யசோதினியை அந்தப் பார்வை பாதிக்காமல் இல்லை. ஆனால், பெரிதாகப் பழக்கம் இல்லாதவர்களோடு பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்று தெரியாதா அவனுக்கு? அவன் அனுப்புவானா, தன் அக்கா மகளை?
அதன்பிறகு, பள்ளிக்கூட வாசலில் கண்டாலும் அவளைத் திரும்பியும் பார்ப்பதில்லை அகத்தியன். அவள் அவனைக் கவனிப்பதேயில்லை. சின்னவர்கள் பள்ளிக்கூடத்தில் காண்கிற பொழுதுகளில் கதைத்து, விளையாடி என்று நல்ல நண்பர்களாகியிருந்தனர்.
இப்படிக் கடந்த நாள்களில் அகத்தியனுக்கு ஒரு குறிப்புப் பொருந்தி வந்தது. அந்தப் பெண்ணும் விவாகரத்தானவள்; நல்ல குடும்பம்; வசதியும் இவர்களைப் போன்றுதான். இந்தமுறை, அனுபவம் கற்றுத் தந்த பாடமாக, கஜேந்திரனைக் கொண்டு பெண் எப்படியானவள், ஏன் முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது என்று அனைத்தையும் விசாரித்துத் தெளிந்தாள் இந்திரா. பொருத்தமும் பொருந்தி இருந்தது.
அவளுக்கு மிகுந்த சந்தோசம். இது சரியாக அமைந்துவிட்டால் சவீதாவின் வரவுக்கும் சேர்த்தே முடிவு கட்டிவிடுவாளே! ஆவலும் எதிர்பார்ப்புமாக அகத்தியனிடம் ஃபோட்டோவைக் காட்டினாள்.
அவன் கையில் கூட வாங்க மறுத்தான்.
“அக்கா, எனக்கு இதெல்லாம் வேண்டாம் எண்டு உங்களுக்கு எத்தின தரம் சொல்லுறது?”
“என்ன வேண்டாம்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்பிடித் தனியாவே இருக்கப் போறாய்?” என்றுகொண்டு வந்தார் சிந்தாமணி. இத்தனை நாள்களாக எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன் முடிவிலேயே நிற்கிறானே என்கிற கோபம் அவருக்கு.
“என்னம்மா கதைக்கிறீங்க? நான் எங்க தனி? நீங்க, அக்கா, அத்தான், பிள்ளைகள் எல்லாரும் எங்க போய்ட்டீங்க?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
“ஆக, காலத்துக்கும் நீ எங்களை நிம்மதியா இருக்கவிடப் போறேல்ல.” என்றவர், “உனக்கு விளங்கேல்லையாம்மா? அவன் மறைமுகமா எங்களுக்குத் தண்டனை தாறான். நீங்க பாத்துத் தந்த பொம்பிளையத்தான் கட்டினான், என்ர வாழ்க்கை எப்பிடி நாசமாப் போச்சுது பாத்தீங்களா எண்டு கேக்காமக் கேக்கிறான்!” என்று சொன்னார் மகளிடம்.
இந்திராவின் மனம் கலங்கிப் போயிற்று. அப்படித்தானா என்று அவள் பார்க்க, “அம்மா!” என்று அதட்டினான் அகத்தியன்.
“என்ன விசர்க் கதையெல்லாம் கதைக்கிறீங்க? என்ர தாய் சகோதரத்தைப் பற்றி அப்பிடி நினைப்பனா நான்?” என்றவன் குரலில் ஆத்திரத்தோடு சேர்ந்து ஆதங்கமும் நிறைந்திருந்தது.
சிந்தாமணி எதற்கும் அசைவதாக இல்லை. “சும்மா நடிக்காத தம்பி! நான் உண்மையாத்தான் சொல்லுறன். உனக்கு எங்களில கோபம்தான். அதுதான் இவ்வளவு பிடிவாதமா இருக்கிறாய். இல்லாம, வயித்தில பிள்ளையோட இருக்கிறவள், அலஞ்சு திரிஞ்சு உனக்கு எண்டு ஒருத்தியத் தேடிக்கொண்டு வந்தா, கொஞ்சம் கூட யோசிக்காம வேண்டாம் எண்டு சொல்லுவியா?” என்றார் அவர்.
“நான்தான் வேண்டாம் எண்டு சொல்லுறனே. பிறகு என்னத்துக்கு அக்கா தேவை இல்லாம அலையிறா?” என்றவனை இடைமறித்து, “உண்மையாவாடா தம்பி? அதுதான் இவ்வளவு பிடிவாதமா நிக்கிறியா? என்னாலதான் உன்ர வாழ்க்கை இப்பிடி ஆயிற்றுது எண்டு நினைக்கிறியா?” என்று கண்ணீர் வழியக் கேட்ட தமக்கையைக் கண்டு, பதறியே போனான்.
“என்னக்கா நீங்க? அம்மாதான் யோசிக்காமக் கதைக்கிறா எண்டா நீங்களும் யோசிக்க மாட்டீங்களா? நான் அப்பிடி நினைப்பனா?”
அவன் சொல்வதை விளங்கிக்கொள்ளும் நிலையில் அவள் இல்லை. அன்னையின் வார்த்தைகளிலேயே சிக்குண்டு நின்றாள்.
“அப்பிடி இல்லை எண்டா ஓம் எண்டு சொல்லனடா. உன்ன நினச்சு நினைச்சே எனக்கு ஏதும் ஆகிடுமோ எண்டு பயமா இருக்குத் தம்பி.” என்றதும் நடுங்கியே போனார் சிந்தாமணி.
“போதுமா உனக்கு? இப்பச் சந்தோசம்தானே? வாயும் வயிறுமா இருக்கிறவள் சொன்னதைக் காது குளிரக் கேட்டுட்டாய் எல்லோ! இனி நிம்மதியா இரு!” என்று அவர் கோபத்தில் குமுற, தலையைப் பற்றிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான்.
சும்மாவே, காலம் கடந்து அவள் தாய்மையுற்றது எல்லோரையும் பயமுறுத்திக்கொண்டிருக்க, என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்?
அதற்குமேல் தன் பிடியில் நிற்கத் தைரியமற்று, அது கொடுத்த செயலற்ற கோபமும் சேர, “என்னவாவது செய்து துலைங்கோ! ஆனா, திரும்பவும் ஏதாவது நடக்கட்டும். அதுக்குப் பிறகு என்னக் கண்ணாலயும் பாக்க மாட்டீங்க!” என்றுவிட்டுப் போனான் அவன்.
அன்னை, மகள் இருவர் முகத்திலும் கண்ணீர் வழிந்தது. அவன் சம்மதித்துவிட்டதை எண்ணி மகிழ முடியவில்லை. அடுத்த கட்டத்துக்கு அந்தத் திருமணப் பேச்சு வார்த்தையை நகர்த்த அவர்கள் ஆயத்தமானபோது, அங்கிருந்து வேண்டாம் என்கிற பதில் வந்தது.
அப்படியே அமர்ந்துவிட்டாள் இந்திரா.
“ஏனாம்?” என்ற கேள்விக்கு, முதல் மனைவி இவனின் அத்தானின் தங்கை என்பது காரணமாம் என்றார் புரோக்கர்.
அவர்களின் பெண் முதல் திருமணத்தில் பட்டதே போதுமாம். முதல் மனைவியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, நல்லது கெட்டதுகளில் அவளைச் சந்தித்துக்கொண்டு நிம்மதியான ஒரு வாழ்க்கை அமையாதாம் என்று சொன்னபோது, இதென்ன பேச்சு என்று திகைத்துப் போனாள்.
சிந்தாமணியுமே இப்படி ஒரு சிக்கல் வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதையறிந்த அகத்தியனுக்கு அப்பாடி என்றுதான் இருந்தது.
*****
அந்த வாரம், வியாழனும் வெள்ளியும் போயா நாள்களாக வர இருந்ததில் புதன்கிழமையோடு பள்ளிக்கூடம் முடிந்து, நீண்ட வார இறுதி கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் இருந்தனர் பிள்ளைகள். அன்று திங்கட்கிழமை. தூரிகாவை அழைத்துச் செல்ல வந்த யசோதினியிடம் ஓடிவந்தாள் தாமினி.
அவள் வந்த வேகத்தில் முறுவல் அரும்ப, “என்னம்மா?” என்று வினவினாள் யசோ.
“அன்ட்ரி, பிறகு ஒரு நாளைக்குப் பாப்பம் எண்டு அண்டைக்குச் சொன்னனீங்க எல்லா. இப்ப நாலு நாள் லீவு வருது. தூரி அக்காக்கு எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுதாம். நான் கேட்டுட்டன். ஹோம் வேர்க் தந்தாலும் செய்ய நாலு நாள் டைம் இருக்கு. அதால புதன்கிழமை என்னோட விடுறீங்களா?” என்றாள் கொஞ்சும் குரலில்.
இப்படி, எந்தப் பக்கத்தாலும் மறுக்க வழியற்ற நிலையில் வைத்துக் கேட்பாள் என்று எதிர்பாராத யசோ, சட்டென்று பதில் சொல்ல வராமல் நின்றாள். என்ன சொல்ல என்கிற தடுமாற்றத்துடன் அகத்தியனைப் பார்த்தாள்.
அவனுக்கு அவள் திணறல் மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. தன் மருமகளின் புத்தி சாதுர்யத்தை மெச்சிக் கொண்டு, இப்போது என்ன சொல்வாய் என்பதுபோல் அவளைப் பார்த்தான்.
“மாட்டன் எண்டு சொல்லக் கூடாது அன்ட்ரி. நீங்கதான் பிறகு ஒருநாள் எண்டு சொன்னனீங்க. பேச்சு மாறக் கூடாது.” என்றதும் சிரிப்பரும்பிற்று.
இதற்குள் தூரிகாவும் வந்திருந்தாள். அவள் முகத்திலும் அம்மா மறுத்துவிடக் கூடாது என்கிற தவிப்பிருக்க, “என்னால இடைல வந்து கூட்டிக்கொண்டு வரேலாது. கூட்டிக்கொண்டு போனா உங்கட மாமாதான் கொண்டுவந்து விடவும் வேணும். அது அவருக்குச் சிரமம் எல்லா…” என்றவளை இடைமறித்து, “அத நான் சொல்லோணும்.” என்றான் அகத்தியன்.
“புதன்கிழமை உங்களைக் கூட்டிக்கொண்டு போக உங்கட அம்மா இங்க வர வேண்டாம். நீங்க பள்ளிக்கூடம் முடிய அப்பிடியே எங்களோடயே வாங்கோ. பிறகு ஒரு ஆறுமணி போல மாமா கொண்டுவந்து உங்கட அம்மாட்ட விட்டுவிடுவன்.” அன்றைக்கு அவள் செய்தது போன்று, வேண்டுமென்றே தூரிகாவிடம் சொன்னான்.
இதென்ன சிறுபிள்ளைத்தனம் என்று சிரிப்பும் சினமும் ஒருங்கே தோன்ற, “இல்ல, புதன்கிழமை நான் வந்தபிறகே நீங்க கூட்டிக்கொண்டு போங்கோ.” என்று, அவனை நேராகப் பார்த்துச் சொன்னாள் யசோ.
“என்னத்துக்குச் சும்மா தேவையில்லாம அலைய? ரெண்டு பேரையும் ஏத்தினதும் நான் சொல்லுறன், ஃபோன் நம்பர் தாங்க.” இப்போது அவனும் அவளிடம் நேராகவே பேசினான்.
இவனிடம் கொடுப்பதா என்று அவள் யோசிக்கையிலேயே, “077…” என்று ஆரம்பித்து, கடகடவென்று அன்னையின் இலக்கங்களைச் சொல்லி முடித்திருந்தாள் தூரிகா.
‘கடவுளே இந்தப் பிள்ளையோட…’ தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது யசோக்கு. அந்தரம் ஆபத்திற்கு உதவும் என்று பாடமாக்க வைத்தது இப்படியா அவளை மாட்டிவிட வேண்டும்?
அவள் முகத்தைப் பார்த்த அகத்தியனுக்கு உதட்டோரம் மெல்லிய சிரிப்பில் துடித்தது. எப்போதும் அழுத்தமாக மட்டுமே பார்த்துப் பழகியவளின் இந்தச் செய்வதறியாத தடுமாற்றம், பார்க்க நன்றாய் இருந்தது. பார்வையால் அவளைச் சீண்டிவிட்டு, அவள் நம்பரைப் பதிந்து, அங்கு வைத்தே அவளுக்கு அழைத்துச் சரி பார்த்துக்கொண்டு தாமினியோடு புறப்பட்டான்.
அதன்பிறகு, பள்ளிக்கூட வாசலில் கண்டாலும் அவளைத் திரும்பியும் பார்ப்பதில்லை அகத்தியன். அவள் அவனைக் கவனிப்பதேயில்லை. சின்னவர்கள் பள்ளிக்கூடத்தில் காண்கிற பொழுதுகளில் கதைத்து, விளையாடி என்று நல்ல நண்பர்களாகியிருந்தனர்.
இப்படிக் கடந்த நாள்களில் அகத்தியனுக்கு ஒரு குறிப்புப் பொருந்தி வந்தது. அந்தப் பெண்ணும் விவாகரத்தானவள்; நல்ல குடும்பம்; வசதியும் இவர்களைப் போன்றுதான். இந்தமுறை, அனுபவம் கற்றுத் தந்த பாடமாக, கஜேந்திரனைக் கொண்டு பெண் எப்படியானவள், ஏன் முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது என்று அனைத்தையும் விசாரித்துத் தெளிந்தாள் இந்திரா. பொருத்தமும் பொருந்தி இருந்தது.
அவளுக்கு மிகுந்த சந்தோசம். இது சரியாக அமைந்துவிட்டால் சவீதாவின் வரவுக்கும் சேர்த்தே முடிவு கட்டிவிடுவாளே! ஆவலும் எதிர்பார்ப்புமாக அகத்தியனிடம் ஃபோட்டோவைக் காட்டினாள்.
அவன் கையில் கூட வாங்க மறுத்தான்.
“அக்கா, எனக்கு இதெல்லாம் வேண்டாம் எண்டு உங்களுக்கு எத்தின தரம் சொல்லுறது?”
“என்ன வேண்டாம்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்பிடித் தனியாவே இருக்கப் போறாய்?” என்றுகொண்டு வந்தார் சிந்தாமணி. இத்தனை நாள்களாக எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தன் முடிவிலேயே நிற்கிறானே என்கிற கோபம் அவருக்கு.
“என்னம்மா கதைக்கிறீங்க? நான் எங்க தனி? நீங்க, அக்கா, அத்தான், பிள்ளைகள் எல்லாரும் எங்க போய்ட்டீங்க?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
“ஆக, காலத்துக்கும் நீ எங்களை நிம்மதியா இருக்கவிடப் போறேல்ல.” என்றவர், “உனக்கு விளங்கேல்லையாம்மா? அவன் மறைமுகமா எங்களுக்குத் தண்டனை தாறான். நீங்க பாத்துத் தந்த பொம்பிளையத்தான் கட்டினான், என்ர வாழ்க்கை எப்பிடி நாசமாப் போச்சுது பாத்தீங்களா எண்டு கேக்காமக் கேக்கிறான்!” என்று சொன்னார் மகளிடம்.
இந்திராவின் மனம் கலங்கிப் போயிற்று. அப்படித்தானா என்று அவள் பார்க்க, “அம்மா!” என்று அதட்டினான் அகத்தியன்.
“என்ன விசர்க் கதையெல்லாம் கதைக்கிறீங்க? என்ர தாய் சகோதரத்தைப் பற்றி அப்பிடி நினைப்பனா நான்?” என்றவன் குரலில் ஆத்திரத்தோடு சேர்ந்து ஆதங்கமும் நிறைந்திருந்தது.
சிந்தாமணி எதற்கும் அசைவதாக இல்லை. “சும்மா நடிக்காத தம்பி! நான் உண்மையாத்தான் சொல்லுறன். உனக்கு எங்களில கோபம்தான். அதுதான் இவ்வளவு பிடிவாதமா இருக்கிறாய். இல்லாம, வயித்தில பிள்ளையோட இருக்கிறவள், அலஞ்சு திரிஞ்சு உனக்கு எண்டு ஒருத்தியத் தேடிக்கொண்டு வந்தா, கொஞ்சம் கூட யோசிக்காம வேண்டாம் எண்டு சொல்லுவியா?” என்றார் அவர்.
“நான்தான் வேண்டாம் எண்டு சொல்லுறனே. பிறகு என்னத்துக்கு அக்கா தேவை இல்லாம அலையிறா?” என்றவனை இடைமறித்து, “உண்மையாவாடா தம்பி? அதுதான் இவ்வளவு பிடிவாதமா நிக்கிறியா? என்னாலதான் உன்ர வாழ்க்கை இப்பிடி ஆயிற்றுது எண்டு நினைக்கிறியா?” என்று கண்ணீர் வழியக் கேட்ட தமக்கையைக் கண்டு, பதறியே போனான்.
“என்னக்கா நீங்க? அம்மாதான் யோசிக்காமக் கதைக்கிறா எண்டா நீங்களும் யோசிக்க மாட்டீங்களா? நான் அப்பிடி நினைப்பனா?”
அவன் சொல்வதை விளங்கிக்கொள்ளும் நிலையில் அவள் இல்லை. அன்னையின் வார்த்தைகளிலேயே சிக்குண்டு நின்றாள்.
“அப்பிடி இல்லை எண்டா ஓம் எண்டு சொல்லனடா. உன்ன நினச்சு நினைச்சே எனக்கு ஏதும் ஆகிடுமோ எண்டு பயமா இருக்குத் தம்பி.” என்றதும் நடுங்கியே போனார் சிந்தாமணி.
“போதுமா உனக்கு? இப்பச் சந்தோசம்தானே? வாயும் வயிறுமா இருக்கிறவள் சொன்னதைக் காது குளிரக் கேட்டுட்டாய் எல்லோ! இனி நிம்மதியா இரு!” என்று அவர் கோபத்தில் குமுற, தலையைப் பற்றிக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான்.
சும்மாவே, காலம் கடந்து அவள் தாய்மையுற்றது எல்லோரையும் பயமுறுத்திக்கொண்டிருக்க, என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்?
அதற்குமேல் தன் பிடியில் நிற்கத் தைரியமற்று, அது கொடுத்த செயலற்ற கோபமும் சேர, “என்னவாவது செய்து துலைங்கோ! ஆனா, திரும்பவும் ஏதாவது நடக்கட்டும். அதுக்குப் பிறகு என்னக் கண்ணாலயும் பாக்க மாட்டீங்க!” என்றுவிட்டுப் போனான் அவன்.
அன்னை, மகள் இருவர் முகத்திலும் கண்ணீர் வழிந்தது. அவன் சம்மதித்துவிட்டதை எண்ணி மகிழ முடியவில்லை. அடுத்த கட்டத்துக்கு அந்தத் திருமணப் பேச்சு வார்த்தையை நகர்த்த அவர்கள் ஆயத்தமானபோது, அங்கிருந்து வேண்டாம் என்கிற பதில் வந்தது.
அப்படியே அமர்ந்துவிட்டாள் இந்திரா.
“ஏனாம்?” என்ற கேள்விக்கு, முதல் மனைவி இவனின் அத்தானின் தங்கை என்பது காரணமாம் என்றார் புரோக்கர்.
அவர்களின் பெண் முதல் திருமணத்தில் பட்டதே போதுமாம். முதல் மனைவியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, நல்லது கெட்டதுகளில் அவளைச் சந்தித்துக்கொண்டு நிம்மதியான ஒரு வாழ்க்கை அமையாதாம் என்று சொன்னபோது, இதென்ன பேச்சு என்று திகைத்துப் போனாள்.
சிந்தாமணியுமே இப்படி ஒரு சிக்கல் வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதையறிந்த அகத்தியனுக்கு அப்பாடி என்றுதான் இருந்தது.
*****
அந்த வாரம், வியாழனும் வெள்ளியும் போயா நாள்களாக வர இருந்ததில் புதன்கிழமையோடு பள்ளிக்கூடம் முடிந்து, நீண்ட வார இறுதி கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் இருந்தனர் பிள்ளைகள். அன்று திங்கட்கிழமை. தூரிகாவை அழைத்துச் செல்ல வந்த யசோதினியிடம் ஓடிவந்தாள் தாமினி.
அவள் வந்த வேகத்தில் முறுவல் அரும்ப, “என்னம்மா?” என்று வினவினாள் யசோ.
“அன்ட்ரி, பிறகு ஒரு நாளைக்குப் பாப்பம் எண்டு அண்டைக்குச் சொன்னனீங்க எல்லா. இப்ப நாலு நாள் லீவு வருது. தூரி அக்காக்கு எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுதாம். நான் கேட்டுட்டன். ஹோம் வேர்க் தந்தாலும் செய்ய நாலு நாள் டைம் இருக்கு. அதால புதன்கிழமை என்னோட விடுறீங்களா?” என்றாள் கொஞ்சும் குரலில்.
இப்படி, எந்தப் பக்கத்தாலும் மறுக்க வழியற்ற நிலையில் வைத்துக் கேட்பாள் என்று எதிர்பாராத யசோ, சட்டென்று பதில் சொல்ல வராமல் நின்றாள். என்ன சொல்ல என்கிற தடுமாற்றத்துடன் அகத்தியனைப் பார்த்தாள்.
அவனுக்கு அவள் திணறல் மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. தன் மருமகளின் புத்தி சாதுர்யத்தை மெச்சிக் கொண்டு, இப்போது என்ன சொல்வாய் என்பதுபோல் அவளைப் பார்த்தான்.
“மாட்டன் எண்டு சொல்லக் கூடாது அன்ட்ரி. நீங்கதான் பிறகு ஒருநாள் எண்டு சொன்னனீங்க. பேச்சு மாறக் கூடாது.” என்றதும் சிரிப்பரும்பிற்று.
இதற்குள் தூரிகாவும் வந்திருந்தாள். அவள் முகத்திலும் அம்மா மறுத்துவிடக் கூடாது என்கிற தவிப்பிருக்க, “என்னால இடைல வந்து கூட்டிக்கொண்டு வரேலாது. கூட்டிக்கொண்டு போனா உங்கட மாமாதான் கொண்டுவந்து விடவும் வேணும். அது அவருக்குச் சிரமம் எல்லா…” என்றவளை இடைமறித்து, “அத நான் சொல்லோணும்.” என்றான் அகத்தியன்.
“புதன்கிழமை உங்களைக் கூட்டிக்கொண்டு போக உங்கட அம்மா இங்க வர வேண்டாம். நீங்க பள்ளிக்கூடம் முடிய அப்பிடியே எங்களோடயே வாங்கோ. பிறகு ஒரு ஆறுமணி போல மாமா கொண்டுவந்து உங்கட அம்மாட்ட விட்டுவிடுவன்.” அன்றைக்கு அவள் செய்தது போன்று, வேண்டுமென்றே தூரிகாவிடம் சொன்னான்.
இதென்ன சிறுபிள்ளைத்தனம் என்று சிரிப்பும் சினமும் ஒருங்கே தோன்ற, “இல்ல, புதன்கிழமை நான் வந்தபிறகே நீங்க கூட்டிக்கொண்டு போங்கோ.” என்று, அவனை நேராகப் பார்த்துச் சொன்னாள் யசோ.
“என்னத்துக்குச் சும்மா தேவையில்லாம அலைய? ரெண்டு பேரையும் ஏத்தினதும் நான் சொல்லுறன், ஃபோன் நம்பர் தாங்க.” இப்போது அவனும் அவளிடம் நேராகவே பேசினான்.
இவனிடம் கொடுப்பதா என்று அவள் யோசிக்கையிலேயே, “077…” என்று ஆரம்பித்து, கடகடவென்று அன்னையின் இலக்கங்களைச் சொல்லி முடித்திருந்தாள் தூரிகா.
‘கடவுளே இந்தப் பிள்ளையோட…’ தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது யசோக்கு. அந்தரம் ஆபத்திற்கு உதவும் என்று பாடமாக்க வைத்தது இப்படியா அவளை மாட்டிவிட வேண்டும்?
அவள் முகத்தைப் பார்த்த அகத்தியனுக்கு உதட்டோரம் மெல்லிய சிரிப்பில் துடித்தது. எப்போதும் அழுத்தமாக மட்டுமே பார்த்துப் பழகியவளின் இந்தச் செய்வதறியாத தடுமாற்றம், பார்க்க நன்றாய் இருந்தது. பார்வையால் அவளைச் சீண்டிவிட்டு, அவள் நம்பரைப் பதிந்து, அங்கு வைத்தே அவளுக்கு அழைத்துச் சரி பார்த்துக்கொண்டு தாமினியோடு புறப்பட்டான்.
Last edited: