அத்தியாயம் 12
அந்தப்பயணம் அவர்கள் வாழ்வில் இன்னொரு படியாகவே அமைந்துபோயிற்று! அதற்குப்பிறகு அப்படியான ஹயர்கள் வந்தால் மறுக்காமல் சென்றான், நிகேதன். கூலியையும் அவன் அளவாக வாங்கியதில் ஹயரும் நன்றாகவே வந்தது.
தன் உறக்கத்தை விற்று அவன் உழைத்துக்கொண்டு வருவதில், செலவுகளில் மிகக் கவனமாக இருந்தாள், ஆரணி. நிகேதனின் சம்பளத்தில் மாதச் செலவைப் பார்த்துக்கொண்டு ஹயர் போய்வரும் பணத்தை சேமித்துக்கொள்வாள். இப்படி இருக்கையில்தான் சின்ன மகனின் ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாட மன்னாருக்கு வரப்போவதாக அறிவித்தார், சகாதேவன்.
“அண்ணி கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் ஆரா. நீ எதையும் பெருசா எடுக்காத!” என்றான், நிகேதன்.
ஆரணி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள். “பெருசா எடுக்காத எண்டால்? எனக்கு விளங்க இல்ல நிக்ஸ்.”
அவள் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் அவன் முகத்தில் முறுவல் அரும்பிற்று! “என்ன ஆளடி நீ? எல்லாத்துக்குமே சண்டைக்கு நிப்பியா?” என்றபடி அவளைத் தன் கைகளுக்குள் இழுத்துக்கொண்டான். “அவா நல்லவா தான். இல்லாம இவ்வளவு காலம் எங்கட குடும்பத்தை பாக்க அண்ணாவை விட்டிருக்க மாட்டா. ஆனா, எப்ப என்ன கதைப்பா, எப்பிடி நடப்பா எண்டு எனக்கும் வடிவா(தெளிவா) தெரியேல்ல ஆரா. நான் நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்காமயும் போகலாம். இல்லாம அவா ஏதாவது உன்ர மனம் நோகிற மாதிரி கதைச்சாலோ நடந்தாலோ கொஞ்சம் சமாளி.”
அவளுக்குப் புரியவில்லை. நியாயமற்ற எதற்கும் அவள் திருப்பிக் கதைக்கப் போவதில்லை. பிறகும் ஏன் இப்படிச் சொல்கிறான்?
“எங்களுக்காக நிறையச் செய்திருக்கிறா. அதால அவா கூடக்குறைய கதைச்சாலும் நாங்க ஒதுங்கிப் போயிடுவோம்.” என்றான் விளக்கம் போல.
காதலித்த நாட்களிலேயே இதைப்பற்றி அவன் சொல்லியிருக்கிறான்தான். அதற்காக அவளையும் அடங்கிப்போ என்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
“எனக்காக..” என்றான் கெஞ்சலாய்.
மறுக்கப்போனவள் அவனின் அந்த ‘எனக்காக’வில் அப்படியே தேங்கினாள். அவன் அப்படிக் கேட்டபிறகு அவனுக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய அவளால் இயலாது. ஆனால், அப்படியான சூழ்நிலைகளை எப்படிக் கடப்பாள்? இதுவரை பழக்கமில்லாத ஒன்றாயிற்றே. கண்களில் கலக்கம் சூழ அவனைப் பார்த்தாள். “என்னால முடியவே முடியாத ஒண்டை நீ கேக்கிறாய் எண்டு உனக்கு விளங்குதா நிக்ஸ்?”
ஆம் என்பதாகத் தலை அசைத்தவனின் அணைப்பு இறுகிப்போயிற்று! மனதிலும் பாரமேறிற்று! அவனுக்காக இனி என்ன நடந்தாலும் அவள் பொறுத்துப் போவாள். அவளைக்கொண்டு ஒரு பிரச்சனையும் கிளம்பாது. அதுதான் ஆரணி; அவள் அவன்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழமும் அதுதான். ஆனால், அவள் என்னாவாள்?
“நானும் உன்ன அப்பிடியே விட மாட்டன் ஆரா. நான் இல்லாத நேரம் மட்டும் கொஞ்சம் கவனமா இரு!” என்றவன், அவளைத் தேற்றுகிறவனாக தன் உதடுகளை அவள் நெற்றியில் ஒற்றி எடுத்தான். அப்படியே அவன் மார்பில் சுருண்டுகொண்டாள் ஆரணி.
