“இல்ல! எனக்காக! நீ எனக்கும் வேணும் எண்டுறதுக்காக!”
அவள் தலை ஒருவித அவசரத்துடன் மறுப்பாய் அசைந்தது. “இல்ல! நான் நம்ப மாட்டன். நீங்க அப்பிடி இல்ல. எனக்குத் தெரியும். முதல் என்னால சத்தியமா இது ஏலாது. இதுக்கு நீங்க என்னைக் கொண்டே போடலாம்.” என்றதும் கொதித்துப் போனான் அவன்.
“கொல்லுறதுக்காடி உன்னோட கிடந்து சாகிறன்?” ஓரெட்டில் அவள் முன்னால் வந்து நின்று சீறியவனைக் கண்டு, அவளுக்கு ஒரு கணம் இதயத் துடிப்பே நின்று போயிற்று. விழிகள் இரண்டும் வெளியே வந்துவிடும் அளவுக்கு விரிந்து போயின. மூச்சு விடக்கூட மறந்தவளாக அவனையே பார்த்து நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.
“உன்னில எனக்குப் பாசம், அக்கறை எல்லாம் இருக்கு. அது வேற! அதைத் தாண்டி எனக்கு உன்னப் பிடிக்கும். உன்னை மட்டும்தான் பிடிக்கும். இது இண்டைக்கு நேற்று வந்த ஆசை இல்ல. உன்ர ஸ்கூல் பிரியாவிடை பார்ட்டிக்கு முதல் முதலா சாறி கட்டிக்கொண்டு வெக்கமும் கூச்சமுமா படில இறங்கி வந்தியே, அண்டைக்கு உன்னப் பாத்ததில இருந்து எனக்கு உன்னப் பிடிக்கும். நீ வேணும், நீ மட்டும்தான் வேணும் எண்டு இருந்தனான். ஆரம்பம் நீ சின்ன பிள்ளை, படிச்சு முடிக்கட்டும் எண்டு நினைச்சன். அதைவிட தனியா நிண்ட என்னைக் கூட்டிக்கொண்டு வந்து, உனக்குச் சமனா வச்சுப் பாக்கிற மாமாக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது எண்டுதான் உன்னட்டச் சொல்லேல்ல. நடுவுக்க நிறைய நடந்தும் போச்சு. சரி படிச்சு முடிக்கட்டும் எண்டு பாத்திருந்தா நீ எவனோ ஒருத்தனைக் கூட்டிக்கொண்டு வந்து நிக்கிறாய்!” என்றான் முகமெல்லாம் கோபத்தில் சிவக்க.
அவன் கண்களில் காதல் இல்லை, கனிவு மருந்துக்கும் இல்லை, நேசம் இல்லை. கோபம் கோபம் மட்டுமே இருந்தது. அவள் முகத்தில் மோதிய அவன் மூச்சுக் காற்றில் கூட அனல் பறந்தது. அவன் உடம்பில் அவளை அடித்துவிடும் அளவுக்கான ஆவேசம் தெறித்தது.
“ஆனா அது எல்லாம் முடிஞ்சு போச்சு! அவனைத் தாண்டி வா. என்னட்ட வா! வா என்ன வாறாய்! விளங்கினதா?” என்றான் உத்தரவாக.
அவளுக்கு மறுக்கும் தைரியம் இல்லை. மிடறு கூட்டி விழுங்கினாள்.
“இனியும் சும்மா சும்மா அழுதுகொண்டு இருக்கிறேல்ல. திங்கள்ல இருந்து கடைக்கு வாறாய். மாமாவோட கதைச்சு கெதியில ஒரு நாள் குறிப்பன். வந்து கழுத்த நீட்டுறாய். நாங்க வாழுறதுக்கு எந்த அவசரமும் இல்ல. ஆனா இந்தக் கலியாணம் அவசரமா நடக்கவேணும். விளங்குதா? அத விட்டுட்டு இனியும் அரை லூசுத்தனமா எதையாவது யோசிச்சுக்கொண்டு இருந்தியோ… உன்ர மச்சானைப் பற்றி உனக்கே நல்லாத் தெரியும்!” என்றான் எச்சரிக்கும் விதமாக.
