அத்தியாயம் 28
அங்கே நின்றிருந்த விக்ரமை கண்டதும் அவளின் நடை அப்படியே நின்றுபோனது.
அதுவரை நேரமும் பிள்ளைகள் மீதான பாசத்தில் தளும்பிய மனம் முழுவதிலும் அவனது ஆடசி ஆரம்பிக்க, அவனிடமிருந்து பார்வையை விலக்கமுடியாமல் நின்றாள் யாமினி.
அவனோ கைகளை விரித்துக் கண்களால் அழைத்தான். எப்போதுமே அப்படி அவன் அழைத்துவிட்டால் அடுத்த நொடியே அந்தக் கைகளுக்குள் சரண் புகுந்துவிடுவதுதான் அவளின் இயல்பு!
இன்றோ முடியவில்லை!
கால்கள் நகர்வேனா என்றது. நெஞ்சமோ அவனிடம் ஓடு ஓடு என்று உந்தியது. அந்தக் கைகளுக்குள் புகுந்து, மார்புக்குள் ஒளிந்து, அவன் தரும் இன்பங்களை எல்லாம் அனுபவித்துவிடச் சொல்லி உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்தாலும் நின்ற இடத்தைவிட்டு அசைய முடியவில்லை அவளால்!
மெல்ல அவனின் கால்கள் அவளை நோக்கி முன்னேறின. அது கருத்தில் பதிந்தாலும் காதலோடு கலந்துவிட்ட விழிகளின் கட்டுப்பாட்டில் சிலையாக நின்றிருந்தாள் யாமினி.
அவளை நெருங்கி, சிற்றிடையை வளைத்தகரம் தன்னோடு அவளை அணைத்துக்கொண்டபோது, அதற்காகவே அன்றய நாள் முழுவதும் தவியாய்த் தவித்தவள் அவன் கைகளில் துவண்டுபோனாள்.
சின்னச் செவ்விதழ்களோடு சேர்ந்துவிட்டுப் பிரிந்த உதடுகள், “உனக்கும் விருப்பம் தானேடா?” என்று அவளின் காதோரமாகக் கிசகிசுத்தபோது, அதற்குமேலும் தாளமாட்டாமல் அவன் தோளில் முகம் புதைத்துத் தன்னை முற்றிலுமாக அவனிடம் கொடுத்தே விட்டாள் யாமினி.
அதற்காகவே அத்தனை நாட்களாகக் காத்திருந்தவன், தன்னவளை அப்படியே அள்ளிக்கொண்டான். அடுத்த அறையின் மஞ்சத்தில் கிடத்தி, தன் தேவைகளை அவளிடம் தேடத் துவங்கினான்.
கணவனின் சின்னச் சின்னச் சீண்டல்களிலேயே துடித்துப் போகிறவள் யாமினி. இன்று தடைகளற்று அவளின் பெண்மைக்குள் அவன் பயணித்தபோது, முற்றிலுமாகத் தன்னை மறந்தாள்.
அவனது விரல்களும் இதழ்களும் மெல்ல மெல்ல எல்லைகளை மீறி, ஈருடலாய் இருந்தவர் ஓருடலாய் மாறும் வேளையில் கூசிச் சிலிர்த்தவளை, மீளமுடியாத மயக்கத்தில் இருந்தாலும் மெல்லிய அதிர்வோடு விக்ரம் பார்த்ததை அவள் உணரவில்லை. உணரும் நிலையில் அவள் இல்லை. அவனின் சிருங்காரச் சேட்டைகள் இந்த உலகத்தையே மறக்க வைத்துவிட்டதில் அவன் கைகளில் கரைந்து காணாமலேயே போயிருந்தாள் யாமினி.
அதுநாள் வரை தன் நினைவுகளில் நீக்கமற நிறைந்திருந்தவளை தன் உயிரிலும் ஊனிலும் நிரப்பிக்கொண்டான் விக்ரம். எத்தனையோ நாட்களாய்க் காத்திருந்த காதல்.. தாம்பத்யம் எனும் சொர்க்கவாசலைத் திறந்து வைத்ததில், அங்கே காமன் கச்சேரி முடிவின்றிக் களைகட்டியது!
அடுத்தநாள் காலை சுகமான அயர்ச்சியோடு கண்விழித்தாள் யாமினி. விழித்ததும் கண்டது அவளை அணைத்துக்கொண்டு அயர்ந்து உறங்கும் கணவனின் முகமே. சற்று நேரம் ஆசையோடு அந்த முகத்தை ரசித்துவிட்டு மெல்ல எழுந்து வந்தாள்.
