• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 19

Kameswari

Member
சுயநலத்தோட மொத்த உருவமா பாலகுமாரன் 😡😡😡 மனிதனில் சேர்த்தியே இல்லை. வயித்துப்பிள்ளைக்காரியால மேல எதுவும் பிரச்சனை வரக்கூடாதுன்னு என்னவொரு கேவலமான காரியம் பண்ணியிருக்கான்.

நிலன் ❤ வஞ்சி உறவுல தான் சூறாவளி அடிக்கப் போகுது. பாவம் நிலன்!
 

sarjana

Active member
மனிதர்களில்தான் எத்தனை வகை
அவரவர்க்கு அவரவர் நியாயம்
 

vijisarma

New member
கதையின் போக்கு ஓரளவுக்கு தெரிந்து விட்டாலும் இத்தனை கேப்‌ தாங்க முடியாது. இனி தினமும் தொடர்ந்து கொடுங்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு கதை போகும் போக்கே அறிய ஆவல்
 

Parameswari G.

Active member
சகதிவேலை விட கொடிய வி*ஷ ஜந்து இந்த பாய்சன்குமார் 😡😡😡
வஞ்சி உன் முதல் எதிரி இவன்தான்.
 

Goms

Well-known member
தையல் நாயகி அம்மா எவ்வளவு சிறந்தவர், அருமையான பெண்மணி என்று சொல்ல வார்த்தையில்லை. முக்கியமான காரணம், வாசவி மற்றும் பாலகுமாரனுக்குப் பிறந்தாலும் இருவரின் கோழைத்தனமும், சுயநலமும், ஏன் அதன் சுவடு கூட இல்லாமல் தன்னைப்போலவே அன்பான, துணிச்சலான நிமிர்வான பெண்ணாக இளவஞ்சியை வளர்த்திருக்கிறார்.👏👏

சக்திவேலைத்தான் தப்பானவர் என்று நினைத்திருந்தோம், அமைதியாய் சித்தரிக்கப்பட்ட பாலகுமாரனுக்குள் இவ்வளவு பெரிய அரக்கன் ஒழிந்திருப்பான் என்று நினைக்கவில்லை.😡😡

இளவஞ்சி நிலனின் வாழ்க்கைதான் சிக்கல் என்றால் இது சுவாதி மிதுனின் வாழ்க்கையையும் புரட்டிப்போடும்போல் உள்ளது. சுவாதி ஆடம்பரமான சுதந்திரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஒரு ஆழிப்பேரலைக்குள் சிக்கிக் கொண்டாள். 😔

கதை திருத்தமாக நீங்கள் குறிப்பிட்டுள்ளதே கதையை சரியாக புரிந்துகொள்ள உதவியது. அருமை நிதாமா. 🥰🥰

ஆனால் சின்ன லீவுன்னு சொல்லிப்போட்டு பெரிய லீவா எடுத்துட்டீங்க. தினமும் அடிக்கடி லிங்கை ஓப்பன் பண்ணிப் பண்ணிப் பார்த்து எங்க சின்ன விரல்கூட தேஞ்சுப் போச்சு 🤣🤣
 

Sowdharani

Well-known member
அக்கா திரும்ப நான் revision பண்ண போறேன்... சக்திவேலர் பாலகுமாரன் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்ல அப்புறம் ஜானகி தான் கட்டிக்க வேண்டிய பொண்ணுன்னு தெரிஞ்சும் எதுக்கு வாசுகியை லவ் பண்ணினார்... சொத்தை எழுதி வாங்கும் போது கூட உஷார் ஆகாமல் விட்டீங்க வாசுகி...
 
Top Bottom