வணக்கம் வாசகர்களே!
‘அங்கீகாரம்’ மிகவும் பெரிய வார்த்தை! நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்ததும் கூட. மாணவப்பருவத்தில் கற்கையின் அங்கிகாரமாய் புள்ளிகள்; வேலையிலோ, அடுத்தடுத்த கட்டத்துக்காண நகர்வுகள்!
அதுவே நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் பிள்ளைகளின் நடத்தை, செயல்பாடுகள் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகையில் அவர்கள் மேலும் முன்னேற வழிவகுக்கும். அதைப்போலவே கணவன் மனைவி ஒருவர் ஒருவரை அங்கிகரிக்கவில்லையோ இருவராலும் இழுக்கப்படும் வாழ்வுத்தேர் சீராகச் செல்வதென்பது கடினமே! இழுபறியாகத்தான் இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையேயான அங்கீகாரம் என்பதில் முக்கிய பங்கை வகிப்பது ‘புரிதல்’ என்பதே! அது ஒன்றும் அவ்வளவு இலேசுப்பட்ட விடயம் அல்ல என்றே சொல்லலாம். புதிர் போட்டுக் குழப்பிவிடவல்லது. அவற்றைச் சரியாகப் புரிந்து அதன் நுணுக்கங்களை மெல்ல மெல்ல விடுவித்து புரிதலில் வெற்றி கொள்கையில் தம்பதிகளின் வாழ்வென்பதில் வசந்தமே!
இக்கதையில் உலாவருபவர்கள் புரிதலின் புதிர்களை எவ்வாறு அணுகமுயன்றார்கள் அதன் முடிவில் சந்தித்தவை... என நகரும் இக்கதையில் உங்களையும் நீங்கள் இனம்காணவும் கிடைக்கலாம் .
வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்.
அன்புடன் ரோசி கஜன்.