“என்ர மகள். எனக்கு அம்மா மாதிரி.” அவள் கேசத்தை முகம் கனிய ஒதுக்கிவிட்டபடி சொன்னான்.
“ஓ!” அவளுக்குக் குரல் எழும்பவே மாட்டேன் என்றது. ஊகித்ததுதான். ஆனாலும் அவன் வாயால் கேட்டபோது உயிர் துடித்தது.
அவளின் சிசிர அவளுக்கு இல்லை. இனி இல்லவே இல்லை.
அத்தனை கடினமான சூழ்நிலைகளையும் அவனைச் சேரப்போகும் ஒற்றை நொடிக்காகக் கடந்து வந்தாளே! இனிச் சேரவே முடியாது என்றால் எப்படி?
நதியைப் படகால் கடப்பதுபோலக் காலத்தை அவன் நினைவுகளால் கடந்துகொண்டிருந்தாளே. இனி? பாதை முழுவதும் பாலைவன மணல் சுட்டபோதெல்லாம் கடந்துவிட்டால் போதும், கை நீட்டி அரவணைத்துக்கொள்ள அவன் இருக்கிறான் என்று எண்ணி எண்ணி நடந்தாளே! இனி?
அவள் உள்ளம் படும் பாட்டை அறியாமல், “அங்க இருக்கிறா பாருங்க. அந்த ரெட் கலர் சாறி. அவா வைஃப் ஜயருக்ஷி. பக்கத்தில இருக்கிறது அப்பா.” அங்கே இருந்தவர்களைக் காட்டிச் சொன்னான் அவன்.
அப்ப நான்? இனி நான் உனக்கு யாருமே இல்லையா? உன் கண்மணி இல்லையா? மகே லஸ்ஸன கெல்ல என்று கொஞ்சுவானே. துகள் துகள்களாய் சிதறிப்போன நெஞ்சத்துடன் பரிதாபமாய் அவனையே பார்த்து விழித்தாள் நிரல்யா.
அவன் இவளிடம் திரும்பவும் வேகமாக அவள் விழிகள் இப்போது அவன் பெண்ணிடம் தாவிற்று. அவளும் இவளைக் குறுகுறு என்று பார்த்துக்கொண்டிருந்தாள்
அவள் புறம் கைகளை நீட்டி, “ஒயா மகே லங்கட எனவத?(என்னட்ட வாறீங்களா?)” என்றாள் சிங்களத்தில்.
சின்னவள் விழிகளோடு சேர்த்து சிசிரவின் விழிகளும் வியப்பில் விரிந்தன.
“சிங்களம் தெரியுமா?” குரலிலும் அந்த வியப்புத் தொனிக்க வினவினான்.
என்ன கொடுமை இது? இன்னும் எத்தனை துன்பங்களை அவள் கடக்க வேண்டுமாம்? கடவுளுக்கு அவள் மீது இத்தனை கோபம் ஏன் என்று விளங்கவே இல்லை. கண்ணீரை உள்ளுக்கிழுத்தபடி வெறுமையாய்ப் புன்னகைக்க முயன்றாள்.
அவன் நெஞ்சில் சுளீர் என்று ஓர் வலி. அவள் முகத்தைப் பார்க்க முடியாமல் மகள் புறம் திரும்பி, “அன்ட்ரிட்ட(ஆண்ட்டி) போறீங்களா?” என்றபடி அவளை இவளிடம் நீட்டினான்.
எந்த ஜென்மத்துப் பந்தமோ, குழந்தையும் அவளிடம் வந்தாள்.
அவளைக் கையில் ஏந்திய அந்த நொடியில் தேகமெல்லாம் சிலிர்த்தடங்கியது. அவள் சிசிரவின் மகள். அவனைப் போலவே, அவன் வார்ப்பில் சுருண்ட குழல்கள், அடர் நீல நிற விழிகள் என்று குட்டி சிசிரவை அப்படியே நெஞ்சுக்குள் பொத்திக்கொள்ளும் ஆசையில் அவளை மார்போடு அணைத்து, கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்த நொடியில் உடைந்தாள் நிரல்யா.
அவன் அணைத்தது, முத்தமிட்டது, அவளில் லயித்தது, என்னை மறந்திட மாட்டியே என்று கேட்டது எல்லாம் இதயத்தைக் கசக்கிப் பிழிந்துகொண்டு அவள் நினைவில் வந்து போயின.
என்ன முயன்றும் முடியாமல் ஒரு கேவல் வெடித்திருந்தது. அதில் பயந்த குழந்தை தந்தையிடம் தாவி இருந்தாள். அவனும் தவித்துப்போனான்.
“ப்ளீஸ் அழாதீங்க. ஏன் இப்பிடி அழுறீங்க எண்டு எனக்குத் தெரியேல்ல. நான் ஏதாவது முந்தி உங்கள நோகடிக்கிற மாதிரி செய்திட்டேனா? அப்பிடி ஏதும் எண்டால் உண்மையா சொறி. தெரிஞ்சோ, வேணுமென்டோ செய்திருக்க மாட்டன். என்னை அறியாம நடந்திருக்கும். ஆனாலும் சொறி.”
என்றான் அவன் இனம்புரியாத் தவிப்புடன்.
அவள் நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. அங்கிருந்து ஓடிவிடத் துடித்தாள். உடல் ஒத்துழைக்கும் என்கிற நம்பிக்கை மருந்துக்கும் இல்லை.
அதில், வேக வேகமாய் முகத்தைத் துடைத்துக்கொண்டு, “சொறி, அது ஏதோ… இதுக்கு நீங்க காரணமில்ல. அது வேற ஏதோ நினைவு…” வார்த்தைகளைச் சரியாகக் கோர்க்க முடியாமல் கோர்த்தாள்.
என்னவோ அவள் துன்பமெல்லாம் அவளோடு போகட்டும். இதுவரை திரும்பாத அவன் நினைவு இனியும் திரும்பாமலேயே இருக்கட்டும். இதையெல்லாம் அவன் தாங்கமாட்டான். மென்மையான இதயம் கொண்ட அவளின் சிசிரவால் தாங்கவே முடியாது. இவன் அந்தப் பெண்ணின் கணவனாகவே காலம் முழுமைக்கும் இருக்கட்டும். கண்களைத் துடைத்துக்கொண்டு அவனைப் பார்த்து முறுவலிக்க முயன்றாள். முடியாமல் அப்போதும் உதடுகள் நடுங்கின.
அவனுக்கு அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை. என்னவோ மனத்தைப் பிசைந்தது. அவளை விட்டு விலக முடியாதது போன்று, அவள் கண்ணீரைத் துடைவிட வேண்டும் போன்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. தலையை வேறு விண் விண் என்று வலித்தது. இந்த உணர்வு நல்லதற்கன்று, இந்தப் பெண்ணை விட்டுப் போய்விடு என்று அறிவு எடுத்துரைக்க, அதே நேரம் நண்பன் ஒருவன் அவனைத் தேடிக்கொண்டு வந்தான்.
“டேய் சிசிர. போயிட்டியாக்கும் எண்டு நினைச்சன். இன்னும் இங்கேயா நிக்கிறாய்?”
“நானும் வெளிக்கிட நினைக்க நீயும் வாறாய்.” என்று அவனிடம் சொல்லிவிட்டு, அவளிடம் மெல்லிய தலையசைப்புடன் விடைபெற்றுக்கொண்டு எழுந்து, அவனுக்குக் கையை நீட்டும்போதுதான், அவன் கையில் இருந்த டட்டூவைக் கவனித்தாள்.
