கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Sowdharani

Well-known member
காந்தன் உன்கிட்ட இப்படி ஒன்னை எதிர்பாக்கவே இல்ல... ரொம்ப ஒழுக்கமாக சரியா இருக்குற ஆட்கள் எப்படி தான் இப்படி தீடீர் னு தடம் மாறி போரங்களோ... பிள்ளை மனுஷி பத்தின எண்ணம் இல்லாம எப்படி முடியுது உன்னால்...

இப்போ கூட சுயநலம் தானே உனக்கு உன்னோட தங்கை safe ஆகிடனும்... இதையே அபய் உன் தங்கைக்கு செய்தா நீ சும்மா இருப்பீயா...
 

Hanza

Member
எனக்கு நிறைய கதைக்கணும் போல இருக்கு... ஆனால் வார்த்தைகள் வர மாட்டேங்குது... இன்னும் நான் today epi ல இருந்து வெளியேவரல... நேற்று தான் நான் அந்த நாய்க்கு support பண்ணி சுபாங்கியை messenger ல திட்டினேன்நிதா மா கிட்ட... ??? இப்போ எனக்கு குற்றஉணர்ச்சியா இருக்கு...



தன்னோட உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாதவன் எல்லாம் என்ன ஆம்பளை... அப்படியே உன்னோட உணர்வுகளை கட்டுப்படுத்த முடியலை என்றாலும்வவுனியாவும் கிளிநொச்சியும் பக்கத்து பக்கத்து districts... மிஞ்சி மிஞ்சி போனால் 1 1/2 hours தான் எடுக்கும்...

இன்னொரு பெண்ணை தேடி போகும் அளவுக்கு உன்னோட மனம் அழுக்காகஇருக்கிறது... அதுவும் பிள்ளை வரும் அளவுக்கு... ???



அந்த பெண்ணோடு கூடும் போது ஒரே ஒரு நிமிஷம் சுபாங்கி முகம் உன் கண்முன்னே வரலையா??? நீ கணவன் மட்டும் இல்லை.. ஒரு அண்ணன் அதற்கும்மேலே ஒரு தகப்பன்... உன்னோட தங்கச்சி உன்னோட பெண் பிள்ளையை பற்றிஒரே ஒரு நிமிஷம் நினைத்து பார்த்தியா... நாளைக்கு அவங்களுக்கும் உன்னைபோலவே ஒரு விபச்சாரன் (என்னை பொறுத்தவரை மனைவியை விடுத்துஅடுத்தவளை இச்சையோடு பார்க்கிற எவனுமே விபச்சாரன் தான்) வந்துமாட்டினால் நீ உன்னோட முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பாய்???



இதிலே என்னால் digest பண்ண முடியாத இரண்டு விஷயங்கள்,

  1. ஒன்று... அன்பினிக்கும் அபயனுக்கும் அவசரம் அவசரமாக கல்யாண ஏற்பாடுபண்ணது... அது மட்டுமில்லாமல் அன்பினிகிட்ட 'உன்னோட அண்ணன்செய்தது நல்லதுக்கு என்று உனக்கு பின்னால் விளங்கும்' என்று உருட்டினது... எவ்வளவு சுயநலவாதி இவன்... எப்படி அன்பினி அந்த குடும்பத்தில் போய்வாழுவாள் என்று யோசிச்சியா??? உனக்கு எப்படி ஒரு மனசு வந்தது.. நீவாழ்க்கையை கெடுத்த பெண் வீட்டிலேயே உன் தங்கையின் வாழ்க்கையைபிணைக்க... நீயெல்லாம் ஒரு அண்ணனா??? அன்பினி Uni ல படிச்சிட்டுஇருக்கும் போதே அதே ஊரிலேயே நீ ஊர் சுற்றி இருக்க எவளோஒருத்தியோட... ???
  2. மற்றது... சுபாங்கியிடம் 'எனக்கு ஏதும் என்றால் உன்னட்ட தான் நான்வருவேன்' இல்ல என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசில??? நீ போய் ஊர்மேய்ஞ்சிட்டு சலிச்சி போய் வருவ... அவ நவீன சாவித்திரி மாதிரி உன்னைவரவேற்கணுமா?? உனக்கு துரோகம் செய்யவே நினைக்கல... அறியாமல்என்னை மீறி செய்த தவறுன்னு சொல்லுற.. அப்புறம் என்ன dash கு டாஅவகிட்ட இருந்து இடியப்பம் வாங்கிட்டு வர.. உன்னை பார்த்தால் தவறுசெஞ்சவன் போல இல்லை... அவகூட நல்லா சந்தோஷமா இருக்கிற போலதான் இருக்கிறா... பேசாம விஷம் குடிச்சி செத்துரு...


இப்போ கூட சில பேர் வருவாங்க சப்பை கட்டு கட்டிக்கிட்டு...

அவன் கூப்பிட்டப்பவே சுபாங்கி போய் இருந்தால் இது எல்லாம் நடந்துஇருக்காதே னு... அவன் அப்போவும் வீட்டிலே சுபாங்கி வெளியே சீமை சித்ராங்கினு தான் திரிஞ்சி இருப்பான்.. ???



எனக்கு அன்பினியோட parents reaction பார்க்கணும்... I am waiting for their reaction…


 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... நான் கூட பூனை வரும் இல்ல புலி வரும் என்று நினைச்சா இது என்ன பூதம் வருது. பெண் துணை பக்கத்தில் இல்லையென்றால் வேறு தேடுவீர்களோ?.. ஆண் துணை பக்கத்தில் இல்லாமல் தான் சுபாங்கி இருந்தாள்... அவள் இப்படி ஏதேனும் செய்திருந்தால் அப்பொழுதும் இப்படித்தான் பேசுவானா?.

எப்படி எப்படி தனக்கு ஏதாவது என்றால் உன்னிடம் தான் வருவேன் என்று எப்படி சொல்ல முடிகிறது?. மனைவியையும் நினைக்கவில்லை மகளையும் நினைக்கவில்லை.. ஆனால் ஆடி முடித்து கட்ட கடைசியில் திரும்பி வரும்போது மட்டும் மனைவி ஏற்றுக்கொள்ள வேண்டுமா?..

விஷயம் தெரியும் முன் அன்பினி கல்யாணத்த முடிக்கனும்.. தன்ற தங்கச்சி சேஃப் ஆக இருக்கனும் மற்றவ அக்கா தங்கச்சி எப்படி போனா உனக்கென்ன?.. என்ன ஒரு சுயநலம்.
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... ஆனா நிதா இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டுட்டு ஹாப்பி வீக்கெண்ட்டா...
 
Top Bottom