பிள்ளைகளை எட்டிப்பார்க்க, இருவரும் இன்னுமே நல்ல உறக்கத்தில் இருந்தனர். உடலையும் மனதையும் ஆக்கிரமித்திருந்த சந்தோசத்தோடு குளித்துவிட்டு வந்து ஒரு தேநீரை ஊற்றிக்கொண்டு பால்கனியில் சென்று அமர்ந்துகொண்டாள்.
அவள் அமர்ந்திருந்தது இருவர் அமரக்கூடிய வகையிலான ஒரு பெஞ்ச். அதன் கைப்பிடியில் சாய்ந்து, கால்களைத் தூக்கி பெஞ்சிலேயே வைத்துக்கொண்டாள். அணிந்திருந்த முழுநீள பாவாடையால் சில்லென்று தாக்கிய குளிரைத் தடுக்கக் கால்களை மூடிக்கொண்டாள். இரண்டு கைகளாலும் பற்றியிருந்த தேநீர் கப் அவளின் முழங்கால்களில் வீற்றிருக்க, சில்லிடும் அந்த இனிமையான பொழுதுக்கு இதமாகத் தொண்டையை நனைத்துக்கொண்டு இறங்கியது சூடான தேநீர்.
அழகான காலைப்பொழுது! நம்மூராக இருந்திருக்கச் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கியிருப்பான். இங்கோ இன்னும் பனிமூட்டங்கள் விலகாமல் பரவிக்கிடக்க, சூரியக்கதிர்கள் மெல்ல மெல்ல எங்கிருந்தோ ஊடுருவத் தொடங்கியிருந்தது.
ஓங்கி வளர்ந்த மரங்கள். அவற்றைத் தழுவியிருந்த பனிப்புகார்கள். அசைந்தாடிய காற்று. அன்றலர்ந்த முகமும் கனவுகளைச் சுமந்த விழிகளுமாகச் சிற்பமென அவள்!
அவளின் நினைவுகளோ முந்தய இரவையே சுற்றிச் சுழன்றது. வெட்கமின்றிக் காதோரம் அவன் பேசிய பேச்சுக்களும், அவளைச் சீண்டிச் சிணுங்க வைத்த செய்கைகளும், அவள் போட்ட தடைகளைக் கெஞ்சிக் கொஞ்சி அவன் உடைத்ததும் என்று மீண்டும் மீண்டும் மனம் அவர்களின் சங்கமத்திலேயே மூழ்கிக் கழிக்க, அவளுக்கே அவளின் நினைவுகளை எண்ணி வெட்கமாய்ப் போயிற்று!
‘யாமினி! வரவர வெக்கமே இல்லாம போகுது உனக்கு!’ என்று உள்நெஞ்சு எடுத்துச் சொன்னாலும் கேட்டால் தானே!
நினைவுகள் அங்கேயே நிற்க, அதன் தவிப்புத் தாளமாட்டாமல் கீழுதட்டை கடித்தவள் மெல்லத் தன் விரல்களைத் தடவிப் பார்த்தாள். அங்கே அன்று காலையில் அவள் அணிந்துகொண்ட ‘விக்ரமின் யாமினி’ அவளின் நடு விரலை இதமாகப் பற்றியிருந்தது. அன்று எண்ணியது போலவே இன்று அவள் முழுமையாக விக்ரமின் யாமினியாக மாறியே போனாளே!
அவளின் இதயம் போற்றும் தலைவனின் நாயகி அவள்!
நெஞ்சில் நினைவுகள் இனித்துக்கொண்டு இறங்க, இன்று எப்படியாவது அவன் விரலுக்கு அதைப் பரிசளித்துவிட வேண்டும்!!
முடியுமா?
அதுவும் அவளைக் கட்டிப்போடும் அந்தக் கண்களைச் சந்தித்துக்கொண்டே!
கட்டாயம் முடியவேண்டும்! அவன் மீது அளவற்ற நேசம் கொண்டுவிட்ட நெஞ்சு அவளுக்கு ஆணை பிறப்பித்தது!
அப்போது அருகே வந்து அமர்ந்தான் விக்ரம்.
இன்னுமே தடுமாறிப் போனாள் யாமினி. அதுவும் கள்ளுண்ட வண்டாய் முந்தைய நாளின் மயக்கம் தீராது அவளை விழுங்கிய விழிகளை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை.
