“உன்ர வீட்டிலதானே முருங்க சடைச்சுக்கிடக்கே! முட்ட வாங்கிச் சாப்பிடுறதும் முருங்க இலையைச் சுண்டிச் சாப்பிடுறதும் ஒன்டுதான். பகல்சாப்பாட்டுக்கு ஒரு பிடி சோறும் முருங்க இலைச் சுண்டலும் போதாதா என்ன? அதைச் செய்ய மாட்டீங்களே! கடனுக்கு மேலே கடன் பட்டு என்றாலும் பரவாயில்ல, வாய்க்கு ருசியாத் தான் சாப்பிடவேணும் என்றால்... ஹ்ம்ம்... அதுக்குச் சும்மா இருக்கக்கூடாது...முதுகொடிய...” மூச்சு விடாது படபடத்தாள் செல்வி.
“போதும் நிப்பாட்டு...!” செல்வியின் மாடிவீட்டின் முன்வாயிலோடு இருந்த படியில் அமர்ந்திருந்த மலர், விசுக்கென்று எழுந்தாள்.
“இல்லாக் கொடுமையில உன்னட்ட வந்து கேட்டன் பார், என்ர புத்திய செருப்பால அடிக்க வேணும்.”
தன் தலையில் இரண்டு அடி அடித்துக்கொண்டவளுக்கு துக்கத்திலும் கோபத்திலும் தேகம் நடுங்கியது; பசியிலும் தான். காலையில் தேநீர் என்று குடித்த வெறும் சாயத்தண்ணி இன்னும் நாக்கில் கசந்து குமட்டியது.
‘எனக்கே இப்படி என்றால் பள்ளிக்கூடம் போற பிள்ளைகளுக்கு...’ ஐந்து பிள்ளைகளும், பசியில் சோர்ந்த அவர்களின் முகங்களும் அவளின் மனக்கண்ணில்!
சூடாகக் கரைகடந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கோபமாகப் பார்த்த தங்கையை உற்று நோக்கினாள், செல்வி.
அவள் மனதுள் பரிதாபம் ஊற்றெடுத்தது தான். அதற்காக?
‘இன்றைக்கு நான் சொல்ல இல்ல என்றால் யார் சொல்வது? கடன் என்று கையேந்தி கையேந்தி நன்றாகவே பழகீட்டினம். முதல் தடவைக்குத் தானே தயக்கம், வெட்கம் எல்லாம். ‘பிறகு தாறேன், பத்து நாளில தாறன் என்றால் எதை வைத்துத் தருவீனமாம்? கடன் கொடுத்தவேன்ட வசவுகளை நானும் தானும் கேட்கிறன். சொத்தியா முடமா? ஏன் இந்தப் பிழைப்பு? இன்றைக்கு விடுறதில்ல.’ மின்னலாக மனம் முணுமுணுக்க, தங்கையை நெருங்கினாள், அவள்.
“இங்க பார் மலர், கோபப்படாமல் நான் சொல்லுறதக் கேள்!”
“நீ ஒண்டும் சொல்ல வேணாம். கூடப் பிறந்தவள் நல்லா இருக்கிறாள் என்றுதான் உன்ர வீட்டுப் படியேறினன். நீயோ வாய்க்கு வந்தபடி எத்தன சொல்லுறாய்? இதேபோலத்தான் பெரியக்காவும் சொன்னாள். ‘காசு இல்லாதவள் ஐஞ்சு பிள்ளை பெற வேணுமா?’ என்று கேட்டுட்டாள். அவளுக்கு ஒரு பிள்ளைக்கு பிறகு பிள்ளையில்லை என்று என்னில எரிச்சல். அது மட்டுமா சொன்னாள்? ‘சரி, வசதி இல்லையோ கான்வென்ட் படிப்பு எதுக்கு? படிச்சது காணும், பெரிய மகள்களை எங்காவது வேலைக்கு அனுப்பு’ என்று சொல்லீட்டாள். அதைச் சொல்ல அவள் யார்? அதுக்குப் பிறகு, அவள் வீட்டு வாசல் படியை நான் மிதிக்க இல்ல. இனிமேல்பட்டு உன் வீட்டுக்கும் வர மாட்டன்.” தொண்டை நரம்புகள் புடைக்க, கிட்டத்தட்ட கத்தினாள் மலர்.
காலையில் எழுந்து அத்தூரமிருந்து எவ்வளவு நம்பிக்கையாக நடந்து வந்திருப்பாள். சகோதரி என்ற நம்பிக்கையில் தானே? என்னவோ மூன்றாம் மனிசி போலல்லவா கதைக்கிறாள்.
‘ஒரு காலத்தில நான் நல்லா இருக்கேக்க இவளவையளுக்கு எவ்வளவைச் செய்திருப்பன். மறந்திட்டாள்கள்.’ எரிச்சலோடு குமுறியது அவளுள்ளம்.
“ஐயோ மலர்! இதெல்லாம் நீ இப்படி கஸ்டத்தில கிடக்கிறாய் என்ற கவலையில சொல்லுறதுதான். வார்த்தைக்கு வார்த்தை குற்றம் கண்டு பிடிக்கிறதிலேயே குறியா நிக்கிறாய். சொல்லுற நல்லதுகளை காதில வாங்கிறதே இல்ல. உன்னைபோலவேதான் உன் புருஷனும். அதுதான் இந்தக் கஷ்டம். ஊருலகத்தில கஸ்டப்படுறவன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நல்லா வர, நீங்க மட்டும் இருந்ததை விட கீழ்நிலைக்கு போறீங்க...” தானும் குரலை உயர்த்தினாள் செல்வி.
“இங்க பார், உங்களுக்கு என்னிலும் என்ட குடும்பத்திலும் பெரிய அக்கறை தான். நான் ரெண்டு வயதில காது குத்தீட்டன். கதை விடாத. காசு இல்லையோ இல்ல என்று சொல்லு. அதைவிட்டுட்டு நான் என்ன சாப்பிடவேணும், எப்படி வாழவேணும் என்று புத்தி சொல்ல வராத.” களைப்பில் வதங்கிய அவள் முகத்தில் அத்தனை கோபமும் எரிச்சலும்.
‘அப்படி என்ன கேட்டன்? ஐயாயிரம் இருந்தால் தா, அடுத்த மாதம் தாறேன் என்றுதானே கேட்டன். ஒரு கணம் தாமதிக்காமல் இல்லை என்று சொல்லிப்போட்டாள். புருஷன் வெளிநாட்டிலிருந்து உழைத்து அனுப்ப அனுப்ப, மாடி வீடு கட்டி காசுக்கு மேல இருக்கிறவளுக்கு பிச்சைக்காசு ஐயாயிரம்! மனம் இல்ல. அதை மறைக்க என்னைக் குறை சொல்ல வந்திட்டாள். தானும் பிள்ளைகளும் இறைச்சியும் சோறும், நானும் பிள்ளைகளும் முருங்கை இலையும் சோறும்.’
கடுகதியாய் மனம் அலற, வெறுப்போடு சகோதரியைப் பார்த்தாள் மலர்.
“காசு பணம் இருந்து என்ன பயன்? நல்ல மனம் வேணும்...ச்சே!
பணம் இன்றைக்கு இருக்கும் நாளைக்கு போகும். என் நிலை உனக்கும் வரலாம், நினைவில் வைத்திரு!”
வெறுப்போடு மொழிந்துவிட்டு இரண்டடி எடுத்து வைத்தவள், “மரத்தை நட்டவன் தண்ணி ஊற்ற மாட்டனா என்ன? எங்களைப் படைச்சவன் படியளப்பான்...”
தனக்குத் தானே சொன்னபடி, நடையில் வேகம் கூட்டி முன் வாயிலைத் திறந்தாள்; மனதிலோ, வேறு யாரிடம் கடன் கேட்கலாம் என்ற சிந்தனை.
“அது சரி, நீயும் உன் புருஷன், பிள்ளைகளும் மரங்கள் தானே? வச்சவன் தண்ணி ஊற்ற!” செல்வி வெடுக்கென்று சொல்ல, விசுக்கென்று நின்று முறைத்தாள் மலர்.
“இங்க பார், என்னைப் பற்றிக்கதை...உன்னோடு பிறந்த குற்றத்துக்காகவும் உன்னட்ட கையேந்த வந்ததுக்காகவும் பொறுத்துக்கொள்வன்; என் புருஷன், பிள்ளைகள் பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் நல்லா இருக்காது சொல்லீட்டன்.”
சகோதரியை நோக்கி ஆட்காட்டி விரல் நீண்டிருந்தது. விழிகளின் வீச்சில் அக்கினி.
வயிறு காந்த வந்தவளோடு வீண் பரிகாசம்!
“ஏய் மலர்! முதல் நான் சொல்ல வாறதைக் கொஞ்சம் காது குடுத்துக் கேள் பாப்பம்! இப்பிடியே வெடுக் வெடுக்கென்று கோபப்பட்டுப்பட்டு நீ பெற்ற பிள்ளைகளின்ட வாழ்க்கையை வீணாக்க நீயே வழி செய்யாத.
மரத்தை நட்டால் பார்த்து பார்த்து தண்ணி ஊற்றவேண்டியது நட்டவனின் கடமை. ஏனென்றால் அது மரம். ஆனால், நீ? மரமாடி? மனிஷிதானே? படைச்சவன் படியளிப்பான் என்றிட்டு பேசாமல் இருந்தால் சரியா? உன்னைப் படைச்சவன் மூளையுள்ள மனிசியாப் படைச்சிருக்கிறானே. உன் வீட்டு நிலையை யோசிச்சு ஒரு முடிவெடு! இல்லையோ...உன்னோட சேர்ந்த மற்றவர்கள் சொல்லுற நல்லதைக் கேள்.
ராஜாவுக்கு எப்ப வேலை போச்சு? வான் ஓட்டினவர் இனிமேல் கடனோ உடனோ பட்டு சொந்தமா வான் வாங்கித்தான் ஓட்டுவன் என்றால்... கையில ஐஞ்சு சதமில்லாமல் இதென்ன கூத்து? நீயே கொஞ்சம் யோசியேன் மலர்.
“போதும் நிப்பாட்டு...!” செல்வியின் மாடிவீட்டின் முன்வாயிலோடு இருந்த படியில் அமர்ந்திருந்த மலர், விசுக்கென்று எழுந்தாள்.
“இல்லாக் கொடுமையில உன்னட்ட வந்து கேட்டன் பார், என்ர புத்திய செருப்பால அடிக்க வேணும்.”
தன் தலையில் இரண்டு அடி அடித்துக்கொண்டவளுக்கு துக்கத்திலும் கோபத்திலும் தேகம் நடுங்கியது; பசியிலும் தான். காலையில் தேநீர் என்று குடித்த வெறும் சாயத்தண்ணி இன்னும் நாக்கில் கசந்து குமட்டியது.
‘எனக்கே இப்படி என்றால் பள்ளிக்கூடம் போற பிள்ளைகளுக்கு...’ ஐந்து பிள்ளைகளும், பசியில் சோர்ந்த அவர்களின் முகங்களும் அவளின் மனக்கண்ணில்!
சூடாகக் கரைகடந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கோபமாகப் பார்த்த தங்கையை உற்று நோக்கினாள், செல்வி.
அவள் மனதுள் பரிதாபம் ஊற்றெடுத்தது தான். அதற்காக?
