இன்னொரு ரகசியம் - சுதாராஜ்
அவளது பெயர் எனக்கு முதலிற் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அது தெரியவரும் என்றும் நினைத்திருக்கவில்லை. நூற்றுக்கணக்கான பெண்கள் மத்தியில் அவள் மட்டுமே சற்று வித்தியாசமாக என் கண்களிற் பட்டது உண்மைதான். எனினும் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென நான் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
எங்களது பல்கலைக்கழகம் விடுமுறை விட்டிருந்த நேரம். அப்போது பாடசாலைகளில் ஏ.எல். பரீட்சைகளும் ஆரம்பித்திருந்தன. எனது மாமனார் ஒரு சிறந்த ஆசிரியர். பரீட்சைகளை ஒழுங்காக நடத்தி முடிப்பதில் அனுபவம் பெற்றவர். பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவனான நான் விடுமுறையில் வந்து நின்றது அவருக்கு வாய்ப்பாயிருந்தது. பரீட்சை மண்டபத்தில் உதவியாளராக ஒரு பணியை என் தலைமேலிட்டார். அது ஒரு பெண்கள் கல்லூரி. மரங்களும் மரநிழல்களும் கொண்ட ஓர் இதமான சூழலில் பரீட்சை மண்டபம் அமைந்திருந்தது.
மாணவிகளுக்கு எழுதும் தாள்கள் கொடுப்பது, பரீட்சையை மேற்பார்வை செய்து நடத்தும் ஆசிரியர்களுக்குத் தேநீர் போன்ற சமாச்சாரங்களைக் கொண்டுவந்து கொடுப்பது, விடைத்தாள்களைப் பொதி செய்வதற்கு உதவி செய்வது போன்ற எடுபிடி வேலைகள்தான் எனக்குத் தரப்பட்டிருந்தது. எனினும் எனது மாமனாரே பரீட்சை மண்டபத்தின் முதன்மைப் பொறுப்பாளர் என்ற வகையில் அவரது தலைமைத்துவப் பணிகளையும் நான் சுவீகரித்துக்கொண்டேன். இது பெண் பிள்ளைகள் மத்தியில் ஒரு நாயகத்தன்மையை எனக்கு ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு நப்பாசைதான்!
பெண் பிள்ளைகளைத் தனிமையாகக் காணும்பொழுது நாங்கள் ராஜாக்களைப்போல உற்சாகமடைந்துவிடுகிறோம். ஆனால் இவ்வளவு பெண்கள் மத்தியில் புகுந்தது ஒருவித தயக்கத்தையே ஏற்படுத்தியது. எழுதுவதற்குத் தாள் வேண்டுமென ஒரு மாணவி மேசையிற் பென்சினால் தட்டினால் எனக்கு நடுக்கம் பிடித்துவிடும். எழுதும் தாளை அவளிடம் கொண்டு சென்று கொடுப்பதற்குள் மூச்சு வாங்கும். தாளை அவளிடம் கைநீட்டிக் கொடுக்கும்போது அவள் என்னைப் பார்க்கிறாளா நான் அவளைப் பார்ப்பதா என்றெல்லாம் பதற்றமாயிருக்கும். இந்தச் சங்கடங்களெல்லாம் புரியாதமாதிரி அந்த மாணவிகள் அடிக்கடி மேசையிற் தட்டிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் என்ன, இவ்வளவு உற்சாகமாகப் பரீட்சை எழுதுகிறார்களா அல்லது எனக்கு விளையாட்டுக் காட்டுகிறார்களா என்றுகூட சந்தேகம் ஏற்படும். இவ்வாறு நாளொரு ‘வண்ணமும்’ பொழுதொரு ‘மேனியுமாக” கண்களுக்கு விருந்தாக பரீட்சை நாட்கள் கடந்துகொண்டிருந்தன. எனினும் இவ்வளவு வண்ண வண்ணப் பெண்களுக்கு மத்தியில் நான் ஒரு தனி இளைஞனாக எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றிப் பணியாற்ற வேண்டுமே என்ற பிரார்த்தனை மனதிலிருந்தது.
பரீட்சை மண்டபத்துக்கு அண்மையாகவே பெண்பிள்ளைகளின் விடுதி அமைந்திருந்தது. மண்டபத்தின் பக்கத்து விறாந்தைக்கு வந்து அந்தப் பக்கம் திரும்பினால் அவர்களது நடை உடை பாவனைகளைக் காணலாம். அல்லது பார்க்கலாம். அப்பழுக்கற்ற ஓர் இளைஞனாக என்னை நிலைநிறுத்திக்கொள்ள, அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்க்காமலிருப்பதற்கு இமாலயப் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. கண்கள் என்னை ஏமாற்றிவிட்டு அந்தப் பக்கம் திரும்பிவிடும்.
அப்போதுதான் அவளைக் காண நேர்ந்தது. இன்னும் சில பெண் பிள்ளைகள் சமீதமாக விடுதிப்பக்கம் ஒரு சுவர் மறைவிலிருந்து அவள் தோன்றினாள். அவள் என்னை நோக்கிக் கையசைத்தாள். இது நான் சற்றும் எதிர்பாராதது. பரீட்சை எழுத வரும் பிள்ளைகளில் ஏற்கனவே சற்று என்னைக் கவர்ந்திருந்த ஒருத்தியிடமிருந்து இப்படி வலிந்து ஒரு சமிக்ஞையா? அவள் கையசைத்ததும் அவளது சிநேகிதிகள் எல்லோருமாக உடைந்து சிரித்தார்கள். ‘கேலியா? எதற்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்..’ பின்னர் அந்தச் சுவருக்குள்ளேயே மறைந்து போனார்கள். இது என்ன விளையாட்டு?
ஒருவேளை அவர்கள் இந்தப் பக்கம் தங்கள் சிநேகிதிகள் யாருக்காவது கை காட்டியிருப்பார்களோ? தடுமாற்றத்துடன் அக்கம் பக்கம் பார்த்தேன். அப்படி யாரும் தென்படவில்லை. ஏதுமறியாதவன் போல மெல்ல நகர்வதற்கு முற்பட்டேன்.
அப்போது அவள் மீண்டும் வந்தாள். மேகத்தினுள் மறைந்திருந்து வெளிப்படும் நிலா போல அந்த ஒளிர் முகம்.! கண் இமைக்கும் நேரத்தில் அவளது கை அசைந்தது. எனக்குத்தான்! நான் பதிலுக்கு கையசைக்க வேண்டுமா? துருதுருக்கும் எனது கைகளைப் பொக்கட்டினுள் செலுத்திக் கட்டுப்படுத்தினேன். பொறுமை.. பொறுமை என மனதுக்குக் கட்டளையிட்டேன். நானும் பதிலுக்கு ஒரு சமிக்ஞை கொடுக்கலாமா என நினைத்தேன். அது எங்கு கொண்டுபோய்விடுமோ? ஏதாவது விபரீதம் ஆகுமுன் போய்விடலாம் என நழுவ முயன்றேன். அப்போது அவள் ஒரு முத்தத்தைத் தனது கைகளில் எடுத்துக் காற்றில் அனுப்பிவைத்தாள்! ஐயையோ! இதுவும் எனக்கா? அந்த முத்தம் என்னை வந்தடையமுன் நான் பரீட்சை மண்டபத்துக்குள் பாதுகாப்பாக நுழைந்துவிட்டேன்.
எழுதுவதற்கு யாராவது தாள் கேட்டால் தண்ணீரைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டால் தாள்களைக் கொடுத்தேன். சுய உணர்வுடன்தான் இருக்கிறேனா என்று தெரியாமல் என் கைகளை நானே கிள்ளிப் பார்த்தேன். வலித்தது மனசு.. காற்றில் அவள் அனுப்பிய முத்தம் எங்கு போய்ச் சேர்ந்திருக்குமோ என்று ஏக்கமாயிருந்தது.
அவள் விஞ்ஞானப்பிரிவு மாணவி. ஓரிரு பாடப்பரீட்சைகளுக்கு இங்கு ஏற்கனவே வந்திருந்தாள். இன்று வணிகப்பாடப் பரீட்சை நடைபெறுகிறது. அடுத்த விஞ்ஞானபிரிவுப் பரீட்சை எப்போது என அவசரமாக நேரசூசிகளைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். படபடப்பு இன்னும் அடங்கவில்லை. நடந்த சம்பவத்தை எனக்குள்ளேயே மூடிவைத்திருந்தேன். யாருக்காவது, ஒருவேளை அவளது ஆசிரியர்களுக்கே தெரியவந்தால் என்ன ஆகுமோ என்ற பயம் இன்னும் கவ்வியபடியிருந்;தது. ஒரு பாவமும் அறியாத என்னைக் கொண்டுபோய்க் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடுவார்களே! இந்த விளையாட்டு விபரீதங்களிலெல்லாம் விழுந்துவிடக்கூடாது! ஆனால் என் மனதுக்குள்ளிருந்து ஈனஸ்வரமாக ஒரு குரல் ஒலித்தது. விழாமலே இருக்கமுடியுமா?
முடியவில்லை. அடுத்த விஞ்ஞானப்பிரிவுப் பரீட்சைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரண்டு நாட்கள் கடப்பதற்கு இன்னும் எத்தனை நாட்களாகும்.. விஞ்ஞானப்பிரிவுப் பரீட்சை எப்போது வரும், என்று ஒரே ஏக்கமாயிருந்தது.
மாலை அம்மா தந்த உணவைக்கூடச் சாப்பிட முடியவில்லை.
"ஏன் தம்பி சாப்பாடு… சரியில்லையா?”
"பொறுங்கம்மா…! இன்னும் ரெண்டு நாள் இருக்கு! கொஞ்சம் பொறுமையா இருங்க!”
"இரண்டு நாளா? என்ன அது? இரண்டு நாளைக்கு விரதமா?”
"இல்லையம்மா! இரண்டு நாளைக்குப் பிறகுதான் கணக்குப்பாடம்! என்ன நடக்குமோ… என்று யோசனையாயிருக்கு!”
"என்னடா இது? ஒன்றுமே விளங்கயில்ல… நீ எக்சாம் நடத்தத்தானே போகிறாய்..! எழுதவில்லையே!”
ஐயையோ! அம்மாவிடம் உளறுகிறேனா?
"இல்ல அம்மா.. கணக்கு முக்கியமான பாடம்தானே… வினாத்தாள் கஷ்டமாக வந்தால் எழுதுகிற பிள்ளைகள் பாவம்தானே… அதுதான் சொல்லிறேன்…”
அம்மாவை சமாளித்தேன். அம்மா என்னைப் பார்த்துப் பெருமைப்படுவது போலிருந்தது.. “நல்ல பிள்ளையடா நீ..! அவங்க யாரோ சோதன எழுதப்போறாங்க.. நீ எதுக்கு கவலப்படுறாய்..?”
அடுத்த நாள் பரீட்சை மண்டபத்துக்கு நேரத்துடனேயே செல்லவேண்டுமென எண்ணியிருந்தாலும் எனது உடை அலங்கரிப்புகளில் கவனம் செலுத்தியதால் சற்றுத் தாமாகிவிட்டது. விடுதிப்பக்கம் எதேச்சையாகக் கண்கள் சென்றன. அங்கே அவள் காத்து நின்றாள். என்னைக் கண்டதும்… அல்லது நான் அவளைக் கண்டதும் ஓடி மறைந்தாள்.
எனக்கு எந்த வேலைகளும் ஓடவில்லை. அவளது நினைவுகளே ஆக்கிரமிக்கத் தொடங்கின. அவள் அமர்ந்து பரீட்சை எழுதிய மேஜையைப் பார்த்துப் பார்த்து வந்தேன். அந்த மேஜையில் பேனாக் கிறுக்குகளும் தெரியாத பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. வகுப்பறைகளிலுள்ள மேஜைகளுக்கெல்லாம் இதே கதிதானோ? அடுத்த முறை அவளுக்கு நல்ல அழகான மேஜை போட்டு வைக்கவேண்டுமெனத் திட்டமிட்டேன்.
கணிதப்பாடப் பரீட்சைக்கு, பரீட்சை எழுதும் மாணவனின் மனோநிலையுடன் பரீட்சை நடத்தச் சென்றேன். ஒவ்வொரு பெண் பிள்ளைகளாக நுழையும்போது அவள் எப்போது வருவாள் என்று பார்த்து நின்றேன்.
அவளது பெயர் எனக்கு முதலிற் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அது தெரியவரும் என்றும் நினைத்திருக்கவில்லை. நூற்றுக்கணக்கான பெண்கள் மத்தியில் அவள் மட்டுமே சற்று வித்தியாசமாக என் கண்களிற் பட்டது உண்மைதான். எனினும் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென நான் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
எங்களது பல்கலைக்கழகம் விடுமுறை விட்டிருந்த நேரம். அப்போது பாடசாலைகளில் ஏ.எல். பரீட்சைகளும் ஆரம்பித்திருந்தன. எனது மாமனார் ஒரு சிறந்த ஆசிரியர். பரீட்சைகளை ஒழுங்காக நடத்தி முடிப்பதில் அனுபவம் பெற்றவர். பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவனான நான் விடுமுறையில் வந்து நின்றது அவருக்கு வாய்ப்பாயிருந்தது. பரீட்சை மண்டபத்தில் உதவியாளராக ஒரு பணியை என் தலைமேலிட்டார். அது ஒரு பெண்கள் கல்லூரி. மரங்களும் மரநிழல்களும் கொண்ட ஓர் இதமான சூழலில் பரீட்சை மண்டபம் அமைந்திருந்தது.
மாணவிகளுக்கு எழுதும் தாள்கள் கொடுப்பது, பரீட்சையை மேற்பார்வை செய்து நடத்தும் ஆசிரியர்களுக்குத் தேநீர் போன்ற சமாச்சாரங்களைக் கொண்டுவந்து கொடுப்பது, விடைத்தாள்களைப் பொதி செய்வதற்கு உதவி செய்வது போன்ற எடுபிடி வேலைகள்தான் எனக்குத் தரப்பட்டிருந்தது. எனினும் எனது மாமனாரே பரீட்சை மண்டபத்தின் முதன்மைப் பொறுப்பாளர் என்ற வகையில் அவரது தலைமைத்துவப் பணிகளையும் நான் சுவீகரித்துக்கொண்டேன். இது பெண் பிள்ளைகள் மத்தியில் ஒரு நாயகத்தன்மையை எனக்கு ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு நப்பாசைதான்!
பெண் பிள்ளைகளைத் தனிமையாகக் காணும்பொழுது நாங்கள் ராஜாக்களைப்போல உற்சாகமடைந்துவிடுகிறோம். ஆனால் இவ்வளவு பெண்கள் மத்தியில் புகுந்தது ஒருவித தயக்கத்தையே ஏற்படுத்தியது. எழுதுவதற்குத் தாள் வேண்டுமென ஒரு மாணவி மேசையிற் பென்சினால் தட்டினால் எனக்கு நடுக்கம் பிடித்துவிடும். எழுதும் தாளை அவளிடம் கொண்டு சென்று கொடுப்பதற்குள் மூச்சு வாங்கும். தாளை அவளிடம் கைநீட்டிக் கொடுக்கும்போது அவள் என்னைப் பார்க்கிறாளா நான் அவளைப் பார்ப்பதா என்றெல்லாம் பதற்றமாயிருக்கும். இந்தச் சங்கடங்களெல்லாம் புரியாதமாதிரி அந்த மாணவிகள் அடிக்கடி மேசையிற் தட்டிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் என்ன, இவ்வளவு உற்சாகமாகப் பரீட்சை எழுதுகிறார்களா அல்லது எனக்கு விளையாட்டுக் காட்டுகிறார்களா என்றுகூட சந்தேகம் ஏற்படும். இவ்வாறு நாளொரு ‘வண்ணமும்’ பொழுதொரு ‘மேனியுமாக” கண்களுக்கு விருந்தாக பரீட்சை நாட்கள் கடந்துகொண்டிருந்தன. எனினும் இவ்வளவு வண்ண வண்ணப் பெண்களுக்கு மத்தியில் நான் ஒரு தனி இளைஞனாக எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றிப் பணியாற்ற வேண்டுமே என்ற பிரார்த்தனை மனதிலிருந்தது.
பரீட்சை மண்டபத்துக்கு அண்மையாகவே பெண்பிள்ளைகளின் விடுதி அமைந்திருந்தது. மண்டபத்தின் பக்கத்து விறாந்தைக்கு வந்து அந்தப் பக்கம் திரும்பினால் அவர்களது நடை உடை பாவனைகளைக் காணலாம். அல்லது பார்க்கலாம். அப்பழுக்கற்ற ஓர் இளைஞனாக என்னை நிலைநிறுத்திக்கொள்ள, அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்க்காமலிருப்பதற்கு இமாலயப் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. கண்கள் என்னை ஏமாற்றிவிட்டு அந்தப் பக்கம் திரும்பிவிடும்.
அப்போதுதான் அவளைக் காண நேர்ந்தது. இன்னும் சில பெண் பிள்ளைகள் சமீதமாக விடுதிப்பக்கம் ஒரு சுவர் மறைவிலிருந்து அவள் தோன்றினாள். அவள் என்னை நோக்கிக் கையசைத்தாள். இது நான் சற்றும் எதிர்பாராதது. பரீட்சை எழுத வரும் பிள்ளைகளில் ஏற்கனவே சற்று என்னைக் கவர்ந்திருந்த ஒருத்தியிடமிருந்து இப்படி வலிந்து ஒரு சமிக்ஞையா? அவள் கையசைத்ததும் அவளது சிநேகிதிகள் எல்லோருமாக உடைந்து சிரித்தார்கள். ‘கேலியா? எதற்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்..’ பின்னர் அந்தச் சுவருக்குள்ளேயே மறைந்து போனார்கள். இது என்ன விளையாட்டு?
ஒருவேளை அவர்கள் இந்தப் பக்கம் தங்கள் சிநேகிதிகள் யாருக்காவது கை காட்டியிருப்பார்களோ? தடுமாற்றத்துடன் அக்கம் பக்கம் பார்த்தேன். அப்படி யாரும் தென்படவில்லை. ஏதுமறியாதவன் போல மெல்ல நகர்வதற்கு முற்பட்டேன்.
அப்போது அவள் மீண்டும் வந்தாள். மேகத்தினுள் மறைந்திருந்து வெளிப்படும் நிலா போல அந்த ஒளிர் முகம்.! கண் இமைக்கும் நேரத்தில் அவளது கை அசைந்தது. எனக்குத்தான்! நான் பதிலுக்கு கையசைக்க வேண்டுமா? துருதுருக்கும் எனது கைகளைப் பொக்கட்டினுள் செலுத்திக் கட்டுப்படுத்தினேன். பொறுமை.. பொறுமை என மனதுக்குக் கட்டளையிட்டேன். நானும் பதிலுக்கு ஒரு சமிக்ஞை கொடுக்கலாமா என நினைத்தேன். அது எங்கு கொண்டுபோய்விடுமோ? ஏதாவது விபரீதம் ஆகுமுன் போய்விடலாம் என நழுவ முயன்றேன். அப்போது அவள் ஒரு முத்தத்தைத் தனது கைகளில் எடுத்துக் காற்றில் அனுப்பிவைத்தாள்! ஐயையோ! இதுவும் எனக்கா? அந்த முத்தம் என்னை வந்தடையமுன் நான் பரீட்சை மண்டபத்துக்குள் பாதுகாப்பாக நுழைந்துவிட்டேன்.
எழுதுவதற்கு யாராவது தாள் கேட்டால் தண்ணீரைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டால் தாள்களைக் கொடுத்தேன். சுய உணர்வுடன்தான் இருக்கிறேனா என்று தெரியாமல் என் கைகளை நானே கிள்ளிப் பார்த்தேன். வலித்தது மனசு.. காற்றில் அவள் அனுப்பிய முத்தம் எங்கு போய்ச் சேர்ந்திருக்குமோ என்று ஏக்கமாயிருந்தது.
அவள் விஞ்ஞானப்பிரிவு மாணவி. ஓரிரு பாடப்பரீட்சைகளுக்கு இங்கு ஏற்கனவே வந்திருந்தாள். இன்று வணிகப்பாடப் பரீட்சை நடைபெறுகிறது. அடுத்த விஞ்ஞானபிரிவுப் பரீட்சை எப்போது என அவசரமாக நேரசூசிகளைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். படபடப்பு இன்னும் அடங்கவில்லை. நடந்த சம்பவத்தை எனக்குள்ளேயே மூடிவைத்திருந்தேன். யாருக்காவது, ஒருவேளை அவளது ஆசிரியர்களுக்கே தெரியவந்தால் என்ன ஆகுமோ என்ற பயம் இன்னும் கவ்வியபடியிருந்;தது. ஒரு பாவமும் அறியாத என்னைக் கொண்டுபோய்க் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடுவார்களே! இந்த விளையாட்டு விபரீதங்களிலெல்லாம் விழுந்துவிடக்கூடாது! ஆனால் என் மனதுக்குள்ளிருந்து ஈனஸ்வரமாக ஒரு குரல் ஒலித்தது. விழாமலே இருக்கமுடியுமா?
முடியவில்லை. அடுத்த விஞ்ஞானப்பிரிவுப் பரீட்சைக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரண்டு நாட்கள் கடப்பதற்கு இன்னும் எத்தனை நாட்களாகும்.. விஞ்ஞானப்பிரிவுப் பரீட்சை எப்போது வரும், என்று ஒரே ஏக்கமாயிருந்தது.
மாலை அம்மா தந்த உணவைக்கூடச் சாப்பிட முடியவில்லை.
"ஏன் தம்பி சாப்பாடு… சரியில்லையா?”
"பொறுங்கம்மா…! இன்னும் ரெண்டு நாள் இருக்கு! கொஞ்சம் பொறுமையா இருங்க!”
"இரண்டு நாளா? என்ன அது? இரண்டு நாளைக்கு விரதமா?”
"இல்லையம்மா! இரண்டு நாளைக்குப் பிறகுதான் கணக்குப்பாடம்! என்ன நடக்குமோ… என்று யோசனையாயிருக்கு!”
"என்னடா இது? ஒன்றுமே விளங்கயில்ல… நீ எக்சாம் நடத்தத்தானே போகிறாய்..! எழுதவில்லையே!”
ஐயையோ! அம்மாவிடம் உளறுகிறேனா?
"இல்ல அம்மா.. கணக்கு முக்கியமான பாடம்தானே… வினாத்தாள் கஷ்டமாக வந்தால் எழுதுகிற பிள்ளைகள் பாவம்தானே… அதுதான் சொல்லிறேன்…”
அம்மாவை சமாளித்தேன். அம்மா என்னைப் பார்த்துப் பெருமைப்படுவது போலிருந்தது.. “நல்ல பிள்ளையடா நீ..! அவங்க யாரோ சோதன எழுதப்போறாங்க.. நீ எதுக்கு கவலப்படுறாய்..?”
அடுத்த நாள் பரீட்சை மண்டபத்துக்கு நேரத்துடனேயே செல்லவேண்டுமென எண்ணியிருந்தாலும் எனது உடை அலங்கரிப்புகளில் கவனம் செலுத்தியதால் சற்றுத் தாமாகிவிட்டது. விடுதிப்பக்கம் எதேச்சையாகக் கண்கள் சென்றன. அங்கே அவள் காத்து நின்றாள். என்னைக் கண்டதும்… அல்லது நான் அவளைக் கண்டதும் ஓடி மறைந்தாள்.
எனக்கு எந்த வேலைகளும் ஓடவில்லை. அவளது நினைவுகளே ஆக்கிரமிக்கத் தொடங்கின. அவள் அமர்ந்து பரீட்சை எழுதிய மேஜையைப் பார்த்துப் பார்த்து வந்தேன். அந்த மேஜையில் பேனாக் கிறுக்குகளும் தெரியாத பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. வகுப்பறைகளிலுள்ள மேஜைகளுக்கெல்லாம் இதே கதிதானோ? அடுத்த முறை அவளுக்கு நல்ல அழகான மேஜை போட்டு வைக்கவேண்டுமெனத் திட்டமிட்டேன்.
கணிதப்பாடப் பரீட்சைக்கு, பரீட்சை எழுதும் மாணவனின் மனோநிலையுடன் பரீட்சை நடத்தச் சென்றேன். ஒவ்வொரு பெண் பிள்ளைகளாக நுழையும்போது அவள் எப்போது வருவாள் என்று பார்த்து நின்றேன்.