Deepa Senbagam
கதை விமர்சனம்.
கதை: ஏனோ மனம் தள்ளாடுதே.
ஆசிரியர்: நிதனி பிரபு .
சில கதைகளை வாசித்தவுடன் அதற்கு விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றும். அப்படியான ஒரு கதை ஏனோ மனம் தள்ளாடுதே.
இலங்கைத் தமிழில் நான் வாசிக்கும் முதல் கதை. அம்மாச்சி என நாங்கள் அம்மாவின் அம்மாவைச் சொல்லுவோம். இங்கு மகளை செல்லமாக, இல்லமா என்பது போல் பயன்படுத்துவார்கள் என்பது முதற்கொண்டு, பற்பல சொற்கள் எனக்கு அறிகமுகமானது.
காலையில் , நிதனி பிரபுவின்... நான் கதையை இன்னும் வச்சிருக்கனும்னு சொன்னா அழுதுடுவேன் என்ற போஸ்டை பார்த்து, வாசிக்க ஆரம்பித்தான். சாதாரணமாக நான் எழுதி பதிய வேண்டிய என் கதையின் அத்யாயங்கள் மற்றவர் கதைகளை வாசிக்க இயலாமல் துரத்தும். இன்று, அஜீரணம், ட்ரிப்ஸ், உடல்நிலை தொய்வு, வழக்கமான வேலைகளைச் செய்ய இயலாமல் போனதும் நன்றதாக போயிற்று. ஒரு நல்ல கதையை வாசித்த அதோடு இலங்கையில் வாழ்ந்த அனுபவத்தை தந்தது.
நேர்மையான, பள்ளியின் மீது உணர்வுபூர்வமான பற்றுதல் கொண்ட ஆசிரியை, அப்பாவின் மேல் கொண்ட பாசம், தன்னை சுற்றியுள்ளவர்கள் மேல் கொண்ட அக்கறை என வாழும் பிரமிளா டிச்சர்.
இது அத்தனைக்கும் சவாலாக வரும் கௌசிகன், என இரு துருவங்களை வாழ்க்கையில் இணைத்து பயணிக்கும் கதை.
ஆரம்பத்தில் அடாவடியான நாயகர்கள், கடைசியில் மனைவின் அன்பில் சிறைபடுவது வழக்கம். நமது வாசகர்களும் அதைத் தான் எதிர்பார்ப்பார்கள். ஆனாலும் கௌசிகன் அவளுக்கு ஸ்பேஸ் கொடுத்து, அவ்வப்போது அவனையும் உணர்த்தி தனது மாற்றத்தை நன்றாகவே பதிவு செய்துள்ளான்.
கதையோட்டம், எந்த அதிகபடுத்திய உணர்ச்சி வயப்பட்ட சினிமாதனமும் இல்லாத இயல்பான கதை.
சொல்லாட்சியும் நன்றாகவே உள்ளது. இலங்கை தமிழ் என்பதால் இதை, இப்படியும் சொல்வார்களோ என யோசிக்க வைத்தது. ஆனால் விமர்சனமே உங்க பாணியில் வந்திடுமோ என்ற யோசனை.
நாயகன், நாயகி இருவர் கண்ணோட்டத்திலும் நகர்ந்த கதை அருமை.
கதாபாத்திர படைப்புகளும் , பெண்ணை பெற்ற அன்னையின் ஆதங்கம். மகனை பெற்ற தாயின் கையாலாகத்தனம், நாத்தனார் அண்ணி உறவின் பாசம், மாமனார் மருமகனின் உறவு , தாமதமாகவெனினும் மரு- மகன் என்பதை உணர்ந்து செயலாற்றும் நாயகன். அத்தான்- கொழுந்தியாள் உறவு என அத்தனையும் அருமை.
நல்ல கதை தந்தமைக்கு நன்றி.
மேலும் பல நல்ல கதைகளை தர வாழ்த்துக்கள் நிதனி பிரபு.