அத்தியாயம் 46
அன்று மாலை அவளை அழைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தான் அனந்தன். நிரல்யாவிடத்தில் ஒருவித அமைதி. எதையோ தனக்குள் வைத்து உழல்கிறாள் என்று தெரிந்தது. மெதுவாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். சுருக்கமாகப் பதில் வந்ததே தவிர்த்து, காலையில் அவனோடு இருந்துவிட்டுப் போன நிரல்யாவாய் இல்லை அவள்.
“என்ன நிரல், ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” அதற்குமேல் பொறுமை இல்லாமல் நேராகவே விசாரித்தான்.
“எப்பிடி மச்சான், அந்தச் சின்ன வயதில அம்மாவும் அப்பாவும் இனி இல்லை எண்டதைத் தாங்கினீங்க? அதுவும் ஒரே நேரத்தில ரெண்டு பேரும் இல்லாம…” திடீர் என்று அவளிடமிருந்து வந்த கேள்வியில் அவன் கையில் பஜிரோ தளம்பப் பார்த்தது.
“என்ன திடீர் எண்டு?” என்றான் தன்னைச் சமாளிக்க முயன்றபடி.
“இல்ல, நிவிக்கு அங்கிள் இன்னும் இருக்கிறார். அண்ணா இருக்கிறார், ஒரு மகள் இருக்கிறா. அத விட அன்ட்ரிக்கு ஆகவும் ஏலாம வந்திட்டுது எண்டு அவளுக்கே தெரியும். ‘அம்மாக்கு சுகமா உயிர் போயிடாதா எண்டு சில நேரம் இருக்கடி’ எண்டு அண்டைக்கு அவளே சொன்னவள். ஆனா இப்ப அம்மா இல்லாம இனி என்ன செய்வன் எண்டு அப்பிடி அழுறாள். எனக்கு உங்கட நினைவுதான் வந்தது.” என்றதும் அதற்குமேல் முடியாமல் பஜிரோவை வீதியின் ஓரமாக நிறுத்திவிட்டு, அப்படியே அமர்ந்திருந்தான் அனந்தன்.
அவனுடைய அந்த அமைதி, சும்மா இருந்தவனுக்குத் தாய் தந்தையை நினைவூட்டி விட்டோமோ என்று தோன்ற வைத்துவிட,“சொறி மச்சான், அது ஒரு மாதிரி மனதைப் போட்டுப் பிசஞ்சுகொண்டே இருந்தது. அதான் கேட்டனான்.” என்றாள் மெல்லிய குரலில்.
“அப்பிட எல்லாம் ஒண்டும் இல்ல. வா, கொஞ்சத் தூரம் நடந்திட்டு வருவம்!” என்று, ஒரு பக்கம் வற்றிக்கொண்டிருக்கும் ஆறும் மறுபக்கம் ஓங்கி வளர்ந்து நின்று நிழல் பரப்பிய மரங்களுக்குமிடையில் அமைந்திருந்த குளக்கட்டின் ஒடுக்கமான பாதையால் அவளை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
சற்றுத் தூரம் நடந்த பிறகு, “ஒரு பயங்கரமான இழப்பையோ நிகழ்வையோ யோசிச்சுப் பாத்தாய் எண்டு வை, உன்னால தாங்கவே ஏலாத மாதிரி இருக்கும். இப்பிடியெல்லாம் நடந்திடக் கூடாது எண்டு மனம் பதறும். அதுவே அது நடக்கேக்கை எவ்வளவு வலிச்சாலும் உன்னை மீறியே அதைக் கடந்து வந்திடுவாய்.” என்றான் அவன் பொதுவாய்.
ஆக வலித்திருக்கிறது. துடித்திருக்கிறான். வேறு வழியே இல்லாமல் கடந்தும் வந்திருக்கிறான். நெஞ்சு அடைப்பது போலிருக்க தவிப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவள் பார்வையை உணர்ந்தவன் போன்று பற்றியிருந்த அவள் கரத்தை அழுத்திக்கொடுத்தான் அவன்.