அவள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. உணர்வுகளாகட்டும், பதிலடியாகட்டும் நாம் என்ன கொடுக்கிறோமோ அதை அப்படியே திருப்பிக் கொடுக்கிறவள். அதேநேரம் சிறு அவமதிப்பைக் கூட அனுமதிக்கமாட்டாள்.
ஆனால் மாலினி? அவர் யாருடன் எப்படி நடப்பார் என்று யாருமே கணிக்க முடியாது. வரப்போகிறார்களாம் என்று அறிந்ததில் இருந்து இன்னதுதான் என்றில்லாத கலக்கம் அவனுக்குள் சூழ்ந்துபோயிற்று! முடிந்தவரை சமாளிப்போம் என்று காத்திருக்க அவர்களும் வந்து இறங்கினார்கள்.
ஆறுமாத வயிற்றையும் நரை முடிகளையும் தாங்கிக்கொண்டு நிகேதனின் அண்ணா என்று சொல்லும் முகச் சாயலுடன் இருந்தார் சகாதேவன். கழுத்துவரை மட்டுமே முடி நிற்க, சற்றே மெல்லிய உடல்வாகுடன் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மா என்று சொல்ல முடியாத அளவில் இளமையாக இருந்தார் மாலினி.
இருவருமே அவளுடன் நல்லுறவு கொண்டாடச் சற்றும் தயாராக இல்லை என்று பார்வையிலேயே உணர்த்தினர். காட்டிக்கொள்ளாமல் இன்முகமாகவே வரவேற்று உபசரித்தாள்.
அமராவதி அம்மாவுக்கு அவர்களைக் கண்டதுமே பத்து வயது குறைந்துபோயிற்று! அந்தளவில் மகன், மருமகள், பேரப்பிள்ளைகளை ஓடி ஓடிக் கவனித்தார். விழிகள் விரியப் பார்த்துக்கொண்டிருந்த ஆரணிக்கு, சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது.
மதியப்பொழுது(மதியம் என்றால் மத்தியானம் அல்ல நிலவு வருகிற இரவினைக் குறிக்கும்.) என்பதால் ஆரணி தேனீருக்குத் தண்ணீர் வைக்க, “மாலினிக்குச் சீனி கொஞ்சம் கூடவா வேணும். மூத்தவனுக்கு டீ போடு. பிள்ளைகளுக்கு நல்லா ஆத்தவேணும்!” என்று, அருகில் வந்து சொல்லிவிட்டுப் போனவரை கைவேலையை விட்டுவிட்டுத் திரும்பிப் பார்த்தாள், ஆரணி.
கொழும்பிலிருக்கும் மகனது மாத்திரமல்ல மருமகளதும் பேரப் பிள்ளைகளினதும் நாக்கின் ருசியை அறிந்து வைத்திருக்கிறவர், அருகிலிருக்கும் மகனது பசியை ஆரம்ப நாட்களில் எப்படி உணராமல் போனார்? உதட்டோரம் சின்னதாய் வளைந்தது, அவளுக்கு.
“அங்கேயும் இங்கயும் ஓடாம இங்க வந்து இருங்கம்மா!” தாயின் பரபரப்பை உணர்ந்தாற் போல் சொன்னார், சகாதேவன்.
“எவ்வளவு நாளைக்குப்பிறகு குடும்பத்தோட வந்திருக்கிறாய். சும்மா குந்தியிருந்து கதைக்கச் சொல்லுறியோ?” என்றவரின் முகத்தில் பெரிய மகன் வந்ததில் உண்டான பூரிப்பும் சந்தோசமும் இன்னுமே அடங்கியிருக்கவில்லை.
“கொஞ்சநேரம் இருந்து கதைக்கிறதால ஒண்டும் நடக்காதம்மா. சொல்லுங்க, எப்பிடி இருக்கிறீங்க? உடம்பு என்ன சொல்லுது?” என்று விசாரித்தார் சகாதேவன்.
“உடம்புக்கு என்ன. அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு.”
“மனமா சரியில்ல? அதுக்கு நீங்கதானே மாமி காரணம். செல்லம் குடுத்து கெடுத்துப்போட்டு இப்ப சலிச்சா சரியா?” என்றார் மாலினி.
அமராவதி அம்மாவின் முகம் சுருங்கிப்போனது. ஆனாலும், வாயை மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தார்.
“நடந்த விசயத்த திரும்பத் திரும்பக் கதைக்கிறதில அர்த்தம் இல்ல மாலினி. அந்தக் கதையை விடு!” என்றார் சகாதேவன்.
அவருக்கு என்னவோ அவன் உழைக்க ஆரம்பித்துவிட்டதும் தன்னிடம் ஒரு ரூபாய் காசுக்கும் வராததும் பிழைத்துவிடுவார்கள் என்கிற எண்ணத்தை உண்டாக்கியிருந்தது. எனவே, “உனக்குக் கைச் செலவுக்கு என்ன மாதிரி, காசு இருக்கோ?” என்று தங்கையை விசாரித்தார்.
“ஓம். சின்னண்ணா ஒவ்வொரு கிழமையும் செலவுக்குத் தாறவர்.” அங்கிருந்த நிகேதனைப் பார்த்துவிட்டுப் பதில் சொன்னாள், கயலினி.
“ஓ..! அப்ப உன்ர சின்ன அண்ணா நல்ல பொறுப்பு எண்டு சொல்லுறியோ கயல்?” என்று நக்கலாய் கேட்டார், மாலினி. அவருக்கு பொறுப்பே இல்லாத நிகேதனையும் பிடிக்காது. அவனையெல்லாம் நம்பி வந்த ஆரணி மீதும் மதிப்பில்லை.
“அண்ணா கேட்டதுக்குத்தான் நான் பதில் சொன்னான்.” அவளுக்கு மாலினியைப் பிடிக்கவே பிடிக்காது. அண்ணா முதல் அம்மா வரை அவரைச் சமாளித்தே போவதில் அவளால் மனதில் இருப்பதை வெளிக்காட்ட முடிவதில்லை.
இதையெல்லாம் கேட்டபடி சமையலறையில் ஒரு தட்டினை எடுத்துவைத்து வாங்கி வைத்திருந்த ‘லெமன் பஃப்’ மற்றும் ‘சொக்லேட் கிறீம்’ பிஸ்கட்டுகளை அழகாக அடுக்கினாள் ஆரணி.
அந்தப்பயணம் அவர்கள் வாழ்வில் இன்னொரு படியாகவே அமைந்துபோயிற்று! அதற்குப்பிறகு அப்படியான ஹயர்கள் வந்தால் மறுக்காமல் சென்றான், நிகேதன். கூலியையும் அவன் அளவாக வாங்கியதில் ஹயரும் நன்றாகவே வந்தது.
தன் உறக்கத்தை விற்று அவன் உழைத்துக்கொண்டு வருவதில், செலவுகளில் மிகக் கவனமாக இருந்தாள், ஆரணி. நிகேதனின் சம்பளத்தில் மாதச் செலவைப் பார்த்துக்கொண்டு ஹயர் போய்வரும் பணத்தை சேமித்துக்கொள்வாள். இப்படி இருக்கையில்தான் சின்ன மகனின் ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாட மன்னாருக்கு வரப்போவதாக அறிவித்தார், சகாதேவன்.
“அண்ணி கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் ஆரா. நீ எதையும் பெருசா எடுக்காத!” என்றான், நிகேதன்.
ஆரணி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள். “பெருசா எடுக்காத எண்டால்? எனக்கு விளங்க இல்ல நிக்ஸ்.”
அவள் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் அவன் முகத்தில் முறுவல் அரும்பிற்று! “என்ன ஆளடி நீ? எல்லாத்துக்குமே சண்டைக்கு நிப்பியா?” என்றபடி அவளைத் தன் கைகளுக்குள் இழுத்துக்கொண்டான். “அவா நல்லவா தான். இல்லாம இவ்வளவு காலம் எங்கட குடும்பத்தை பாக்க அண்ணாவை விட்டிருக்க மாட்டா. ஆனா, எப்ப என்ன கதைப்பா, எப்பிடி நடப்பா எண்டு எனக்கும் வடிவா(தெளிவா) தெரியேல்ல ஆரா. நான் நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்காமயும் போகலாம். இல்லாம அவா ஏதாவது உன்ர மனம் நோகிற மாதிரி கதைச்சாலோ நடந்தாலோ கொஞ்சம் சமாளி.”
அவளுக்குப் புரியவில்லை. நியாயமற்ற எதற்கும் அவள் திருப்பிக் கதைக்கப் போவதில்லை. பிறகும் ஏன் இப்படிச் சொல்கிறான்?
“எங்களுக்காக நிறையச் செய்திருக்கிறா. அதால அவா கூடக்குறைய கதைச்சாலும் நாங்க ஒதுங்கிப் போயிடுவோம்.” என்றான் விளக்கம் போல.
காதலித்த நாட்களிலேயே இதைப்பற்றி அவன் சொல்லியிருக்கிறான்தான். அதற்காக அவளையும் அடங்கிப்போ என்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
“எனக்காக..” என்றான் கெஞ்சலாய்.
மறுக்கப்போனவள் அவனின் அந்த ‘எனக்காக’வில் அப்படியே தேங்கினாள். அவன் அப்படிக் கேட்டபிறகு அவனுக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய அவளால் இயலாது. ஆனால், அப்படியான சூழ்நிலைகளை எப்படிக் கடப்பாள்? இதுவரை பழக்கமில்லாத ஒன்றாயிற்றே. கண்களில் கலக்கம் சூழ அவனைப் பார்த்தாள். “என்னால முடியவே முடியாத ஒண்டை நீ கேக்கிறாய் எண்டு உனக்கு விளங்குதா நிக்ஸ்?”
ஆம் என்பதாகத் தலை அசைத்தவனின் அணைப்பு இறுகிப்போயிற்று! மனதிலும் பாரமேறிற்று! அவனுக்காக இனி என்ன நடந்தாலும் அவள் பொறுத்துப் போவாள். அவளைக்கொண்டு ஒரு பிரச்சனையும் கிளம்பாது. அதுதான் ஆரணி; அவள் அவன்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழமும் அதுதான். ஆனால், அவள் என்னாவாள்?
“நானும் உன்ன அப்பிடியே விட மாட்டன் ஆரா. நான் இல்லாத நேரம் மட்டும் கொஞ்சம் கவனமா இரு!” என்றவன், அவளைத் தேற்றுகிறவனாக தன் உதடுகளை அவள் நெற்றியில் ஒற்றி எடுத்தான். அப்படியே அவன் மார்பில் சுருண்டுகொண்டாள் ஆரணி.
அவள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. உணர்வுகளாகட்டும், பதிலடியாகட்டும் நாம் என்ன கொடுக்கிறோமோ அதை அப்படியே திருப்பிக் கொடுக்கிறவள். அதேநேரம் சிறு அவமதிப்பைக் கூட அனுமதிக்கமாட்டாள்.
ஆனால் மாலினி? அவர் யாருடன் எப்படி நடப்பார் என்று யாருமே கணிக்க முடியாது. வரப்போகிறார்களாம் என்று அறிந்ததில் இருந்து இன்னதுதான் என்றில்லாத கலக்கம் அவனுக்குள் சூழ்ந்துபோயிற்று! முடிந்தவரை சமாளிப்போம் என்று காத்திருக்க அவர்களும் வந்து இறங்கினார்கள்.
ஆறுமாத வயிற்றையும் நரை முடிகளையும் தாங்கிக்கொண்டு நிகேதனின் அண்ணா என்று சொல்லும் முகச் சாயலுடன் இருந்தார் சகாதேவன். கழுத்துவரை மட்டுமே முடி நிற்க, சற்றே மெல்லிய உடல்வாகுடன் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மா என்று சொல்ல முடியாத அளவில் இளமையாக இருந்தார் மாலினி.
இருவருமே அவளுடன் நல்லுறவு கொண்டாடச் சற்றும் தயாராக இல்லை என்று பார்வையிலேயே உணர்த்தினர். காட்டிக்கொள்ளாமல் இன்முகமாகவே வரவேற்று உபசரித்தாள்.
அமராவதி அம்மாவுக்கு அவர்களைக் கண்டதுமே பத்து வயது குறைந்துபோயிற்று! அந்தளவில் மகன், மருமகள், பேரப்பிள்ளைகளை ஓடி ஓடிக் கவனித்தார். விழிகள் விரியப் பார்த்துக்கொண்டிருந்த ஆரணிக்கு, சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது.
மதியப்பொழுது(மதியம் என்றால் மத்தியானம் அல்ல நிலவு வருகிற இரவினைக் குறிக்கும்.) என்பதால் ஆரணி தேனீருக்குத் தண்ணீர் வைக்க, “மாலினிக்குச் சீனி கொஞ்சம் கூடவா வேணும். மூத்தவனுக்கு டீ போடு. பிள்ளைகளுக்கு நல்லா ஆத்தவேணும்!” என்று, அருகில் வந்து சொல்லிவிட்டுப் போனவரை கைவேலையை விட்டுவிட்டுத் திரும்பிப் பார்த்தாள், ஆரணி.
கொழும்பிலிருக்கும் மகனது மாத்திரமல்ல மருமகளதும் பேரப் பிள்ளைகளினதும் நாக்கின் ருசியை அறிந்து வைத்திருக்கிறவர், அருகிலிருக்கும் மகனது பசியை ஆரம்ப நாட்களில் எப்படி உணராமல் போனார்? உதட்டோரம் சின்னதாய் வளைந்தது, அவளுக்கு.
“அங்கேயும் இங்கயும் ஓடாம இங்க வந்து இருங்கம்மா!” தாயின் பரபரப்பை உணர்ந்தாற் போல் சொன்னார், சகாதேவன்.
“எவ்வளவு நாளைக்குப்பிறகு குடும்பத்தோட வந்திருக்கிறாய். சும்மா குந்தியிருந்து கதைக்கச் சொல்லுறியோ?” என்றவரின் முகத்தில் பெரிய மகன் வந்ததில் உண்டான பூரிப்பும் சந்தோசமும் இன்னுமே அடங்கியிருக்கவில்லை.
“கொஞ்சநேரம் இருந்து கதைக்கிறதால ஒண்டும் நடக்காதம்மா. சொல்லுங்க, எப்பிடி இருக்கிறீங்க? உடம்பு என்ன சொல்லுது?” என்று விசாரித்தார் சகாதேவன்.
“உடம்புக்கு என்ன. அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு.”
“மனமா சரியில்ல? அதுக்கு நீங்கதானே மாமி காரணம். செல்லம் குடுத்து கெடுத்துப்போட்டு இப்ப சலிச்சா சரியா?” என்றார் மாலினி.
அமராவதி அம்மாவின் முகம் சுருங்கிப்போனது. ஆனாலும், வாயை மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தார்.
“நடந்த விசயத்த திரும்பத் திரும்பக் கதைக்கிறதில அர்த்தம் இல்ல மாலினி. அந்தக் கதையை விடு!” என்றார் சகாதேவன்.
அவருக்கு என்னவோ அவன் உழைக்க ஆரம்பித்துவிட்டதும் தன்னிடம் ஒரு ரூபாய் காசுக்கும் வராததும் பிழைத்துவிடுவார்கள் என்கிற எண்ணத்தை உண்டாக்கியிருந்தது. எனவே, “உனக்குக் கைச் செலவுக்கு என்ன மாதிரி, காசு இருக்கோ?” என்று தங்கையை விசாரித்தார்.
“ஓம். சின்னண்ணா ஒவ்வொரு கிழமையும் செலவுக்குத் தாறவர்.” அங்கிருந்த நிகேதனைப் பார்த்துவிட்டுப் பதில் சொன்னாள், கயலினி.
“ஓ..! அப்ப உன்ர சின்ன அண்ணா நல்ல பொறுப்பு எண்டு சொல்லுறியோ கயல்?” என்று நக்கலாய் கேட்டார், மாலினி. அவருக்கு பொறுப்பே இல்லாத நிகேதனையும் பிடிக்காது. அவனையெல்லாம் நம்பி வந்த ஆரணி மீதும் மதிப்பில்லை.
“அண்ணா கேட்டதுக்குத்தான் நான் பதில் சொன்னான்.” அவளுக்கு மாலினியைப் பிடிக்கவே பிடிக்காது. அண்ணா முதல் அம்மா வரை அவரைச் சமாளித்தே போவதில் அவளால் மனதில் இருப்பதை வெளிக்காட்ட முடிவதில்லை.
இதையெல்லாம் கேட்டபடி சமையலறையில் ஒரு தட்டினை எடுத்துவைத்து வாங்கி வைத்திருந்த ‘லெமன் பஃப்’ மற்றும் ‘சொக்லேட் கிறீம்’ பிஸ்கட்டுகளை அழகாக அடுக்கினாள் ஆரணி.