Thamizhselvi
Active member
அருமையான பதிவு.மனதிற்கு இதம் தரும் வசனங்கள்.
ஹாஹா பவி.. செம கோபத்துல இருக்கீங்க போலவே. மிக்க நன்றி.Super going sis, but, sharmi edutha decision correct pa, eppadi oru mami, en kaila maatuna kaima than
அருமையான பதிவு.மனதிற்கு இதம் தரும் வசனங்கள்.
நீங்கள் கதைமாந்தர்கள் ஒவ்வொருக்கும் தேர்ந்தெடுக்கும் பெயர்கள் அருமை.அதுவே கதைக்கு மேலும் சுவையூட்டுகிறது நிதா.
Sis 6th epi upload pannalaya“ஃபிளைட்ல ஏதாவது சாப்பிட்டியா?”
இல்லையென்று தலையசைத்தாள்.
“ஏன்?” விடாமல் அவன் கேட்கவும், “என்ன ஏன்? இங்க வந்தமாதிரி அங்க வாந்தி வந்தாலும் எண்டுதான்.” அவளையும் மீறிச் சிடுசிடுத்தாள்.
முடியாமல் இருக்கும் நேரத்தில் என்ன இது ஆளாளுக்கு நொய் நொய் என்று சினம்தான் வந்தது. அவனும் மனைவியின் நிலை உணர்ந்து தணிந்து போனான்.
“வெறும் வயித்தோட எல்லோ இருக்கிறாய். இதுவும் வேணாம் எண்டா, வேற என்ன வாங்கித் தர?” உண்மையாகவே அவளுக்கு என்ன கொடுக்கலாம் என்று அவனுக்குத் தெரியவே இல்லை. மனதளவில் குன்றினான்.
“முடிஞ்சா கொஞ்சம் இளம் சூட்டில சுடுதண்ணி வாங்கித் தாங்கோ. போதும்.” என்றாள்.
ஆழமாக அடிவாங்கினான் அவன். காலையில் சாப்பிடாததே அவனுக்கு வயிறு பசியில் கத்திக்கொண்டு கிடக்கிறது. இங்கே அவள்?
வேகமாய்ச் சென்று அவள் கேட்டதை வாங்கிவந்து கொடுத்தான். இரண்டுவாய் பருகிவிட்டு, “நீங்க சாப்பிடேல்லை?” என்று கேட்டாள்.
இல்லை என்று தலையசைத்தான். தான் இதை இத்தனை நாட்களாய்க் கேட்காமல் போனோமே என்றிருந்தது. அவள் மட்டுமா அவனுடைய குழந்தையும் அல்லவா. கண்கள் தானாக அவள் வயிற்றுக்குத் தாவ, அந்த வயிற்றை அள்ளி அணைக்க வேண்டும் போலிருந்தது. அத்தனை நேரமும் கோபம் ஆக்கிரமித்திருந்ததில் பொங்காத உணர்வுகள் இப்போது பொங்கின. ஏக்கத்தோடு மனைவியைப் பார்த்தான். அவள் எங்கோ சூனியத்தை வெறித்திருந்தாள்.
அவன் அருகில் இருக்கையில் செம்மை பூசியே இருக்கும் கன்னங்கள் ஒட்டிக் கிடந்தன. நாணமும் ஆசையும் போட்டிபோடும் விழிகளில் ஒளிர்வே இல்லை. சிரிப்பை மட்டுமே சிந்தும் இதழ்கள் வறண்டு காய்ந்து கிடந்தது. என்ன வாழ்க்கையை அவளுக்குக் கொடுத்திருக்கிறான்.
“இங்கதான் மணக்கும், வெளில நிண்டு சாப்பிட்டு வாங்கோ.” என்று அவள் சொல்ல, பசி தெரிந்தாலும் சாப்பிடும் எண்ணமே இல்லை அவனுக்கு. ஆனால் இன்று ஒருநாள் சாப்பிடாமல் இருந்தால் அவன் செய்தது எல்லாம் சரியாகிவிடுமா? இத்தனை நாட்களும் அவள் சாப்பிட முடியாமல் சிரமப்பட அவன் நன்றாகத்தானே வயிறு முட்ட விழுங்கினான்.
இறங்கிச் சென்று சாப்பிட்டான். பசிக்கு என்பதை விட, ‘ஏன் சாப்பிடேல்லை?’ என்று அவள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும் தெம்பற்று விழுங்கினான். அரைவாசிக்குமேல் அதுவும் முடியாமல் எறிந்துவிட்டு வந்தான்.
வீட்டுக்கு வந்ததும், மெல்லச் சென்று குளித்துவிட்டு வந்து, சமையலறைக்குள் அவள் நுழைந்து பாத்திரங்களைத் தேடவும், ‘எப்பதான் என்னோட கதைப்பா?’ என்று ஏக்கத்துடன் அவளையே விழிகளால் தொடர்ந்துகொண்டிருந்தவன், ‘களைப்போட இப்ப சமைக்கவேணுமா?’ என்று நாக்கு நுனிவரை எழுந்த கேள்வியை அடக்கிக்கொண்டான்.
அவளுக்குப் பிடித்தமாதிரி எதையாவது செய்தால் சாப்பிடுவாளே என்று தோன்றவும் தானும் சேர்ந்துகொண்டான்.
“என்ன சமைக்கப்போறாய்?” அவள் முகம் கொடுக்காதபோதும் அவன் மெல்ல மெல்ல பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தான்.
“ஒரு சோறும் ரசமும் மட்டும்தான்.”
அவள் பொருட்களைத்தேட, வேகமாக வெங்காயத்தை எடுத்து தோலை உரித்து வெட்டிக்கொடுத்தான். உள்ளியின் தோலை அவள் உரிக்க, அதனை உரலில் இடித்துக்கொடுத்தான்.
“வேற என்ன வேணும்?”
“புளி ஊறப்போடவேணும். தக்காளிப்பழம்?” அவள் கேட்டவற்றை எல்லாம் செய்து கொடுத்தான். ரசத்தூளுக்கான பொருட்களைத் தேடி அவள் எடுக்க, அவற்றை அடித்துக்கொடுத்தான். அடுப்பில் ரசத்துக்கான வேலையை அவள் ஆரம்பிக்க, ‘பசுமதி’ அரிசியை அவர்கள் இருவருக்கும் அளவாக எடுத்து, கழுவி ரைஸ்குக்கரில் போட்டு, உப்புமிட்டு வேக விட்டான். இருபது நிமிடங்களில் சுடச்சுட ரசமும் சோறும் தயாராயிருந்தது. மனைவியின் கைமணத்தில் ரசத்தின் வாசனை மூக்கை நிறைக்க, உமிழ்நீர் சுரந்தது அவனுக்கு.
இவ்வளவும் நடக்கும்போதும், ஏதாவது கதைப்பாள், கேட்பாள் என்று அவளையே கவனித்திருக்க, “சாப்பிடுறீங்களா?” என்று மட்டும்தான் கேட்டாள்.
ஏமாற்றம் நெஞ்சைக் கவ்வினாலும், எத்தனையோ நாட்களுக்குப் பிறகு அவள் கையால் கிடைக்கும் உணவைத் தவறவிட மனமில்லை. “உனக்கும் சேர்த்து போட்டுக்கொண்டு வா.” என்றான்.
அவனுக்குத் தட்டு நிறைய உணவைப் போட்டுக் கொடுத்துவிட்டு, எண்ணி நான்கு சோறுதான் வரும்போலிருந்த அளவில் சோற்றோடு ரசமும் வைத்து, ஊரிலிருந்து கொண்டுவந்த ஊறுகாய் மட்டுமே சேர்த்து அவள் சாப்பிட, “இது என்னத்த காணும்? இன்னும் கொஞ்சம் போடு!” என்று சோற்றைப்போட அவன் முயல, “இல்ல காணும்!” என்று கையைக் குறுக்கே கொணர்ந்து தடுத்துவிட்டாள்.
அவ்வளவுதான் அவனோடு அவள் பேசியவை. சாப்பிட்டுவிட்டுச் சென்று படுத்துக்கொண்டாள்.
இது அவளில்லை! இந்த அமைதி அவள் இயல்பில்லை!
மாற்றியே ஆகவேண்டும்! அவளின் அந்த அமைதி அவனுக்குள் கிலியைத்தான் பரப்பிக் கொண்டிருந்தது. கதைக்கவேண்டிய நேரத்தில் கதைக்கத் தவறிய தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்துகொண்டிருந்தான். சின்ன விஷயமாக முடித்திருக்க வேண்டிய ஒன்றை அவனும் சேர்ந்து பெரிதாக்கி, பெரிய மனவிரிசலில் கொண்டுவந்து விட்டுவிட்டானே!
நன்றாக உறங்கிப் போனவளையே பார்த்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான் சீராளன்.
அங்கே அதே அறையிலேயே அவனோடு திருமணத்தில் நின்றவள் ஃபோட்டோவைப் பார்த்தான். அதில் இருப்பவள் தங்கை என்று கூடிச் சொல்லமுடியாத அளவில் சிதைந்து போயிருந்தது அவள் தோற்றம். இதுதானா அவன் கொடுத்த திருமணப் பரிசு. ஊரில் யாரையாவது கட்டியிருக்க சந்தோசமாக வாழ்ந்திருப்பாளோ? நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
அடுத்த கணமே அவளருகில் அவனையன்றி இன்னொருவனை நினைப்பில் கூட நிறுத்த முடியாமல், அவன்தான் ஊரில் இருக்கும் ஒருவனாகவும் மனக்கண் முன்னே வந்து நின்றான்.
அவள் எழுந்த பிறகும், ஏதாவது கதைப்பாள் என்று அவன் எதிர்பார்க்க, அவளோ ஒன்றும் சொல்லவே இல்லை. தன் பாட்டுக்கு முகம் கழுவிக்கொண்டுவந்து சோபாவில் சென்று முடங்கிக்கொண்டாள்.
பயணக்களையா அல்லது உடல்நிலை சரியில்லையா கைகளை கன்னத்துக்குக் கீழே கொடுத்து கால்களை முடக்கிக்கொண்டு கண்களை மூடியிருந்தாள். உறங்கவில்லை என்பதை மூடியிருந்த விழிகளுக்குள் ஓடித்திருந்த கருமணிகள் உணர்த்தின. அவன் முகம் பார்க்கப் பிடிக்கவில்லையோ?
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.