அத்தியாயம் 5
அடுத்த மூன்று மாதங்கள் எப்படி என்றில்லாமல் ஓடிப்போயிருந்தன. அன்று நிலனின் கடை திறப்பு விழாவிற்குச் சென்று வந்தவளிடத்தில் அங்கே என்ன பேசினார்கள் என்று கேட்கும் தைரியம் அவள் வீட்டினருக்கு இல்லை.
ஆனால், பனங்காயை மொய்க்கும் ஈயைப் போன்று, அவளாக ஏதாவது சொல்வாளா என்று அவள் முகத்தை முகத்தைப் பார்த்து ஏமாந்துபோனதுதான் மிச்சம்.
அவர்கள் பக்கமிருந்தும் எந்தச் சத்தமுமில்லை. இந்தப் பெண் எதையாவது ஏடாகூடமாகப் பேசிவிட்டாளா என்று கலங்கினார் குணாளன்.
அங்கே நிலனையும் சக்திவேலர் விட்டுவைக்கவில்லை. அதுவும் அவள் அன்று அவரிடம் அப்படிப் பேசிவிட்டுப் போனதிலிருந்து இரண்டு மடங்காகக் குதித்தார்.
“துளியும் மரியாத தெரியாதவள். என்ர அனுபவமே அவளின்ர வயச விடக் கூட. ஆனா அவள், என்ர பேரனைக் கட்டுற ஐடியா இல்லையாம் எண்டு என்னட்டயே சொல்லிப்போட்டுப் போறாள். எவ்வளவு திமிர்? இந்த அவமானமும் அசிங்கமும் தேவையா பேரா உனக்கு? நீ ஆரு, உன்ர உயரம் என்ன? நீ போய்…” என்றவரை, “தாத்தா!” என்று தடுத்தான் நிலன்.
“என்னடா தாத்தா? அவளைச் சொன்னா மட்டும் கோபம் வருது உனக்கு. அவள் என்னைச் சொல்லேக்க பேசாமத்தானே நிண்டனி?” என்று காய்ந்தார் அவர்.
அவருக்குத் தையல்நாயகியையே பிடிக்காது. அவரை எழும்பவிடாது வேரோடு அழிக்க இவர் எடுத்த முயற்சிகள் பல. அப்படியிருந்தும் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழையாக வளர்ந்து நின்றிருந்தார் அவர். இன்றுவரை அதுவே அவருக்குப் பெரும் அடி. அது போதாது என்று அவர் பேத்தியும் தையல்நாயகியை இரண்டு மடங்காக வளர்த்துவைத்திருக்கிறாள்.
இதெல்லாம் போதாது என்று அவளைத்தான் மணக்கப் போகிறேன் என்று நிலன் திடீரென்று வந்து நிற்கவும் நெஞ்சுவலி வராதது ஒன்றுதான் குறை. அந்தளவில் அதிர்ந்துபோனார். ஆத்திரத்தில் அவர் வீட்டையே இரண்டாக்கியபோதும் அவன் அசரவில்லை.
“முப்பத்திரெண்டு வயசு தாத்தா எனக்கு. இப்ப வரைக்கும் உங்கள மீறி ஒரு காரியம் நான் செய்ததே இல்ல. ஆனா கலியாணம் உங்களுக்காக மட்டும் செய்யேலாது தாத்தா. எனக்குப் பிடிச்சிருக்கோணும். எனக்கு அவளத்தான் பிடிச்சிருக்கு.” என்று அவனும் தன் பிடியில் நின்றுவிட்டான். அவரின் பேரனாயிற்றே!
கெஞ்சல், கொஞ்சல், எடுத்துரைப்பு என்று அவரின் எந்தவிதமான உத்திகளும் பலிக்கவில்லை. இத்தனை காலமாக இல்லாமல் திடீரென்று எப்படி இது என்று கேட்டதற்கும் அவளைப் பிடித்திருக்கிறது என்று மட்டும்தான் சொன்னான்.
அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரே தொழில் துறையில் இருப்பவர்கள். தொழில்துறைச் சந்திப்பு, அரசாங்கமோ தனியாரோ விடும் ஏலங்கள் என்று பெரும்பாலானவற்றுக்கு அவனோடு அவரும் செல்வதுதான் வழக்கம்.
அதுவும் அவள் வருகிறாள் என்று தெரிகிற எந்த இடத்திற்கும் அவனைத் தனியே அவர் அனுப்பியதேயில்லை.
இத்தனை காலமும் அவளோடு பேச இவனும், இவனோடு பேச அவளும் முயற்சி செய்ததேயில்லை. அவரவர் அவரவர் பாட்டுக்குத்தான் இருந்திருக்கிறார்கள். அவளும் மூத்த மனிதர், இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்தவர் என்று சம்பிரதாயத்திற்கேனும் சக்திவேலரைத் தேடி வந்து பேசமாட்டாள்.
அப்படியிருக்க இந்தப் பிடித்தம் எப்படி உண்டாயிற்று என்கிற கேள்வி அவரைப் போட்டு அரித்துக்கொண்டே இருந்தது. அவளுக்கும் அவன் மீது அப்படி ஒரு எண்ணமோ என்று யோசித்துக்கொண்டிருக்க, அப்படி எதுவுமே இல்லை என்று கடை திறப்பு விழாவிற்கு வந்து காட்டிவிட்டுப் போயிருக்கிறாள் அவள்.
அதுவும் சேர்ந்து அவரை எரிச்சல் படுத்திற்று. தன் பேரன் அவளைத் தேடி தேடித் போய்ப் பேசியதும், அவள் தவிர்த்ததும் என்று அவருக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை.
இந்த விடயத்தில் ஜானகியும் தந்தையின் பக்கமே. தெரியாமல் அடித்த காற்றில் கூரையில் போய் அமர்ந்துகொள்ளும் இலையைப் போன்று, அதிர்ஷ்டவசத்தில் பணக்காரியாகி நிற்கும் அவளும், கோபுரத்தில் இருக்கும் அவர்களும் ஒன்றா என்பது போன்ற ஒரு நினைப்பு அவருக்கு.
சந்திரமதிக்கு அவளை மருமகளாக்குவதில் மிகுந்த விருப்பமே. அவர்களின் தொழிலை வீட்டின் மொத்த ஆண்களுமாகச் சேர்ந்து பார்க்க, தனியொருத்தியாய் அவர்களை எல்லாம் எதிர்த்து நிற்கும் அவள் மீது பிரமிப்பும் பெருமதிப்பும் அவருக்கு உண்டு.
பிரபாகரனுக்கு மகன் பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது மட்டுமே பிரதானமாயிருந்தது. தந்தைக்கு விருப்பமில்லை என்று தெரிந்தும் அவர்கள் வீட்டுக்குப் பெண் கேட்டுவிட்டது அவர்தான். ஆனால், அவரையுமே அவனுக்கு அவளைப் பிடித்திருப்பது உண்மைதானா என்கிற கேள்விதான் அரித்துக்கொண்டிருந்தது.
அவளோடு பேசிப் பழகி அல்லது அவள் இருக்கிற பக்கம் ஆர்வமாகப் பார்வையைத் திருப்பி என்று அவன் எதையும் செய்து அவர் பார்த்ததில்லை. இன்னுமே சொல்லப்போனால் அவளைப் போலவே அவனும் கவனமெடுத்து அவளைத் தவிர்த்ததைத்தான் கவனித்திருக்கிறார்.
இதைவிட, அவனுடைய இருபத்தி எட்டாவது வயதில் திருமணத்திற்கு பார்க்கலாமா என்று கேட்டபோது சம்மதித்திருந்தான். அப்போது இரண்டு மூன்று வரன்கள் வந்தபோது அவர்களின் புகைப்படங்களை வாங்கிப் பார்த்தும் இருக்கிறான்.