மணிக்கட்டின் உட்புறத்தில் பெருவிரல் ஆரம்பமாகும் இடத்தில் ‘என்’ என்கிற ஆங்கில எழுத்துக் கொடிபோல் படர்ந்து கிடக்க, அதற்குள் ஐ, ஆர், ஏ மூன்று எழுத்துகளும் மறைந்தும் மறையாமல் கிடந்தன. அவனது நாடித் துடிப்பாக அவள் இருக்கிறாளாம் என்று சொல்லி, அவன் இலண்டனில் இருந்தபோது குத்தி, அவளுக்குக் காட்டியும் இருக்கிறான். யாராவது பார்த்தால் ஒரு கொடி ஆர்ட் போன்று தெரிவது, அவர்கள் இருவருக்கும் மட்டுமே அது அவள் பெயர் என்று தெரியுமாம் என்று வேறு சொல்லியிருந்தான். அதுதான் வீட்டில் ஒரு பிரச்சனை என்று வந்தபோது பச்சை குத்திக்கொள்ளும் எண்ணத்தை அவளுக்குள் வரவைத்ததும்.
அவளை மறக்கவே கூடாது என்று உடலில் பச்சையாகக் குத்திவிட்டு உள்ளத்திலிருந்து மறந்துவிட்டான்.
அடக்கிய அழுகை மீண்டும் வெடித்துக்கொண்டு வருவது போலிருக்க, கைப்பேசியைப் பார்ப்பதுபோல் குனிந்து தன்னை அடக்க முயன்றாள். அவன் அங்கிருந்து அந்த நண்பனோடு அகல்வது தெரிந்து நெஞ்சம் பரிதவித்தபோதிலும் அவள் நிமிரவில்லை. கண்ணீரை உள்ளுக்கு இழுத்தபடி அப்படியே இருந்தாள்.
தொடரும்…
கருத்திடும் அனைவருக்கும் நன்றி. போட்டுத் தாக்க நினைக்கிற எல்லாத்தையும் போட்டுத் தாக்குங்க. நாளைக்கு வந்து பாக்கிறேன். உங்க கமெண்ட்ஸ் போஸ்ட்க்கு லைக் கூட போட இல்ல. ஒரு பீல் ல இந்த ஏரியாவை எழுதி முடிச்சிட்டா நானுமே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடுவேன். அதுதான்.
“ஓ!” அவளுக்குக் குரல் எழும்பவே மாட்டேன் என்றது. ஊகித்ததுதான். ஆனாலும் அவன் வாயால் கேட்டபோது உயிர் துடித்தது.
அவளின் சிசிர அவளுக்கு இல்லை. இனி இல்லவே இல்லை.
அத்தனை கடினமான சூழ்நிலைகளையும் அவனைச் சேரப்போகும் ஒற்றை நொடிக்காகக் கடந்து வந்தாளே! இனிச் சேரவே முடியாது என்றால் எப்படி?
நதியைப் படகால் கடப்பதுபோலக் காலத்தை அவன் நினைவுகளால் கடந்துகொண்டிருந்தாளே. இனி? பாதை முழுவதும் பாலைவன மணல் சுட்டபோதெல்லாம் கடந்துவிட்டால் போதும், கை நீட்டி அரவணைத்துக்கொள்ள அவன் இருக்கிறான் என்று எண்ணி எண்ணி நடந்தாளே! இனி?
அவள் உள்ளம் படும் பாட்டை அறியாமல், “அங்க இருக்கிறா பாருங்க. அந்த ரெட் கலர் சாறி. அவா வைஃப் ஜயருக்ஷி. பக்கத்தில இருக்கிறது அப்பா.” அங்கே இருந்தவர்களைக் காட்டிச் சொன்னான் அவன்.
அப்ப நான்? இனி நான் உனக்கு யாருமே இல்லையா? உன் கண்மணி இல்லையா? மகே லஸ்ஸன கெல்ல என்று கொஞ்சுவானே. துகள் துகள்களாய் சிதறிப்போன நெஞ்சத்துடன் பரிதாபமாய் அவனையே பார்த்து விழித்தாள் நிரல்யா.