“எதிர்பாக்கவே இல்லைதான் நிரல். நம்பவே ஏலாம இருந்தது. அதைவிட அவேன்ர பொடிய வேற பாக்காததால அவேக்கு ஒண்டும் நடக்காம இருந்து, திரும்பி வந்திடாயினமா(வந்துவிட மாட்டார்களா) எண்டெல்லாம் நினைச்சுப் பாத்திருக்கிறன்.” என்றதும் தொண்டை அடைக்க, அதற்கு மேல் நடக்க முடியாமல் நின்றுவிட்டாள்.
அவனும் நின்று திரும்பி அவள் முகம் பார்த்து, “அந்த நேரமெல்லாம் எனக்கு ஆறுதலா இருந்தது ஆர் தெரியுமா?” என்று கேட்டான். அவள் தெரியாது என்பது போல் தலையை அசைக்க, “நீ!” என்றான் அவன்.
அவள் நம்ப முடியாமல் விழிகளை விரித்தாள்.
அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு. “ஆரம்பம் என்னோட நீ கொஞ்சம் மல்லுக்குத்தான் நிப்பாய். அதைக் கவனிச்சிட்டு மாமி உனக்கு என்னவோ சொல்லியிருக்க வேணும். அதுக்குப் பிறகு உனக்கு என்னவோ நீ பெரிய மனுசி மாதிரியும் நான் என்னவோ சின்ன பிள்ளை மாதிரியும் ஒரு நினைப்பு. என்ர புக்ஸ் அடிக்கித் தாறது, என்னோட வந்திருந்து கதைக்கிறது, அறைக்கையே முடங்கி இருந்தாலும் பிடிவாதமா கூட்டிக்கொண்டு போய் விளையாடுறது, நான் ஒழுங்கா சாப்பிடுறனா எண்டு என்னைக் கவனிக்கிறது எண்டு எல்லாம் செய்வாய்.” என்றான் அவளை நோக்கிக் கனிவுடன் புன்னகைத்தபடி.
அவளிடத்தில் அதன் எதிரொலியாய் மெல்லிய முறுவல்.
“அம்மா அப்பா இனி இல்லை எண்டுறது ஒரு பக்கம் எண்டால், இனி ஆர் என்னை வச்சுப் பாப்பினம் எண்டுற பயம் முதல் இருந்தது. உங்கட வீட்டுக்கு வந்த பிறகு உங்களுக்குப் பாரமா இருந்திடக் கூடாது, நீங்களும் வெளில போ எண்டு சொல்லிட்டா எங்க போறது எண்டு அடுத்த பயம். நானும் அம்மா அப்பாவோடயே செத்திருக்கலாம் எண்டு நிறைய நாள் நினைச்சிருக்கிறன். அந்த நேரம் அம்மா அப்பாக்குப் பிறகு என்ர வாழ்க்கையைச் சந்தோசமாக்கினது, என்னைச் சிரிக்க வச்சது, எனக்குத் துணையா இருந்தது எல்லாமே நீதான். அந்தளவுக்கு மாமிக்கு மேலால என்னை ஓடி ஓடிக் கவனிச்சது நீ.”
அவன் சொல்வது உண்மைதான். ஒருமுறை அவள் துடுக்குத்தனத்தில் ‘உங்கட அம்மாவும் அப்பாவும் எங்க? நீங்க ஏன் எங்கட வீட்டை வந்து இருக்கிறீங்க?’ என்று கேட்டபோது, அவளைத் தனியாக அழைத்துச் சென்று, “அவன் தாயில்லாப் பிள்ளையாச்சி. அப்பிடி எல்லாம் கேக்கக் கூடாது. பிறகு கவலைப்படுவான். அவனுக்கு இனி அம்மா அப்பா எல்லாம் நாங்கதான். நாங்கதான் அவனைப் பாக்கோணும், பாசமா இருக்கோணும். அம்மா இல்லையே, இருந்திருந்தா எனக்கு இது நடந்திருக்காதே எண்டு நினைக்க வைக்கக் கூடாது.” என்று அமிர்தவல்லி சொல்லிக் கொடுத்திருந்தார். அதன் பிறகு அவளும் தன் அறிவுக்கு எட்டியவரையில் அவன் தாயை உணரும் வகையில் நடந்ததில்லை.
