அத்தியாயம் 14
அவனிடம் சொன்னதுபோல அரக்கப்பரக்க ஓடிவந்து, ‘இவ்வளவு நேரம் அப்பிடி எங்க போனனீ?’ என்கிற தமக்கையின் விசாரணையை எதிர்கொண்டு, ‘பிள்ளைகள் உங்களைக் காணாம தவிச்சுப் போய்ட்டினம்மா. இனி இப்பிடி லேட்டாக்காதீங்கோ!’ என்ற அன்னையைச் சமாளித்து, நாள் முழுக்கத் தன்னைக் காணாத ஏக்கத்தில் சிணுங்கிய சிந்தூரியைத் தேற்றி, காய்ச்சல் இல்லாதபோதும் சோர்ந்து தெரிந்த தூரிகாவைக் கவனித்து, அவர்களுக்கு உணவு கொடுத்து, நடுநடுவே தன்னையும் கவனித்து என்று எல்லா வேலைகளையும் முடித்தபோது, உண்மையில் அவள் முதுகு ஒடிந்தே போயிற்று.
பிள்ளைகளுக்கு நடுவே படுத்ததுதான் தெரியும். அவள் விழிகள் உறக்கத்தில் சொக்கிப்போயின. அகத்தியன் சொன்னவற்றைப் பற்றி யோசிக்கக் கூட நேரமிருக்கவில்லை.
ஆனால், அடுத்தநாள் காலை எழுந்ததில் இருந்து அந்த யோசனைதான். இன்னொரு வாழ்க்கையைத் தேடும்போது இருந்த துணிவு, முடிவெடுக்கும் நிலைக்கு வந்தபோது இல்லாது போயிற்று. பலவிதப் பயங்களும் குழப்பங்களும் நெஞ்சைக் கவ்வின.
சொன்னதுபோல பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருப்பானா, அல்லது, இப்போது இனிக்க இனிக்கப் பேசிவிட்டு நாளைக்கு மாறிவிடுவானா? மாற்றாந்தகப்பனின் பிள்ளைகள் என்று தள்ளி வைத்துவிட்டான் என்றால் அதன்பிறகு பிள்ளைகளின் நிலை? அதை நினைக்கவே நெஞ்சுக்குள் என்னவோ அடைத்துக்கொண்டு வந்தது.
இப்படியெல்லாம் அளவுக்கதிகமாக யோசித்து, கிடைக்கிற நல்ல வாழ்க்கையை உதறத்தான் வேண்டுமா என்றும் ஓடிற்று.
சுசீலாவின் கணவர், பெற்ற மகனையே திரும்பிப் பார்க்காமல்தானே இருக்கிறார். எத்தனையோ வீடுகளில் சொந்தத் தகப்பன் கூடவே இருந்தும் பிள்ளைகள் மீது அக்கறையற்று இருப்பதில்லையா? அந்த வீட்டுத் தாய், தன் பிள்ளைகளை வளர்க்காமலா விட்டுவிடுகிறார்? ஒன்றுக்கும் உதவாத அந்தக் கணவனையும் சேர்த்து இழுத்துக்கொண்டு குடும்பத்தைக் கொண்டுதானே போகிறார். குறைந்தபட்சமாக அந்த நிலைக்கு அகத்தியன் தன்னைக் கொண்டுவர மாட்டான் என்று நம்பினாள்.
ஆக, எதுவும் இரண்டாம் திருமணத்தில் மட்டுமேதான் என்றில்லை. அப்படி வந்தால், ‘இரண்டாம் திருமணம்’ என்பது சொல்வதற்கான ஒரு காரணமாகிறது. அவளுக்கு ஏனோ, ‘சாவுக்கும் சாட்டு வேணுமாம் ஆச்சி.’ என்று அன்னை அடிக்கடி சொல்வது நினைவில் வந்து போனது.