அவன் இவளிடம் திரும்பவும் வேகமாக அவள் விழிகள் இப்போது அவன் பெண்ணிடம் தாவிற்று. அவளும் இவளைக் குறுகுறு என்று பார்த்துக்கொண்டிருந்தாள்
அவள் புறம் கைகளை நீட்டி, “ஒயா மகே லங்கட எனவத?(என்னட்ட வாறீங்களா?)” என்றாள் சிங்களத்தில்.
சின்னவள் விழிகளோடு சேர்த்து சிசிரவின் விழிகளும் வியப்பில் விரிந்தன.
“சிங்களம் தெரியுமா?” குரலிலும் அந்த வியப்புத் தொனிக்க வினவினான்.
என்ன கொடுமை இது? இன்னும் எத்தனை துன்பங்களை அவள் கடக்க வேண்டுமாம்? கடவுளுக்கு அவள் மீது இத்தனை கோபம் ஏன் என்று விளங்கவே இல்லை. கண்ணீரை உள்ளுக்கிழுத்தபடி வெறுமையாய்ப் புன்னகைக்க முயன்றாள்.
அவன் நெஞ்சில் சுளீர் என்று ஓர் வலி. அவள் முகத்தைப் பார்க்க முடியாமல் மகள் புறம் திரும்பி, “அன்ட்ரிட்ட(ஆண்ட்டி) போறீங்களா?” என்றபடி அவளை இவளிடம் நீட்டினான்.
எந்த ஜென்மத்துப் பந்தமோ, குழந்தையும் அவளிடம் வந்தாள்.
அவளைக் கையில் ஏந்திய அந்த நொடியில் தேகமெல்லாம் சிலிர்த்தடங்கியது. அவள் சிசிரவின் மகள். அவனைப் போலவே, அவன் வார்ப்பில் சுருண்ட குழல்கள், அடர் நீல நிற விழிகள் என்று குட்டி சிசிரவை அப்படியே நெஞ்சுக்குள் பொத்திக்கொள்ளும் ஆசையில் அவளை மார்போடு அணைத்து, கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்த நொடியில் உடைந்தாள் நிரல்யா.
அவன் அணைத்தது, முத்தமிட்டது, அவளில் லயித்தது, என்னை மறந்திட மாட்டியே என்று கேட்டது எல்லாம் இதயத்தைக் கசக்கிப் பிழிந்துகொண்டு அவள் நினைவில் வந்து போயின.
என்ன முயன்றும் முடியாமல் ஒரு கேவல் வெடித்திருந்தது. அதில் பயந்த குழந்தை தந்தையிடம் தாவி இருந்தாள். அவனும் தவித்துப்போனான்.
“ப்ளீஸ் அழாதீங்க. ஏன் இப்பிடி அழுறீங்க எண்டு எனக்குத் தெரியேல்ல. நான் ஏதாவது முந்தி உங்கள நோகடிக்கிற மாதிரி செய்திட்டேனா? அப்பிடி ஏதும் எண்டால் உண்மையா சொறி. தெரிஞ்சோ, வேணுமென்டோ செய்திருக்க மாட்டன். என்னை அறியாம நடந்திருக்கும். ஆனாலும் சொறி.”
என்றான் அவன் இனம்புரியாத் தவிப்புடன்.
அவள் நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. அங்கிருந்து ஓடிவிடத் துடித்தாள். உடல் ஒத்துழைக்கும் என்கிற நம்பிக்கை மருந்துக்கும் இல்லை.
அதில், வேக வேகமாய் முகத்தைத் துடைத்துக்கொண்டு, “சொறி, அது ஏதோ… இதுக்கு நீங்க காரணமில்ல. அது வேற ஏதோ நினைவு…” வார்த்தைகளைச் சரியாகக் கோர்க்க முடியாமல் கோர்த்தாள்.
என்னவோ அவள் துன்பமெல்லாம் அவளோடு போகட்டும். இதுவரை திரும்பாத அவன் நினைவு இனியும் திரும்பாமலேயே இருக்கட்டும். இதையெல்லாம் அவன் தாங்கமாட்டான். மென்மையான இதயம் கொண்ட அவளின் சிசிரவால் தாங்கவே முடியாது. இவன் அந்தப் பெண்ணின் கணவனாகவே காலம் முழுமைக்கும் இருக்கட்டும். கண்களைத் துடைத்துக்கொண்டு அவனைப் பார்த்து முறுவலிக்க முயன்றாள். முடியாமல் அப்போதும் உதடுகள் நடுங்கின.
அவனுக்கு அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை. என்னவோ மனத்தைப் பிசைந்தது. அவளை விட்டு விலக முடியாதது போன்று, அவள் கண்ணீரைத் துடைவிட வேண்டும் போன்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. தலையை வேறு விண் விண் என்று வலித்தது. இந்த உணர்வு நல்லதற்கன்று, இந்தப் பெண்ணை விட்டுப் போய்விடு என்று அறிவு எடுத்துரைக்க, அதே நேரம் நண்பன் ஒருவன் அவனைத் தேடிக்கொண்டு வந்தான்.
“டேய் சிசிர. போயிட்டியாக்கும் எண்டு நினைச்சன். இன்னும் இங்கேயா நிக்கிறாய்?”
“நானும் வெளிக்கிட நினைக்க நீயும் வாறாய்.” என்று அவனிடம் சொல்லிவிட்டு, அவளிடம் மெல்லிய தலையசைப்புடன் விடைபெற்றுக்கொண்டு எழுந்து, அவனுக்குக் கையை நீட்டும்போதுதான், அவன் கையில் இருந்த டட்டூவைக் கவனித்தாள்.
மணிக்கட்டின் உட்புறத்தில் பெருவிரல் ஆரம்பமாகும் இடத்தில் ‘என்’ என்கிற ஆங்கில எழுத்துக் கொடிபோல் படர்ந்து கிடக்க, அதற்குள் ஐ, ஆர், ஏ மூன்று எழுத்துகளும் மறைந்தும் மறையாமல் கிடந்தன. அவனது நாடித் துடிப்பாக அவள் இருக்கிறாளாம் என்று சொல்லி, அவன் இலண்டனில் இருந்தபோது குத்தி, அவளுக்குக் காட்டியும் இருக்கிறான். யாராவது பார்த்தால் ஒரு கொடி ஆர்ட் போன்று தெரிவது, அவர்கள் இருவருக்கும் மட்டுமே அது அவள் பெயர் என்று தெரியுமாம் என்று வேறு சொல்லியிருந்தான். அதுதான் வீட்டில் ஒரு பிரச்சனை என்று வந்தபோது பச்சை குத்திக்கொள்ளும் எண்ணத்தை அவளுக்குள் வரவைத்ததும்.
அவளை மறக்கவே கூடாது என்று உடலில் பச்சையாகக் குத்திவிட்டு உள்ளத்திலிருந்து மறந்துவிட்டான்.
அடக்கிய அழுகை மீண்டும் வெடித்துக்கொண்டு வருவது போலிருக்க, கைப்பேசியைப் பார்ப்பதுபோல் குனிந்து தன்னை அடக்க முயன்றாள். அவன் அங்கிருந்து அந்த நண்பனோடு அகல்வது தெரிந்து நெஞ்சம் பரிதவித்தபோதிலும் அவள் நிமிரவில்லை. கண்ணீரை உள்ளுக்கு இழுத்தபடி அப்படியே இருந்தாள்.
தொடரும்…
கருத்திடும் அனைவருக்கும் நன்றி. போட்டுத் தாக்க நினைக்கிற எல்லாத்தையும் போட்டுத் தாக்குங்க. நாளைக்கு வந்து பாக்கிறேன். உங்க கமெண்ட்ஸ் போஸ்ட்க்கு லைக் கூட போட இல்ல. ஒரு பீல் ல இந்த ஏரியாவை எழுதி முடிச்சிட்டா நானுமே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடுவேன். அதுதான்.
Last edited: