அம்மாடி நீங்க தலைப்பை படிச்சிட்டுதான் வந்திருக்கீங்காளான்னு எனக்கு சந்தேகமா இருக்கு

ஏன்னா, ஒரு ஆண் வேலைக்கு சென்று சம்பாத்தியம் ஈட்டும் நபராகவும், பெண் அப்படின்னா குழந்தைகள், குடும்பம், வீட்டு மேலாண்மை என்கிற வரையறை இருக்கு, அதோட இந்த வேலையை ஆண் தான் செய்யணும், இந்த வேலையை பெண் தான் செய்யணும் அப்படிங்கறதால, சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு, தனித்துவம் பறி போகுதுன்னு சொல்லி இருக்கீங்க.
கதையின் தலைப்பு "
இன்றைய இளம் பெண்களின் பார்வையில்"

மனசாட்சி தொட்டு சொல்லுங்க இன்றைக்கு ஆண் மட்டும் தான் சம்பாதிக்கிறானா?

பெண் குடும்பம், குழந்தைகள்(!), வீட்டு மேலாண்மை (?????) இப்படித்தான் இருக்காங்களா?

நீங்க எந்த நூற்றாண்டுல இருக்கீங்க
என்னமா, எந்த லோகத்தில இருந்து பூலோகத்துக்கு இறங்கி வந்திருக்கீங்க

ஒரு வேலையை, இது ஆண் பார்க்கிறதுன்னு விட்டு வச்சிருக்காங்களா இன்றைய பெண்கள்? ஆண்களுக்கு நிகரா அனைத்து வேலையிலும் சாதனை படைச்சிட்டு வர்றாங்க. அவங்களோட தனித்துவமும், சுதந்திரமும் பாதிக்கப்பட்டா, இப்படி சாதனைகள் செய்ய முடியுமா? சாதனை புரிந்தவர்கள் எல்லாம் குடும்பம், குழந்தை இல்லாதவர்களா?

இருவேளை நீங்கள் வீட்டு வேலை செய்வது பற்றி சொல்ல வர்றீங்கன்னா, பாவம் இன்றைய ஆண்கள் தான். சமையலில் கை கொடுப்பதாகட்டும், அம்மா அல்லது மாமியார் வீடு அருகே போய் வரும் தூரத்திலிருந்தால், போய் சாப்பாடு வாங்கி வருவதாகட்டும், சனி ஞாயிறு வீட்டில் சமைப்பதில்லை என்ற கொள்கையுடன் இருக்கும் குடும்பத்தை ஹோட்டலில் வாங்கியோ, ஆர்டர் போட்டோ சமாளிப்பதாகட்டும், வாஷிங் மெசினில் துணி போட்டு எடுப்பதாகட்டும், இன்னும் எத்தனையோ, இதெல்லாம் செய்வதில்லையா, சொல்லுங்கள் பார்ப்போம்
குடும்பம், குழந்தைன்னு வந்துட்டா, பெண்ணுக்குதான் பொறுமை, அழுத்தம் இதெல்லாம்னு சொல்றீங்க. குடும்பம்கிறத்தில நீங்களும் ஒரு அங்கம்ன்னு பாருங்க, (5 விரல்கள்ல நீங்களும் ஒரு விரல்), குழந்தையை சந்தோஷமா வரவேற்கவும், தாய்மைக்கான பரிசாவும் பாருங்க. இதையெல்லாம் சுமையா நினைக்கிறதால் தான், அழுத்தம் கூடுது. அதனாலேயே கருத்தரிப்பு மையம் அதிகமாயிற்று போகுது.
அப்புறம் உணவு விஷயம் பற்றி சொல்லி இருக்கீங்க. தான் திருமணம் செய்யப் போகிறவர், அவர் குடும்பம், சைவமா, அசைவமா என்று தெரியாமல் இன்றைய காலத்தில் எப்படி திருமணம் செய்கிறார்கள்? பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளை என்றாலும் இது தெரியாமலா திருமணம் செய்து வைப்பார்கள்? கண்டிப்பாக பெற்றோர் தன் மகளை இப்படி மாற்று சைவ/அசைவ சமயத்தில் கொடுத்து தன் மகள் கஷ்டப்படுவதை விரும்ப மாட்டார்கள். அப்படி ஒருவேளை விரும்பினாலும், அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து, மகள் இதற்கு சரி, சமாளித்து கொள்ளலாம் என்று சம்மதித்தால் மட்டுமே திருமணம் செய்திருப்பார்கள். இது ரொம்ப rare. அப்போ கூட சமாளிப்பேன் என்று வந்துவிட்டு இதை ஒரு பிரச்சனையாக அந்த பெண் நினைத்தால், அவள் தான் அதற்கு காரணமே தவிர, அந்த திருமணத்தை பாரமாக நினைப்பாளா? ஒருவேளை காதல் திருமணமாக இருந்தால், உண்மையாய் காதலிக்கும் மனதிற்கு இது ஒரு பிரச்சினையாகவே தெரியாது.
அம்மா வீட்டில் மட்டுமே அவள் ஆசைப் படுவதை, சாப்பிட முடியும் என்பதெல்லாம் சும்மா ஒரு சாக்கு. அம்மா வீட்டுக்கு வந்து ஹாயாக இருந்து கொண்டு அம்மா சமைப்பதை காலாட்டி கொண்டு சாப்பிடும் இந்த காலத்து பெண்களின் ட்ரிக் இது. இளம் பெண்களின் தாய்மார்களே உஷார்