ஜானகியின் கணவர் பாலகுமரன், சக்திவேலரின் தங்கை மகன். இயல்பிலேயே அமைதியான மனிதர். இரண்டு வருடங்களுக்கு முதல், இதயச் சத்திர சிகிச்சை செய்ததிலிருந்து இன்னுமே உடைந்து அமைதியாகிப்போனார்.
சக்திவேலரின் புறுபுறுப்பு ஓய்வதாக இல்லை என்றதும் அவளோடு இன்னொரு முறை பேச முயன்றான் நிலன். அதற்கு அவள் அனுமதிக்க வேண்டுமே! கைப்பேசியில் அவனை முற்றிலுமாகத் தடை விதித்திருந்தாள்.
அவள் செய்கையில் அவனுக்கு மெல்லிய கோபம் கூட உண்டாயிற்று. அவளின் அலுவலகத்திற்கே சென்று பேசலாமா என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க, இந்தப் பக்கம் சக்திவேல் ஐயா மும்முரமாக அவனுக்குப் பெண் தேடும் வேட்டையில் இறங்கியிருந்தார்.
இப்படி இருக்கையில்தான் அன்று மதியம் அலுவலகத்தில் இருந்த இளவஞ்சிக்கு அழைத்தாள் சுவாதி.
“சொல்லு சுவாதி!” தன் முன்னே இருந்த கணனியில் தயாராகிக்கொண்டிருந்த டிசைன் ஒன்றின் மீது கவனமிருக்கச் சொன்னாள் இளவஞ்சி.
“அக்…கா… அக்கா நான் கலியாணம் கட்டப்போறன்.” அந்தப் பக்கமிருந்த சுவாதிக்கு தொண்டை உதடுகள் எல்லாமே பயத்தில் உலர்ந்துவிட, சத்தம் வருவேனா என்றிருந்தது.
“என்ன?” அப்படி ஒரு விடயத்தை இம்மியளவும் எதிர்பாராதவள், தான் கேட்டதைத்தான் அவள் சொன்னாளா என்று குழம்பி அதிர்ந்தாள்.
“இஞ்ச ரெஜிஸ்ட்டர் ஒபீஸுக்கு வந்திருக்கிறன் அக்கா, ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய.”
“என்ன சொல்லுறாய்? உனக்கு என்ன விசரா?” முதற்கட்ட அதிர்வு நீங்க, அந்த இடத்தை ஆத்திரம் பற்றிக்கொள்ளச் சீறினாள் தமக்கை.
“அக்கா சொறி அக்கா!” சுவாதி அழுதாள்.
சும்மா விளையாடுகிறாளோ என்று நினைக்க முடியாதபடிக்குச் சுவாதியின் கலங்கிய குரலும் திணறிய பேச்சும் இவளைப் பதற வைத்தன. இப்படி ஒரு சூழ்நிலையை அதுவரையில் கையாண்டிராததில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாது இவளும் கலங்கி நின்றாள்.
“செய்றதையும் செய்துபோட்டு சொறி சொல்லுவியா? அறிவிருக்காடி முதல் உனக்கு? ஆர் அவன்? வீட்டில சொல்லாமச் செய்ற அளவுக்கு என்ன அவசரம்? முதல் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்தளவு தூரத்துக்குப் போவாய்?” இதற்குள் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அலுவலக அறையை விட்டு விரைந்து வெளியே வந்து நடக்க ஆரம்பித்திருந்தாள்.
இவளைக் கண்டுவிட்டு ஓடி வந்தான் விசாகன்.
‘காரை எடு!’ என்று அவனிடம் சைகையில் சொல்லிவிட்டு, “சொல்லு! ஆர் அவன்? ஒருத்தருக்கும் தெரியாம கலியாணம் கட்டுற அளவுக்கு அப்பிடி என்ன அவசரம் உங்களுக்கு?” என்று சீறினாள்.
