நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - நிதனிபிரபு
அத்தியாயம் 1
ஜெர்மனியின் பிரங்க்ஃபுவர்ட் நகரம்! எப்போதும்போல மிக மிகச் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அங்கே, நகர்ப்புறத்தில் அமைந்திருந்த தன் வீட்டு பால்கனியில் கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் விக்ரம். செய்வதற்கு எத்தனையோ வேலைகள் இருந்தாலும் எதையும் பாராது அப்படியே நின்றிருந்தான். மனதில் உற்சாகமில்லை. உடலிலோ அது மருந்துக்கும் இல்லை. மகன் டெனிஷ் பள்ளிக்கூடம் சென்றிருந்தான்.
அலுவலகம் போக வேண்டும் என்று மண்டைக்குள் மணியடித்தாலும், ‘அங்கே போயும் எதைச் செய்ய. எப்பவும் பார்க்கிற அதே வேலைதானே.’ என்று சலிப்பாக இருந்தது.
அவன் ஒன்றும் சோம்பேறி அல்லன்! சொல்லப்போனால் மற்றவர்களை விடவும் போர்க்குணம் மிக்கவன்!
வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும், மனைவியையும் மகனையும் நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்று எண்ணி அல்லும்பகலும் போராடி உழைத்தான். ஒரு தொழிலாளியாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்து, கைப்பேசிகளுக்குப் பணமேற்றும் தொழிலைச் சுயமாகத் தொடங்கி, அதைப் பெருக்கி இன்று நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறான். ‘டெனிஷ் மொபைல்’ என்றால் தரமானதும் நியாயமானதும் என்று எல்லோருக்கும் தெரியும். அவனது வளர்ச்சி இன்று அவனையும் மீறியது!
ஆனால், அந்த அசுரத்தனமான போராட்டமும் ஓட்டமும் அவனது உயிர்நாடியையே அவனிடமிருந்து பிடுங்கிவிட்டிருந்தது!
உழைப்பு உழைப்பு என்று பணத்தைத் தேடி ஓடியவன், தன் காதல் மனைவி மகனைக் கவனித்துக்கொண்டு அவனோடு பின்வருவாள் என்று நினைக்க, அவளோ அவன் தலையில் இடியையே இறக்கிவிட்டாள்!
ஒருநாள் நள்ளிரவில் வீடு வந்து உறங்கிக் கொண்டிருந்தவனை வந்து எழுப்பினாள் யாஸ்மின். அவன் மனைவி! ஜெர்மனிய பெண்.
“என்னம்மா? கொஞ்சம் தூங்கவிடு.”
“உன்னப் பாக்க கீழ ஒருத்தன் வந்திருக்கிறான்.”
“என்னைப் பாக்கவா? யாரது?” புருவங்களைச் சுருக்கினான். என்னதான் கடுமையான உழைப்பாளியாக இருந்தாலும் தொழிலை வீடுவரை கொண்டு வருகிறவன் அல்லன் அவன்.
தெரிந்தவராக அல்லது சொந்தக்காரராக இருந்தால் அவள் அறியாத நபர் என்று அவனுக்கு யாருமில்லை.
“யாரது உனக்குத் தெரியாம?” என்று கேட்டுக்கொண்டே முகம் கழுவப் போக, அவளோ பதில் சொல்லாமல் கீழே இறங்கி ஓடினாள்.
‘இவள் என்ன ஒண்டுமே சொல்லாம போறாள்?’ எண்ணம் ஓட, முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து ஒரு சட்டையை எடுத்து மாட்டியபடி கீழே இறங்கினான்.
ஒரு ஜெர்மனியன். அவன் இதுநாள் வரை பார்த்ததே இல்லை. இவன் கீழே செல்லவும் எழுந்து கைகொடுத்தான். அவனை அமரும்படி இருக்கையைக் காட்டிவிட்டு தானும் அமர்ந்துகொண்டே மனைவியைக் கேள்வியாகப் பார்த்தான்.
