டி

நிதனிபிரபு

Administrator
Staff member
ஒரு நாள் கடந்து அடுத்த நாள் பிறக்கையில் புது வருடம் என்கிறோம். எதிலும் பெரிய மாற்றங்கள் இருக்கப் போவதில்லை. அதே நாம், அதே நாளாந்த வாழ்வின் ஓட்டம், அதே பிரச்சனைகள் என்று எல்லாம் அதேதான். அது தெரிந்தாலும் கூட ஏதாவது ஒன்று சிறப்பாக அமைந்துவிடாதா, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட மாட்டோமா, பிறந்திருக்கும் வருடம் மாற்றங்களைத் தந்துவிடாதா என்று ஒரு மெல்லிய எதிர்பார்ப்பு உருவாகிவிடுவதைத் தவிர்த்துவிட முடிவதில்லை. அப்படித்தான் எனக்கும் இருந்தது. அப்படி இருக்கையில்தான் புது வருடத்தின் தித்திப்பாய் இந்தப் பேட்டி.

எங்கு இருந்தாலும், எதைச் செய்தாலும் நாம் பிறந்து வளர்ந்த நம் தாய் மண் நம் திறமையை இனம் கண்டு, தோள் தட்டித் தருகையில் கிடைக்கும் நிறைவுக்கும் நெகிழ்வுக்கும் அளவேது?

அப்படியானதொரு தருணம்தான் இது.

அன்புச் சகோதரி சர்மிலா வினோதினி அவர்கள் அவள் ஆரணி நாவலை வாசித்து, பொருள் பொதிந்த கேள்விகளை எழுப்பி இருந்தார். அதுவே என்னை மனம் திறந்து பேச வைத்திருந்தது. இப்படி ஒரு நிகழ்வை நிகழ்த்தித் தந்திருப்பது என் எழுத்து என்கையில் அதன் மீது நான் செலுத்தவேண்டிய கவனமும் எனக்கான பொறுப்பும் இன்னுமே அதிகரித்திருப்பதை உணர்கிறேன்.

IBC தொலைக்காட்சிக்கும், சகோதரி சர்மிலா வினோதினிக்கும் இதயம் நிறைந்த நன்றி!

 

Chanmaa

Active member
அருமையான பதிவு வெளிச்சக்கீற்று வாங்கிவிட்டேன் இனிமேல் தான் படிக்க வேண்டும்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அருமையான பதிவு வெளிச்சக்கீற்று வாங்கிவிட்டேன் இனிமேல் தான் படிக்க வேண்டும்
மிக்க நன்றி. வாசிச்சிட்டுச் சொல்லுங்கோ.
 

kamalnila

New member
அக்கா மிகவும் சந்தோஷம் உங்களுடைய பேட்டியை பார்த்ததில். உங்களின் எழுத்துக்களை மட்டுமே பார்த்த எனக்கு இப்பொழுது உங்களையும் பார்த்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த தளத்தில் உள்ள நாவல்கள் அனைத்தும் படித்து விட்டேன் இனி எவ்வாறு உங்கள் எழுத்துகளை பார்ப்பது அக்கா தயவு செய்து எப்படி என்று சொல்லுங்க akka 🙏
 

Goms

Well-known member
உங்கள் பேட்டி மிக அருமை.

நீங்கள் உங்க தாயகத்தை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. வியக்க வைக்கிறது.

அவள் ஆரணி உண்மையில் உங்கள் எழுத்துக்கு விருது வழங்கக்கூடிய வகையில் தான் உள்ளது. வாழ்த்துக்கள் நிதாமா 👏👏👏
 

Ananthi.C

Well-known member
அழகா இருக்கீங்க சிஸ்....உங்கள பார்க்க முடிந்ததில் ரொம்ப சந்தோஷம்....
ஆரணி மட்டும் இல்லை... உங்கள் கதை மாந்தர்கள் அனைவரும் மனதுக்கு நெருக்கமாகி போவார்கள்.... பத்து வருடங்களுக்கு முன் நான் முதன் முதலாக படித்த விருமாண்டியிம் கருப்பியும் இன்னும் நினைவில் இருந்து நீங்காமல் இருக்கின்றனர்.... உன் அன்புக்கு நன்றி படித்த பொழுது கதறி கதறி அழுது தலைவலியே வந்துவிட்டது.... உங்கள் கதைகளை சாதாரணமாக கடக்க முடிவதில்லை.... இந்த தளத்தின் மூலம் உங்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் சந்தோஷம்....
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Top Bottom