அவளிடம் அசைவில்லை. ஒரு கணம் இமைக்காது அவளையே பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான். அப்போதுதான் அவன் மனம் ஆறியது. எத்தனை வருடத்துக் குமுறல். ஒரு வழியாகக் கொட்டிவிட்டான். ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுவிட்டு இரண்டடி எடுத்து வைத்தவன் திரும்பவும் அவள் முன்னால் வந்து நின்று, “நீங்க ரெண்டு பேரும் சேரவேணும் எண்டு நானும் நினைச்சபடியாத்தான் இவ்வளவு காலமும் நீ நீயா இருந்தனி. நீ குத்தின இந்தப் பச்சை கிச்சை எல்லாம்…” என்றவன் தன் தலையின் மயிரைப் பிடித்து இழுத்துக் காட்டி, “இதுக்குச் சமன். அதால இப்பவும் வேற ஏதாவது லூசு வேலை பாக்கலாம் எண்டு நினைக்காத!” என்றான் பல்லைக் கடித்து.
அவள் அசையவே இல்லை. அவன் முகத்திலிருந்து பார்வையை அகற்றவும் இல்லை. அந்தக் கணத்தில் சிசிர என்கிறவன் அவள் நினைவிலேயே இல்லை. அவள் சிந்தையை மொத்தமாய்ச் சிறைப் பிடித்திருந்தான் அனந்தன்.
அப்போதுதான் அவள் நிலை கவனத்தில் வந்தது. ‘சும்மாவே உலகத்திலேயே இல்லாத ரவுடி மாதிரிப் பாப்பாள். இதுல…’ தலையை வேகமாகக் கோதித் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, “நிரல்!” என்று மெதுவாக அழைத்தான்.
அப்போதும் அவளிடம் அசைவில்லை என்றதும், “நிரல்!” அவள் தோள்களைப் பற்றி உலுக்கினான்.
“ஆ? என்ன என்ன?” அதிர்ந்து விழித்தவள், “இல்ல இல்ல. இனி நான் ஒண்டும் செய்ய மாட்டன்.” என்றாள் பதறிக்கொண்டு.
அவனுக்கே ஒருமாதிரி ஆகிப்போயிற்று. “என்னடி நீ? உன்னை என்ன பிடிச்சுத் திண்டனானா? இந்த நடுங்கு நடுங்கிறாய்? முதல் வந்து இரு!” அவளைக் கைப்பிடியிலேயே அழைத்து வந்து, அங்கிருந்த அவனுடைய பீன் பாக்கில் அமர வைத்தான். அருந்தத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான்.
அவள் அருந்தியதும் வாங்கிப் பக்கத்தில் வைத்துவிட்டு, “சாப்பிட்டியா?” என்றான் தணிந்த குரலில்.
“ஓம்… ஓமோம் சாப்பிட்டன்.”
“திங்கள்ல இருந்து கடைக்கு வாறியா?”
அவள் தலை சரி என்று ஆடியது.
“மாமா மாமி என்ன செய்யினம்?”
“நி…நித்திரை.”
இன்னும் அவள் பயத்திலிருந்து வெளிவரவில்லை என்று புரிந்தது. அதில், “சரி, ஒண்டையும் யோசிக்காம நீயும் போய்ப் படு!” என்றான் இதமான குரலில்.
விட்டால் போதும் என்று அவளும் எழுந்து ஓடினாள்.
போகிறவளையே பார்த்திருந்தவன் அவள் மறைந்ததும் ஒரு நெடிய மூச்சுடன் அதே பீன் பாக்கில் தொய்ந்து விழுந்தான்.
