“மகளும் இருக்கோ?” சுசீலாவின் காதோரமாகச் சரிந்து வினவிய சிந்தாமணிக்கு அவ்வளவு நேரமாக இருந்த ஆர்வம் அப்படியே வடிந்து போயிற்று. பக்கத்தில் மகன் இருப்பதையும் மறந்துபோயிருந்தார்.
அந்த ஒற்றைக் கேள்வியே நடப்பதைச் சொல்லிவிட, அகத்தியனின் முகம் கோபத்தில் சிவந்தது. தமக்கையை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, விருட்டென்று எழுந்துபோனான்.
முழுக் காரியமும் கெட்டுப்போன கவலையுடன், “இன்னொரு சின்ன மகளும் இருக்கிறா.” என்றார் சுசீலா.
“ஓ!” சிந்தாமணியின் பார்வை யசோதினியை அளந்தது.
மனத்தை நிறைக்கும் முகம். ஒடிசலான, உயர்ந்த தேகம். உண்மையில் அவர் மகனுக்கு மிகுந்த பொருத்தமாக இருப்பாள். இரண்டு பெண் பிள்ளைகள் என்றதுதான் இடித்தது. சும்மாவே இன்னும் கலியாணத்துக்கு அவன் சம்மதிக்கவில்லை. இதோ, இப்போதுகூட கோபத்தோடுதான் எழுந்து போனான். இதில், இரண்டு பிள்ளைகள் என்றால் ஊரைவிட்டே ஓடிவிடுவானாக இருக்கும்.
சுசீலாவை மட்டுமே எதிர்பார்த்து வந்த யசோதினி, அங்கிருந்த புதியவர்களைக் கண்டு, சுசீலாவுக்குத் தெரிந்தவர்கள் போலும் என்றுதான் முதலில் எண்ணினாள். ஆனால், அவள் மேல் ஆராய்ச்சியாகப் படிந்த அவர்கள் பார்வையும், விருட்டென்று எழுந்துபோன அந்த மனிதனின் செயலும் அப்படியில்லை என்று சொல்லிற்று.
அப்படி என்ன என்கிற கேள்வி உள்ளே ஓடினாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. மூவருக்கும் பொதுவான ஒரு முறுவலோடு மருந்தை எடுத்து சுசீலாவிடம் கொடுத்தாள்.
“நன்றியம்மா கொண்டுவந்து தந்ததுக்கு. இந்தக் காலாலதான் இவ்வளவும். இல்லாட்டி நானே வந்து வாங்கி இருப்பன்”.
“இதில என்ன இருக்கு? பக்கத்திலதானே. நான் சில நேரம் பூந்தோட்டம் வரைக்குமே கொண்டுபோய்க் குடுத்திருக்கிறன். இண்டைக்கு மகிளாவும் பார்மசில நிக்கிறதால ஒரு பிரச்சினையும் இல்ல.” மருந்தின் தொகையைச் சொல்லி, அவர் தந்த பணத்தை எண்ணி வாங்கிக்கொண்டாள்.
“அது மருந்துக்கு. இது கொண்டுவந்து தந்ததுக்கு.” பெட்ரோலுக்கும் பணம் கொடுத்தார் சுசீலா.
“அதெல்லாம் வேண்டாம் அக்கா. பார்மசில நோட் பண்ணிவிட்டா மாத முடிவில காசு தருவினம். சரியக்கா, நேரமாகுது நான் வெளிக்கிடப்போறன்.” நயமாகவே மறுத்தவள் மற்ற இருவருக்கும் மெல்லிய தலையசைப்பைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள்.
அவள் கண்ணுக்கு மறையும் வரையில் அமைதியாக இருந்துவிட்டு, என்ன சொல்வார்கள் என்று தெரிந்திருந்தாலும் அவர்களைக் கேள்வியாக ஏறிட்டார் சுசீலா.
“ரெண்டு பிள்ளைகளோட, அதுவும் இவ்வளவு வளந்த பிள்ளையோட எங்களுக்குச் சரி வராது சுசீலா.”
“பரவாயில்லை அக்கா. எனக்குத் தெரிஞ்ச, நல்ல பிள்ளை எண்டதும் சும்மா உங்களுக்குக் காட்டிப் பாத்தனான்.” தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சொன்னவர், அதே புரோக்கரின் நம்பரை அவர்களுக்கும் கொடுத்தார்.
இவை அனைத்தும் நடந்து முடிந்த பிறகுதான் அங்கு வந்தான் அகத்தியன். அவன் முகம் இறுகிக் கிடந்தது.