“சாதாரணமாப் பாத்தா நீ என்னை வெறுத்திருக்க வேணும். உங்கட வீட்டுக்கு நீ ஒரேயொரு பிள்ளை. அவ்வளவு செல்லம். அவ்வளவு காலமும் வாங்குறது எல்லாமே உனக்கு மட்டும்தான். திடீர் எண்டு அது எல்லாத்திலையும் பங்கு போடுறதுக்கு எண்டு நான் ஒருத்தன் வந்து நிக்கிறன். மாமா மாமியும் பிரிச்சுப் பாக்காம உனக்கு என்ன செய்தாலும் எனக்கும் சரியாச் செய்வீனம். நீ பொறாமைப் படவும் இல்லை, என்னை வெறுத்து ஒதுக்கவும் இல்ல. உன்ர பங்குக்கு உன்னட்ட இருக்கிறதிலையும் பாதியக் கொண்டுவந்து எனக்குத் தருவாய். ஒருக்கா நான் என்ர உள்ளுடுப்ப தோச்சுக்கொண்டு இருக்கேக்க நான் தோச்சுத் தரவா எண்டெல்லாம் கேட்டிருக்கிறாய். எனக்குத்தான் அப்ப கூச்சமாப் போச்சு.” என்றதும் தளும்பிவிட்ட கண்ணீருடன் சிரித்தாள் நிரல்யா.
“ஒருக்கா என்ர ஷு வெடிச்சிட்டுது. எனக்கு அதச் சொல்லிப் புது ஷு வேணும் எண்டு கேக்க ஒரு மாதிரி வெக்கமா இருந்தது. ஆனா நீ அடுத்த நாளே அதப் பாத்திட்டு மாமிட்டச் சொல்லி, மாமா வாங்கித் தந்தவர். உனக்குத் தெரியுமா தெரியா நிரல். உன்ர அன்பில ஒரு தீவிரம் இருக்கும். உனக்குப் பிடிச்ச ஒருத்தருக்காகக் கடைசி வரைக்கும் நிக்கிற ஆள் நீ. இந்தளவுக்கு என்னோட அன்பா இருந்த நீதான் நான் மாமாவோட சேர்ந்து தொழில்ல இறங்கினதும் என்னை விட்டு முழுசா விலகி நிண்டதும். அதுவும் எனக்காகவே என்னட்டச் சண்டை பிடிச்சாய் பார்… உன்ன எப்பிடியடி நான் விடுவன்? அப்பிடி அம்மா அப்பா இல்லாத உலகத்தில அந்த இழப்புத் தெரியாம என்னை வாழ வச்சவள் எல்லா நீ!” என்றதும், “தேங்க்ஸ் மச்சான்!” என்று இருக்கும் இடம் மறந்து அவன் மார்பில் சாய்ந்து விம்மினாள் அவள்.
அதெல்லாம் அவள் கவனமெடுத்தோ தெரிந்தோ செய்தவை அன்று. அந்தச் சின்ன வயதில் அவளுக்குத் தோன்றியவற்றைச் செய்திருக்கிறாள். ஆனால், அதையே தான் வாழ்வதற்கான ஆதாரமாகப் பற்றிக்கொண்டு எழுந்து நின்றிருக்கிறான் அவன். இது தெரியாமல் என்னவெல்லாம் நடந்துவிட்டது அவர்கள் வாழ்க்கையில்?
பார்வை தம்மைச் சுற்றிவர, “ஆக தேங்க்ஸ் சொல்லுற பழக்கம் இன்னும் உன்ன விட்டுப் போகேல்ல.” என்றவனின் கைகளும் அவளை அணைத்துக்கொண்டன.
“சொல்லோணும் மாதிரி இருந்தா நான் சொல்லுவன். நீங்க கேட்டுத்தான் ஆகோணும்.” செல்லப் பிடிவாதத்துடன் சொன்னாள் அவள்.
“உனக்கு வரவர என்னில இருக்கிற பயம் விட்டுப் போச்சு நிரல். என்றதும் அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவன் கைகளுக்குள் இருந்தவாறே அவனை நிமிர்ந்து பார்த்து, “எனக்குப் பயம் விட்டுப் போகேல்ல. ஆனா, இந்த அடிதடி தன்ர கைய வெளில மட்டும்தான் நீட்டுவார் எண்டு தெரிஞ்சிட்டுது எனக்கு.” என்றாள் சிரிப்புடன்.
“அதையெல்லாம் விட்டு எவ்வளவோ காலமாச்சு. இப்பவும் அடிதடி எண்டு சொல்லுவியா நீ?”
“ஓ! ரெண்டு கிழமைக்கு முதலும் ஆரையோ கொண்டு வந்து கடைக்குப் பின்னால வெளுத்தீங்களாம் எண்டு கேள்விப்பட்டன். பொய்யா என்ன?” என்றாள் புருவங்களை உயர்த்தி.
அவன் முகம் நொடியில் தீவிரமாயிற்று. “உனக்கு எப்பிடித் தெரியும் அது?” என்றான் புருவங்கள் சுருங்க. அது நடந்தது ஒரு நாள் இரவு. அதுவும் கடையைப் பூட்டிய பிறகு. அன்று அவனுக்கு நம்பிக்கையான இருவரைத் தவிர்த்து வேறு யாரும் அங்கிருக்கவில்லை. அப்படி இருந்தும் அவளுக்குச் செய்தி போயிருக்கிறது என்றால் அதை அவன் கவனித்தேயாக வேண்டும்!
“சொல்லு நிரல்!” என்றான் அதட்டி.
அன்று மாலை அவளை அழைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தான் அனந்தன். நிரல்யாவிடத்தில் ஒருவித அமைதி. எதையோ தனக்குள் வைத்து உழல்கிறாள் என்று தெரிந்தது. மெதுவாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். சுருக்கமாகப் பதில் வந்ததே தவிர்த்து, காலையில் அவனோடு இருந்துவிட்டுப் போன நிரல்யாவாய் இல்லை அவள்.
“என்ன நிரல், ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” அதற்குமேல் பொறுமை இல்லாமல் நேராகவே விசாரித்தான்.
“எப்பிடி மச்சான், அந்தச் சின்ன வயதில அம்மாவும் அப்பாவும் இனி இல்லை எண்டதைத் தாங்கினீங்க? அதுவும் ஒரே நேரத்தில ரெண்டு பேரும் இல்லாம…” திடீர் என்று அவளிடமிருந்து வந்த கேள்வியில் அவன் கையில் பஜிரோ தளம்பப் பார்த்தது.
“என்ன திடீர் எண்டு?” என்றான் தன்னைச் சமாளிக்க முயன்றபடி.
“இல்ல, நிவிக்கு அங்கிள் இன்னும் இருக்கிறார். அண்ணா இருக்கிறார், ஒரு மகள் இருக்கிறா. அத விட அன்ட்ரிக்கு ஆகவும் ஏலாம வந்திட்டுது எண்டு அவளுக்கே தெரியும். ‘அம்மாக்கு சுகமா உயிர் போயிடாதா எண்டு சில நேரம் இருக்கடி’ எண்டு அண்டைக்கு அவளே சொன்னவள். ஆனா இப்ப அம்மா இல்லாம இனி என்ன செய்வன் எண்டு அப்பிடி அழுறாள். எனக்கு உங்கட நினைவுதான் வந்தது.” என்றதும் அதற்குமேல் முடியாமல் பஜிரோவை வீதியின் ஓரமாக நிறுத்திவிட்டு, அப்படியே அமர்ந்திருந்தான் அனந்தன்.