மனைவியைப் பார்த்தவனின் இதழ்களிலோ புன்சிரிப்பு! “என்ன மேடம், ஒருக்கா நிமிந்து என்னைக் கண்ணால பாக்கிறது..” என்றான் உல்லாசமாக.
செவ்வானமாகவே மாறிவிட்ட முகத்தோடு அவள் விழிகளைத் தாழ்த்த, “என்னட்ட என்ன வெக்கம்?” ஆசையோடு அணைத்து இதழில் அழுத்தமாக முத்தம் பதித்தான் விக்ரம்!
மனம் மயங்க சுகமாக அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் யாமினி. அவனின் கரத்தை மெல்லப் பற்ற வசீகரச் சிரிப்புடன் பார்த்தான் அவன். மெல்லத் தன் விரலில் கிடந்த மோதிரத்தைக் கழற்றி அவன் விரலுக்குப் போட்டுவிட்டாள்.
“ஹே! என்ன இது?” ஆச்சரியமாகக் கையை உயர்த்திப் பார்த்துக் கேட்டான் அவன்.
“உங்கட பிறந்தநாளுக்கு வாங்கினான். பிடிச்சிருக்கா?” கண்களில் நாணம் மின்னினாலும் ஆவலோடு கேட்டாள்.
அதிலிருந்த ‘வி’யும் அதற்குள் கொடியெனப் படர்ந்திருந்த ‘வை’யும் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்து மனைவியின் மனதை அவனுக்குச் சொல்லிற்று! அழகாகப் புன்னகைத்தான்.
“பிடிக்காம இருக்குமா? அதுவும், இந்த யாமினி இந்த விக்ரமுக்குத்தான் சொந்தம் எண்டு சொல்லித் தந்த மோதிரம் எல்லா.” என்றான் குறும்போடு கண்ணடித்து.
“அதுசரி இதை ஏன் அண்டைக்குத் தரேல்ல? இதைவிட அண்டைக்குத் தந்த பரிசுதான் உனக்குத் தரோணும் மாதிரி இருந்ததா?” என்று வேண்டுமென்றே கேட்டான் அவன்.
“ஐயோ.. இல்ல!” என்று ஆரம்பித்தவள் அவன் விழிகளில் தெரிந்த சிரிப்பில், “நீங்க ஆக மோசம்!” என்றபடி அவன்மார்பில் முகத்தை மறைத்துக்கொண்டாள்.
அவனோ கணவனாகப் பல தண்டனைகளை ஆசையும் ஆவலுமாக வழங்கி அவளைச் செங்கொழுந்தாகச் சிவக்க வைத்தான்.
“அப்படியே நீ என்னைக் காதலிக்கிறதையும் டொச்சில் சொல்லு.” என்றான் அவன்.
“நான் மாட்டன்!” என்று அவசரமாக மறுத்தாள் யாமினி.
மோதிரத்தைப் போட்டுவிட்டு பரிசாக அவள் வாங்கிக்கொண்டவைகளே போதும்!
அவனோ, “சொல்லாம விடமாட்டன்.” என்று அதற்கும் பல தண்டனைகள் தன் இதழ்களால் கொடுத்தான்.
அவனது கைகள் வேறு அவளின் பொன்மேனியில் விளையாடத் தொடங்கியது.
“அப்..பா! ப்ளீஸ்…!” என்று சிணுங்கியவள் மேனி அவன் தேடல்களுக்கு இசைந்துகொடுக்கத் தொடங்கிற்று!
இப்படி வெட்கமற்று அவனின் இழுப்புக்கு இசைகிறோமே என்று அவள் வெட்க, அவனோ, “சொன்னா விடுவன்!” என்று இன்னுமே தாபத்தோடு அவளை அணைத்தான்.
“சொன்னாலும் விடமாட்டீங்க.” என்றாள் அவள், அவனை அறிந்தவளாக.
அதைச் சொல்வதற்குள் அவள் பட்டுவிட்ட பாட்டைக்கண்டு உல்லாசமாகச் சிரித்தான் விக்ரம். செய்வதையும் செய்துவிட்டுச் சிரிப்பு வேறா என்று அவள் முறைக்க, அவளின் காதோரமாகக் குனிந்து, “ரொம்பவே வதைக்கிறேனா?” என்றான் சின்னச் சிரிப்போடு.
அங்கே நின்றிருந்த விக்ரமை கண்டதும் அவளின் நடை அப்படியே நின்றுபோனது.
அதுவரை நேரமும் பிள்ளைகள் மீதான பாசத்தில் தளும்பிய மனம் முழுவதிலும் அவனது ஆடசி ஆரம்பிக்க, அவனிடமிருந்து பார்வையை விலக்கமுடியாமல் நின்றாள் யாமினி.
அவனோ கைகளை விரித்துக் கண்களால் அழைத்தான். எப்போதுமே அப்படி அவன் அழைத்துவிட்டால் அடுத்த நொடியே அந்தக் கைகளுக்குள் சரண் புகுந்துவிடுவதுதான் அவளின் இயல்பு!
இன்றோ முடியவில்லை!
கால்கள் நகர்வேனா என்றது. நெஞ்சமோ அவனிடம் ஓடு ஓடு என்று உந்தியது. அந்தக் கைகளுக்குள் புகுந்து, மார்புக்குள் ஒளிந்து, அவன் தரும் இன்பங்களை எல்லாம் அனுபவித்துவிடச் சொல்லி உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்தாலும் நின்ற இடத்தைவிட்டு அசைய முடியவில்லை அவளால்!
மெல்ல அவனின் கால்கள் அவளை நோக்கி முன்னேறின. அது கருத்தில் பதிந்தாலும் காதலோடு கலந்துவிட்ட விழிகளின் கட்டுப்பாட்டில் சிலையாக நின்றிருந்தாள் யாமினி.
அவளை நெருங்கி, சிற்றிடையை வளைத்தகரம் தன்னோடு அவளை அணைத்துக்கொண்டபோது, அதற்காகவே அன்றய நாள் முழுவதும் தவியாய்த் தவித்தவள் அவன் கைகளில் துவண்டுபோனாள்.
சின்னச் செவ்விதழ்களோடு சேர்ந்துவிட்டுப் பிரிந்த உதடுகள், “உனக்கும் விருப்பம் தானேடா?” என்று அவளின் காதோரமாகக் கிசகிசுத்தபோது, அதற்குமேலும் தாளமாட்டாமல் அவன் தோளில் முகம் புதைத்துத் தன்னை முற்றிலுமாக அவனிடம் கொடுத்தே விட்டாள் யாமினி.
அதற்காகவே அத்தனை நாட்களாகக் காத்திருந்தவன், தன்னவளை அப்படியே அள்ளிக்கொண்டான். அடுத்த அறையின் மஞ்சத்தில் கிடத்தி, தன் தேவைகளை அவளிடம் தேடத் துவங்கினான்.
கணவனின் சின்னச் சின்னச் சீண்டல்களிலேயே துடித்துப் போகிறவள் யாமினி. இன்று தடைகளற்று அவளின் பெண்மைக்குள் அவன் பயணித்தபோது, முற்றிலுமாகத் தன்னை மறந்தாள்.
அவனது விரல்களும் இதழ்களும் மெல்ல மெல்ல எல்லைகளை மீறி, ஈருடலாய் இருந்தவர் ஓருடலாய் மாறும் வேளையில் கூசிச் சிலிர்த்தவளை, மீளமுடியாத மயக்கத்தில் இருந்தாலும் மெல்லிய அதிர்வோடு விக்ரம் பார்த்ததை அவள் உணரவில்லை. உணரும் நிலையில் அவள் இல்லை. அவனின் சிருங்காரச் சேட்டைகள் இந்த உலகத்தையே மறக்க வைத்துவிட்டதில் அவன் கைகளில் கரைந்து காணாமலேயே போயிருந்தாள் யாமினி.
அதுநாள் வரை தன் நினைவுகளில் நீக்கமற நிறைந்திருந்தவளை தன் உயிரிலும் ஊனிலும் நிரப்பிக்கொண்டான் விக்ரம். எத்தனையோ நாட்களாய்க் காத்திருந்த காதல்.. தாம்பத்யம் எனும் சொர்க்கவாசலைத் திறந்து வைத்ததில், அங்கே காமன் கச்சேரி முடிவின்றிக் களைகட்டியது!
அடுத்தநாள் காலை சுகமான அயர்ச்சியோடு கண்விழித்தாள் யாமினி. விழித்ததும் கண்டது அவளை அணைத்துக்கொண்டு அயர்ந்து உறங்கும் கணவனின் முகமே. சற்று நேரம் ஆசையோடு அந்த முகத்தை ரசித்துவிட்டு மெல்ல எழுந்து வந்தாள்.
பிள்ளைகளை எட்டிப்பார்க்க, இருவரும் இன்னுமே நல்ல உறக்கத்தில் இருந்தனர். உடலையும் மனதையும் ஆக்கிரமித்திருந்த சந்தோசத்தோடு குளித்துவிட்டு வந்து ஒரு தேநீரை ஊற்றிக்கொண்டு பால்கனியில் சென்று அமர்ந்துகொண்டாள்.
அவள் அமர்ந்திருந்தது இருவர் அமரக்கூடிய வகையிலான ஒரு பெஞ்ச். அதன் கைப்பிடியில் சாய்ந்து, கால்களைத் தூக்கி பெஞ்சிலேயே வைத்துக்கொண்டாள். அணிந்திருந்த முழுநீள பாவாடையால் சில்லென்று தாக்கிய குளிரைத் தடுக்கக் கால்களை மூடிக்கொண்டாள். இரண்டு கைகளாலும் பற்றியிருந்த தேநீர் கப் அவளின் முழங்கால்களில் வீற்றிருக்க, சில்லிடும் அந்த இனிமையான பொழுதுக்கு இதமாகத் தொண்டையை நனைத்துக்கொண்டு இறங்கியது சூடான தேநீர்.
அழகான காலைப்பொழுது! நம்மூராக இருந்திருக்கச் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கியிருப்பான். இங்கோ இன்னும் பனிமூட்டங்கள் விலகாமல் பரவிக்கிடக்க, சூரியக்கதிர்கள் மெல்ல மெல்ல எங்கிருந்தோ ஊடுருவத் தொடங்கியிருந்தது.
ஓங்கி வளர்ந்த மரங்கள். அவற்றைத் தழுவியிருந்த பனிப்புகார்கள். அசைந்தாடிய காற்று. அன்றலர்ந்த முகமும் கனவுகளைச் சுமந்த விழிகளுமாகச் சிற்பமென அவள்!
அவளின் நினைவுகளோ முந்தய இரவையே சுற்றிச் சுழன்றது. வெட்கமின்றிக் காதோரம் அவன் பேசிய பேச்சுக்களும், அவளைச் சீண்டிச் சிணுங்க வைத்த செய்கைகளும், அவள் போட்ட தடைகளைக் கெஞ்சிக் கொஞ்சி அவன் உடைத்ததும் என்று மீண்டும் மீண்டும் மனம் அவர்களின் சங்கமத்திலேயே மூழ்கிக் கழிக்க, அவளுக்கே அவளின் நினைவுகளை எண்ணி வெட்கமாய்ப் போயிற்று!
‘யாமினி! வரவர வெக்கமே இல்லாம போகுது உனக்கு!’ என்று உள்நெஞ்சு எடுத்துச் சொன்னாலும் கேட்டால் தானே!
நினைவுகள் அங்கேயே நிற்க, அதன் தவிப்புத் தாளமாட்டாமல் கீழுதட்டை கடித்தவள் மெல்லத் தன் விரல்களைத் தடவிப் பார்த்தாள். அங்கே அன்று காலையில் அவள் அணிந்துகொண்ட ‘விக்ரமின் யாமினி’ அவளின் நடு விரலை இதமாகப் பற்றியிருந்தது. அன்று எண்ணியது போலவே இன்று அவள் முழுமையாக விக்ரமின் யாமினியாக மாறியே போனாளே!
அவளின் இதயம் போற்றும் தலைவனின் நாயகி அவள்!
நெஞ்சில் நினைவுகள் இனித்துக்கொண்டு இறங்க, இன்று எப்படியாவது அவன் விரலுக்கு அதைப் பரிசளித்துவிட வேண்டும்!!
முடியுமா?
அதுவும் அவளைக் கட்டிப்போடும் அந்தக் கண்களைச் சந்தித்துக்கொண்டே!
கட்டாயம் முடியவேண்டும்! அவன் மீது அளவற்ற நேசம் கொண்டுவிட்ட நெஞ்சு அவளுக்கு ஆணை பிறப்பித்தது!
அப்போது அருகே வந்து அமர்ந்தான் விக்ரம்.
இன்னுமே தடுமாறிப் போனாள் யாமினி. அதுவும் கள்ளுண்ட வண்டாய் முந்தைய நாளின் மயக்கம் தீராது அவளை விழுங்கிய விழிகளை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை.
மனைவியைப் பார்த்தவனின் இதழ்களிலோ புன்சிரிப்பு! “என்ன மேடம், ஒருக்கா நிமிந்து என்னைக் கண்ணால பாக்கிறது..” என்றான் உல்லாசமாக.
செவ்வானமாகவே மாறிவிட்ட முகத்தோடு அவள் விழிகளைத் தாழ்த்த, “என்னட்ட என்ன வெக்கம்?” ஆசையோடு அணைத்து இதழில் அழுத்தமாக முத்தம் பதித்தான் விக்ரம்!
மனம் மயங்க சுகமாக அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் யாமினி. அவனின் கரத்தை மெல்லப் பற்ற வசீகரச் சிரிப்புடன் பார்த்தான் அவன். மெல்லத் தன் விரலில் கிடந்த மோதிரத்தைக் கழற்றி அவன் விரலுக்குப் போட்டுவிட்டாள்.
“ஹே! என்ன இது?” ஆச்சரியமாகக் கையை உயர்த்திப் பார்த்துக் கேட்டான் அவன்.
“உங்கட பிறந்தநாளுக்கு வாங்கினான். பிடிச்சிருக்கா?” கண்களில் நாணம் மின்னினாலும் ஆவலோடு கேட்டாள்.
அதிலிருந்த ‘வி’யும் அதற்குள் கொடியெனப் படர்ந்திருந்த ‘வை’யும் ஒன்றோடு ஒன்று இணைந்திருந்து மனைவியின் மனதை அவனுக்குச் சொல்லிற்று! அழகாகப் புன்னகைத்தான்.
“பிடிக்காம இருக்குமா? அதுவும், இந்த யாமினி இந்த விக்ரமுக்குத்தான் சொந்தம் எண்டு சொல்லித் தந்த மோதிரம் எல்லா.” என்றான் குறும்போடு கண்ணடித்து.
“அதுசரி இதை ஏன் அண்டைக்குத் தரேல்ல? இதைவிட அண்டைக்குத் தந்த பரிசுதான் உனக்குத் தரோணும் மாதிரி இருந்ததா?” என்று வேண்டுமென்றே கேட்டான் அவன்.
“ஐயோ.. இல்ல!” என்று ஆரம்பித்தவள் அவன் விழிகளில் தெரிந்த சிரிப்பில், “நீங்க ஆக மோசம்!” என்றபடி அவன்மார்பில் முகத்தை மறைத்துக்கொண்டாள்.
அவனோ கணவனாகப் பல தண்டனைகளை ஆசையும் ஆவலுமாக வழங்கி அவளைச் செங்கொழுந்தாகச் சிவக்க வைத்தான்.
“அப்படியே நீ என்னைக் காதலிக்கிறதையும் டொச்சில் சொல்லு.” என்றான் அவன்.
“நான் மாட்டன்!” என்று அவசரமாக மறுத்தாள் யாமினி.
மோதிரத்தைப் போட்டுவிட்டு பரிசாக அவள் வாங்கிக்கொண்டவைகளே போதும்!
அவனோ, “சொல்லாம விடமாட்டன்.” என்று அதற்கும் பல தண்டனைகள் தன் இதழ்களால் கொடுத்தான்.
அவனது கைகள் வேறு அவளின் பொன்மேனியில் விளையாடத் தொடங்கியது.
“அப்..பா! ப்ளீஸ்…!” என்று சிணுங்கியவள் மேனி அவன் தேடல்களுக்கு இசைந்துகொடுக்கத் தொடங்கிற்று!
இப்படி வெட்கமற்று அவனின் இழுப்புக்கு இசைகிறோமே என்று அவள் வெட்க, அவனோ, “சொன்னா விடுவன்!” என்று இன்னுமே தாபத்தோடு அவளை அணைத்தான்.
“சொன்னாலும் விடமாட்டீங்க.” என்றாள் அவள், அவனை அறிந்தவளாக.
அதைச் சொல்வதற்குள் அவள் பட்டுவிட்ட பாட்டைக்கண்டு உல்லாசமாகச் சிரித்தான் விக்ரம். செய்வதையும் செய்துவிட்டுச் சிரிப்பு வேறா என்று அவள் முறைக்க, அவளின் காதோரமாகக் குனிந்து, “ரொம்பவே வதைக்கிறேனா?” என்றான் சின்னச் சிரிப்போடு.