அடுத்த மூன்று மாதங்கள் எப்படி என்றில்லாமல் ஓடிப்போயிருந்தன. அன்று நிலனின் கடை திறப்பு விழாவிற்குச் சென்று வந்தவளிடத்தில் அங்கே என்ன பேசினார்கள் என்று கேட்கும் தைரியம் அவள் வீட்டினருக்கு இல்லை.
ஆனால், பனங்காயை மொய்க்கும் ஈயைப் போன்று, அவளாக ஏதாவது சொல்வாளா என்று அவள் முகத்தை முகத்தைப் பார்த்து ஏமாந்துபோனதுதான் மிச்சம்.
அவர்கள் பக்கமிருந்தும் எந்தச் சத்தமுமில்லை. இந்தப் பெண் எதையாவது ஏடாகூடமாகப் பேசிவிட்டாளா என்று கலங்கினார் குணாளன்.
அங்கே நிலனையும் சக்திவேலர் விட்டுவைக்கவில்லை. அதுவும் அவள் அன்று அவரிடம் அப்படிப் பேசிவிட்டுப் போனதிலிருந்து இரண்டு மடங்காகக் குதித்தார்.
“துளியும் மரியாத தெரியாதவள். என்ர அனுபவமே அவளின்ர வயச விடக் கூட. ஆனா அவள், என்ர பேரனைக் கட்டுற ஐடியா இல்லையாம் எண்டு என்னட்டயே சொல்லிப்போட்டுப் போறாள். எவ்வளவு திமிர்? இந்த அவமானமும் அசிங்கமும் தேவையா பேரா உனக்கு? நீ ஆரு, உன்ர உயரம் என்ன? நீ போய்…” என்றவரை, “தாத்தா!” என்று தடுத்தான் நிலன்.
“என்னடா தாத்தா? அவளைச் சொன்னா மட்டும் கோபம் வருது உனக்கு. அவள் என்னைச் சொல்லேக்க பேசாமத்தானே நிண்டனி?” என்று காய்ந்தார் அவர்.
அவருக்குத் தையல்நாயகியையே பிடிக்காது. அவரை எழும்பவிடாது வேரோடு அழிக்க இவர் எடுத்த முயற்சிகள் பல. அப்படியிருந்தும் வெட்ட வெட்டத் தழைக்கும் வாழையாக வளர்ந்து நின்றிருந்தார் அவர். இன்றுவரை அதுவே அவருக்குப் பெரும் அடி. அது போதாது என்று அவர் பேத்தியும் தையல்நாயகியை இரண்டு மடங்காக வளர்த்துவைத்திருக்கிறாள்.
இதெல்லாம் போதாது என்று அவளைத்தான் மணக்கப் போகிறேன் என்று நிலன் திடீரென்று வந்து நிற்கவும் நெஞ்சுவலி வராதது ஒன்றுதான் குறை. அந்தளவில் அதிர்ந்துபோனார். ஆத்திரத்தில் அவர் வீட்டையே இரண்டாக்கியபோதும் அவன் அசரவில்லை.
“முப்பத்திரெண்டு வயசு தாத்தா எனக்கு. இப்ப வரைக்கும் உங்கள மீறி ஒரு காரியம் நான் செய்ததே இல்ல. ஆனா கலியாணம் உங்களுக்காக மட்டும் செய்யேலாது தாத்தா. எனக்குப் பிடிச்சிருக்கோணும். எனக்கு அவளத்தான் பிடிச்சிருக்கு.” என்று அவனும் தன் பிடியில் நின்றுவிட்டான். அவரின் பேரனாயிற்றே!
கெஞ்சல், கொஞ்சல், எடுத்துரைப்பு என்று அவரின் எந்தவிதமான உத்திகளும் பலிக்கவில்லை. இத்தனை காலமாக இல்லாமல் திடீரென்று எப்படி இது என்று கேட்டதற்கும் அவளைப் பிடித்திருக்கிறது என்று மட்டும்தான் சொன்னான்.
அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரே தொழில் துறையில் இருப்பவர்கள். தொழில்துறைச் சந்திப்பு, அரசாங்கமோ தனியாரோ விடும் ஏலங்கள் என்று பெரும்பாலானவற்றுக்கு அவனோடு அவரும் செல்வதுதான் வழக்கம்.
அதுவும் அவள் வருகிறாள் என்று தெரிகிற எந்த இடத்திற்கும் அவனைத் தனியே அவர் அனுப்பியதேயில்லை.
இத்தனை காலமும் அவளோடு பேச இவனும், இவனோடு பேச அவளும் முயற்சி செய்ததேயில்லை. அவரவர் அவரவர் பாட்டுக்குத்தான் இருந்திருக்கிறார்கள். அவளும் மூத்த மனிதர், இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்தவர் என்று சம்பிரதாயத்திற்கேனும் சக்திவேலரைத் தேடி வந்து பேசமாட்டாள்.
அப்படியிருக்க இந்தப் பிடித்தம் எப்படி உண்டாயிற்று என்கிற கேள்வி அவரைப் போட்டு அரித்துக்கொண்டே இருந்தது. அவளுக்கும் அவன் மீது அப்படி ஒரு எண்ணமோ என்று யோசித்துக்கொண்டிருக்க, அப்படி எதுவுமே இல்லை என்று கடை திறப்பு விழாவிற்கு வந்து காட்டிவிட்டுப் போயிருக்கிறாள் அவள்.
அதுவும் சேர்ந்து அவரை எரிச்சல் படுத்திற்று. தன் பேரன் அவளைத் தேடி தேடித் போய்ப் பேசியதும், அவள் தவிர்த்ததும் என்று அவருக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை.
இந்த விடயத்தில் ஜானகியும் தந்தையின் பக்கமே. தெரியாமல் அடித்த காற்றில் கூரையில் போய் அமர்ந்துகொள்ளும் இலையைப் போன்று, அதிர்ஷ்டவசத்தில் பணக்காரியாகி நிற்கும் அவளும், கோபுரத்தில் இருக்கும் அவர்களும் ஒன்றா என்பது போன்ற ஒரு நினைப்பு அவருக்கு.
சந்திரமதிக்கு அவளை மருமகளாக்குவதில் மிகுந்த விருப்பமே. அவர்களின் தொழிலை வீட்டின் மொத்த ஆண்களுமாகச் சேர்ந்து பார்க்க, தனியொருத்தியாய் அவர்களை எல்லாம் எதிர்த்து நிற்கும் அவள் மீது பிரமிப்பும் பெருமதிப்பும் அவருக்கு உண்டு.
பிரபாகரனுக்கு மகன் பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது மட்டுமே பிரதானமாயிருந்தது. தந்தைக்கு விருப்பமில்லை என்று தெரிந்தும் அவர்கள் வீட்டுக்குப் பெண் கேட்டுவிட்டது அவர்தான். ஆனால், அவரையுமே அவனுக்கு அவளைப் பிடித்திருப்பது உண்மைதானா என்கிற கேள்விதான் அரித்துக்கொண்டிருந்தது.
அவளோடு பேசிப் பழகி அல்லது அவள் இருக்கிற பக்கம் ஆர்வமாகப் பார்வையைத் திருப்பி என்று அவன் எதையும் செய்து அவர் பார்த்ததில்லை. இன்னுமே சொல்லப்போனால் அவளைப் போலவே அவனும் கவனமெடுத்து அவளைத் தவிர்த்ததைத்தான் கவனித்திருக்கிறார்.
இதைவிட, அவனுடைய இருபத்தி எட்டாவது வயதில் திருமணத்திற்கு பார்க்கலாமா என்று கேட்டபோது சம்மதித்திருந்தான். அப்போது இரண்டு மூன்று வரன்கள் வந்தபோது அவர்களின் புகைப்படங்களை வாங்கிப் பார்த்தும் இருக்கிறான்.
ஜானகியின் கணவர் பாலகுமரன், சக்திவேலரின் தங்கை மகன். இயல்பிலேயே அமைதியான மனிதர். இரண்டு வருடங்களுக்கு முதல், இதயச் சத்திர சிகிச்சை செய்ததிலிருந்து இன்னுமே உடைந்து அமைதியாகிப்போனார்.
சக்திவேலரின் புறுபுறுப்பு ஓய்வதாக இல்லை என்றதும் அவளோடு இன்னொரு முறை பேச முயன்றான் நிலன். அதற்கு அவள் அனுமதிக்க வேண்டுமே! கைப்பேசியில் அவனை முற்றிலுமாகத் தடை விதித்திருந்தாள்.
அவள் செய்கையில் அவனுக்கு மெல்லிய கோபம் கூட உண்டாயிற்று. அவளின் அலுவலகத்திற்கே சென்று பேசலாமா என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க, இந்தப் பக்கம் சக்திவேல் ஐயா மும்முரமாக அவனுக்குப் பெண் தேடும் வேட்டையில் இறங்கியிருந்தார்.
இப்படி இருக்கையில்தான் அன்று மதியம் அலுவலகத்தில் இருந்த இளவஞ்சிக்கு அழைத்தாள் சுவாதி.
“சொல்லு சுவாதி!” தன் முன்னே இருந்த கணனியில் தயாராகிக்கொண்டிருந்த டிசைன் ஒன்றின் மீது கவனமிருக்கச் சொன்னாள் இளவஞ்சி.
“அக்…கா… அக்கா நான் கலியாணம் கட்டப்போறன்.” அந்தப் பக்கமிருந்த சுவாதிக்கு தொண்டை உதடுகள் எல்லாமே பயத்தில் உலர்ந்துவிட, சத்தம் வருவேனா என்றிருந்தது.
“என்ன?” அப்படி ஒரு விடயத்தை இம்மியளவும் எதிர்பாராதவள், தான் கேட்டதைத்தான் அவள் சொன்னாளா என்று குழம்பி அதிர்ந்தாள்.
“இஞ்ச ரெஜிஸ்ட்டர் ஒபீஸுக்கு வந்திருக்கிறன் அக்கா, ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய.”
“என்ன சொல்லுறாய்? உனக்கு என்ன விசரா?” முதற்கட்ட அதிர்வு நீங்க, அந்த இடத்தை ஆத்திரம் பற்றிக்கொள்ளச் சீறினாள் தமக்கை.
“அக்கா சொறி அக்கா!” சுவாதி அழுதாள்.
சும்மா விளையாடுகிறாளோ என்று நினைக்க முடியாதபடிக்குச் சுவாதியின் கலங்கிய குரலும் திணறிய பேச்சும் இவளைப் பதற வைத்தன. இப்படி ஒரு சூழ்நிலையை அதுவரையில் கையாண்டிராததில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாது இவளும் கலங்கி நின்றாள்.
“செய்றதையும் செய்துபோட்டு சொறி சொல்லுவியா? அறிவிருக்காடி முதல் உனக்கு? ஆர் அவன்? வீட்டில சொல்லாமச் செய்ற அளவுக்கு என்ன அவசரம்? முதல் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்தளவு தூரத்துக்குப் போவாய்?” இதற்குள் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அலுவலக அறையை விட்டு விரைந்து வெளியே வந்து நடக்க ஆரம்பித்திருந்தாள்.
இவளைக் கண்டுவிட்டு ஓடி வந்தான் விசாகன்.
‘காரை எடு!’ என்று அவனிடம் சைகையில் சொல்லிவிட்டு, “சொல்லு! ஆர் அவன்? ஒருத்தருக்கும் தெரியாம கலியாணம் கட்டுற அளவுக்கு அப்பிடி என்ன அவசரம் உங்களுக்கு?” என்று சீறினாள்.
Last edited: