அத்தியாயம் 22
ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸ்
அன்றுபோலவே இன்றும் கணவனும் மனைவியுமாக வந்தனர். பஸ்ஸில் அல்ல. அவர்களுக்கே சொந்தமான வேனில். ஆரணி பூரிப்புடன் நிகேதனைப் பார்த்து அழகாய்ச் சிரித்தாள். சொந்த வாகனத்துக்கு உரிமையாளனாக மாறிவிட்ட சந்தோசம் அவன் முகத்திலும்.
“ஹேய் லேடி கேர்ள்! வா வா வா!” அவர்களைக் கண்டதும் அன்றுபோலவே எழுந்துவந்து பாசமாக வரவேற்றார் ராஜேந்திரன். “நீயும் வா நிகேதன்!” அழைத்துச் சென்று அமரவைத்து, பிரகாஷ் மூலமாகப் பழச்சாறு தருவித்துக் கொடுத்தார்.
“பிறகு? எப்படிப் போகுது திருமண வாழ்க்கை?”
“சண்டையும் சச்சரவுமா நல்ல சந்தோசமா போகுது அங்கிள்.” நிகேதன் சிரித்துக்கொண்டு சொன்னான்.
இவன் இப்படியெல்லாம் அவரிடம் உரிமையாய் கதைப்பான் என்று நினைத்திராத ஆரணி, அளவான முறுவலோடு அவனை முறைத்தாள்.
எல்லாப்பக்கமும் கைவிடப்பட்ட நிலையில் நின்றவனுக்கு வேலை தந்தவர் என்பதால், அவரைத் தன் நலன்விரும்பியாகவே மனதில் வரித்திருந்தான், நிகேதன்.
“அப்ப சண்டையில ஆர் சட்டை கிழியும்?”
“என்ன அங்கிள். உங்களுக்கு என்னைவிட எக்ஸ்பீரியன்ஸ் கூட. பிறகும் இப்பிடிக் கேட்டா நான் என்ன சொல்ல?” என்றவனின் கையிலேயே ஒன்று போட்டாள் ஆரணி.
“இப்ப உங்கட கண்ணுக்கு முன்னுக்கே என்ன நடந்தது எண்டு பாத்தீங்க தானே.” என்று இன்னுமே வாரினான் நிகேதன்.
“பிறகு என்ன? இதே சந்தோசத்தோட அங்கிளுக்கு இன்னுமொரு சந்தோசமான செய்தியை சொல்லலாமே ஆரா? அதுக்குப்பிறகும் சத்யா எப்பிடிக் கோபத்தைப் பிடிச்சு வச்சிருக்கிறான் எண்டு பாக்கலாம்.” என்றார் ராஜேந்திரன்.
அவர் எதை மனதில் நிறுத்திக் கேட்கிறார் என்று உணர்ந்து முறுவலித்தாள் ஆரணி.
“சந்தோசமான செய்திதான் அங்கிள். ஆனா நீங்க நினைக்கிறது இல்ல.” என்றுவிட்டு, “நிக்கியும் எத்தனை நாளைக்குத்தான் உங்களுக்கு டிரைவராவே இருக்கிறது. அதுதான் நாங்களே ஒரு வேன் வாங்கிட்டோம் அங்கிள்.” இனிய குரலில் தெரிவித்தாள் ஆரணி.
அவரின் முகத்தில் மெல்லிய கருமையின் சாயல் படிந்தது. நிகேதனும், என்ன இவள் இப்படிக் கதைக்கிறாளே என்று அவளை அதிருப்தியாகப் பார்த்தான்.
“எனக்கும் அது கவலை தான் ஆரா. ஆனா சத்யா.” என்றவரை அதற்குமேல் பொய்யுரைக்க அனுமதிக்கவில்லை ஆரணி.
“பரவாயில்லை அங்கிள். எல்லாமே நல்லதுக்குத்தான் நடந்திருக்கு.” என்று இடையிட்டுச் சொல்லிவிட்டு, “நாங்க வந்ததே உங்களுக்கு நன்றி சொல்லத்தான் அங்கிள். நீங்க நிக்கியை டிரைவரா போட்டபடியாத்தான் அவன் எவ்வளவு நல்ல டிரைவர் எண்டு எங்களுக்குத் தெரிய வந்தது. இப்ப ஒரு வாகனத்துக்கு சொந்தக்காரனாவும் ஆகிட்டான். இல்லையோ காலத்துக்கும் ஒரு கம்பெனில மாதச் சம்பளத்துக்கு கூலிக்காரனா தான் இருந்திருப்பான்.” என்று புன்னகைத்தாள் அவள்.
முகத்தின் சிரிப்பு மறைய அவளைப் பார்த்தார் ராஜேந்திரன். இவளின் பேச்சில் நிகேதனுக்குப் பெரும் அதிர்ச்சி. “என்னடி கதைக்கிறாய்?” என்று அவள் புறமாகத் திரும்பி வாய்க்குள் அதட்டினான்.
“என்ன ஆரா எல்லாத்தையும் மறந்திட்டியாம்மா? உனக்குச் செய்ததைச் சொல்லிக்காட்ட எனக்கு விருப்பமில்லை. ஆனா, வேலை இல்லாம நிண்ட உன்ர புருசனுக்கு வேலை குடுத்து சாப்பாட்டுக்கு வழி செய்தவன் இந்த அங்கிள் தான்! அதுக்காக உன்ர அப்பா என்னோட எவ்வளவு சண்டை பிடிச்சவன் எண்டு எனக்குத்தான் தெரியும்!” மீசையில் மண் கிடப்பதை அறியாமல் தான் விழவேயில்லை என்று சாதிக்க முனைந்தார் அவர்.
அவளோ சிரித்தாள். “நான் ஏழை வீட்டு மருமகளா இருக்கலாம். ஆனா பணக்கார வீட்டு மகள் அங்கிள். சின்ன வயதில இருந்தே கம்பனி, பாக்டரி எல்லாம் பாத்தவள். நீங்க நினைச்சிருந்தா ஒரு நல்ல வேலை நிக்கிக்குக் குடுத்திருக்கலாம். ஆனாலும் குடுக்கேல்ல. காரணம் அப்பா இல்ல. அதுவும் தெரியும் எனக்கு.” என்றவள் அதற்குமேலும் அவரின் பேச்சைக் கேட்கப் பிடிக்காமல் எழுந்துகொண்டாள்.
“எதுக்காக இத நீங்க செய்தாலும் எங்களுக்கு நல்லதுதான் நடந்திருக்கு அங்கிள். அதுக்கு நன்றி. போயிட்டு வாரோம்!” என்றுவிட்டு நிகேதனோடு வெளியேறினாள்.
வேனில் ஏறி அமர்ந்ததும், “என்ன ஆரா இதெல்லாம்?” என்று, அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் நிகேதன்.
“பின்ன வேற என்ன செய்யச் சொல்லுறாய்? அவர் செய்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டு நடந்ததைச் சொன்னாள் ஆரணி.
திகைப்புடன் அப்படியே அமர்ந்துவிட்டான் நிகேதன். ஒரு மனிதர் அவனை டிரைவராக்கிவிட்டு தனக்குள் சிரித்து மகிழ்ந்திருக்கிறார். அதை அறியாமல் பெரும் நன்றியுடனும் மதிப்புடனும் அவருடன் பழகியிருக்கிறான் அவன். அவனைப்பற்றி என்ன நினைத்திருப்பார்? ஏமாளி என்றா? அல்லது, கையாலாகாத்தவன் என்றா? நினைக்க நினைக்க அவன் கண்கள் கோபத்தில் சிவந்தது.
“இதை ஏன் இவ்வளவு நாளா நீ என்னட்ட சொல்லேல்ல?”
“சொல்லி இருந்தா அவரின்ர முகம் பாத்திருப்பியா? இல்ல, தொடர்ந்து வேலைக்குத்தான் போயிருப்பியா? அதுதான் சொல்ல இல்ல. அம்மா சொன்னதும் நேரா அவரிட்ட போய்க் கேக்கவேணும் மாதிரித்தான் இருந்தது. ஆனா, அவசரப்படுற விசயம் இல்ல இது. பொறுமையா இருந்து சாதிச்சு காட்டவேணும் எண்டுதான் இவ்வளவு நாளும் வாயை மூடிக்கொண்டு இருந்தன்.”
எதற்காக எப்பாடு பட்டேனும் ஒரு வாகனம் வாங்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள் என்று இப்போது விளங்கியது அவனுக்கு. இருந்தாலும் அவன் அல்லவா இங்கே முட்டாளாகி இருக்கிறான். எல்லாவற்றையும் அறிந்திருந்தவள் கூட ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே.
சினத்துடன் வாகனத்தை சீறவிட்டான் நிகேதன்.
வீடு வந்தபின்னும் அவளுக்கு முகம் கொடுக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டுப் பொறுமை பறக்க அவன் முன்னால் வந்து நின்றாள் ஆரணி.
ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸ்
அன்றுபோலவே இன்றும் கணவனும் மனைவியுமாக வந்தனர். பஸ்ஸில் அல்ல. அவர்களுக்கே சொந்தமான வேனில். ஆரணி பூரிப்புடன் நிகேதனைப் பார்த்து அழகாய்ச் சிரித்தாள். சொந்த வாகனத்துக்கு உரிமையாளனாக மாறிவிட்ட சந்தோசம் அவன் முகத்திலும்.
“ஹேய் லேடி கேர்ள்! வா வா வா!” அவர்களைக் கண்டதும் அன்றுபோலவே எழுந்துவந்து பாசமாக வரவேற்றார் ராஜேந்திரன். “நீயும் வா நிகேதன்!” அழைத்துச் சென்று அமரவைத்து, பிரகாஷ் மூலமாகப் பழச்சாறு தருவித்துக் கொடுத்தார்.
“பிறகு? எப்படிப் போகுது திருமண வாழ்க்கை?”
“சண்டையும் சச்சரவுமா நல்ல சந்தோசமா போகுது அங்கிள்.” நிகேதன் சிரித்துக்கொண்டு சொன்னான்.
இவன் இப்படியெல்லாம் அவரிடம் உரிமையாய் கதைப்பான் என்று நினைத்திராத ஆரணி, அளவான முறுவலோடு அவனை முறைத்தாள்.
எல்லாப்பக்கமும் கைவிடப்பட்ட நிலையில் நின்றவனுக்கு வேலை தந்தவர் என்பதால், அவரைத் தன் நலன்விரும்பியாகவே மனதில் வரித்திருந்தான், நிகேதன்.
“அப்ப சண்டையில ஆர் சட்டை கிழியும்?”
“என்ன அங்கிள். உங்களுக்கு என்னைவிட எக்ஸ்பீரியன்ஸ் கூட. பிறகும் இப்பிடிக் கேட்டா நான் என்ன சொல்ல?” என்றவனின் கையிலேயே ஒன்று போட்டாள் ஆரணி.
“இப்ப உங்கட கண்ணுக்கு முன்னுக்கே என்ன நடந்தது எண்டு பாத்தீங்க தானே.” என்று இன்னுமே வாரினான் நிகேதன்.
“பிறகு என்ன? இதே சந்தோசத்தோட அங்கிளுக்கு இன்னுமொரு சந்தோசமான செய்தியை சொல்லலாமே ஆரா? அதுக்குப்பிறகும் சத்யா எப்பிடிக் கோபத்தைப் பிடிச்சு வச்சிருக்கிறான் எண்டு பாக்கலாம்.” என்றார் ராஜேந்திரன்.
அவர் எதை மனதில் நிறுத்திக் கேட்கிறார் என்று உணர்ந்து முறுவலித்தாள் ஆரணி.
“சந்தோசமான செய்திதான் அங்கிள். ஆனா நீங்க நினைக்கிறது இல்ல.” என்றுவிட்டு, “நிக்கியும் எத்தனை நாளைக்குத்தான் உங்களுக்கு டிரைவராவே இருக்கிறது. அதுதான் நாங்களே ஒரு வேன் வாங்கிட்டோம் அங்கிள்.” இனிய குரலில் தெரிவித்தாள் ஆரணி.
அவரின் முகத்தில் மெல்லிய கருமையின் சாயல் படிந்தது. நிகேதனும், என்ன இவள் இப்படிக் கதைக்கிறாளே என்று அவளை அதிருப்தியாகப் பார்த்தான்.
“எனக்கும் அது கவலை தான் ஆரா. ஆனா சத்யா.” என்றவரை அதற்குமேல் பொய்யுரைக்க அனுமதிக்கவில்லை ஆரணி.
“பரவாயில்லை அங்கிள். எல்லாமே நல்லதுக்குத்தான் நடந்திருக்கு.” என்று இடையிட்டுச் சொல்லிவிட்டு, “நாங்க வந்ததே உங்களுக்கு நன்றி சொல்லத்தான் அங்கிள். நீங்க நிக்கியை டிரைவரா போட்டபடியாத்தான் அவன் எவ்வளவு நல்ல டிரைவர் எண்டு எங்களுக்குத் தெரிய வந்தது. இப்ப ஒரு வாகனத்துக்கு சொந்தக்காரனாவும் ஆகிட்டான். இல்லையோ காலத்துக்கும் ஒரு கம்பெனில மாதச் சம்பளத்துக்கு கூலிக்காரனா தான் இருந்திருப்பான்.” என்று புன்னகைத்தாள் அவள்.
முகத்தின் சிரிப்பு மறைய அவளைப் பார்த்தார் ராஜேந்திரன். இவளின் பேச்சில் நிகேதனுக்குப் பெரும் அதிர்ச்சி. “என்னடி கதைக்கிறாய்?” என்று அவள் புறமாகத் திரும்பி வாய்க்குள் அதட்டினான்.
“என்ன ஆரா எல்லாத்தையும் மறந்திட்டியாம்மா? உனக்குச் செய்ததைச் சொல்லிக்காட்ட எனக்கு விருப்பமில்லை. ஆனா, வேலை இல்லாம நிண்ட உன்ர புருசனுக்கு வேலை குடுத்து சாப்பாட்டுக்கு வழி செய்தவன் இந்த அங்கிள் தான்! அதுக்காக உன்ர அப்பா என்னோட எவ்வளவு சண்டை பிடிச்சவன் எண்டு எனக்குத்தான் தெரியும்!” மீசையில் மண் கிடப்பதை அறியாமல் தான் விழவேயில்லை என்று சாதிக்க முனைந்தார் அவர்.
அவளோ சிரித்தாள். “நான் ஏழை வீட்டு மருமகளா இருக்கலாம். ஆனா பணக்கார வீட்டு மகள் அங்கிள். சின்ன வயதில இருந்தே கம்பனி, பாக்டரி எல்லாம் பாத்தவள். நீங்க நினைச்சிருந்தா ஒரு நல்ல வேலை நிக்கிக்குக் குடுத்திருக்கலாம். ஆனாலும் குடுக்கேல்ல. காரணம் அப்பா இல்ல. அதுவும் தெரியும் எனக்கு.” என்றவள் அதற்குமேலும் அவரின் பேச்சைக் கேட்கப் பிடிக்காமல் எழுந்துகொண்டாள்.
“எதுக்காக இத நீங்க செய்தாலும் எங்களுக்கு நல்லதுதான் நடந்திருக்கு அங்கிள். அதுக்கு நன்றி. போயிட்டு வாரோம்!” என்றுவிட்டு நிகேதனோடு வெளியேறினாள்.
வேனில் ஏறி அமர்ந்ததும், “என்ன ஆரா இதெல்லாம்?” என்று, அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் நிகேதன்.
“பின்ன வேற என்ன செய்யச் சொல்லுறாய்? அவர் செய்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டு நடந்ததைச் சொன்னாள் ஆரணி.
திகைப்புடன் அப்படியே அமர்ந்துவிட்டான் நிகேதன். ஒரு மனிதர் அவனை டிரைவராக்கிவிட்டு தனக்குள் சிரித்து மகிழ்ந்திருக்கிறார். அதை அறியாமல் பெரும் நன்றியுடனும் மதிப்புடனும் அவருடன் பழகியிருக்கிறான் அவன். அவனைப்பற்றி என்ன நினைத்திருப்பார்? ஏமாளி என்றா? அல்லது, கையாலாகாத்தவன் என்றா? நினைக்க நினைக்க அவன் கண்கள் கோபத்தில் சிவந்தது.
“இதை ஏன் இவ்வளவு நாளா நீ என்னட்ட சொல்லேல்ல?”
“சொல்லி இருந்தா அவரின்ர முகம் பாத்திருப்பியா? இல்ல, தொடர்ந்து வேலைக்குத்தான் போயிருப்பியா? அதுதான் சொல்ல இல்ல. அம்மா சொன்னதும் நேரா அவரிட்ட போய்க் கேக்கவேணும் மாதிரித்தான் இருந்தது. ஆனா, அவசரப்படுற விசயம் இல்ல இது. பொறுமையா இருந்து சாதிச்சு காட்டவேணும் எண்டுதான் இவ்வளவு நாளும் வாயை மூடிக்கொண்டு இருந்தன்.”
எதற்காக எப்பாடு பட்டேனும் ஒரு வாகனம் வாங்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள் என்று இப்போது விளங்கியது அவனுக்கு. இருந்தாலும் அவன் அல்லவா இங்கே முட்டாளாகி இருக்கிறான். எல்லாவற்றையும் அறிந்திருந்தவள் கூட ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே.
சினத்துடன் வாகனத்தை சீறவிட்டான் நிகேதன்.
வீடு வந்தபின்னும் அவளுக்கு முகம் கொடுக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டுப் பொறுமை பறக்க அவன் முன்னால் வந்து நின்றாள் ஆரணி.