அவளோ, இவனைப் பாராது மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை மீண்டும் அடுக்கிக்கொண்டிருந்தாள். முகத்தில் பதட்டம். கைகளில் நடுக்கம்.
“நாம் ஏற்கனவே சந்திச்சு இருக்கிறமா?” முன்னால் அமர்ந்திருந்தவனிடம் கேட்டான்.
“இல்லை. நான் யாஸ்மின்ர நண்பன்.” என்றான் அவன்.
‘நண்பனா? இத நீ ஏன் சொல்லேல?’ கேள்வியாக அவன் மனைவியை ஏறிட, அவளோ இவன் கண்களைப் பாராது, “அவன நான் காதலிக்கிறன் விக்கி. உன்ன விவாகரத்துச் செய்துபோட்டு அவனக் கட்டப்போறன்.” என்றாள்.
அதிர்ந்துபோய் மனைவியைப் பார்த்தான் விக்ரம். அவள் சொன்னதன் சாராம்சத்தைக் கிரகித்துக்கொள்ளச் சற்று நேரம் பிடித்தது. கிரகித்துக்கொண்டதும் சித்தம் கலங்குவது போலிருந்தது. பேச்சு மறக்க, மூச்சு அடங்க அவள் சொன்னதை நம்ப முடியாமல் உள்ளுக்குள்ளேயே சிதைந்தான்.
அவனுடைய காதல் மனைவி யாஸ்மின். அவள் இன்னொருவனைக் காதலிக்கிறாளா? பள்ளிப்பருவத்தில் தொடங்கி நல்ல நண்பர்களாக இருந்து, அவன் எடுத்த பாடத்தையே அவளும் எடுத்து, அவன் சேர்ந்த கல்லூரிக்கே சேர்ந்து, அவனுடைய வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான கட்டங்களிலும் கூட இருந்து, தாயும் தந்தையும் விபத்தில் இறந்தபோது அன்னையாக இருந்து அவனைக் காத்தவள் இன்னொருவனைக் காதலிக்கிறாளா?
அவனுக்கும் அவளுக்கும் எப்போது காதல் மலர்ந்தது என்று கேட்டால் அவனுக்கும் தெரியாது, அவளுக்கும் தெரியாது. ஒருவருக்கொருவர் நேசத்தைப் பரிமாறிக்கொண்டார்களா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஒருவரை ஒருவர் மனதால் புரிந்துகொண்ட, தெரிந்து கொண்ட பந்தம் அவர்களது!
அந்தளவு புரிந்துணர்வோடு வாழ்ந்தவர்களின் வாழ்வில் இயல்பாகப் பற்றிக்கொண்ட நேசம், திருமணம் என்கிற புனிதமான பந்தத்தைப் பூண்ட இத்தனை நாட்களில் கடிந்தொரு சொல் அவளை அவன் சொல்லியிருக்க மாட்டான்.
அப்படி அவன் சொல்லும்படி அவள் நடந்ததில்லை. அந்தளவுக்கு அவனைப் புரிந்துகொண்டு வாழ்ந்தவள் இன்னொருவனைத் தேடியோட என்ன காரணம்?
அதிர்ச்சி மெல்ல மெல்ல அடங்க அந்த இடத்தைக் கண்மண் தெரியாத கோபம் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
அந்த நேரம், “மிஸ்டர் விக்ரம்…” என்று அந்த அவன் ஆரம்பிக்க, ‘நீ பேசாதே!’ என்பதாகக் கையை நீட்டித் தடுத்தான். முகம் கடினப்பட்டு இறுகிற்று!
ஆத்திரத்தை அடக்க நினைத்தவனின் கழுத்தோர நரம்புகள் புடைத்தன. கண்கள் சிவக்க கை முஷ்டிகள் இறுகின.
கலவரமாகத் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர் அந்த இருவரும்.