“தம்பி, சும்மா சும்மா கோவப்படாத. நான் உனக்கு நடந்ததச் சுசீலாக்குச் சொன்னனான். அப்பதான் இந்தப் பிள்ளையை வரச் சொன்னவள். அந்தப் பிள்ளைக்கே இங்க என்ன நடந்தது எண்டு தெரியாது. அதால நீ எதையாவது சொல்லாத!” என்றார் சிந்தாமணி வேகமாக.
சுசீலாவும் இருந்ததில் அவனாலும் தன் கோபத்தை அவரிடம் வெளிப்படையாகக் காட்ட முடியாமல் போயிற்று.
*****
பார்மசிக்கு வந்த யசோதினிக்கு அவர்கள் பற்றிய யோசனைதான். அந்த ஆண் எழுந்துபோன வேகமும், பெண்கள் இருவரும் பார்த்த பார்வையும் சாதாரணமாகத் தெரியவில்லை. அடுத்தமுறை சுசீலாவைப் பார்த்தால் கேட்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு தன் வேலைகளைப் பார்த்தாள்.
கோயிலில் இருந்து வீடு வந்த சுசீலாவுக்கு மனதே சரியில்லை. இரு தரப்பும் நல்ல மனிதர்கள். அவர்களை இணைக்க முடியாமல் போயிற்றே! இரண்டு சின்னக் குழந்தைகள். அவர்களை ஒரு பெரும் தடையாகப் பார்ப்பது மனத்தைப் பிசைந்தது. கூடவே, இதை யசோதினியிடம் சொல்லாமல் இருப்பது தவறு என்று மனம் எடுத்துரைக்க, அவளுக்கு அழைத்து நடந்ததைச் சொன்னார்.
“சொல்லாம கொள்ளாம உங்களைக் கூப்பிட்டுக் காட்டினதுக்குக் குறை நினைக்காதீங்கோம்மா. உங்கள நேராப் பாத்தா சில நேரம் பிடிக்கும் எண்டு நினைச்சன். அதைவிட, அவே ஓம் எண்டு சொல்லாம உங்களுக்கு நம்பிக்கையைத் தாறதும் பிழை எல்லோ. ஆனா, அவன் கலியாணமே வேண்டாம் எண்டு நிக்கிறான்.” என்றார் நயமாக.
அதுதான் அவ்வளவு வேகமாக எழுந்து ஓடினானா என்று உள்ளூர ஓட, “எனக்கு விளங்குது அக்கா. நான் குறையும் நினைக்கேல்ல. ஆனா, இனி இது வேண்டாம். எனக்கு உண்மையா இப்ப அந்த ஐடியா இல்ல.” என்று நல்ல மாதிரியே சொல்லிவிட்டு வைத்தாள்.
சுசீலாவுக்கு மிகுந்த ஏமாற்றம். அதற்குமேல் செய்வதற்கும் ஏதுமில்லை என்று புரிந்ததில் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டார்.
*****
அன்று, இரவு உணவுக்கு வந்த அகத்தியன் மிகுந்த இறுக்கத்துடன் இருந்தான். அம்மாவும் மகளும் அவனறியாமல் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர். அமைதியாகவே உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் புகுந்துகொண்டான் அவன்.
ஒரு வார்த்தை கூடப் பேசாமல் சென்றவனின் செயல் பாதிக்க, “என்னம்மா இவன் இப்பிடி இருக்கிறான்?” என்று கவலையோடு வினவினார் சிந்தாமணி.
“விடுங்கம்மா. இவ்வளவு நாளும் பேசாம இருந்த நாங்க, இண்டைக்குத் திடீர் எண்டு பொம்பிளை பாக்கிற அளவுக்குப் போய்ட்டம் எண்டுற கோவம் போல. அதுக்கெண்டு இப்பிடியே விடேலுமா? மூண்டு வருசம் விட்டது காணாதா?” என்ற இந்திரா, அவரை உறங்க அனுப்பிவிட்டுத் தானும் உறங்கச் சென்றாள்.
கட்டிலில் சரிந்திருந்த அகத்தியன் மிகுந்த கோபத்தில் இருந்தான். அவனுக்கும் அப்பா இல்லை. அவனுடைய இருபத்தி நான்காவது வயதில் காலமாகியிருந்தார். அதன்பிறகு, வவுனியா டவுனில் அவர் நடத்திக்கொண்டிருந்த பலசரக்குக் கடையை அவனே பொறுப்பெடுத்து நடத்த ஆரம்பித்திருந்தான். அந்த நேரம், அவனை விடவும் மூன்று வயது மூத்த இந்திராவும் சுகாதாரத் திணைக்களத்தில் வேலையில் இருந்தாள்.
தந்தை இறந்து ஒரு வருடம் கழிந்த பிறகு, வயதாகிறது, இனியும் விட முடியாது, திருமணத்துக்குப் பார்ப்போம் என்று சொன்னபோதெல்லாம் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தாள் இந்திரா. திடீரென்று ஒருநாள், கஜேந்திரனை அழைத்து வந்து காதலிக்கிறேன் என்று சொல்லவும் கலங்கிப்போனார் சிந்தாமணி.
அதுவும், பல்கலையில் படிக்கும் காலத்திலேயே பார்த்துப் பழகியதாகவும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அவன், கடந்த மூன்று வருடங்களாக இங்கிலாந்தில் வேலை பார்த்தான் என்றும், அதனால்தான் திருமணத்தைத் தள்ளிப்போட்டாள் என்றும் சொன்னதை அம்மா மகன் இருவராலும் நம்பவே முடியவில்லை.
கஜேந்திரனைப் பற்றி விசாரித்தார்கள். அவர்கள் இவர்களை விட வசதியில் பல மடங்கு உயர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அதுவேறு கலக்கத்தை உண்டாக்கிற்று. ஆனால், அந்தப் பயத்திற்கு அவசியமே இல்லை என்பதுபோன்று, அவன் வீட்டினர் இவர்கள் காதலுக்குப் பச்சைக் கொடியைக் காட்டினர். கூடவே, பெண்ணெடுத்துப் பெண் கொடுக்கும் முகமாக, பொறுப்பான, நல்ல பிள்ளையான அகத்தியனுக்குத் தம் செல்ல மகளைக் கொடுக்க விரும்புகிறோம் என்று சொன்னபோது, ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கிப் போயினர். பொருத்தமும் அமோகமாகப் பொருந்தி இருந்தது. சவீதாவுக்கும் அகத்தியனுக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துப்போனது வேறு, தித்திப்பின் அளவைக் கூட்டிற்று.
இரண்டு திருமணங்களும் ஒரே நாளில் எந்தக் குறையும் இல்லாமல் நடந்தன. அவர்கள் வாழ்க்கையும் இனிதாகவே நகர்ந்தது.
அந்த ஒற்றைக் கேள்வியே நடப்பதைச் சொல்லிவிட, அகத்தியனின் முகம் கோபத்தில் சிவந்தது. தமக்கையை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, விருட்டென்று எழுந்துபோனான்.
முழுக் காரியமும் கெட்டுப்போன கவலையுடன், “இன்னொரு சின்ன மகளும் இருக்கிறா.” என்றார் சுசீலா.
“ஓ!” சிந்தாமணியின் பார்வை யசோதினியை அளந்தது.
மனத்தை நிறைக்கும் முகம். ஒடிசலான, உயர்ந்த தேகம். உண்மையில் அவர் மகனுக்கு மிகுந்த பொருத்தமாக இருப்பாள். இரண்டு பெண் பிள்ளைகள் என்றதுதான் இடித்தது. சும்மாவே இன்னும் கலியாணத்துக்கு அவன் சம்மதிக்கவில்லை. இதோ, இப்போதுகூட கோபத்தோடுதான் எழுந்து போனான். இதில், இரண்டு பிள்ளைகள் என்றால் ஊரைவிட்டே ஓடிவிடுவானாக இருக்கும்.
சுசீலாவை மட்டுமே எதிர்பார்த்து வந்த யசோதினி, அங்கிருந்த புதியவர்களைக் கண்டு, சுசீலாவுக்குத் தெரிந்தவர்கள் போலும் என்றுதான் முதலில் எண்ணினாள். ஆனால், அவள் மேல் ஆராய்ச்சியாகப் படிந்த அவர்கள் பார்வையும், விருட்டென்று எழுந்துபோன அந்த மனிதனின் செயலும் அப்படியில்லை என்று சொல்லிற்று.
அப்படி என்ன என்கிற கேள்வி உள்ளே ஓடினாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. மூவருக்கும் பொதுவான ஒரு முறுவலோடு மருந்தை எடுத்து சுசீலாவிடம் கொடுத்தாள்.
“நன்றியம்மா கொண்டுவந்து தந்ததுக்கு. இந்தக் காலாலதான் இவ்வளவும். இல்லாட்டி நானே வந்து வாங்கி இருப்பன்”.
“இதில என்ன இருக்கு? பக்கத்திலதானே. நான் சில நேரம் பூந்தோட்டம் வரைக்குமே கொண்டுபோய்க் குடுத்திருக்கிறன். இண்டைக்கு மகிளாவும் பார்மசில நிக்கிறதால ஒரு பிரச்சினையும் இல்ல.” மருந்தின் தொகையைச் சொல்லி, அவர் தந்த பணத்தை எண்ணி வாங்கிக்கொண்டாள்.
“அது மருந்துக்கு. இது கொண்டுவந்து தந்ததுக்கு.” பெட்ரோலுக்கும் பணம் கொடுத்தார் சுசீலா.
“அதெல்லாம் வேண்டாம் அக்கா. பார்மசில நோட் பண்ணிவிட்டா மாத முடிவில காசு தருவினம். சரியக்கா, நேரமாகுது நான் வெளிக்கிடப்போறன்.” நயமாகவே மறுத்தவள் மற்ற இருவருக்கும் மெல்லிய தலையசைப்பைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள்.
அவள் கண்ணுக்கு மறையும் வரையில் அமைதியாக இருந்துவிட்டு, என்ன சொல்வார்கள் என்று தெரிந்திருந்தாலும் அவர்களைக் கேள்வியாக ஏறிட்டார் சுசீலா.
“ரெண்டு பிள்ளைகளோட, அதுவும் இவ்வளவு வளந்த பிள்ளையோட எங்களுக்குச் சரி வராது சுசீலா.”
“பரவாயில்லை அக்கா. எனக்குத் தெரிஞ்ச, நல்ல பிள்ளை எண்டதும் சும்மா உங்களுக்குக் காட்டிப் பாத்தனான்.” தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சொன்னவர், அதே புரோக்கரின் நம்பரை அவர்களுக்கும் கொடுத்தார்.
இவை அனைத்தும் நடந்து முடிந்த பிறகுதான் அங்கு வந்தான் அகத்தியன். அவன் முகம் இறுகிக் கிடந்தது.
“தம்பி, சும்மா சும்மா கோவப்படாத. நான் உனக்கு நடந்ததச் சுசீலாக்குச் சொன்னனான். அப்பதான் இந்தப் பிள்ளையை வரச் சொன்னவள். அந்தப் பிள்ளைக்கே இங்க என்ன நடந்தது எண்டு தெரியாது. அதால நீ எதையாவது சொல்லாத!” என்றார் சிந்தாமணி வேகமாக.
சுசீலாவும் இருந்ததில் அவனாலும் தன் கோபத்தை அவரிடம் வெளிப்படையாகக் காட்ட முடியாமல் போயிற்று.
*****
பார்மசிக்கு வந்த யசோதினிக்கு அவர்கள் பற்றிய யோசனைதான். அந்த ஆண் எழுந்துபோன வேகமும், பெண்கள் இருவரும் பார்த்த பார்வையும் சாதாரணமாகத் தெரியவில்லை. அடுத்தமுறை சுசீலாவைப் பார்த்தால் கேட்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு தன் வேலைகளைப் பார்த்தாள்.
கோயிலில் இருந்து வீடு வந்த சுசீலாவுக்கு மனதே சரியில்லை. இரு தரப்பும் நல்ல மனிதர்கள். அவர்களை இணைக்க முடியாமல் போயிற்றே! இரண்டு சின்னக் குழந்தைகள். அவர்களை ஒரு பெரும் தடையாகப் பார்ப்பது மனத்தைப் பிசைந்தது. கூடவே, இதை யசோதினியிடம் சொல்லாமல் இருப்பது தவறு என்று மனம் எடுத்துரைக்க, அவளுக்கு அழைத்து நடந்ததைச் சொன்னார்.
“சொல்லாம கொள்ளாம உங்களைக் கூப்பிட்டுக் காட்டினதுக்குக் குறை நினைக்காதீங்கோம்மா. உங்கள நேராப் பாத்தா சில நேரம் பிடிக்கும் எண்டு நினைச்சன். அதைவிட, அவே ஓம் எண்டு சொல்லாம உங்களுக்கு நம்பிக்கையைத் தாறதும் பிழை எல்லோ. ஆனா, அவன் கலியாணமே வேண்டாம் எண்டு நிக்கிறான்.” என்றார் நயமாக.
அதுதான் அவ்வளவு வேகமாக எழுந்து ஓடினானா என்று உள்ளூர ஓட, “எனக்கு விளங்குது அக்கா. நான் குறையும் நினைக்கேல்ல. ஆனா, இனி இது வேண்டாம். எனக்கு உண்மையா இப்ப அந்த ஐடியா இல்ல.” என்று நல்ல மாதிரியே சொல்லிவிட்டு வைத்தாள்.
சுசீலாவுக்கு மிகுந்த ஏமாற்றம். அதற்குமேல் செய்வதற்கும் ஏதுமில்லை என்று புரிந்ததில் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டார்.
*****
அன்று, இரவு உணவுக்கு வந்த அகத்தியன் மிகுந்த இறுக்கத்துடன் இருந்தான். அம்மாவும் மகளும் அவனறியாமல் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர். அமைதியாகவே உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் புகுந்துகொண்டான் அவன்.
ஒரு வார்த்தை கூடப் பேசாமல் சென்றவனின் செயல் பாதிக்க, “என்னம்மா இவன் இப்பிடி இருக்கிறான்?” என்று கவலையோடு வினவினார் சிந்தாமணி.
“விடுங்கம்மா. இவ்வளவு நாளும் பேசாம இருந்த நாங்க, இண்டைக்குத் திடீர் எண்டு பொம்பிளை பாக்கிற அளவுக்குப் போய்ட்டம் எண்டுற கோவம் போல. அதுக்கெண்டு இப்பிடியே விடேலுமா? மூண்டு வருசம் விட்டது காணாதா?” என்ற இந்திரா, அவரை உறங்க அனுப்பிவிட்டுத் தானும் உறங்கச் சென்றாள்.
கட்டிலில் சரிந்திருந்த அகத்தியன் மிகுந்த கோபத்தில் இருந்தான். அவனுக்கும் அப்பா இல்லை. அவனுடைய இருபத்தி நான்காவது வயதில் காலமாகியிருந்தார். அதன்பிறகு, வவுனியா டவுனில் அவர் நடத்திக்கொண்டிருந்த பலசரக்குக் கடையை அவனே பொறுப்பெடுத்து நடத்த ஆரம்பித்திருந்தான். அந்த நேரம், அவனை விடவும் மூன்று வயது மூத்த இந்திராவும் சுகாதாரத் திணைக்களத்தில் வேலையில் இருந்தாள்.
தந்தை இறந்து ஒரு வருடம் கழிந்த பிறகு, வயதாகிறது, இனியும் விட முடியாது, திருமணத்துக்குப் பார்ப்போம் என்று சொன்னபோதெல்லாம் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தாள் இந்திரா. திடீரென்று ஒருநாள், கஜேந்திரனை அழைத்து வந்து காதலிக்கிறேன் என்று சொல்லவும் கலங்கிப்போனார் சிந்தாமணி.
அதுவும், பல்கலையில் படிக்கும் காலத்திலேயே பார்த்துப் பழகியதாகவும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அவன், கடந்த மூன்று வருடங்களாக இங்கிலாந்தில் வேலை பார்த்தான் என்றும், அதனால்தான் திருமணத்தைத் தள்ளிப்போட்டாள் என்றும் சொன்னதை அம்மா மகன் இருவராலும் நம்பவே முடியவில்லை.
கஜேந்திரனைப் பற்றி விசாரித்தார்கள். அவர்கள் இவர்களை விட வசதியில் பல மடங்கு உயர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அதுவேறு கலக்கத்தை உண்டாக்கிற்று. ஆனால், அந்தப் பயத்திற்கு அவசியமே இல்லை என்பதுபோன்று, அவன் வீட்டினர் இவர்கள் காதலுக்குப் பச்சைக் கொடியைக் காட்டினர். கூடவே, பெண்ணெடுத்துப் பெண் கொடுக்கும் முகமாக, பொறுப்பான, நல்ல பிள்ளையான அகத்தியனுக்குத் தம் செல்ல மகளைக் கொடுக்க விரும்புகிறோம் என்று சொன்னபோது, ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கிப் போயினர். பொருத்தமும் அமோகமாகப் பொருந்தி இருந்தது. சவீதாவுக்கும் அகத்தியனுக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்துப்போனது வேறு, தித்திப்பின் அளவைக் கூட்டிற்று.
இரண்டு திருமணங்களும் ஒரே நாளில் எந்தக் குறையும் இல்லாமல் நடந்தன. அவர்கள் வாழ்க்கையும் இனிதாகவே நகர்ந்தது.