பார்மசிக்கு வந்து சுசீலாவுக்கு அழைத்துப் பேசினாள். அகத்தியன் தன்னோடு கதைத்ததைச் சொல்லி, தன் பயங்களையும் குழப்பங்களையும் பகிர்ந்துகொண்டாள். ஏனோ, கமலாம்பிகையிடம் கூடக் கிடைக்காத ஆறுதலும், மனம் விட்டுப் பேசும் தயக்கமற்ற நிலையும் சுசீலாவிடம் கிடைத்தது.
அவரோ அவள் சொன்னவற்றைக் கேட்டு அகமகிழ்ந்து போனார். “கடவுளே, எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா? உங்க ரெண்டுபேரைப் பற்றியும் நான் நினைக்காத நாள் இல்ல. இன்னொரு வாழ்க்கைக்கு ஆசைப்படுற பிள்ளைகளுக்கு ஒரு நல்லதச் செய்து வைக்காம இருக்கிறது எவ்வளவு பிழையோ, அவ்வளவு பிழை விருப்பமே இல்லாத பிள்ளைகளைச் சேர்த்து வைக்கிறதும் எண்டு யோசிச்சுப்போட்டுத்தானம்மா பேசாம இருந்தனான். இப்பதான் எனக்கு மனம் நிறைஞ்சு இருக்கு.” என்று அவர் சொன்னபோது அவளும் நெகிழ்ந்துபோனாள்.
“அர்த்தமே இல்லாததுகளை யோசிச்சுப் பயப்பிடாதீங்கோ யசோ. நான் குமர்ப்பிள்ளையா இருந்த காலத்தில இருந்து அவே எல்லாரையும் எனக்குத் தெரியும். சோலி சுரட்டுக்குப் போகாத அருமையான குடும்பம். உங்களுக்கு மட்டும் இது ரெண்டாவது கலியாணம் இல்ல. தன்ர வாழ்க்கையைச் சந்தோசமாக் கொண்டுபோக வேணும் எண்டுற ஆசை, அவனுக்கும் இருக்கும் தானேம்மா. சவீதா குடும்பம் வேற பக்கத்திலேயே இருக்கு. உங்களுக்கு அகத்தியன் சொன்னானோ தெரியாது, அவன் அண்டைக்கே உங்களைத்தான் கட்டப்போறன் எண்டு சவீதா குடும்பத்துக்கு முன்னாலேயே சொல்லிட்டானாம். அப்பிடிச் சொல்லுறவனாம்மா உங்கட பிள்ளைகளைப் பிரிச்சுப் பாப்பான்? ஒருநாளும் அப்பிடி நடக்காது. கண்டதையும் யோசிச்சது, பயந்தது, தனியா இருந்தது எல்லாம் போதும் யசோ. எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைச்சாத்தான் ஒண்டைச் செய்வன் எண்டு நினைச்சா அது கடைசிவரைக்கும் நடக்காது. எப்பவும் புதுசு புதுசாக் கேள்வியும் பயமும் வந்துகொண்டேதான் இருக்கும். உள்ளுணர்வு சொல்லுறபடி நடக்கிறதுதான் பல விசயங்களுக்கு நல்லது. நீங்க குறிப்பக் கொண்டு வாங்கோ. நான் நாளைக்கு பார்மசிக்கே வந்து வாங்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.
கலக்கம் முற்றிலுமாக அகன்றிராதபோதும் அதற்குமேல் அவளால் யோசிக்க முடியவில்லை. அவர் சொன்னதுபோல, யோசிக்க யோசிக்க மனம் இன்னுமே குழம்பிய குட்டையாகத்தான் மாறிற்று. கேள்விகள் புதிது புதிதாகப் பிறந்துகொண்டே இருந்தன. அச்சங்களும் கூடிக்கொண்டேதான் போயின.
ஆனால், சவீதா குடும்பத்தினர் முன்னேயே அவன் தன்னைத்தான் மணக்கப் போவதாகச் சொன்னானாம் என்பது, ஏதோ ஒரு பெரிய நம்பிக்கையை அவளுக்குத் தந்திருந்தது.
இன்னும் வீட்டில் சொல்லவில்லையே என்கிற கலக்கம் இருந்தாலும் அடுத்தநாள் குறிப்பை எடுத்துக்கொண்டு வந்தாள்.
அங்கே சொன்ன பிறகு இங்கே சரிவராமல் போனால், வீட்டில் அவள் நிலை இன்னும் மோசமாகிவிடும். முதல் இங்கே என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, அங்குச் சொல்வோம் என்று முடிவெடுத்துக்கொண்டாள்.
குறிப்பை வாங்குவதற்காகக் காலையிலேயே வந்திருந்தார் சுசீலா.
“குறிப்புப் பொருந்தினா சொல்லுங்கோ அக்கா. நான் முதல் பிள்ளைகளோட கதைக்க வேணும். அம்மாவும் அக்காவும் என்ன சொல்லுவீனம் எண்டு தெரியாது. அதால, இன்னும் எதுவும் உறுதியா முடிவாகேல்ல எண்டும் சொல்லுங்கோ.” என்று சொல்லிக் கொடுத்தாள்.
அதன்பிறகு, அவளுக்கு அதைப்பற்றி யோசிக்க நேரமில்லை. பார்மசிக்கு கொழும்பிலிருந்து புது இருப்புகள் வந்து இறங்கியிருந்தன. முதலாளியும் கடைக்கு வந்திருந்தார். அவர் கணக்கு வழக்குகளைப் பார்க்க, அவளும் மகிளாவுமாகச் சேர்ந்து கடையையும் பார்த்து, வந்து இறங்கியவற்றைச் சரிபார்த்து எடுத்துவைக்க என்று நேரம் ஓடிற்று.
முதலாளி தன் வேலைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டதும், “யசோக்கா, சின்ன ரெஸ்ட் எடுக்காம இனி என்னால ஏலாது. ஒரு நிமிசம் இருங்கோ, தேத்தண்ணியும் சாப்பிட ஏதாவதும் வாங்கிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு, அருகில் இருக்கும் தேநீர்க் கடைக்கு ஓடினாள் மகிளா.
அந்த இடைவெளியில் கைப்பேசியை எடுத்துப்
பார்த்தாள். அகத்தியன் மூன்று முறை அழைத்திருந்தான். ஏனோ? யோசனையோடு அவனுக்குத் திருப்பி அழைத்தாள்.
அழைப்பை ஏற்றதுமே, “நான் உங்கள ஆகத் தொந்தரவு செய்றேனா?” என்றுதான் கேட்டான் அவன். குரலில் மெல்லிய இறுக்கம் தெரிந்தது.
“இல்லையே ஏன்?” புருவங்கள் சுருங்க வினவினாள்.
“இல்ல, முந்தநாள் நான் போட்ட மெசேஜுக்கு ரெண்டு மணித்திலாயத்துக்குப் பிறகுதான் பதில் வந்தது. நேற்று எடுத்து ஏதாவது சொல்லுவீங்க எண்டு எதிர்பாத்தனான். சத்தமே இல்ல. இண்டைக்கு மூண்டு தரம் எடுத்தும் நீங்க கதைக்கேல்ல. இதெல்லாம், தள்ளியே நில்லு எண்டு சொல்லுற மாதிரியே இருக்கு. அப்பிடித்தான் எண்டா நேராச் சொல்லுங்கோ.” என்றவனின் பேச்சில் அவளுக்குச் சினம் உண்டாயிற்று.
“முந்தநாள் நான் வீட்டை போகவே லேட். பிள்ளைக்கு வருத்தம். அவவைப் பாக்கோணும். நாள் முழுக்க அம்மா மூண்டு பிள்ளைகளை வச்சுப் பாக்கிறவா. அண்டைக்கு நாலுபேர். அவேயையும்(அவர்களையும்) பாத்து ரெண்டு வீட்டுக்குச் சமைக்க அவவால ஏலாது. கறி வச்சிருந்தாலும் ரொட்டியோ, புட்டோ, இடியப்பமோ ஏதோ ஒண்டு நான் போய்த்தான் செய்யவேணும், அடுத்தநாளுக்கு தேவையானதுகளையும் கவனிக்க வேணும். இதையெல்லாம் பாப்பேனா, இல்ல, ஃபோன எடுத்து வச்சுக்கொண்டு ஆர், எப்ப மெசேஜ் அனுப்புவீனம், பதில் சொல்லலாம் எண்டு பாத்துக்கொண்டு இருப்பேனா?” என்றாள் சூடான குரலில்.
“ஓ சொறி!” என்றான் இறங்கிய குரலில். “வேலையா இருந்திருப்பீங்க எண்டு நினைச்சனான்தான். எண்டாலும் இந்தளவுக்கு யோசிக்கேல்ல.”
ஆனால், அவள் சினம் குறையவில்லை. “இங்கயும் நான் ஒண்டும் சும்மா இருந்து சம்பளம் வாங்கேல்ல. நீங்க எடுக்கிற நேரமெல்லாம் கதைச்சுக்கொண்டு இருக்க.” என்றாள்.
“அதுதான் சொறி சொல்லிட்டேனே.”
காரணத்தைக் கேட்காமலே கோபப்பட்டுவிட்டு என்ன மன்னிப்பு? அவளுக்குக் கோபம் போகமாட்டேன் என்றது.
“யசோ.”
முதன் முறையாக அவள் பெயர் அவன் வாயிலிருந்து ஒலித்தது. தேகத்தில் ஒரு விதமாகச் சிலிர்ப்போட அப்படியே நின்றாள்.
“இன்னும் கோவமா?” அவன் குரல் தழைந்தே வந்தது.
“ஏன் எடுத்தனீங்க?”
“அடக்கடவுளே! இவ்வளவு கோவம் வருமா அமைதியா இருக்கிற யசோதினிக்கு?” அவன் குரலின் சிரிப்பு, அவளை ஆற்றுப்படுத்தும் மாயமறியாமல் அமைதியாகவே இருந்தாள் யசோ.
“யசோ?”
“ம்…” அவளையறியாமல் எதிர்வினையாற்றினாள்.
“முந்தநாள் தூரிக்கு எப்பிடி இருக்கு, சுகமாயிற்றா எண்டு அறியத்தான் நீங்க எப்ப பதில் போடுவீங்க எண்டு பாத்துக்கொண்டே இருந்தனான். நீங்க அவ்வளவு லேட்டா, சுருக்கமாப் பதில் அனுப்பவும், நான் அக்கறையாக் கேட்டத நீங்க நடிப்பா எடுத்திட்டீங்களோ எண்டு ஒரு மாதிரி ஆயிற்றுது. இதில, எனக்கு ஒண்டும் சொல்லாம குறிப்ப சுசீலாக்காட்டக் குடுத்திருக்கிறீங்க. ஏன் என்னட்டத் தரேல்ல, என்னோட கதைக்கேல்ல எண்டு அது வேற யோசினை. இண்டைக்கு நீங்க ஃபோனும் எடுக்காம இருக்கவும் உண்மையாவே எனக்கு ஒருமாதிரி ஆயிற்றுது. அதுதான்…” என்று தன்னை விளக்கினான்.
“சுசீலாக்காட்ட நானாக் குடுக்கேல்ல. அவாவோட இதைப் பற்றி நேற்றுக் கதைச்சனான். அவா இண்டைக்கு விடியவே குறிப்பு வாங்கிக்கொண்டு போக வந்திட்டா.”
“ஓ1”
“வேற ஏதும் கேள்வி இருக்கா?”
அவனிடம் சொன்னதுபோல அரக்கப்பரக்க ஓடிவந்து, ‘இவ்வளவு நேரம் அப்பிடி எங்க போனனீ?’ என்கிற தமக்கையின் விசாரணையை எதிர்கொண்டு, ‘பிள்ளைகள் உங்களைக் காணாம தவிச்சுப் போய்ட்டினம்மா. இனி இப்பிடி லேட்டாக்காதீங்கோ!’ என்ற அன்னையைச் சமாளித்து, நாள் முழுக்கத் தன்னைக் காணாத ஏக்கத்தில் சிணுங்கிய சிந்தூரியைத் தேற்றி, காய்ச்சல் இல்லாதபோதும் சோர்ந்து தெரிந்த தூரிகாவைக் கவனித்து, அவர்களுக்கு உணவு கொடுத்து, நடுநடுவே தன்னையும் கவனித்து என்று எல்லா வேலைகளையும் முடித்தபோது, உண்மையில் அவள் முதுகு ஒடிந்தே போயிற்று.
பிள்ளைகளுக்கு நடுவே படுத்ததுதான் தெரியும். அவள் விழிகள் உறக்கத்தில் சொக்கிப்போயின. அகத்தியன் சொன்னவற்றைப் பற்றி யோசிக்கக் கூட நேரமிருக்கவில்லை.
ஆனால், அடுத்தநாள் காலை எழுந்ததில் இருந்து அந்த யோசனைதான். இன்னொரு வாழ்க்கையைத் தேடும்போது இருந்த துணிவு, முடிவெடுக்கும் நிலைக்கு வந்தபோது இல்லாது போயிற்று. பலவிதப் பயங்களும் குழப்பங்களும் நெஞ்சைக் கவ்வின.
சொன்னதுபோல பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருப்பானா, அல்லது, இப்போது இனிக்க இனிக்கப் பேசிவிட்டு நாளைக்கு மாறிவிடுவானா? மாற்றாந்தகப்பனின் பிள்ளைகள் என்று தள்ளி வைத்துவிட்டான் என்றால் அதன்பிறகு பிள்ளைகளின் நிலை? அதை நினைக்கவே நெஞ்சுக்குள் என்னவோ அடைத்துக்கொண்டு வந்தது.
இப்படியெல்லாம் அளவுக்கதிகமாக யோசித்து, கிடைக்கிற நல்ல வாழ்க்கையை உதறத்தான் வேண்டுமா என்றும் ஓடிற்று.
சுசீலாவின் கணவர், பெற்ற மகனையே திரும்பிப் பார்க்காமல்தானே இருக்கிறார். எத்தனையோ வீடுகளில் சொந்தத் தகப்பன் கூடவே இருந்தும் பிள்ளைகள் மீது அக்கறையற்று இருப்பதில்லையா? அந்த வீட்டுத் தாய், தன் பிள்ளைகளை வளர்க்காமலா விட்டுவிடுகிறார்? ஒன்றுக்கும் உதவாத அந்தக் கணவனையும் சேர்த்து இழுத்துக்கொண்டு குடும்பத்தைக் கொண்டுதானே போகிறார். குறைந்தபட்சமாக அந்த நிலைக்கு அகத்தியன் தன்னைக் கொண்டுவர மாட்டான் என்று நம்பினாள்.
ஆக, எதுவும் இரண்டாம் திருமணத்தில் மட்டுமேதான் என்றில்லை. அப்படி வந்தால், ‘இரண்டாம் திருமணம்’ என்பது சொல்வதற்கான ஒரு காரணமாகிறது. அவளுக்கு ஏனோ, ‘சாவுக்கும் சாட்டு வேணுமாம் ஆச்சி.’ என்று அன்னை அடிக்கடி சொல்வது நினைவில் வந்து போனது.
பார்மசிக்கு வந்து சுசீலாவுக்கு அழைத்துப் பேசினாள். அகத்தியன் தன்னோடு கதைத்ததைச் சொல்லி, தன் பயங்களையும் குழப்பங்களையும் பகிர்ந்துகொண்டாள். ஏனோ, கமலாம்பிகையிடம் கூடக் கிடைக்காத ஆறுதலும், மனம் விட்டுப் பேசும் தயக்கமற்ற நிலையும் சுசீலாவிடம் கிடைத்தது.
அவரோ அவள் சொன்னவற்றைக் கேட்டு அகமகிழ்ந்து போனார். “கடவுளே, எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா? உங்க ரெண்டுபேரைப் பற்றியும் நான் நினைக்காத நாள் இல்ல. இன்னொரு வாழ்க்கைக்கு ஆசைப்படுற பிள்ளைகளுக்கு ஒரு நல்லதச் செய்து வைக்காம இருக்கிறது எவ்வளவு பிழையோ, அவ்வளவு பிழை விருப்பமே இல்லாத பிள்ளைகளைச் சேர்த்து வைக்கிறதும் எண்டு யோசிச்சுப்போட்டுத்தானம்மா பேசாம இருந்தனான். இப்பதான் எனக்கு மனம் நிறைஞ்சு இருக்கு.” என்று அவர் சொன்னபோது அவளும் நெகிழ்ந்துபோனாள்.
“அர்த்தமே இல்லாததுகளை யோசிச்சுப் பயப்பிடாதீங்கோ யசோ. நான் குமர்ப்பிள்ளையா இருந்த காலத்தில இருந்து அவே எல்லாரையும் எனக்குத் தெரியும். சோலி சுரட்டுக்குப் போகாத அருமையான குடும்பம். உங்களுக்கு மட்டும் இது ரெண்டாவது கலியாணம் இல்ல. தன்ர வாழ்க்கையைச் சந்தோசமாக் கொண்டுபோக வேணும் எண்டுற ஆசை, அவனுக்கும் இருக்கும் தானேம்மா. சவீதா குடும்பம் வேற பக்கத்திலேயே இருக்கு. உங்களுக்கு அகத்தியன் சொன்னானோ தெரியாது, அவன் அண்டைக்கே உங்களைத்தான் கட்டப்போறன் எண்டு சவீதா குடும்பத்துக்கு முன்னாலேயே சொல்லிட்டானாம். அப்பிடிச் சொல்லுறவனாம்மா உங்கட பிள்ளைகளைப் பிரிச்சுப் பாப்பான்? ஒருநாளும் அப்பிடி நடக்காது. கண்டதையும் யோசிச்சது, பயந்தது, தனியா இருந்தது எல்லாம் போதும் யசோ. எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைச்சாத்தான் ஒண்டைச் செய்வன் எண்டு நினைச்சா அது கடைசிவரைக்கும் நடக்காது. எப்பவும் புதுசு புதுசாக் கேள்வியும் பயமும் வந்துகொண்டேதான் இருக்கும். உள்ளுணர்வு சொல்லுறபடி நடக்கிறதுதான் பல விசயங்களுக்கு நல்லது. நீங்க குறிப்பக் கொண்டு வாங்கோ. நான் நாளைக்கு பார்மசிக்கே வந்து வாங்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.
கலக்கம் முற்றிலுமாக அகன்றிராதபோதும் அதற்குமேல் அவளால் யோசிக்க முடியவில்லை. அவர் சொன்னதுபோல, யோசிக்க யோசிக்க மனம் இன்னுமே குழம்பிய குட்டையாகத்தான் மாறிற்று. கேள்விகள் புதிது புதிதாகப் பிறந்துகொண்டே இருந்தன. அச்சங்களும் கூடிக்கொண்டேதான் போயின.
ஆனால், சவீதா குடும்பத்தினர் முன்னேயே அவன் தன்னைத்தான் மணக்கப் போவதாகச் சொன்னானாம் என்பது, ஏதோ ஒரு பெரிய நம்பிக்கையை அவளுக்குத் தந்திருந்தது.
இன்னும் வீட்டில் சொல்லவில்லையே என்கிற கலக்கம் இருந்தாலும் அடுத்தநாள் குறிப்பை எடுத்துக்கொண்டு வந்தாள்.
அங்கே சொன்ன பிறகு இங்கே சரிவராமல் போனால், வீட்டில் அவள் நிலை இன்னும் மோசமாகிவிடும். முதல் இங்கே என்ன சொல்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, அங்குச் சொல்வோம் என்று முடிவெடுத்துக்கொண்டாள்.
குறிப்பை வாங்குவதற்காகக் காலையிலேயே வந்திருந்தார் சுசீலா.
“குறிப்புப் பொருந்தினா சொல்லுங்கோ அக்கா. நான் முதல் பிள்ளைகளோட கதைக்க வேணும். அம்மாவும் அக்காவும் என்ன சொல்லுவீனம் எண்டு தெரியாது. அதால, இன்னும் எதுவும் உறுதியா முடிவாகேல்ல எண்டும் சொல்லுங்கோ.” என்று சொல்லிக் கொடுத்தாள்.
அதன்பிறகு, அவளுக்கு அதைப்பற்றி யோசிக்க நேரமில்லை. பார்மசிக்கு கொழும்பிலிருந்து புது இருப்புகள் வந்து இறங்கியிருந்தன. முதலாளியும் கடைக்கு வந்திருந்தார். அவர் கணக்கு வழக்குகளைப் பார்க்க, அவளும் மகிளாவுமாகச் சேர்ந்து கடையையும் பார்த்து, வந்து இறங்கியவற்றைச் சரிபார்த்து எடுத்துவைக்க என்று நேரம் ஓடிற்று.
முதலாளி தன் வேலைகளை முடித்துக்கொண்டு புறப்பட்டதும், “யசோக்கா, சின்ன ரெஸ்ட் எடுக்காம இனி என்னால ஏலாது. ஒரு நிமிசம் இருங்கோ, தேத்தண்ணியும் சாப்பிட ஏதாவதும் வாங்கிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு, அருகில் இருக்கும் தேநீர்க் கடைக்கு ஓடினாள் மகிளா.
அந்த இடைவெளியில் கைப்பேசியை எடுத்துப்
பார்த்தாள். அகத்தியன் மூன்று முறை அழைத்திருந்தான். ஏனோ? யோசனையோடு அவனுக்குத் திருப்பி அழைத்தாள்.
அழைப்பை ஏற்றதுமே, “நான் உங்கள ஆகத் தொந்தரவு செய்றேனா?” என்றுதான் கேட்டான் அவன். குரலில் மெல்லிய இறுக்கம் தெரிந்தது.
“இல்லையே ஏன்?” புருவங்கள் சுருங்க வினவினாள்.
“இல்ல, முந்தநாள் நான் போட்ட மெசேஜுக்கு ரெண்டு மணித்திலாயத்துக்குப் பிறகுதான் பதில் வந்தது. நேற்று எடுத்து ஏதாவது சொல்லுவீங்க எண்டு எதிர்பாத்தனான். சத்தமே இல்ல. இண்டைக்கு மூண்டு தரம் எடுத்தும் நீங்க கதைக்கேல்ல. இதெல்லாம், தள்ளியே நில்லு எண்டு சொல்லுற மாதிரியே இருக்கு. அப்பிடித்தான் எண்டா நேராச் சொல்லுங்கோ.” என்றவனின் பேச்சில் அவளுக்குச் சினம் உண்டாயிற்று.
“முந்தநாள் நான் வீட்டை போகவே லேட். பிள்ளைக்கு வருத்தம். அவவைப் பாக்கோணும். நாள் முழுக்க அம்மா மூண்டு பிள்ளைகளை வச்சுப் பாக்கிறவா. அண்டைக்கு நாலுபேர். அவேயையும்(அவர்களையும்) பாத்து ரெண்டு வீட்டுக்குச் சமைக்க அவவால ஏலாது. கறி வச்சிருந்தாலும் ரொட்டியோ, புட்டோ, இடியப்பமோ ஏதோ ஒண்டு நான் போய்த்தான் செய்யவேணும், அடுத்தநாளுக்கு தேவையானதுகளையும் கவனிக்க வேணும். இதையெல்லாம் பாப்பேனா, இல்ல, ஃபோன எடுத்து வச்சுக்கொண்டு ஆர், எப்ப மெசேஜ் அனுப்புவீனம், பதில் சொல்லலாம் எண்டு பாத்துக்கொண்டு இருப்பேனா?” என்றாள் சூடான குரலில்.
“ஓ சொறி!” என்றான் இறங்கிய குரலில். “வேலையா இருந்திருப்பீங்க எண்டு நினைச்சனான்தான். எண்டாலும் இந்தளவுக்கு யோசிக்கேல்ல.”
ஆனால், அவள் சினம் குறையவில்லை. “இங்கயும் நான் ஒண்டும் சும்மா இருந்து சம்பளம் வாங்கேல்ல. நீங்க எடுக்கிற நேரமெல்லாம் கதைச்சுக்கொண்டு இருக்க.” என்றாள்.
“அதுதான் சொறி சொல்லிட்டேனே.”
காரணத்தைக் கேட்காமலே கோபப்பட்டுவிட்டு என்ன மன்னிப்பு? அவளுக்குக் கோபம் போகமாட்டேன் என்றது.
“யசோ.”
முதன் முறையாக அவள் பெயர் அவன் வாயிலிருந்து ஒலித்தது. தேகத்தில் ஒரு விதமாகச் சிலிர்ப்போட அப்படியே நின்றாள்.
“இன்னும் கோவமா?” அவன் குரல் தழைந்தே வந்தது.
“ஏன் எடுத்தனீங்க?”
“அடக்கடவுளே! இவ்வளவு கோவம் வருமா அமைதியா இருக்கிற யசோதினிக்கு?” அவன் குரலின் சிரிப்பு, அவளை ஆற்றுப்படுத்தும் மாயமறியாமல் அமைதியாகவே இருந்தாள் யசோ.
“யசோ?”
“ம்…” அவளையறியாமல் எதிர்வினையாற்றினாள்.
“முந்தநாள் தூரிக்கு எப்பிடி இருக்கு, சுகமாயிற்றா எண்டு அறியத்தான் நீங்க எப்ப பதில் போடுவீங்க எண்டு பாத்துக்கொண்டே இருந்தனான். நீங்க அவ்வளவு லேட்டா, சுருக்கமாப் பதில் அனுப்பவும், நான் அக்கறையாக் கேட்டத நீங்க நடிப்பா எடுத்திட்டீங்களோ எண்டு ஒரு மாதிரி ஆயிற்றுது. இதில, எனக்கு ஒண்டும் சொல்லாம குறிப்ப சுசீலாக்காட்டக் குடுத்திருக்கிறீங்க. ஏன் என்னட்டத் தரேல்ல, என்னோட கதைக்கேல்ல எண்டு அது வேற யோசினை. இண்டைக்கு நீங்க ஃபோனும் எடுக்காம இருக்கவும் உண்மையாவே எனக்கு ஒருமாதிரி ஆயிற்றுது. அதுதான்…” என்று தன்னை விளக்கினான்.
“சுசீலாக்காட்ட நானாக் குடுக்கேல்ல. அவாவோட இதைப் பற்றி நேற்றுக் கதைச்சனான். அவா இண்டைக்கு விடியவே குறிப்பு வாங்கிக்கொண்டு போக வந்திட்டா.”
“ஓ1”
“வேற ஏதும் கேள்வி இருக்கா?”