அவனுடைய அந்த அமைதி, சும்மா இருந்தவனுக்குத் தாய் தந்தையை நினைவூட்டி விட்டோமோ என்று தோன்ற வைத்துவிட,“சொறி மச்சான், அது ஒரு மாதிரி மனதைப் போட்டுப் பிசஞ்சுகொண்டே இருந்தது. அதான் கேட்டனான்.” என்றாள் மெல்லிய குரலில்.
“அப்பிட எல்லாம் ஒண்டும் இல்ல. வா, கொஞ்சத் தூரம் நடந்திட்டு வருவம்!” என்று, ஒரு பக்கம் வற்றிக்கொண்டிருக்கும் ஆறும் மறுபக்கம் ஓங்கி வளர்ந்து நின்று நிழல் பரப்பிய மரங்களுக்குமிடையில் அமைந்திருந்த குளக்கட்டின் ஒடுக்கமான பாதையால் அவளை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
சற்றுத் தூரம் நடந்த பிறகு, “ஒரு பயங்கரமான இழப்பையோ நிகழ்வையோ யோசிச்சுப் பாத்தாய் எண்டு வை, உன்னால தாங்கவே ஏலாத மாதிரி இருக்கும். இப்பிடியெல்லாம் நடந்திடக் கூடாது எண்டு மனம் பதறும். அதுவே அது நடக்கேக்கை எவ்வளவு வலிச்சாலும் உன்னை மீறியே அதைக் கடந்து வந்திடுவாய்.” என்றான் அவன் பொதுவாய்.
ஆக வலித்திருக்கிறது. துடித்திருக்கிறான். வேறு வழியே இல்லாமல் கடந்தும் வந்திருக்கிறான். நெஞ்சு அடைப்பது போலிருக்க தவிப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவள் பார்வையை உணர்ந்தவன் போன்று பற்றியிருந்த அவள் கரத்தை அழுத்திக்கொடுத்தான் அவன்.
“எதிர்பாக்கவே இல்லைதான் நிரல். நம்பவே ஏலாம இருந்தது. அதைவிட அவேன்ர பொடிய வேற பாக்காததால அவேக்கு ஒண்டும் நடக்காம இருந்து, திரும்பி வந்திடாயினமா(வந்துவிட மாட்டார்களா) எண்டெல்லாம் நினைச்சுப் பாத்திருக்கிறன்.” என்றதும் தொண்டை அடைக்க, அதற்கு மேல் நடக்க முடியாமல் நின்றுவிட்டாள்.
அவனும் நின்று திரும்பி அவள் முகம் பார்த்து, “அந்த நேரமெல்லாம் எனக்கு ஆறுதலா இருந்தது ஆர் தெரியுமா?” என்று கேட்டான். அவள் தெரியாது என்பது போல் தலையை அசைக்க, “நீ!” என்றான் அவன்.
அவள் நம்ப முடியாமல் விழிகளை விரித்தாள்.
அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு. “ஆரம்பம் என்னோட நீ கொஞ்சம் மல்லுக்குத்தான் நிப்பாய். அதைக் கவனிச்சிட்டு மாமி உனக்கு என்னவோ சொல்லியிருக்க வேணும். அதுக்குப் பிறகு உனக்கு என்னவோ நீ பெரிய மனுசி மாதிரியும் நான் என்னவோ சின்ன பிள்ளை மாதிரியும் ஒரு நினைப்பு. என்ர புக்ஸ் அடிக்கித் தாறது, என்னோட வந்திருந்து கதைக்கிறது, அறைக்கையே முடங்கி இருந்தாலும் பிடிவாதமா கூட்டிக்கொண்டு போய் விளையாடுறது, நான் ஒழுங்கா சாப்பிடுறனா எண்டு என்னைக் கவனிக்கிறது எண்டு எல்லாம் செய்வாய்.” என்றான் அவளை நோக்கிக் கனிவுடன் புன்னகைத்தபடி.
அவளிடத்தில் அதன் எதிரொலியாய் மெல்லிய முறுவல்.
“அம்மா அப்பா இனி இல்லை எண்டுறது ஒரு பக்கம் எண்டால், இனி ஆர் என்னை வச்சுப் பாப்பினம் எண்டுற பயம் முதல் இருந்தது. உங்கட வீட்டுக்கு வந்த பிறகு உங்களுக்குப் பாரமா இருந்திடக் கூடாது, நீங்களும் வெளில போ எண்டு சொல்லிட்டா எங்க போறது எண்டு அடுத்த பயம். நானும் அம்மா அப்பாவோடயே செத்திருக்கலாம் எண்டு நிறைய நாள் நினைச்சிருக்கிறன். அந்த நேரம் அம்மா அப்பாக்குப் பிறகு என்ர வாழ்க்கையைச் சந்தோசமாக்கினது, என்னைச் சிரிக்க வச்சது, எனக்குத் துணையா இருந்தது எல்லாமே நீதான். அந்தளவுக்கு மாமிக்கு மேலால என்னை ஓடி ஓடிக் கவனிச்சது நீ.”
அவன் சொல்வது உண்மைதான். ஒருமுறை அவள் துடுக்குத்தனத்தில் ‘உங்கட அம்மாவும் அப்பாவும் எங்க? நீங்க ஏன் எங்கட வீட்டை வந்து இருக்கிறீங்க?’ என்று கேட்டபோது, அவளைத் தனியாக அழைத்துச் சென்று, “அவன் தாயில்லாப் பிள்ளையாச்சி. அப்பிடி எல்லாம் கேக்கக் கூடாது. பிறகு கவலைப்படுவான். அவனுக்கு இனி அம்மா அப்பா எல்லாம் நாங்கதான். நாங்கதான் அவனைப் பாக்கோணும், பாசமா இருக்கோணும். அம்மா இல்லையே, இருந்திருந்தா எனக்கு இது நடந்திருக்காதே எண்டு நினைக்க வைக்கக் கூடாது.” என்று அமிர்தவல்லி சொல்லிக் கொடுத்திருந்தார். அதன் பிறகு அவளும் தன் அறிவுக்கு எட்டியவரையில் அவன் தாயை உணரும் வகையில் நடந்ததில்லை.
“சாதாரணமாப் பாத்தா நீ என்னை வெறுத்திருக்க வேணும். உங்கட வீட்டுக்கு நீ ஒரேயொரு பிள்ளை. அவ்வளவு செல்லம். அவ்வளவு காலமும் வாங்குறது எல்லாமே உனக்கு மட்டும்தான். திடீர் எண்டு அது எல்லாத்திலையும் பங்கு போடுறதுக்கு எண்டு நான் ஒருத்தன் வந்து நிக்கிறன். மாமா மாமியும் பிரிச்சுப் பாக்காம உனக்கு என்ன செய்தாலும் எனக்கும் சரியாச் செய்வீனம். நீ பொறாமைப் படவும் இல்லை, என்னை வெறுத்து ஒதுக்கவும் இல்ல. உன்ர பங்குக்கு உன்னட்ட இருக்கிறதிலையும் பாதியக் கொண்டுவந்து எனக்குத் தருவாய். ஒருக்கா நான் என்ர உள்ளுடுப்ப தோச்சுக்கொண்டு இருக்கேக்க நான் தோச்சுத் தரவா எண்டெல்லாம் கேட்டிருக்கிறாய். எனக்குத்தான் அப்ப கூச்சமாப் போச்சு.” என்றதும் தளும்பிவிட்ட கண்ணீருடன் சிரித்தாள் நிரல்யா.
“ஒருக்கா என்ர ஷு வெடிச்சிட்டுது. எனக்கு அதச் சொல்லிப் புது ஷு வேணும் எண்டு கேக்க ஒரு மாதிரி வெக்கமா இருந்தது. ஆனா நீ அடுத்த நாளே அதப் பாத்திட்டு மாமிட்டச் சொல்லி, மாமா வாங்கித் தந்தவர். உனக்குத் தெரியுமா தெரியா நிரல். உன்ர அன்பில ஒரு தீவிரம் இருக்கும். உனக்குப் பிடிச்ச ஒருத்தருக்காகக் கடைசி வரைக்கும் நிக்கிற ஆள் நீ. இந்தளவுக்கு என்னோட அன்பா இருந்த நீதான் நான் மாமாவோட சேர்ந்து தொழில்ல இறங்கினதும் என்னை விட்டு முழுசா விலகி நிண்டதும். அதுவும் எனக்காகவே என்னட்டச் சண்டை பிடிச்சாய் பார்… உன்ன எப்பிடியடி நான் விடுவன்? அப்பிடி அம்மா அப்பா இல்லாத உலகத்தில அந்த இழப்புத் தெரியாம என்னை வாழ வச்சவள் எல்லா நீ!” என்றதும், “தேங்க்ஸ் மச்சான்!” என்று இருக்கும் இடம் மறந்து அவன் மார்பில் சாய்ந்து விம்மினாள் அவள்.
அதெல்லாம் அவள் கவனமெடுத்தோ தெரிந்தோ செய்தவை அன்று. அந்தச் சின்ன வயதில் அவளுக்குத் தோன்றியவற்றைச் செய்திருக்கிறாள். ஆனால், அதையே தான் வாழ்வதற்கான ஆதாரமாகப் பற்றிக்கொண்டு எழுந்து நின்றிருக்கிறான் அவன். இது தெரியாமல் என்னவெல்லாம் நடந்துவிட்டது அவர்கள் வாழ்க்கையில்?
பார்வை தம்மைச் சுற்றிவர, “ஆக தேங்க்ஸ் சொல்லுற பழக்கம் இன்னும் உன்ன விட்டுப் போகேல்ல.” என்றவனின் கைகளும் அவளை அணைத்துக்கொண்டன.
“சொல்லோணும் மாதிரி இருந்தா நான் சொல்லுவன். நீங்க கேட்டுத்தான் ஆகோணும்.” செல்லப் பிடிவாதத்துடன் சொன்னாள் அவள்.
“உனக்கு வரவர என்னில இருக்கிற பயம் விட்டுப் போச்சு நிரல். என்றதும் அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவன் கைகளுக்குள் இருந்தவாறே அவனை நிமிர்ந்து பார்த்து, “எனக்குப் பயம் விட்டுப் போகேல்ல. ஆனா, இந்த அடிதடி தன்ர கைய வெளில மட்டும்தான் நீட்டுவார் எண்டு தெரிஞ்சிட்டுது எனக்கு.” என்றாள் சிரிப்புடன்.
“அதையெல்லாம் விட்டு எவ்வளவோ காலமாச்சு. இப்பவும் அடிதடி எண்டு சொல்லுவியா நீ?”
“ஓ! ரெண்டு கிழமைக்கு முதலும் ஆரையோ கொண்டு வந்து கடைக்குப் பின்னால வெளுத்தீங்களாம் எண்டு கேள்விப்பட்டன். பொய்யா என்ன?” என்றாள் புருவங்களை உயர்த்தி.
அவன் முகம் நொடியில் தீவிரமாயிற்று. “உனக்கு எப்பிடித் தெரியும் அது?” என்றான் புருவங்கள் சுருங்க. அது நடந்தது ஒரு நாள் இரவு. அதுவும் கடையைப் பூட்டிய பிறகு. அன்று அவனுக்கு நம்பிக்கையான இருவரைத் தவிர்த்து வேறு யாரும் அங்கிருக்கவில்லை. அப்படி இருந்தும் அவளுக்குச் செய்தி போயிருக்கிறது என்றால் அதை அவன் கவனித்தேயாக வேண்டும்!
“சொல்லு நிரல்!” என்றான் அதட்டி.
Last edited: