அப்ப கதையில் மட்டுமே மித்து மாறி இருக்கும் பெண்களுக்கு ஹாப்பி எண்டிங்.நிஜத்தில் இல்லையே நினைக்கும் போது இன்னும் மனசு பாரமா ஆகுது.அதேபோல இந்த கதை இன்னும் மனசுக்கு நெருக்கம் ஆகுது.இந்த அப்பா இப்ப உயிரோட இல்லை சித்ரா சிஸ். உண்மையான மித்ராவுக்கு உண்மையில் ஒரு அண்ணா இருக்கிறார். நிறையக் காலத்துக்குப் பிறகு ஒரு தம்பி பிறந்தார். அந்த சின்ன பிள்ளைக்கு நான்கு வயதாக இருக்கும்போது அந்த அப்பா இறந்துட்டார். அம்மா எப்பவோ ஒருவித மனநோயாளி. அவா ஒரு வேலை செய்யமாட்டா. மித்ராதான் ஆன்லைன் மூலம் படிச்சுக்கொண்டு அம்மாவையும் தம்பியையும் வீட்டில இருந்து கவனிக்கிறா. அண்ணா படிச்சு முடிச்சிட்டு வேலை செய்றார். அவரின் உழைப்பில்தான் மொத்த குடும்பமும் வாழுது.
அண்ணா, தங்கை இருவருமே 30 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள். திருமண வாழ்க்கை எப்படி அமையும், யார் அமைச்சு கொடுக்கிறது. முதல் இப்படியான ஒரு அம்மாவோடு இருக்கிற பிள்ளைகளை கட்ட யாராவது வருவார்களா. இப்பிடி இன்னுமே அந்த பிள்ளைகளுக்கு நிறைய கேள்விகள்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.