அந்தநொடியில் நொடித்துப்போனது விக்ரமின் உள்ளம்! பிரத்யேகமான பார்வைப் பரிமாற்றங்களும், பரிபாஷைகளும் மனைவி என்கிறவள் கணவனோடு அல்லவோ நடத்த வேண்டும்!
இங்கே அவளுக்கு யார் கணவன்? தன் நிலையை மிகக் கேவலமாக உணர்ந்தான்!
“விக்கி… நான் சொல்றதக் கொஞ்சம்…” என்று ஆரம்பித்த யாஸ்மினை விக்ரமின் பொசுக்கும் பார்வை அடக்கியது.
அவனின் பக்கமாகத் திரும்பி, “நீ போகலாம்!” என்றான் உறுமலாக.
தயக்கத்தோடு எழுந்தவன் யாஸ்மினைப் பார்த்தான்.
“உனக்கு நான் பிறகு போன் பண்றன் டிம்(Tim). நீ இப்ப போ.” என்றாள் அவள்.
சரி என்று தலையை மெலிதாக அசைத்துவிட்டு அவன் போக, அவனோடு தானும் வெளியே நடந்தாள் யாஸ்மின்.
சோஃபாவின் கைப்பிடியில் முழங்கையை ஊன்றி, கையால் நெற்றியைப் பற்றித் தேய்த்து விட்டுக்கொண்டே பார்வையைத் திருப்பியவனின் விழிகளில், டிம்மின் காரருகே நின்றிருந்த யாஸ்மினும் டிம்மும் பட்டனர்.
அவனது கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு யாஸ்மின் என்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள். பல்லைக் கடித்துக்கொண்டு முகத்தை இவன் திருப்பப் போக, டிம்மின் தோளில் சாய்ந்துகொண்டாள் யாஸ்மின். அவனோ இவளை அணைத்துக்கொண்டு என்னவோ சொன்னான்.
அணைப்பதும் தோள் சாய்வதும் அவர்களுக்குப் பெரிய விடயமன்று! ஆனால், யாஸ்மின் சற்றுமுன் சொன்ன விசயத்தை அறிந்த பிறகும் அதைச் சாதாரணமாக எடுக்க முடியவில்லை.
அவன் இரத்தம் கொதித்தது. அதைவிட மனைவியைக் காதலியாக அன்றுவரை நெஞ்சில் சுமந்தவனின் இதயம் தூள் தூளாக உடைந்தது.
வெறும் பயலாக இருந்தவனை நெஞ்சில் கொண்ட நேசத்துக்காக மட்டுமே அன்று கரம் பிடித்தவளை, யாரும் எட்ட முடியாத உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டானே! ஆசைப் பட்டது மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றியும் காட்டினானே!
அவள் ஆசைப்பட்டாள் என்று புத்தம் புதுக்கார். அவள் ஆசைப்பட்டாள் என்றுதான் இந்த வீட்டையும் கட்டினான். யாரோ அவர்களின் விருப்பத்துக்குக் கட்டிய வீட்டை நாம் வாங்குவதா? நமக்குப் பிடித்த விதமாக நாம் கட்டுவோம் என்று அவளின் ஆசைப்படி கட்டிய வீடு இது.
அவளின் பார்வை ஆசையோடு ஒரு பொருளின் மீது படிந்தால் அடுத்த நிமிடமே அதை வாங்கிக் கொடுத்துவிடுவானே.
பணமிருந்தால் எதுவும் செய்யலாம்தான். ஆனால், அவன் கொட்டிய நேசம்? காட்டிய காதல்?
தமிழர்கள் மட்டுமல்ல, அவர்களை அறிந்த ஜெர்மனியர்கள் கூட, “உன் கணவன் நல்ல காதலன்.” என்று சின்ன பொறாமையோடு சொல்லும் இடத்தில் அவன் வாழவைக்க, அவள் இன்னொருவனைத் தேடுவாளா?
மனம் உலைக்கலமெனக் கொதித்துக்கொண்டிருந்தது.
அத்தியாயம் 1
ஜெர்மனியின் பிரங்க்ஃபுவர்ட் நகரம்! எப்போதும்போல மிக மிகச் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அங்கே, நகர்ப்புறத்தில் அமைந்திருந்த தன் வீட்டு பால்கனியில் கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் விக்ரம். செய்வதற்கு எத்தனையோ வேலைகள் இருந்தாலும் எதையும் பாராது அப்படியே நின்றிருந்தான். மனதில் உற்சாகமில்லை. உடலிலோ அது மருந்துக்கும் இல்லை. மகன் டெனிஷ் பள்ளிக்கூடம் சென்றிருந்தான்.
அலுவலகம் போக வேண்டும் என்று மண்டைக்குள் மணியடித்தாலும், ‘அங்கே போயும் எதைச் செய்ய. எப்பவும் பார்க்கிற அதே வேலைதானே.’ என்று சலிப்பாக இருந்தது.
அவன் ஒன்றும் சோம்பேறி அல்லன்! சொல்லப்போனால் மற்றவர்களை விடவும் போர்க்குணம் மிக்கவன்!
வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும், மனைவியையும் மகனையும் நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்று எண்ணி அல்லும்பகலும் போராடி உழைத்தான். ஒரு தொழிலாளியாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்து, கைப்பேசிகளுக்குப் பணமேற்றும் தொழிலைச் சுயமாகத் தொடங்கி, அதைப் பெருக்கி இன்று நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறான். ‘டெனிஷ் மொபைல்’ என்றால் தரமானதும் நியாயமானதும் என்று எல்லோருக்கும் தெரியும். அவனது வளர்ச்சி இன்று அவனையும் மீறியது!
ஆனால், அந்த அசுரத்தனமான போராட்டமும் ஓட்டமும் அவனது உயிர்நாடியையே அவனிடமிருந்து பிடுங்கிவிட்டிருந்தது!
உழைப்பு உழைப்பு என்று பணத்தைத் தேடி ஓடியவன், தன் காதல் மனைவி மகனைக் கவனித்துக்கொண்டு அவனோடு பின்வருவாள் என்று நினைக்க, அவளோ அவன் தலையில் இடியையே இறக்கிவிட்டாள்!
ஒருநாள் நள்ளிரவில் வீடு வந்து உறங்கிக் கொண்டிருந்தவனை வந்து எழுப்பினாள் யாஸ்மின். அவன் மனைவி! ஜெர்மனிய பெண்.
“என்னம்மா? கொஞ்சம் தூங்கவிடு.”
“உன்னப் பாக்க கீழ ஒருத்தன் வந்திருக்கிறான்.”
“என்னைப் பாக்கவா? யாரது?” புருவங்களைச் சுருக்கினான். என்னதான் கடுமையான உழைப்பாளியாக இருந்தாலும் தொழிலை வீடுவரை கொண்டு வருகிறவன் அல்லன் அவன்.
தெரிந்தவராக அல்லது சொந்தக்காரராக இருந்தால் அவள் அறியாத நபர் என்று அவனுக்கு யாருமில்லை.
“யாரது உனக்குத் தெரியாம?” என்று கேட்டுக்கொண்டே முகம் கழுவப் போக, அவளோ பதில் சொல்லாமல் கீழே இறங்கி ஓடினாள்.
‘இவள் என்ன ஒண்டுமே சொல்லாம போறாள்?’ எண்ணம் ஓட, முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து ஒரு சட்டையை எடுத்து மாட்டியபடி கீழே இறங்கினான்.
ஒரு ஜெர்மனியன். அவன் இதுநாள் வரை பார்த்ததே இல்லை. இவன் கீழே செல்லவும் எழுந்து கைகொடுத்தான். அவனை அமரும்படி இருக்கையைக் காட்டிவிட்டு தானும் அமர்ந்துகொண்டே மனைவியைக் கேள்வியாகப் பார்த்தான்.
அவளோ, இவனைப் பாராது மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை மீண்டும் அடுக்கிக்கொண்டிருந்தாள். முகத்தில் பதட்டம். கைகளில் நடுக்கம்.
“நாம் ஏற்கனவே சந்திச்சு இருக்கிறமா?” முன்னால் அமர்ந்திருந்தவனிடம் கேட்டான்.
“இல்லை. நான் யாஸ்மின்ர நண்பன்.” என்றான் அவன்.
‘நண்பனா? இத நீ ஏன் சொல்லேல?’ கேள்வியாக அவன் மனைவியை ஏறிட, அவளோ இவன் கண்களைப் பாராது, “அவன நான் காதலிக்கிறன் விக்கி. உன்ன விவாகரத்துச் செய்துபோட்டு அவனக் கட்டப்போறன்.” என்றாள்.
அதிர்ந்துபோய் மனைவியைப் பார்த்தான் விக்ரம். அவள் சொன்னதன் சாராம்சத்தைக் கிரகித்துக்கொள்ளச் சற்று நேரம் பிடித்தது. கிரகித்துக்கொண்டதும் சித்தம் கலங்குவது போலிருந்தது. பேச்சு மறக்க, மூச்சு அடங்க அவள் சொன்னதை நம்ப முடியாமல் உள்ளுக்குள்ளேயே சிதைந்தான்.
அவனுடைய காதல் மனைவி யாஸ்மின். அவள் இன்னொருவனைக் காதலிக்கிறாளா? பள்ளிப்பருவத்தில் தொடங்கி நல்ல நண்பர்களாக இருந்து, அவன் எடுத்த பாடத்தையே அவளும் எடுத்து, அவன் சேர்ந்த கல்லூரிக்கே சேர்ந்து, அவனுடைய வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான கட்டங்களிலும் கூட இருந்து, தாயும் தந்தையும் விபத்தில் இறந்தபோது அன்னையாக இருந்து அவனைக் காத்தவள் இன்னொருவனைக் காதலிக்கிறாளா?
அவனுக்கும் அவளுக்கும் எப்போது காதல் மலர்ந்தது என்று கேட்டால் அவனுக்கும் தெரியாது, அவளுக்கும் தெரியாது. ஒருவருக்கொருவர் நேசத்தைப் பரிமாறிக்கொண்டார்களா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஒருவரை ஒருவர் மனதால் புரிந்துகொண்ட, தெரிந்து கொண்ட பந்தம் அவர்களது!
அந்தளவு புரிந்துணர்வோடு வாழ்ந்தவர்களின் வாழ்வில் இயல்பாகப் பற்றிக்கொண்ட நேசம், திருமணம் என்கிற புனிதமான பந்தத்தைப் பூண்ட இத்தனை நாட்களில் கடிந்தொரு சொல் அவளை அவன் சொல்லியிருக்க மாட்டான்.
அப்படி அவன் சொல்லும்படி அவள் நடந்ததில்லை. அந்தளவுக்கு அவனைப் புரிந்துகொண்டு வாழ்ந்தவள் இன்னொருவனைத் தேடியோட என்ன காரணம்?
அதிர்ச்சி மெல்ல மெல்ல அடங்க அந்த இடத்தைக் கண்மண் தெரியாத கோபம் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
அந்த நேரம், “மிஸ்டர் விக்ரம்…” என்று அந்த அவன் ஆரம்பிக்க, ‘நீ பேசாதே!’ என்பதாகக் கையை நீட்டித் தடுத்தான். முகம் கடினப்பட்டு இறுகிற்று!
ஆத்திரத்தை அடக்க நினைத்தவனின் கழுத்தோர நரம்புகள் புடைத்தன. கண்கள் சிவக்க கை முஷ்டிகள் இறுகின.
கலவரமாகத் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர் அந்த இருவரும்.
அந்தநொடியில் நொடித்துப்போனது விக்ரமின் உள்ளம்! பிரத்யேகமான பார்வைப் பரிமாற்றங்களும், பரிபாஷைகளும் மனைவி என்கிறவள் கணவனோடு அல்லவோ நடத்த வேண்டும்!
இங்கே அவளுக்கு யார் கணவன்? தன் நிலையை மிகக் கேவலமாக உணர்ந்தான்!
“விக்கி… நான் சொல்றதக் கொஞ்சம்…” என்று ஆரம்பித்த யாஸ்மினை விக்ரமின் பொசுக்கும் பார்வை அடக்கியது.
அவனின் பக்கமாகத் திரும்பி, “நீ போகலாம்!” என்றான் உறுமலாக.
தயக்கத்தோடு எழுந்தவன் யாஸ்மினைப் பார்த்தான்.
“உனக்கு நான் பிறகு போன் பண்றன் டிம்(Tim). நீ இப்ப போ.” என்றாள் அவள்.
சரி என்று தலையை மெலிதாக அசைத்துவிட்டு அவன் போக, அவனோடு தானும் வெளியே நடந்தாள் யாஸ்மின்.
சோஃபாவின் கைப்பிடியில் முழங்கையை ஊன்றி, கையால் நெற்றியைப் பற்றித் தேய்த்து விட்டுக்கொண்டே பார்வையைத் திருப்பியவனின் விழிகளில், டிம்மின் காரருகே நின்றிருந்த யாஸ்மினும் டிம்மும் பட்டனர்.
அவனது கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு யாஸ்மின் என்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள். பல்லைக் கடித்துக்கொண்டு முகத்தை இவன் திருப்பப் போக, டிம்மின் தோளில் சாய்ந்துகொண்டாள் யாஸ்மின். அவனோ இவளை அணைத்துக்கொண்டு என்னவோ சொன்னான்.
அணைப்பதும் தோள் சாய்வதும் அவர்களுக்குப் பெரிய விடயமன்று! ஆனால், யாஸ்மின் சற்றுமுன் சொன்ன விசயத்தை அறிந்த பிறகும் அதைச் சாதாரணமாக எடுக்க முடியவில்லை.
அவன் இரத்தம் கொதித்தது. அதைவிட மனைவியைக் காதலியாக அன்றுவரை நெஞ்சில் சுமந்தவனின் இதயம் தூள் தூளாக உடைந்தது.
வெறும் பயலாக இருந்தவனை நெஞ்சில் கொண்ட நேசத்துக்காக மட்டுமே அன்று கரம் பிடித்தவளை, யாரும் எட்ட முடியாத உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டானே! ஆசைப் பட்டது மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றியும் காட்டினானே!
அவள் ஆசைப்பட்டாள் என்று புத்தம் புதுக்கார். அவள் ஆசைப்பட்டாள் என்றுதான் இந்த வீட்டையும் கட்டினான். யாரோ அவர்களின் விருப்பத்துக்குக் கட்டிய வீட்டை நாம் வாங்குவதா? நமக்குப் பிடித்த விதமாக நாம் கட்டுவோம் என்று அவளின் ஆசைப்படி கட்டிய வீடு இது.
அவளின் பார்வை ஆசையோடு ஒரு பொருளின் மீது படிந்தால் அடுத்த நிமிடமே அதை வாங்கிக் கொடுத்துவிடுவானே.
பணமிருந்தால் எதுவும் செய்யலாம்தான். ஆனால், அவன் கொட்டிய நேசம்? காட்டிய காதல்?
தமிழர்கள் மட்டுமல்ல, அவர்களை அறிந்த ஜெர்மனியர்கள் கூட, “உன் கணவன் நல்ல காதலன்.” என்று சின்ன பொறாமையோடு சொல்லும் இடத்தில் அவன் வாழவைக்க, அவள் இன்னொருவனைத் தேடுவாளா?
மனம் உலைக்கலமெனக் கொதித்துக்கொண்டிருந்தது.