‘இன்றைக்கு நான் சொல்ல இல்ல என்றால் யார் சொல்வது? கடன் என்று கையேந்தி கையேந்தி நன்றாகவே பழகீட்டினம். முதல் தடவைக்குத் தானே தயக்கம், வெட்கம் எல்லாம். ‘பிறகு தாறேன், பத்து நாளில தாறன் என்றால் எதை வைத்துத் தருவீனமாம்? கடன் கொடுத்தவேன்ட வசவுகளை நானும் தானும் கேட்கிறன். சொத்தியா முடமா? ஏன் இந்தப் பிழைப்பு? இன்றைக்கு விடுறதில்ல.’ மின்னலாக மனம் முணுமுணுக்க, தங்கையை நெருங்கினாள், அவள்.
“இங்க பார் மலர், கோபப்படாமல் நான் சொல்லுறதக் கேள்!”
“நீ ஒண்டும் சொல்ல வேணாம். கூடப் பிறந்தவள் நல்லா இருக்கிறாள் என்றுதான் உன்ர வீட்டுப் படியேறினன். நீயோ வாய்க்கு வந்தபடி எத்தன சொல்லுறாய்? இதேபோலத்தான் பெரியக்காவும் சொன்னாள். ‘காசு இல்லாதவள் ஐஞ்சு பிள்ளை பெற வேணுமா?’ என்று கேட்டுட்டாள். அவளுக்கு ஒரு பிள்ளைக்கு பிறகு பிள்ளையில்லை என்று என்னில எரிச்சல். அது மட்டுமா சொன்னாள்? ‘சரி, வசதி இல்லையோ கான்வென்ட் படிப்பு எதுக்கு? படிச்சது காணும், பெரிய மகள்களை எங்காவது வேலைக்கு அனுப்பு’ என்று சொல்லீட்டாள். அதைச் சொல்ல அவள் யார்? அதுக்குப் பிறகு, அவள் வீட்டு வாசல் படியை நான் மிதிக்க இல்ல. இனிமேல்பட்டு உன் வீட்டுக்கும் வர மாட்டன்.” தொண்டை நரம்புகள் புடைக்க, கிட்டத்தட்ட கத்தினாள் மலர்.
காலையில் எழுந்து அத்தூரமிருந்து எவ்வளவு நம்பிக்கையாக நடந்து வந்திருப்பாள். சகோதரி என்ற நம்பிக்கையில் தானே? என்னவோ மூன்றாம் மனிசி போலல்லவா கதைக்கிறாள்.
‘ஒரு காலத்தில நான் நல்லா இருக்கேக்க இவளவையளுக்கு எவ்வளவைச் செய்திருப்பன். மறந்திட்டாள்கள்.’ எரிச்சலோடு குமுறியது அவளுள்ளம்.
“ஐயோ மலர்! இதெல்லாம் நீ இப்படி கஸ்டத்தில கிடக்கிறாய் என்ற கவலையில சொல்லுறதுதான். வார்த்தைக்கு வார்த்தை குற்றம் கண்டு பிடிக்கிறதிலேயே குறியா நிக்கிறாய். சொல்லுற நல்லதுகளை காதில வாங்கிறதே இல்ல. உன்னைபோலவேதான் உன் புருஷனும். அதுதான் இந்தக் கஷ்டம். ஊருலகத்தில கஸ்டப்படுறவன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நல்லா வர, நீங்க மட்டும் இருந்ததை விட கீழ்நிலைக்கு போறீங்க...” தானும் குரலை உயர்த்தினாள் செல்வி.
“இங்க பார், உங்களுக்கு என்னிலும் என்ட குடும்பத்திலும் பெரிய அக்கறை தான். நான் ரெண்டு வயதில காது குத்தீட்டன். கதை விடாத. காசு இல்லையோ இல்ல என்று சொல்லு. அதைவிட்டுட்டு நான் என்ன சாப்பிடவேணும், எப்படி வாழவேணும் என்று புத்தி சொல்ல வராத.” களைப்பில் வதங்கிய அவள் முகத்தில் அத்தனை கோபமும் எரிச்சலும்.
‘அப்படி என்ன கேட்டன்? ஐயாயிரம் இருந்தால் தா, அடுத்த மாதம் தாறேன் என்றுதானே கேட்டன். ஒரு கணம் தாமதிக்காமல் இல்லை என்று சொல்லிப்போட்டாள். புருஷன் வெளிநாட்டிலிருந்து உழைத்து அனுப்ப அனுப்ப, மாடி வீடு கட்டி காசுக்கு மேல இருக்கிறவளுக்கு பிச்சைக்காசு ஐயாயிரம்! மனம் இல்ல. அதை மறைக்க என்னைக் குறை சொல்ல வந்திட்டாள். தானும் பிள்ளைகளும் இறைச்சியும் சோறும், நானும் பிள்ளைகளும் முருங்கை இலையும் சோறும்.’
கடுகதியாய் மனம் அலற, வெறுப்போடு சகோதரியைப் பார்த்தாள் மலர்.
“காசு பணம் இருந்து என்ன பயன்? நல்ல மனம் வேணும்...ச்சே!
பணம் இன்றைக்கு இருக்கும் நாளைக்கு போகும். என் நிலை உனக்கும் வரலாம், நினைவில் வைத்திரு!”
வெறுப்போடு மொழிந்துவிட்டு இரண்டடி எடுத்து வைத்தவள், “மரத்தை நட்டவன் தண்ணி ஊற்ற மாட்டனா என்ன? எங்களைப் படைச்சவன் படியளப்பான்...”
தனக்குத் தானே சொன்னபடி, நடையில் வேகம் கூட்டி முன் வாயிலைத் திறந்தாள்; மனதிலோ, வேறு யாரிடம் கடன் கேட்கலாம் என்ற சிந்தனை.
“அது சரி, நீயும் உன் புருஷன், பிள்ளைகளும் மரங்கள் தானே? வச்சவன் தண்ணி ஊற்ற!” செல்வி வெடுக்கென்று சொல்ல, விசுக்கென்று நின்று முறைத்தாள் மலர்.
“இங்க பார், என்னைப் பற்றிக்கதை...உன்னோடு பிறந்த குற்றத்துக்காகவும் உன்னட்ட கையேந்த வந்ததுக்காகவும் பொறுத்துக்கொள்வன்; என் புருஷன், பிள்ளைகள் பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் நல்லா இருக்காது சொல்லீட்டன்.”
சகோதரியை நோக்கி ஆட்காட்டி விரல் நீண்டிருந்தது. விழிகளின் வீச்சில் அக்கினி.
வயிறு காந்த வந்தவளோடு வீண் பரிகாசம்!
“ஏய் மலர்! முதல் நான் சொல்ல வாறதைக் கொஞ்சம் காது குடுத்துக் கேள் பாப்பம்! இப்பிடியே வெடுக் வெடுக்கென்று கோபப்பட்டுப்பட்டு நீ பெற்ற பிள்ளைகளின்ட வாழ்க்கையை வீணாக்க நீயே வழி செய்யாத.
மரத்தை நட்டால் பார்த்து பார்த்து தண்ணி ஊற்றவேண்டியது நட்டவனின் கடமை. ஏனென்றால் அது மரம். ஆனால், நீ? மரமாடி? மனிஷிதானே? படைச்சவன் படியளிப்பான் என்றிட்டு பேசாமல் இருந்தால் சரியா? உன்னைப் படைச்சவன் மூளையுள்ள மனிசியாப் படைச்சிருக்கிறானே. உன் வீட்டு நிலையை யோசிச்சு ஒரு முடிவெடு! இல்லையோ...உன்னோட சேர்ந்த மற்றவர்கள் சொல்லுற நல்லதைக் கேள்.
ராஜாவுக்கு எப்ப வேலை போச்சு? வான் ஓட்டினவர் இனிமேல் கடனோ உடனோ பட்டு சொந்தமா வான் வாங்கித்தான் ஓட்டுவன் என்றால்... கையில ஐஞ்சு சதமில்லாமல் இதென்ன கூத்து? நீயே கொஞ்சம் யோசியேன் மலர்.