*****
அடுத்தநாள் காலையில் கடையில் மாட்டினார் சுந்தரலிங்கம். “என்ன மாமா, முகமே பாக்கிறீங்க இல்ல. என்னில அவ்வளவு கோவமா?” அவரின் முன்னால் சென்று அமர்ந்துகொண்டு வினவினான் அனந்தன்.
ஒன்றும் சொல்ல இயலாமல் அவனைப் பார்த்தார் அவர்.
“நிரலைப் பற்றி யோசிக்காதீங்க மாமா. நான் இருக்கிறன்தானே?” என்றான் தெம்பளிக்கும் விதமாய்.
அவர் விழிகள் கலங்கிப் போயின. “எனக்கும் அது தெரியும் நந்தா. உன்ர கைல அவளைப் பிடிச்சுத் தந்தா அவள் நல்லா இருப்பாள். அதுவும் தெரியும். ஆனா நீ? எனக்கு நீயும் சந்தோசமா இருக்கோணும். அவளுக்காக உன்ர சந்தோசத்தைக் கெடுக்காத. இவ்வளவு காலமும் நீ எங்களுக்காகச் செய்தது எல்லாம் போதும்.” என்றார் குரல் கரகரக்க.
“அப்ப இன்னும் என்னை இன்னொரு வீட்டு பிள்ளையாத்தான் பாக்கிறீங்க!” உதட்டோரம் அரும்பிய மெல்லிய முறுவலோடு, கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, அமர்ந்திருந்த நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து வினவினான்.
“அடி வாங்கப் போறாய் நந்தா! நானே பெத்த பிள்ளை எண்டு ஒருத்தன் இருந்திருந்தாக் கூட இத்தறிக்கு(இந்தளவில்) தனக்கு எண்டு ஒரு வாழ்க்கையைப் பாத்துக்கொண்டு போயிருப்பான். அதில பிழையும் இல்ல. ஆனா நீ? அப்பிடியான உன்ன வேறயாப் பாப்பனா? ஆனாலும் எங்களுக்காக எண்டு நீ பாத்தது எல்லாம் போதும். இனியாவது உனக்காக வாழு. உன்ர சந்தோசத்தைப் பார்.” என்றார் அப்போதும்.
“அப்பிடியெல்லாம் யோசிக்காதீங்க மாமா. நானும் அவளைக் கட்டினாத்தான் சந்தோசமா இருப்பன்.”
அவன் இப்படித்தான் சொல்வான் என்று தெரியும். ஆனாலும் கூட அவருக்குப் பேச்சற்றுப் போனது.
“என்ன மாமா?”
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தவர், “வட்டி, அடிதடி எண்டு நான் செய்த பாவங்களுக்கு நடுவில நான் செய்த ஒரேயொரு புண்ணியம் உன்னக் கையோட கூட்டிக்கொண்டு வந்தது நந்தா. அதுதான் கடவுள் இந்தளவில எண்டாலும் என்ர குடும்பத்தைக் காப்பாத்தி இருக்கிறார் போல. நீ இல்லாட்டி? என்னால என்ர குடும்பத்தைப் பற்றி யோசிக்கவே ஏலாம இருக்கு. எப்பயெல்லாம் தவிச்சு நிக்கிறனோ அப்ப எல்லாம் நான் இருக்கிறன் மாமா எண்டு வந்து நிக்கிறாய்.” என்றவருக்கு உள்ளம் எல்லாம் நிறைந்து போயிற்று. இனி அவன் பார்த்துக்கொள்வான் என்கிற அந்த எண்ணமே மிகப்பெரிய தெம்பைத் தந்தது.
திருமணத்தையும் அவன் உடனேயே நடத்திவிடலாம் என்று சொல்லவும், “கொஞ்ச நாள் போகட்டுமே.” என்றார் தயவாய்.
அந்தச் சிசிர இனி மகள் வாழ்க்கையில் இல்லை என்று ஆயிற்று. அவள் கொஞ்சம் அதிலிருந்து வெளியே வரட்டுமே என்று எண்ணினார்.
அவள் தலை ஒருவித அவசரத்துடன் மறுப்பாய் அசைந்தது. “இல்ல! நான் நம்ப மாட்டன். நீங்க அப்பிடி இல்ல. எனக்குத் தெரியும். முதல் என்னால சத்தியமா இது ஏலாது. இதுக்கு நீங்க என்னைக் கொண்டே போடலாம்.” என்றதும் கொதித்துப் போனான் அவன்.
“கொல்லுறதுக்காடி உன்னோட கிடந்து சாகிறன்?” ஓரெட்டில் அவள் முன்னால் வந்து நின்று சீறியவனைக் கண்டு, அவளுக்கு ஒரு கணம் இதயத் துடிப்பே நின்று போயிற்று. விழிகள் இரண்டும் வெளியே வந்துவிடும் அளவுக்கு விரிந்து போயின. மூச்சு விடக்கூட மறந்தவளாக அவனையே பார்த்து நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.
“உன்னில எனக்குப் பாசம், அக்கறை எல்லாம் இருக்கு. அது வேற! அதைத் தாண்டி எனக்கு உன்னப் பிடிக்கும். உன்னை மட்டும்தான் பிடிக்கும். இது இண்டைக்கு நேற்று வந்த ஆசை இல்ல. உன்ர ஸ்கூல் பிரியாவிடை பார்ட்டிக்கு முதல் முதலா சாறி கட்டிக்கொண்டு வெக்கமும் கூச்சமுமா படில இறங்கி வந்தியே, அண்டைக்கு உன்னப் பாத்ததில இருந்து எனக்கு உன்னப் பிடிக்கும். நீ வேணும், நீ மட்டும்தான் வேணும் எண்டு இருந்தனான். ஆரம்பம் நீ சின்ன பிள்ளை, படிச்சு முடிக்கட்டும் எண்டு நினைச்சன். அதைவிட தனியா நிண்ட என்னைக் கூட்டிக்கொண்டு வந்து, உனக்குச் சமனா வச்சுப் பாக்கிற மாமாக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யக் கூடாது எண்டுதான் உன்னட்டச் சொல்லேல்ல. நடுவுக்க நிறைய நடந்தும் போச்சு. சரி படிச்சு முடிக்கட்டும் எண்டு பாத்திருந்தா நீ எவனோ ஒருத்தனைக் கூட்டிக்கொண்டு வந்து நிக்கிறாய்!” என்றான் முகமெல்லாம் கோபத்தில் சிவக்க.
அவன் கண்களில் காதல் இல்லை, கனிவு மருந்துக்கும் இல்லை, நேசம் இல்லை. கோபம் கோபம் மட்டுமே இருந்தது. அவள் முகத்தில் மோதிய அவன் மூச்சுக் காற்றில் கூட அனல் பறந்தது. அவன் உடம்பில் அவளை அடித்துவிடும் அளவுக்கான ஆவேசம் தெறித்தது.
“ஆனா அது எல்லாம் முடிஞ்சு போச்சு! அவனைத் தாண்டி வா. என்னட்ட வா! வா என்ன வாறாய்! விளங்கினதா?” என்றான் உத்தரவாக.
அவளுக்கு மறுக்கும் தைரியம் இல்லை. மிடறு கூட்டி விழுங்கினாள்.
“இனியும் சும்மா சும்மா அழுதுகொண்டு இருக்கிறேல்ல. திங்கள்ல இருந்து கடைக்கு வாறாய். மாமாவோட கதைச்சு கெதியில ஒரு நாள் குறிப்பன். வந்து கழுத்த நீட்டுறாய். நாங்க வாழுறதுக்கு எந்த அவசரமும் இல்ல. ஆனா இந்தக் கலியாணம் அவசரமா நடக்கவேணும். விளங்குதா? அத விட்டுட்டு இனியும் அரை லூசுத்தனமா எதையாவது யோசிச்சுக்கொண்டு இருந்தியோ… உன்ர மச்சானைப் பற்றி உனக்கே நல்லாத் தெரியும்!” என்றான் எச்சரிக்கும் விதமாக.
அவளிடம் அசைவில்லை. ஒரு கணம் இமைக்காது அவளையே பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான். அப்போதுதான் அவன் மனம் ஆறியது. எத்தனை வருடத்துக் குமுறல். ஒரு வழியாகக் கொட்டிவிட்டான். ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுவிட்டு இரண்டடி எடுத்து வைத்தவன் திரும்பவும் அவள் முன்னால் வந்து நின்று, “நீங்க ரெண்டு பேரும் சேரவேணும் எண்டு நானும் நினைச்சபடியாத்தான் இவ்வளவு காலமும் நீ நீயா இருந்தனி. நீ குத்தின இந்தப் பச்சை கிச்சை எல்லாம்…” என்றவன் தன் தலையின் மயிரைப் பிடித்து இழுத்துக் காட்டி, “இதுக்குச் சமன். அதால இப்பவும் வேற ஏதாவது லூசு வேலை பாக்கலாம் எண்டு நினைக்காத!” என்றான் பல்லைக் கடித்து.
அவள் அசையவே இல்லை. அவன் முகத்திலிருந்து பார்வையை அகற்றவும் இல்லை. அந்தக் கணத்தில் சிசிர என்கிறவன் அவள் நினைவிலேயே இல்லை. அவள் சிந்தையை மொத்தமாய்ச் சிறைப் பிடித்திருந்தான் அனந்தன்.
அப்போதுதான் அவள் நிலை கவனத்தில் வந்தது. ‘சும்மாவே உலகத்திலேயே இல்லாத ரவுடி மாதிரிப் பாப்பாள். இதுல…’ தலையை வேகமாகக் கோதித் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, “நிரல்!” என்று மெதுவாக அழைத்தான்.
அப்போதும் அவளிடம் அசைவில்லை என்றதும், “நிரல்!” அவள் தோள்களைப் பற்றி உலுக்கினான்.
“ஆ? என்ன என்ன?” அதிர்ந்து விழித்தவள், “இல்ல இல்ல. இனி நான் ஒண்டும் செய்ய மாட்டன்.” என்றாள் பதறிக்கொண்டு.
அவனுக்கே ஒருமாதிரி ஆகிப்போயிற்று. “என்னடி நீ? உன்னை என்ன பிடிச்சுத் திண்டனானா? இந்த நடுங்கு நடுங்கிறாய்? முதல் வந்து இரு!” அவளைக் கைப்பிடியிலேயே அழைத்து வந்து, அங்கிருந்த அவனுடைய பீன் பாக்கில் அமர வைத்தான். அருந்தத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான்.
அவள் அருந்தியதும் வாங்கிப் பக்கத்தில் வைத்துவிட்டு, “சாப்பிட்டியா?” என்றான் தணிந்த குரலில்.
“ஓம்… ஓமோம் சாப்பிட்டன்.”
“திங்கள்ல இருந்து கடைக்கு வாறியா?”
அவள் தலை சரி என்று ஆடியது.
“மாமா மாமி என்ன செய்யினம்?”
“நி…நித்திரை.”
இன்னும் அவள் பயத்திலிருந்து வெளிவரவில்லை என்று புரிந்தது. அதில், “சரி, ஒண்டையும் யோசிக்காம நீயும் போய்ப் படு!” என்றான் இதமான குரலில்.
விட்டால் போதும் என்று அவளும் எழுந்து ஓடினாள்.
போகிறவளையே பார்த்திருந்தவன் அவள் மறைந்ததும் ஒரு நெடிய மூச்சுடன் அதே பீன் பாக்கில் தொய்ந்து விழுந்தான்.
*****
அடுத்தநாள் காலையில் கடையில் மாட்டினார் சுந்தரலிங்கம். “என்ன மாமா, முகமே பாக்கிறீங்க இல்ல. என்னில அவ்வளவு கோவமா?” அவரின் முன்னால் சென்று அமர்ந்துகொண்டு வினவினான் அனந்தன்.
ஒன்றும் சொல்ல இயலாமல் அவனைப் பார்த்தார் அவர்.
“நிரலைப் பற்றி யோசிக்காதீங்க மாமா. நான் இருக்கிறன்தானே?” என்றான் தெம்பளிக்கும் விதமாய்.
அவர் விழிகள் கலங்கிப் போயின. “எனக்கும் அது தெரியும் நந்தா. உன்ர கைல அவளைப் பிடிச்சுத் தந்தா அவள் நல்லா இருப்பாள். அதுவும் தெரியும். ஆனா நீ? எனக்கு நீயும் சந்தோசமா இருக்கோணும். அவளுக்காக உன்ர சந்தோசத்தைக் கெடுக்காத. இவ்வளவு காலமும் நீ எங்களுக்காகச் செய்தது எல்லாம் போதும்.” என்றார் குரல் கரகரக்க.
“அப்ப இன்னும் என்னை இன்னொரு வீட்டு பிள்ளையாத்தான் பாக்கிறீங்க!” உதட்டோரம் அரும்பிய மெல்லிய முறுவலோடு, கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, அமர்ந்திருந்த நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து வினவினான்.
“அடி வாங்கப் போறாய் நந்தா! நானே பெத்த பிள்ளை எண்டு ஒருத்தன் இருந்திருந்தாக் கூட இத்தறிக்கு(இந்தளவில்) தனக்கு எண்டு ஒரு வாழ்க்கையைப் பாத்துக்கொண்டு போயிருப்பான். அதில பிழையும் இல்ல. ஆனா நீ? அப்பிடியான உன்ன வேறயாப் பாப்பனா? ஆனாலும் எங்களுக்காக எண்டு நீ பாத்தது எல்லாம் போதும். இனியாவது உனக்காக வாழு. உன்ர சந்தோசத்தைப் பார்.” என்றார் அப்போதும்.
“அப்பிடியெல்லாம் யோசிக்காதீங்க மாமா. நானும் அவளைக் கட்டினாத்தான் சந்தோசமா இருப்பன்.”
அவன் இப்படித்தான் சொல்வான் என்று தெரியும். ஆனாலும் கூட அவருக்குப் பேச்சற்றுப் போனது.
“என்ன மாமா?”
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தவர், “வட்டி, அடிதடி எண்டு நான் செய்த பாவங்களுக்கு நடுவில நான் செய்த ஒரேயொரு புண்ணியம் உன்னக் கையோட கூட்டிக்கொண்டு வந்தது நந்தா. அதுதான் கடவுள் இந்தளவில எண்டாலும் என்ர குடும்பத்தைக் காப்பாத்தி இருக்கிறார் போல. நீ இல்லாட்டி? என்னால என்ர குடும்பத்தைப் பற்றி யோசிக்கவே ஏலாம இருக்கு. எப்பயெல்லாம் தவிச்சு நிக்கிறனோ அப்ப எல்லாம் நான் இருக்கிறன் மாமா எண்டு வந்து நிக்கிறாய்.” என்றவருக்கு உள்ளம் எல்லாம் நிறைந்து போயிற்று. இனி அவன் பார்த்துக்கொள்வான் என்கிற அந்த எண்ணமே மிகப்பெரிய தெம்பைத் தந்தது.
திருமணத்தையும் அவன் உடனேயே நடத்திவிடலாம் என்று சொல்லவும், “கொஞ்ச நாள் போகட்டுமே.” என்றார் தயவாய்.
அந்தச் சிசிர இனி மகள் வாழ்க்கையில் இல்லை என்று ஆயிற்று. அவள் கொஞ்சம் அதிலிருந்து வெளியே வரட்டுமே என்று எண்ணினார்.
Last edited: